நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-25
கயலுக்கு கல்லூரி மீண்டும் திறக்க கண்ணன் ஸ்கூடிட்டியில் தான் செல்லவேண்டும் என்று சொன்னபோது கயல் எவ்வளவு மறுத்தும் கண்ணன் கேட்கவில்லை.... ஒருவாரம் கூடவே வந்தாலும் கயலுக்கு பயம் போகவில்லை.... இருந்தாலும் கண்ணனுக்காக அவள் வண்டியில் சென்றாள்....... வரும் வழியில் ஒரு முந்திரி காடு இருக்கும்... அங்கு கொஞ்சம் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் அங்கு வரும்போது மட்டும் வேகமாக வருவாள்..... அவளுக்கு அமைதியாக ஒருஆளாக சென்று வருவதுதான் கஷ்டமாக இருந்தது........ போகும் போது டியூசன் பிள்ளைகள் யாராவது பஸ்ஸ்டான்டில் இருந்தால் கூட்டிக்கொண்டு செல்வாள்.....
அன்று பேருந்தில் கயலிடம் வம்பிழுத்து அடிவாங்கியவன்.....கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இப்போதுதான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருந்தான்.... கயலை பழிதீர்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தவன் .... கண்ணன் கயல் கூடவே வரவும் பேசாமல் அடங்கி இருந்தவன்.... அன்று மாலை காலேஜ் விட்டு வந்தவள்..... வண்டி பஞ்சராகவும்.... அதை கண்டு கடுப்பானவள் அதை உருட்டிக் கொண்டு வந்து பஞ்சர் பார்த்தாள்...... அன்று மாலை ஆறு மணிக்கே சீக்கிரம் இருட்டிக்கொண்டு வரவும் வண்டியை வேகமாக ஓட்டி வந்தாள்... முத்துவுக்கும் அப்போதுதான் கோச்சிங்கிளாஸ் முடிந்து வெளியே வந்தவன்... கயல் அவனை கவனிக்காமல் வேகமாக போகவும் கத்தி கூப்பிடுவதற்குள் கயல் வேகமாக சென்றிருந்தாள்.... அவள் அந்த முந்திரி காடு வரும் போது இன்னும் வேகமெடுக்க அவளை மெதுவாக பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த குடிகாரனும் வேகமாக வந்து அவளை வழிமறிக்க... கயல் பேலன்ஸ் தவறி கீழே விழுந்திருந்தாள்.......
வண்டியோடு வண்டி மோதியிருக்க கயல் வண்டியை விட்டு சற்று தள்ளி விழுந்ததால் அவளுக்கு அடிஎதுவும் படவில்லை........ கயலுக்கு பயத்தில் கைகால் வெடவெடக்க.. மெதுவாக கையை ஊன்றி எழுந்தவள்.... அந்த குடிகாரனை பார்க்கவும் ...... மயக்கமே வரப்பார்த்தது...... இருந்தாலும் வண்டியை இவன்கிட்ட போய் எப்படி போய் எடுப்பது என்று யோசிக்கவும்.... அவள் கயலை பார்த்து இளித்தபடி...
“ என்னமா... அன்னைக்கு என்னமோ.... உம் புருசன் லேசா கையை உரசுனதுக்கே.... என்னோட கையை ஒடச்சான்..... இன்னைக்கு உன்னைய நான் முழுசா ....... அனுபவிக்கப் போறனே .... இப்ப என்ன பண்ணுவான்.... “என்று கேட்டபடி குடிவெறியில் தள்ளாடியபடி வந்து கயலின் கையை பிடிக்கவும்...... அதுவரை வண்டியை எப்படி எடுப்பது என்ற யோசனையில் இருந்தவள்..... அவன் கையை பிடிக்கவும்..... அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ அவன்கையை உதறியவள்... அவனை வேகமாக பின்னால் தள்ளிவிட்டு....... அந்த முந்திரி காட்டுக்குள் வேகமாக ஓடினாள்....... தடுமாறி கீழே விழுந்தவனும் எழுந்து அவளை விரட்டிச் சென்றான்.....
சாவித்திரி போன் செய்யவும் கண்ணனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்றதுபோல இருந்தது........ இவ ஏன் இன்னும் வரல.... என்னாயிருக்கும்... என்று யோசித்தபடி அவள் போனுக்கு டிரை பண்ண அது சைலன்டில் கிடந்ததால் ரிங் முழுவதும் போயிற்று.... போனை எடுக்காமல் இருக்கவும் இவ எதுக்குதான் போன்னு ஒன்னு வச்சிருக்கான்னு தெரியல... அவமட்டும் கைல கிடைச்சா... இருக்கு இன்னைக்கு..... என்று நினைத்தபடி போனில் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டபடி .....வேகமாக சென்று வண்டியை எடுத்தவன் கயலின் காலேஜை நோக்கி சென்றான்.......
