தன்னுடன் ராஜியை இணைத்து பேசியதால்,
கடவுள் தனக்கு இந்த தண்டனை கொடுத்ததாக
செந்தில் குற்ற உணர்ச்சியில் எண்ணுகிறான்....
அண்ணாமலையோ ,தான் தடம் புரண்டதால் தான்,
தன் மகளைப் பற்றி இவ்வாறு ஒரு பேச்சு வந்தது
என்ற குற்ற உணர்வு இல்லாமல், செந்திலின்
தந்தையை மிரட்டிச் செல்கிறார்.....
வேண்டாம் என்றால் வேண்டும், என்று செய்யும்
இளம் பருவத்தினர் என்று சீனியப்பன்
புரிந்துக் கொண்டது கூட,
அண்ணாமலை புரிந்துக் கொள்ளவில்லை ....
ராஜியைப் பற்றியும் சரியாக தெரிந்துக் கொள்ளவில்லை....