இனம் புரியாத துக்கம்
மனதை சஞ்சலப்படுத்த
ஏன் இவ்வாறு என்று
பகுத்தறிய முடியாமல்
மூளை தடுமாற
செவிகள் பொருத்து கருவிகளோடு
இசையை கேட்டாலும்
மன அமைதியை தவிர்த்து
மன்சஞ்சலத்தை அம்மெல்லிசை
அள்ளியிறைக்க
காரணம் தெரியாமல்
குழம்பித்தவித்த மனதை
கட்டுப்படுத்தும் வகையறியாமல்
விழிகளில் நீர் குளம் கட்ட
நீரின் கொள்ளளவை
தாங்க முடியாது
அணை உடைப்பெடுக்க
அதன் விளைவாக
வெளியேறி
புறக்கையை நனைத்த
கண்ணீர்துளி
நிதர்சனத்தை உணர்த்த
ஏன் இந்த சலனம் என்று
எண்ணியபடி வானை நோக்க
அதுவோ எண்ணிலடங்காத
கருமேகம் சூழ்ந்து ஒருபுறமும்
மறுபுறம் கதிரவன்
தன் கதிர்களை
பரப்பியவாறு இருக்க
இருவரில் யாரின் முறை
இதுவென்பதை கண்டறிய முடியாது
ஆகாசம் திணறிக் கொண்டிருந்தது.
நிலையில்லா வானிலையும்
சஞ்சலத்தில் சிக்குண்ட
என் மனமும்
சீர்படும் காலம் எப்போது???
மனதை சஞ்சலப்படுத்த
ஏன் இவ்வாறு என்று
பகுத்தறிய முடியாமல்
மூளை தடுமாற
செவிகள் பொருத்து கருவிகளோடு
இசையை கேட்டாலும்
மன அமைதியை தவிர்த்து
மன்சஞ்சலத்தை அம்மெல்லிசை
அள்ளியிறைக்க
காரணம் தெரியாமல்
குழம்பித்தவித்த மனதை
கட்டுப்படுத்தும் வகையறியாமல்
விழிகளில் நீர் குளம் கட்ட
நீரின் கொள்ளளவை
தாங்க முடியாது
அணை உடைப்பெடுக்க
அதன் விளைவாக
வெளியேறி
புறக்கையை நனைத்த
கண்ணீர்துளி
நிதர்சனத்தை உணர்த்த
ஏன் இந்த சலனம் என்று
எண்ணியபடி வானை நோக்க
அதுவோ எண்ணிலடங்காத
கருமேகம் சூழ்ந்து ஒருபுறமும்
மறுபுறம் கதிரவன்
தன் கதிர்களை
பரப்பியவாறு இருக்க
இருவரில் யாரின் முறை
இதுவென்பதை கண்டறிய முடியாது
ஆகாசம் திணறிக் கொண்டிருந்தது.
நிலையில்லா வானிலையும்
சஞ்சலத்தில் சிக்குண்ட
என் மனமும்
சீர்படும் காலம் எப்போது???