தன் இரு நண்பர்களோட வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்த முத்து அந்த முந்திரிகாட்டின் பாதையில் இருவண்டி கிடக்கவும்... “என்னடா வண்டி மட்டும் ரோட்டுல கிடக்கு......யாரையுமே காணோம்” என்று வந்தவர்கள்..... அருகில் வர இது அண்ணி வண்டி மாதிரி இருக்கே என்று யோசித்தவன்.....
“ டேய்... இது எங்கண்ணி வண்டிடா....”என்று கத்தியவன்.... வேகமாக சென்று கீழே கிடந்த வண்டியை எடுத்தவன்.... வண்டியில் இருந்த பையில் இருந்து வெளிச்சம் வரவும் அதை திறந்து பார்த்தான்... அது போனின் வெளிச்சம்.... அதில் தன் அண்ணனின் நம்பர் வரவும் அதை வேகமாக ஆன் செய்ய....வேகமாக வந்து கொண்டிருந்த கண்ணன் படக்கென்று வண்டியை நிப்பாட்டி....
“ கயலு..... கயலு... எங்கயிருக்க..... என்னாச்சு....” என கத்தவும்.....
“அண்ணே.... நான் முத்து பேசுறேன்.... அண்ணே இங்க வீட்டுக்கு வார வழியில முந்திரி காடு இருக்குள்ள..... அங்க...நம்ம அண்ணியோட வண்டி மட்டும் கிடக்குதுண்ணே..... அண்ணிய காணோம்” என்று அழ ஆரம்பிக்க.....
“டேய்.... அழுகாத.... ந்தா.... நான் அங்கனதான் வந்துட்டு இருக்கேன்.... இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்...”. என்றபடி வேகமாக வந்தவன் ஐந்து நிமிடத்தில் அங்கே இருந்தான்.... அங்கு முத்து அழுதுகொண்டிருக்கவும்.....வேகமாக தன் வண்டி கீழே விழுந்தது கூட தெரியாமல் கயலின் வண்டியை நோக்கி ஓடி வந்தவன்.... அவள் வண்டியை மோதி இன்னொரு வண்டி கிடக்கவும் இது யாரோ செய்த வேலை என்று யூகித்தவன்.... வேகமாக அந்த முந்திரி காட்டை நோக்கி ஓடியபடி....
“முத்து நீ செல்போன லைட்ட ஆன் பண்ணி அந்த வெளிச்சத்துல உங்க அண்ணிய தேடு.....” என்றபடி அந்த காட்டிற்குள் நுழைந்திருந்தான்.......
ஒரு மணி நேரமாகியும் கண்ணனால் கயலை கண்டுபிடிக்க முடியவில்லை...... வருவதற்கு முன்னால் ராமனுக்கு போன் செய்து நாளஞ்சுபேரை கூட்டிவந்து அவர்களையும் காட்டிற்குள் தேடச்சொல்ல.... கண்ணனும் காட்டின் ஒரு மூலைமுடுக்கையும் விடவில்லை....காட்டின் கடைசிக்கே வந்துவிட்டான்.... இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய கம்பி வலைதான் இருக்கும்.....கயலின் தந்தைக்கும் போன் செய்தும் சொல்லியிருந்தான்...” கயல்... கயல் “என்று கத்தியபடியே வர.... அவனுக்கு பயம் அதிகரித்தது.... இப்ப என்ன பண்ணுறது.... .இன்னைக்கு பொம்பளபுள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்லாமல் போச்சே.. கயலு நீ எங்கடி போன....சீக்கிரம் வந்துருடி... என்னால நீ இல்லாம இருக்கமுடியாது ...வந்துருடி.... என்று மனசிற்குள் கதறியவன்.... தன் போக்கில் கயல்...கயல் என்று கத்திக் கொண்டே இருந்தான்....
கயல் அந்த குடிகாரன் விரட்டவும் அந்த காட்டிற்குள் ஓடத் துவங்கியவள்....சிறிது தூரம் ஓடியவள் ஒரு பெரிய மரத்தின் வேர் தடுக்கவிட கீழே விழுந்திருந்தாள்..... அதற்குள் அவளை நெருங்கியிருந்த அந்த குடிகாரன்.....
