E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
இன்னும் ஒன்று இருக்கு...
அருமை மீரா
 

Manimegalai

Well-Known Member
Excellent Mega...
அன்பின் உச்சம் அருமை..
எவரெஸ்ட் ஆகவே நம் மனதில் நின்று விட்டான், விஸ்வா...
நன்றிகள் மலர்:)
உங்ககிட்ட இருந்து வரும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி...
நாம தனியா பேசும்போதும் கூட சூப்பர்லா மேகா வந்தது....என்னோட நாள் நிறைவா இருக்கும்....ஆனால் மாசத்துக்கு 2 வாங்கவே படாதபாடு படுகிறேன்...:D
இன்னும் சிறப்பா சொல்ல முயற்ச்சிக்கிறேன்.
 

Manimegalai

Well-Known Member
சூப்பராக சொல்ற மணி...மணி...மணியாக..பேசுகிறாய்..தொடரட்டும்
நீங்க சொல்றது எங்க அம்மா சொல்றமாதிரி சின்னதா இருந்தாலும்...பாராட்டுவது:)
ஆனால் மலர் உமா சிஸ் இவங்ககிட்ட இருந்து வந்தால்..ஓ நம்மளும் ஏதோ நல்லா சொல்லிட்டேன் போல என்று உணர்கிறேன்:)
 

Manimegalai

Well-Known Member
காதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய
காதல்..

வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..
நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..


உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
ஏனோ தெரியலை பாத்தி இந்த கவிதை படித்தவுடன் தல ஈஸ்வரை ரொம்ப பிடிக்குது.
இது கதை ரொம்ப உணர்ச்சி வசப்படாதே என்று என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்.:)
 

Manimegalai

Well-Known Member
ஏன் பேரன்பு னு நாங்க சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா :mad:
ரொம்பத்தான் :oops:
ஆமாம் நல்லா கேளுங்க மலர்...
அது என்ன மூன்று எழுத்தில் அன்பு.....
ஒரு எழுத்து கூட போட்டு பேரன்பு ஆக்ககூடாதா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top