ஹாய் பிரண்ட்ஸ். தாமதத்திற்கு மன்னிக்கவும். இந்த கதையின் பதிவை தினமும் கொடுக்கறேன்னு சொன்ன விஷயத்தையே மறந்து போயிட்டேன். தினமும் நாலு பதிவா கொடுத்து இந்த கதையை முடிச்சிடறேன். யாருக்கும் பதில் கொடுக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன். சாரி பிரண்ட்ஸ். நேரமின்மையே முக்கிய காரணம். அதோட லேப்டாப் பக்கமே கொஞ்ச நாளைக்கு போக கூடாதுன்னு ஆர்டர் வேற.!! எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கறேன்.
அரசுவால் கண்ணனின் வார்த்தையை மீற முடியவில்லை என்பது ஒருபக்கம்,பிரவீனின் பயம் கலந்த பேச்சு ஒரு பக்கம் என்பதோடு இயல்பிலையே அவனால் யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது.
இதே அம்சவேணியை இன்னும் மூன்று நான்கு வருடங்கள் கழித்து திருமணத்திற்கு பேசினார்கள் என்றால் உடனே சம்மதித்திருப்பான்.ஆனால் இன்றைய நிலையில் அவனை தடுப்பது அவனின் பொருளாதார நிலை மட்டுமே...
இப்போது தங்கியிருக்கும் வீட்டின் வாடகையே பிரவீன் பாதி கொடுப்பதினால் தான் கட்டுபடியாகிறது.இதே தான் மணம் முடித்தால் ஒன்று தான் வெளியேற வேண்டும்.இல்லை பிரவீனை வெளியே வேறு வீடு பார்க்க சொல்ல வேண்டும்..இதில் இரண்டாவது யோசனைக்கு தன்னால் சம்மதிக்கவே முடியாது என்றும் அரசுவிற்கு தோன்றியது.எந்த நிலையிலும் நண்பனை துரத்திவிட அவன் தயாராயில்லை..
தன் குழப்பங்களை எல்லாம் கண்ணனிடம் சொல்லி,”இப்போதைக்கு அந்த பொண்ணை வேலை பார்க்கற இடத்துலையே விட்டுடலாம்-ண்ணா.எனக்கு நல்ல கம்பெனில,நல்ல சம்பளமா வந்த பின்ன,நானே கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கறேன்.அதுவரைக்கும் கார்டியனா என் பேரை போட்டுக்கலாம்.அந்த மில்-ல வேலை செய்யற மேனேஜர் அண்ணா எனக்கு தெரிஞ்சவர் தான்.நான் சொன்னா அவர் கேட்பார்”என்றான் ஒரு முடிவோடு!!
“நீ சொல்றதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியபடாதுப்பா அரசு. நாம மில்லுல கொண்டு போய் விடவும்,அவங்க வீட்டுல டிராமா பண்ணி கூட்டிட்டு போய் வேற யாருக்கோ கல்யாணம் பண்ணி வைச்சிட்டா என்ன பண்றதுப்பா”என்றதும் இவனுக்கு கோபம் வந்துவிட்டது.
“அப்படியே போய் எவனை வேணா கட்டட்டும்.நானும் விட்டது தொல்லைன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்-ண்ணா..”பட்டென்று சொல்ல பிரவீன் முறைத்தான்.
“என்னடா முறைக்கிற”என்று அவனிடமும் எகிற,
“நாமளே இப்படி நடக்குமோ,அப்படி நடக்குமோன்னு பேசிட்டு இருக்கறதை விட,இப்போ தங்கச்சிக்கு கூப்பிட்டு,தெளிவா அதோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.உன்னோட வர விருப்பமா இல்லையான்னு அதுவே சொல்லிடும்”-என்று இத்தனை நேரத்தில் இப்போது தான் தெளிவாய் பேச,அதுவே கண்ணனுக்கும் அரசுவிற்கும் சரியெனப்பட,முன் யோசனையின்றி வேணிக்கு அழைத்துவிட்டான்.
அங்கே விடாது அழுது கொண்டிருந்தவள்,போனில் வெளிச்சம் தெரியவும்,அவசரமாய் கண்ணீரை துடைத்துவிட்டு போனை எடுத்துவிட்டாள்.
“ஹலோ”என்ற அவளின் குரலிலையே அரசுவிற்கு அவள் அழுதிருக்கிறாள் என்று புரிய,
சுற்றி வளைக்காமல்,நேரடியாகவே, “உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க.அதுக்கு நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கற”என்றவனை பின்னிருந்து அடித்தான் பிரவீன்.
“டேய்,இவ்வளவு நேரம் என்னடா சொல்லிட்டு இருந்தோம்,மறுபடியும் தங்கச்சிக்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க”என்ற பிரவீனின் குரல் அம்சாவிற்கு கேட்க,
அரசுவிடம் பேசுவதை விட பிரவீனிடம் பேசுவது எளிதானது என்று தோன்றவும்,”அண்ணாகிட்ட கொடுக்கறீங்களா”என்றாள்.
சட்டென்று மூண்ட கோபத்தில்“எந்த அண்ணா”என்றான் ஒருவித வெறுப்புடன்..
அவளுக்கு அவனின் பேச்சு தொனியே பயத்தை கொடுத்தது என்றால் மிகையில்லை..
முயன்று திடத்தை வரவழைத்துக்கொண்டு,”பிரவீன் அண்ணாகிட்ட”என்று சொல்லிவிட்டாள்.
“ஓ,அப்போ இனி உன்னோட பிரவீன் அண்ணாகிட்டவே எல்லாம் பேசிக்க!அவனே உனக்கு வேண்டியத செய்வான்.அவனோட நம்பர் வேணும்னா கொடுக்கறேன்..எழுதிக்க!!”-இத்தோடு முடிந்தது என்பது போல் பேச,அவனிடமிருந்து போனை பிடுங்க முயன்ற பிரவீனை ஒரு கையாலையே தடுத்து,
“இப்படி நீ அமைதியா இருந்தேன்னா என்னால ஒண்ணும் செய்ய முடியாது.இப்போ நீ வாய திறந்து பேச போறியா,இல்லையா”ஏறக்குறைய கத்த,அவள் சத்தமாகவே அழுக ஆரம்பித்துவிட்டாள்.
அரசுவிற்கு பாவமாகிவிட்டது.
கண்ணை இறுக மூடி திறந்தவன்,ஒரு முடிவாய்,”நீ எதுவும் சொல்லாம என்னால எதுவுமே பண்ண முடியாதும்மா,உனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னா போலீஸ்ல ஒரு கம்பிளைன்ட் பண்ணிடுவோம்.அவங்க உன்னோட அம்மா அப்பாவை ஒரு மிரட்டு மிரட்டுனா கப்சிப்னு அமைதியாகிடுவாங்க.உன்னையும் நீ வேலை செய்யற மில்லுலையே பாதுகாப்பா தங்க வைக்க எல்லா ஏற்பாடும் செய்யறேன்.நீ என்ன சொல்ற”பொறுப்புடன் பொறுமையாய் பேச,அம்சாவிற்கும் அவனது யோசனை சரியாகவே தோன்றினாலும் மனதிற்கு அது சரியென்று படவில்லை.
‘எனக்காகவே இந்த வாழ்க்கையை வாழறவங்களை போய்,’இவங்களால எனக்கு ஆபத்துன்னு எப்படி நா கூசாம சொல்றது’என்ற சிந்தனை ஓடிய நொடியில்,
‘அப்போ வீட்டை விட்டு ஓடிப்போறது மட்டும் சிறப்பான செயலாக்கும்’இன்னொரு புறம் மனது எடுத்துரைத்து கொன்றது அவளை!
அவளது சிறிது நேர மௌனம் ஸ்பீக்கரில் அவளது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரவீனிற்கு வேறு அர்த்தத்தை கொடுத்துவிட்டது தான் இங்கே சொல்லக் கூடிய விஷயம்.
அம்சாவிற்கு அரசுடன் வாழத்தான் விருப்பம்.வேறு எதற்கும் சம்மதமில்லை போல என்று அவனாகவே ஊகித்துக்கொண்டு,சட்டென்று அலைபேசியை பிடுங்கியவன்,”தங்கச்சி,நீ எதுக்கும் கவலைப்படாதம்மா.உனக்கு அரசுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? இல்லையா? அத மட்டும் சொல்லு.மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்”என்றதும் அரசு வழக்கம் போல நண்பனை பார்வையாலையே எரித்தான்.
சம்பந்தப்பட்ட இருவருமே முன்னெடுக்க தயங்கிய விஷயமே திருமணம் தானே..பிரவீனே முன்னெடுக்கவும்,அம்சாவிற்கு கண்ணீர் பொலபொலவென கொட்டத்தான் செய்தது..
மூச்சை இழுத்துக்கொண்டு,”எனக்கு சம்மதம்..அவருக்குண்ணா..?”கேள்வி கேட்க..
“அவனுக்கு டபுள் ஓகேவாம் தங்கச்சி”எனவும் அவளுக்கு சிலிர்ப்பு.
இங்கே பிரவீன் பின் மண்டையிலையே அடி வாங்கியது பாவம் அவளுக்கென்ன தெரியும்.
5
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
அரசுவால் கண்ணனின் வார்த்தையை மீற முடியவில்லை என்பது ஒருபக்கம்,பிரவீனின் பயம் கலந்த பேச்சு ஒரு பக்கம் என்பதோடு இயல்பிலையே அவனால் யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது.
இதே அம்சவேணியை இன்னும் மூன்று நான்கு வருடங்கள் கழித்து திருமணத்திற்கு பேசினார்கள் என்றால் உடனே சம்மதித்திருப்பான்.ஆனால் இன்றைய நிலையில் அவனை தடுப்பது அவனின் பொருளாதார நிலை மட்டுமே...
இப்போது தங்கியிருக்கும் வீட்டின் வாடகையே பிரவீன் பாதி கொடுப்பதினால் தான் கட்டுபடியாகிறது.இதே தான் மணம் முடித்தால் ஒன்று தான் வெளியேற வேண்டும்.இல்லை பிரவீனை வெளியே வேறு வீடு பார்க்க சொல்ல வேண்டும்..இதில் இரண்டாவது யோசனைக்கு தன்னால் சம்மதிக்கவே முடியாது என்றும் அரசுவிற்கு தோன்றியது.எந்த நிலையிலும் நண்பனை துரத்திவிட அவன் தயாராயில்லை..
தன் குழப்பங்களை எல்லாம் கண்ணனிடம் சொல்லி,”இப்போதைக்கு அந்த பொண்ணை வேலை பார்க்கற இடத்துலையே விட்டுடலாம்-ண்ணா.எனக்கு நல்ல கம்பெனில,நல்ல சம்பளமா வந்த பின்ன,நானே கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கறேன்.அதுவரைக்கும் கார்டியனா என் பேரை போட்டுக்கலாம்.அந்த மில்-ல வேலை செய்யற மேனேஜர் அண்ணா எனக்கு தெரிஞ்சவர் தான்.நான் சொன்னா அவர் கேட்பார்”என்றான் ஒரு முடிவோடு!!
“நீ சொல்றதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியபடாதுப்பா அரசு. நாம மில்லுல கொண்டு போய் விடவும்,அவங்க வீட்டுல டிராமா பண்ணி கூட்டிட்டு போய் வேற யாருக்கோ கல்யாணம் பண்ணி வைச்சிட்டா என்ன பண்றதுப்பா”என்றதும் இவனுக்கு கோபம் வந்துவிட்டது.
“அப்படியே போய் எவனை வேணா கட்டட்டும்.நானும் விட்டது தொல்லைன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்-ண்ணா..”பட்டென்று சொல்ல பிரவீன் முறைத்தான்.
“என்னடா முறைக்கிற”என்று அவனிடமும் எகிற,
“நாமளே இப்படி நடக்குமோ,அப்படி நடக்குமோன்னு பேசிட்டு இருக்கறதை விட,இப்போ தங்கச்சிக்கு கூப்பிட்டு,தெளிவா அதோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.உன்னோட வர விருப்பமா இல்லையான்னு அதுவே சொல்லிடும்”-என்று இத்தனை நேரத்தில் இப்போது தான் தெளிவாய் பேச,அதுவே கண்ணனுக்கும் அரசுவிற்கும் சரியெனப்பட,முன் யோசனையின்றி வேணிக்கு அழைத்துவிட்டான்.
அங்கே விடாது அழுது கொண்டிருந்தவள்,போனில் வெளிச்சம் தெரியவும்,அவசரமாய் கண்ணீரை துடைத்துவிட்டு போனை எடுத்துவிட்டாள்.
“ஹலோ”என்ற அவளின் குரலிலையே அரசுவிற்கு அவள் அழுதிருக்கிறாள் என்று புரிய,
சுற்றி வளைக்காமல்,நேரடியாகவே, “உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க.அதுக்கு நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கற”என்றவனை பின்னிருந்து அடித்தான் பிரவீன்.
“டேய்,இவ்வளவு நேரம் என்னடா சொல்லிட்டு இருந்தோம்,மறுபடியும் தங்கச்சிக்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க”என்ற பிரவீனின் குரல் அம்சாவிற்கு கேட்க,
அரசுவிடம் பேசுவதை விட பிரவீனிடம் பேசுவது எளிதானது என்று தோன்றவும்,”அண்ணாகிட்ட கொடுக்கறீங்களா”என்றாள்.
சட்டென்று மூண்ட கோபத்தில்“எந்த அண்ணா”என்றான் ஒருவித வெறுப்புடன்..
அவளுக்கு அவனின் பேச்சு தொனியே பயத்தை கொடுத்தது என்றால் மிகையில்லை..
முயன்று திடத்தை வரவழைத்துக்கொண்டு,”பிரவீன் அண்ணாகிட்ட”என்று சொல்லிவிட்டாள்.
“ஓ,அப்போ இனி உன்னோட பிரவீன் அண்ணாகிட்டவே எல்லாம் பேசிக்க!அவனே உனக்கு வேண்டியத செய்வான்.அவனோட நம்பர் வேணும்னா கொடுக்கறேன்..எழுதிக்க!!”-இத்தோடு முடிந்தது என்பது போல் பேச,அவனிடமிருந்து போனை பிடுங்க முயன்ற பிரவீனை ஒரு கையாலையே தடுத்து,
“இப்படி நீ அமைதியா இருந்தேன்னா என்னால ஒண்ணும் செய்ய முடியாது.இப்போ நீ வாய திறந்து பேச போறியா,இல்லையா”ஏறக்குறைய கத்த,அவள் சத்தமாகவே அழுக ஆரம்பித்துவிட்டாள்.
அரசுவிற்கு பாவமாகிவிட்டது.
கண்ணை இறுக மூடி திறந்தவன்,ஒரு முடிவாய்,”நீ எதுவும் சொல்லாம என்னால எதுவுமே பண்ண முடியாதும்மா,உனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னா போலீஸ்ல ஒரு கம்பிளைன்ட் பண்ணிடுவோம்.அவங்க உன்னோட அம்மா அப்பாவை ஒரு மிரட்டு மிரட்டுனா கப்சிப்னு அமைதியாகிடுவாங்க.உன்னையும் நீ வேலை செய்யற மில்லுலையே பாதுகாப்பா தங்க வைக்க எல்லா ஏற்பாடும் செய்யறேன்.நீ என்ன சொல்ற”பொறுப்புடன் பொறுமையாய் பேச,அம்சாவிற்கும் அவனது யோசனை சரியாகவே தோன்றினாலும் மனதிற்கு அது சரியென்று படவில்லை.
‘எனக்காகவே இந்த வாழ்க்கையை வாழறவங்களை போய்,’இவங்களால எனக்கு ஆபத்துன்னு எப்படி நா கூசாம சொல்றது’என்ற சிந்தனை ஓடிய நொடியில்,
‘அப்போ வீட்டை விட்டு ஓடிப்போறது மட்டும் சிறப்பான செயலாக்கும்’இன்னொரு புறம் மனது எடுத்துரைத்து கொன்றது அவளை!
அவளது சிறிது நேர மௌனம் ஸ்பீக்கரில் அவளது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரவீனிற்கு வேறு அர்த்தத்தை கொடுத்துவிட்டது தான் இங்கே சொல்லக் கூடிய விஷயம்.
அம்சாவிற்கு அரசுடன் வாழத்தான் விருப்பம்.வேறு எதற்கும் சம்மதமில்லை போல என்று அவனாகவே ஊகித்துக்கொண்டு,சட்டென்று அலைபேசியை பிடுங்கியவன்,”தங்கச்சி,நீ எதுக்கும் கவலைப்படாதம்மா.உனக்கு அரசுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? இல்லையா? அத மட்டும் சொல்லு.மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்”என்றதும் அரசு வழக்கம் போல நண்பனை பார்வையாலையே எரித்தான்.
சம்பந்தப்பட்ட இருவருமே முன்னெடுக்க தயங்கிய விஷயமே திருமணம் தானே..பிரவீனே முன்னெடுக்கவும்,அம்சாவிற்கு கண்ணீர் பொலபொலவென கொட்டத்தான் செய்தது..
மூச்சை இழுத்துக்கொண்டு,”எனக்கு சம்மதம்..அவருக்குண்ணா..?”கேள்வி கேட்க..
“அவனுக்கு டபுள் ஓகேவாம் தங்கச்சி”எனவும் அவளுக்கு சிலிர்ப்பு.
இங்கே பிரவீன் பின் மண்டையிலையே அடி வாங்கியது பாவம் அவளுக்கென்ன தெரியும்.