“ என்னமா... இந்த ஓட்டம் ஓடுறா....” என்றபடி கயலின் சுடிதார் துப்பட்டாவை தூக்கி எறிந்தவன் அவள் கையை பிடிக்கவர... கயல் அவனை ஓங்கி ஒரு உதைவிட.... அவன் கை தடுமாறி...அவள் சுடிதாரின் முன்பகுதியை பிடித்தவன்... அவள் உதைக்கவும் தோள்பட்டை கிழிந்து... அந்த உடையின் அவள் உள்ளாடை வெளியே தெரியும்படி கிழிந்தது..... அவன் கீழே விழவும் கயல் தடுமாறி எழுந்தவள்.... கயல் உனக்கு உயிரே போனாலும் இவனோட கையில மாட்டக்கூடாது....என்று நினைத்தபடி ஓடத்துவங்கியவள்.... ஏங்க அன்னைக்குமட்டும் வந்து என்னைய காப்பாத்துனீங்க.... வாங்க... வாங்க என்று மனதிற்குள் கண்ணனை நினைத்தபடி இந்த இருட்டில் ஓடத்துவங்கியவள்... அவன் காலடி சத்தம் தன்னை நெருங்கவும்.. ஓடிக் கொண்டிருந்தவள் ஒரு மரத்தில் மோதியவள் கையால் துழாவ அந்த மரத்தின் கிளை தாழ்வாக இருக்கவும் அதில் கால் வைத்து ஏறி அந்த மரத்தின் ஒரு பெரிய கிளையில் அமர்ந்திருந்தாள்..... அந்த குடிகாரன் அந்த மரத்தை தாண்டும் போது மூச்சை அடக்கி அமர்ந்திருந்தாள்.... கயலுக்கு எப்போதும் இருட்டென்றால் பயம்.. ஆனால் இன்னைக்கு இருட்டா இருக்குறதால தானே அவன் என்னைய கண்டுபிடிக்கல என்று யோசித்தபடி மனதிற்குள் தன் தந்தையையும் கண்ணனையுமே சீக்கிரம் யாராச்சும் வாங்களேன் என்று உருபோட்டபடி அமர்ந்திருந்தாள்.....
அத்தியாயம்-25
கயலுக்கு கல்லூரி மீண்டும் திறக்க கண்ணன் ஸ்கூடிட்டியில் தான் செல்லவேண்டும் என்று சொன்னபோது கயல் எவ்வளவு மறுத்தும் கண்ணன் கேட்கவில்லை.... ஒருவாரம் கூடவே வந்தாலும் கயலுக்கு பயம் போகவில்லை.... இருந்தாலும் கண்ணனுக்காக அவள் வண்டியில் சென்றாள்....... வரும் வழியில் ஒரு முந்திரி காடு இருக்கும்... அங்கு கொஞ்சம் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் அங்கு வரும்போது மட்டும் வேகமாக வருவாள்..... அவளுக்கு அமைதியாக ஒருஆளாக சென்று வருவதுதான் கஷ்டமாக இருந்தது........ போகும் போது டியூசன் பிள்ளைகள் யாராவது பஸ்ஸ்டான்டில் இருந்தால் கூட்டிக்கொண்டு செல்வாள்.....
அன்று பேருந்தில் கயலிடம் வம்பிழுத்து அடிவாங்கியவன்.....கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இப்போதுதான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருந்தான்.... கயலை பழிதீர்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தவன் .... கண்ணன் கயல் கூடவே வரவும் பேசாமல் அடங்கி இருந்தவன்.... அன்று மாலை காலேஜ் விட்டு வந்தவள்..... வண்டி பஞ்சராகவும்.... அதை கண்டு கடுப்பானவள் அதை உருட்டிக் கொண்டு வந்து பஞ்சர் பார்த்தாள்...... அன்று மாலை ஆறு மணிக்கே சீக்கிரம் இருட்டிக்கொண்டு வரவும் வண்டியை வேகமாக ஓட்டி வந்தாள்... முத்துவுக்கும் அப்போதுதான் கோச்சிங்கிளாஸ் முடிந்து வெளியே வந்தவன்... கயல் அவனை கவனிக்காமல் வேகமாக போகவும் கத்தி கூப்பிடுவதற்குள் கயல் வேகமாக சென்றிருந்தாள்.... அவள் அந்த முந்திரி காடு வரும் போது இன்னும் வேகமெடுக்க அவளை மெதுவாக பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த குடிகாரனும் வேகமாக வந்து அவளை வழிமறிக்க... கயல் பேலன்ஸ் தவறி கீழே விழுந்திருந்தாள்.......
