ஹாய் மல்லி,
மறக்க முடியவில்லை,
மன்னிக்க முடியவில்லை,
மனம் விட்டுப் பேச
மனிதமும் இருக்க வில்லை
பாசத்தில் முன்னால்!
விலக்க முடியவில்லை,
விருப்பவும் முடியவில்லை,
விட்டு விட்ட நெஞ்சை
வெறுக்கவும் பொறுக்க வில்லை
நேசத்தின் முன்னால்!
மனம் ஒன்று நினைக்க
நினைவொன்று இருக்க
அணைபோட்டுத் தடுக்க
அன்பு என்னும் வேலியின்றி
வேல்விழியாளும் வேதனையாய் நிற்பதென்ன...?
வாராது என்று விட்டுவிட்ட சொந்தம்!
மாறாது நின்று தொட்டுவிட்ட பந்தம்!
சேராது என்று வெட்டிவிட்ட சொந்தம்!
பாராது நின்று கட்டிவிட்ட பந்தம்!
பாந்தமாய் பேசாமல்
பரிதவிப்பில் நின்றிருக்க
பாரமாய் நின்றாலும்
பாராமல் சென்றாலும்
பண்பட்ட நெஞ்சம்
மனம் விட்டுப் பேசாமல்
மரியாதை கொடுப்பதென்ன...?
நன்றி.