Hi Malli,
தென்றல் என்னை தீண்டும் போது
சுகமாய் தாலாட்டும் உன் நினைவு!
கண்கள் உன்னை தீண்டும் போது
இதமாய் வாலாட்டும் உன் கனவு!
தேடி வந்தவளை
சூடிக் கொண்டவன்
வாடித் தவிக்கின்றான்
பார்வையாலே.....!
நாடி வந்தவனை
கூடிக் கொண்டவள்
வாடித் தவிக்கின்றாள்
வார்த்தையாலே....!
ஊருக்காக ஓடி
உறவுக்காக வாடி
உறங்காத நெஞ்சங்கள்
உயிர்காதல் மெய்தீண்ட
உயிர்ப்பது தான் எந் நாளோ?
நன்றி.