அருமையான பதிவு
.சிபிவர்மன் தன் திருமணத்தை தாலிகட்டும் நேரத்தில் நிறுத்திவிட்டு
திருமணத்திற்க்கு குழந்தையுடன் வந்திருக்கும் வெண்மதிக்கு தாலிகட்டுவதால் குடும்பத்தில்
ஏற்படும் பிரச்சனை,வர்மனை வெறுக்கும் மதி என கதை செல்கிறது.
திடீர் திருமணத்தால் வர்மனை,மதி வெறுப்பதாக நினைக்க,பள்ளிக்கூடத்திற்க்கு செல்லும் போது நண்பர்களின் தூண்டுதலால் சிபி,மதியிடம் காதலை சொல்வதும் ,பின்தன் தவறு உணர்ந்து மதியிடம் மன்னிப்பு கேட்பதும்,அதனால் மதியின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் ,
சிபி சிறுவயதி்ல்செய்த தவறு, சிபியை வெறுக்க காரணமாகிறது.
கதிர்வேலன்,பார்கவியின் காதல் பிரமிக்கவைக்கிறது.
.
அவர்கள் அழகான காதலின் அடையாளம் வானதி.
.
சிபி,மதி இருவரும் தங்கள் மனதின் உள்ளதை பேசி, சமாதானமாக அவர்களின் காதலும் புரிந்து ,மாறவர்மன் வரவுக்காக காத்திருக்கின்றனர்.
.
அழகான கதை,இனிய முடிவு.வாழ்த்துக்கள்.
.