ஹாய் மல்லி,
தவறவிட்ட கதையிது
தவறுகள் தடங்கலாய்
தப்புகள் தடைக்கல்லாய்
சுந்தரியும் புரியாமல்
துந்தரனும் அறியாமல்
காலங்கள் கடந்தாலும்
காயங்கள் உலர்ந்தாலும்
காட்டி நிற்கும் வடுக்களில்
தத்தளிக்கும் தருணமிது....!
அழகான கதை,
ஆழமான விதை,
இயல்பான பிழை,
ஈடில்லா நிலை,
உரிமையில்லா இணை,
ஊசலாடும் வினை,
எட்டி நிற்கும் முறை,
ஏக்கமாகும் திரை,
ஐக்கியமாகும் கடை
ஒருவராய் இருவரும்
ஓவியமாய் உறவாட
ஔசதமாம் பூ - அது
தனிமை நீக்கும் அன்பு!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி