மிகவும் அருமையான பதிவு,
டியர்
ஹாஹாஹா
நான் நினைத்த மாதிரியே ஆரவ் வித்யுத்தின் சகோதரன்தான்
அடப்பாவி இந்த சசி சேகரன் சரியான காதல் மன்னனா இருக்கானே
அப்போ ஆரவ்வின் அம்மா?
விதுவைப் பார்த்து சசிக்கு நம்ப முடியலைன்னா தன்னுடைய இந்த மகன் பிறந்ததே சசிக்கு தெரியாதா?
இல்லை சசிக்கு சொல்லாமல் ரங்கேஸ்வர் மறைத்து விட்டாரா?
இப்பவும் நறுமுகை அப்பாவுக்கு பயப்படுவதைப் பார்த்தால் ரங்கேஸ்வர் ஏதோ திரிசமன் செய்திருப்பார்ன்னு தோணுது
கனடாவில் சசி சேகரனுடன் வசிக்கிறாளான்னு பார்த்தால் பையனை விட்டுவிட்டு தனியே கணவருடன் ஆரவ்வின் அம்மா இருப்பாளான்னு தோணுது
ஒருவேளை அவள் உயிருடன் இல்லையோ?
அப்போ நறுமுகைக்கு போட்டிக்கு ஆள் இல்லை போலவே
திருச்சி வரையிலான விமானப் பயணத்தில் பையன்கள் இருவரும் தந்தையுடன்தானா?
அப்போ கூட்டிட்டு போன அம்மாவை அம்போன்னு விட்டுட்டு வரும் பொழுது அப்பா கூட விது சேர்ந்திருவானா?
ஆரவ் பையன் சூப்பர்
என்னதான் அப்பாவைப் பார்த்து பாசத்தில் திளைத்தாலும் வல்லி கிளம்புறாள்ன்னு அப்பாவை கழட்டி விட்டுட்டு கூட்டிட்டு போன மேம் கூடவேதான் ஒட்டிக்கிறான்
"இவா"-ன்னா இளித்த வாய் பெண்-ன்னு இருக்குமோ?
Jokes apart நகைமுகைவல்லிக்கு சிரித்த முகம்ன்னு மீனிங் வருவதால் இவா இருக்குமோ?
கப் போர்டிலும் LUV IV தான் இருக்கு