Dear friends,
I am really shocked and disturbed.. I have not read all the comments.. and I am not going to also.. one or two itself not letting me to go further in to the story..
I am writing this story for more than a year. And struggling a lot in a way to complete it. Because everybody’s expectation is more about the story. And I have now committed my self on any accord I am not going for any other story before completing this.
This is just a story and every person have their own face in the story.
இவ்வளவு கனமான வார்த்தைகள் வேண்டாம்.. நாம கதை படிக்கறதே நம்முடைய தினப் படி வாழ்க்கையில் இருக்கும் டென்ஷன் குறைய.. அதன் பொருட்டு நாம டென்ஷன் ஏற்றிக் கொள்ள வேண்டாம்..
நீங்களும் நல்லவராக இருக்கலாம் நாங்களும் நல்லவராக இருக்கலாம் ஆனாலும் உங்களுக்கு எங்களை பிடிக்க வேண்டும் என்றோ எங்களுக்கு உங்களை பிடிக்க வேண்டும் என்றோ எந்த அவசியமும் இல்லை.. இந்தக் கருத்து என்னுடைய பெரும் பாலான கதைகளில் வரும்..
அது போல தான் நிஜ வாழ்க்கையும்.. நாம் எல்லோருமே பிடிவாதக் குழந்தைகள் ஒரு வகையில்..
யார் யார் என்றே நமக்கு தெரியாது ஆனாலும் நாம் இங்கே ஒன்றாய் தான் இருக்கிறோம்.. நிச்சயம் ஒன்றாய் இருப்போம்... யார் மனதையும் யாரும் புண் படுத்திக் கொள்ள வேண்டாம்
கதையை பற்றி என்ன சொல்ல.. எனக்கு தோன்றியதை எழுதிக் கொண்டு போகிறேன் அவ்வளவே.. வாழ்க்கையில் பெரும்பாலானோர் நிறையும் குறையும் உள்ள மனிதர்கள்.. இங்கே இந்த பாத்திரப் படைப்புகளும் அப்படியே..
யாரையும் சரியாவனர்கள் என்று இங்கே கொண்டு வரப் போவதில்லை.. அவரவர்க்கு உண்டான நிறை குறைகளோடு தான் இருப்பார்கள்..
படியுங்கள்! பிடித்தால் ரசியுங்கள்... பிடிக்காவிட்டால் திட்டுங்கள்... பாத்திரங்களை... பாத்திரப் படைப்புகளை.. ஏன் என்னையும் கூட.. நான் வருந்திக் கொள்ள மாட்டேன்.. அது என்ன என்று ஆராய முற்படுவேன்.
ஆனால் நீங்கள் இங்கே யாரையும் யாரும் வருத்திக் கொள்ளாதீர்கள்.. பிறகு வரப் பிடிக்காமல் போகிறேன் என்றும் சொல்லிக் கொள்ளாதீர்கள்... மனதிற்கு வருத்தமாக இருக்கிறது..
இதற்கு பதில் கூட வேண்டாம்!
இது உங்கள் எல்லோருக்குமான தளம்...
நம்மளை நாமே திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளலாம்.. இது ஏதோ ஒரு இடர் என நினைத்து..
Please friends be here.. This is my humble request..