வண்டியோடு வண்டி மோதியிருக்க கயல் வண்டியை விட்டு சற்று தள்ளி விழுந்ததால் அவளுக்கு அடிஎதுவும் படவில்லை........ கயலுக்கு பயத்தில் கைகால் வெடவெடக்க.. மெதுவாக கையை ஊன்றி எழுந்தவள்.... அந்த குடிகாரனை பார்க்கவும் ...... மயக்கமே வரப்பார்த்தது...... இருந்தாலும் வண்டியை இவன்கிட்ட போய் எப்படி போய் எடுப்பது என்று யோசிக்கவும்.... அவள் கயலை பார்த்து இளித்தபடி...
“ என்னமா... அன்னைக்கு என்னமோ.... உம் புருசன் லேசா கையை உரசுனதுக்கே.... என்னோட கையை ஒடச்சான்..... இன்னைக்கு உன்னைய நான் முழுசா ....... அனுபவிக்கப் போறனே .... இப்ப என்ன பண்ணுவான்.... “என்று கேட்டபடி குடிவெறியில் தள்ளாடியபடி வந்து கயலின் கையை பிடிக்கவும்...... அதுவரை வண்டியை எப்படி எடுப்பது என்ற யோசனையில் இருந்தவள்..... அவன் கையை பிடிக்கவும்..... அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ அவன்கையை உதறியவள்... அவனை வேகமாக பின்னால் தள்ளிவிட்டு....... அந்த முந்திரி காட்டுக்குள் வேகமாக ஓடினாள்....... தடுமாறி கீழே விழுந்தவனும் எழுந்து அவளை விரட்டிச் சென்றான்.....
சாவித்திரி போன் செய்யவும் கண்ணனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்றதுபோல இருந்தது........ இவ ஏன் இன்னும் வரல.... என்னாயிருக்கும்... என்று யோசித்தபடி அவள் போனுக்கு டிரை பண்ண அது சைலன்டில் கிடந்ததால் ரிங் முழுவதும் போயிற்று.... போனை எடுக்காமல் இருக்கவும் இவ எதுக்குதான் போன்னு ஒன்னு வச்சிருக்கான்னு தெரியல... அவமட்டும் கைல கிடைச்சா... இருக்கு இன்னைக்கு..... என்று நினைத்தபடி போனில் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டபடி .....வேகமாக சென்று வண்டியை எடுத்தவன் கயலின் காலேஜை நோக்கி சென்றான்.......
தன் இரு நண்பர்களோட வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்த முத்து அந்த முந்திரிகாட்டின் பாதையில் இருவண்டி கிடக்கவும்... “என்னடா வண்டி மட்டும் ரோட்டுல கிடக்கு......யாரையுமே காணோம்” என்று வந்தவர்கள்..... அருகில் வர இது அண்ணி வண்டி மாதிரி இருக்கே என்று யோசித்தவன்.....
“ டேய்... இது எங்கண்ணி வண்டிடா....”என்று கத்தியவன்.... வேகமாக சென்று கீழே கிடந்த வண்டியை எடுத்தவன்.... வண்டியில் இருந்த பையில் இருந்து வெளிச்சம் வரவும் அதை திறந்து பார்த்தான்... அது போனின் வெளிச்சம்.... அதில் தன் அண்ணனின் நம்பர் வரவும் அதை வேகமாக ஆன் செய்ய....வேகமாக வந்து கொண்டிருந்த கண்ணன் படக்கென்று வண்டியை நிப்பாட்டி....
“ கயலு..... கயலு... எங்கயிருக்க..... என்னாச்சு....” என கத்தவும்.....
“அண்ணே.... நான் முத்து பேசுறேன்.... அண்ணே இங்க வீட்டுக்கு வார வழியில முந்திரி காடு இருக்குள்ள..... அங்க...நம்ம அண்ணியோட வண்டி மட்டும் கிடக்குதுண்ணே..... அண்ணிய காணோம்” என்று அழ ஆரம்பிக்க.....
