மல்லிகா மேம்
உங்கள் நீதானே தாலாட்டும் நிலவு மற்றும் வரம் தரும் வசந்தம் நாவல் படித்தேன். இரண்டு கதைகளும் என்னை மிகவும் பாதித்தது .
இது பற்றிய எனது கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
என்னதான் தேவிகா அண்ணாமலை செயலை பொறுத்துக் கொண்டாலும், ராஜி பேசாமல் இருந்தாலும், அதனால் அண்ணாமலை அனிதா எந்த விதத்திலும் பாதிக்கப்பட்ட தாக தெரியவில்லை.
அனிதா தன் குழந்தைகள் நந்தன் மற்றும் அஷரா மூலம் தண்டிக்க ப்பட வேண்டும். அப்போதுதான் தேவி மற்றும் ராஜியின் வலியை அனிதா உணருவார். அவரது நடத்தை குழந்தைகளையும் பாதித்து, அவர்கள் சமுதாயத்தில் கேவலமாக பேசப்பட்டு, அவர்கள் அண்ணாமலை, அனிதாவை புறக்கணிக்க வேண்டும்.
அப்போதுதான் இதுபோன்ற செயல்க ளை செய்பவர் இதைப்பார்த்து இதுபோல செயல்களில் ஈடுபட தயங்குவார்கள்.
ஆகவே, நீங்கள்இந்த கதையின் தொடர்ச்சியாக மூன்றாவது கதை, அதாவது நந்தன், அஷராவை மையமாக வைத்து எழுத வேண்டும் என்பது என்னோட வேண்டுகோள். நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்
தோழி நாகாஸ் பிரியா என்ற ஆனந்தி