“டேய்.... அழுகாத.... ந்தா.... நான் அங்கனதான் வந்துட்டு இருக்கேன்.... இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்...”. என்றபடி வேகமாக வந்தவன் ஐந்து நிமிடத்தில் அங்கே இருந்தான்.... அங்கு முத்து அழுதுகொண்டிருக்கவும்.....வேகமாக தன் வண்டி கீழே விழுந்தது கூட தெரியாமல் கயலின் வண்டியை நோக்கி ஓடி வந்தவன்.... அவள் வண்டியை மோதி இன்னொரு வண்டி கிடக்கவும் இது யாரோ செய்த வேலை என்று யூகித்தவன்.... வேகமாக அந்த முந்திரி காட்டை நோக்கி ஓடியபடி....
“முத்து நீ செல்போன லைட்ட ஆன் பண்ணி அந்த வெளிச்சத்துல உங்க அண்ணிய தேடு.....” என்றபடி அந்த காட்டிற்குள் நுழைந்திருந்தான்.......
ஒரு மணி நேரமாகியும் கண்ணனால் கயலை கண்டுபிடிக்க முடியவில்லை...... வருவதற்கு முன்னால் ராமனுக்கு போன் செய்து நாளஞ்சுபேரை கூட்டிவந்து அவர்களையும் காட்டிற்குள் தேடச்சொல்ல.... கண்ணனும் காட்டின் ஒரு மூலைமுடுக்கையும் விடவில்லை....காட்டின் கடைசிக்கே வந்துவிட்டான்.... இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய கம்பி வலைதான் இருக்கும்.....கயலின் தந்தைக்கும் போன் செய்தும் சொல்லியிருந்தான்...” கயல்... கயல் “என்று கத்தியபடியே வர.... அவனுக்கு பயம் அதிகரித்தது.... இப்ப என்ன பண்ணுறது.... .இன்னைக்கு பொம்பளபுள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்லாமல் போச்சே.. கயலு நீ எங்கடி போன....சீக்கிரம் வந்துருடி... என்னால நீ இல்லாம இருக்கமுடியாது ...வந்துருடி.... என்று மனசிற்குள் கதறியவன்.... தன் போக்கில் கயல்...கயல் என்று கத்திக் கொண்டே இருந்தான்....
கயல் அந்த குடிகாரன் விரட்டவும் அந்த காட்டிற்குள் ஓடத் துவங்கியவள்....சிறிது தூரம் ஓடியவள் ஒரு பெரிய மரத்தின் வேர் தடுக்கவிட கீழே விழுந்திருந்தாள்..... அதற்குள் அவளை நெருங்கியிருந்த அந்த குடிகாரன்.....
“ என்னமா... இந்த ஓட்டம் ஓடுறா....” என்றபடி கயலின் சுடிதார் துப்பட்டாவை தூக்கி எறிந்தவன் அவள் கையை பிடிக்கவர... கயல் அவனை ஓங்கி ஒரு உதைவிட.... அவன் கை தடுமாறி...அவள் சுடிதாரின் முன்பகுதியை பிடித்தவன்... அவள் உதைக்கவும் தோள்பட்டை கிழிந்து... அந்த உடையின் அவள் உள்ளாடை வெளியே தெரியும்படி கிழிந்தது..... அவன் கீழே விழவும் கயல் தடுமாறி எழுந்தவள்.... கயல் உனக்கு உயிரே போனாலும் இவனோட கையில மாட்டக்கூடாது....என்று நினைத்தபடி ஓடத்துவங்கியவள்.... ஏங்க அன்னைக்குமட்டும் வந்து என்னைய காப்பாத்துனீங்க.... வாங்க... வாங்க என்று மனதிற்குள் கண்ணனை நினைத்தபடி இந்த இருட்டில் ஓடத்துவங்கியவள்... அவன் காலடி சத்தம் தன்னை நெருங்கவும்.. ஓடிக் கொண்டிருந்தவள் ஒரு மரத்தில் மோதியவள் கையால் துழாவ அந்த மரத்தின் கிளை தாழ்வாக இருக்கவும் அதில் கால் வைத்து ஏறி அந்த மரத்தின் ஒரு பெரிய கிளையில் அமர்ந்திருந்தாள்..... அந்த குடிகாரன் அந்த மரத்தை தாண்டும் போது மூச்சை அடக்கி அமர்ந்திருந்தாள்.... கயலுக்கு எப்போதும் இருட்டென்றால் பயம்.. ஆனால் இன்னைக்கு இருட்டா இருக்குறதால தானே அவன் என்னைய கண்டுபிடிக்கல என்று யோசித்தபடி மனதிற்குள் தன் தந்தையையும் கண்ணனையுமே சீக்கிரம் யாராச்சும் வாங்களேன் என்று உருபோட்டபடி அமர்ந்திருந்தாள்.....
Last edited: