fathima.ar
Well-Known Member
கவிதை நடையில் கருத்தை சொல்வது நன்றாக தான் இருக்கிறது பாத்திமா.
தோல்வியுற்ற திருமண வாழ்வா பாரதி கண்ட புதுமை பெண்ணை உருவாக்குவது...
தோல்வியுற்ற திருமணம் யாருக்கு?
கையில் குழுந்தையுடன் கண்ணியமாக வாழ்க்கை நடத்தி 10 பேருக்கு படியளக்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் 'சுந்தரி' தோற்றுப் போனவளா?
அவளது பெயர் பிடிக்கவில்லை
அவளது தோற்றம் பிடிக்கவில்லை.
அவளது வீடும் பிடிக்கவில்லை
அவளது தந்தையை பிடிக்கவில்லை
சோறு போடும் விவசாயியின் வியர்வை மணம் பிடிக்கவில்லை
அவளை முழுமையாய் சுகித்த பின்னும் அவளுடன் வாழ பிடிக்கவில்லை
அவனும் அவளும் பிறந்து வளர்ந்த நந்தவன பூமி பிடிக்கவில்லை
இன்னும் எத்தனை பிடிக்கவில்லை அவளிடம் அவனுக்கு முழுமையாக தெரியவில்லை
இத்தனை பிடிக்கவில்லைகளை கூறி மணவிலக்கு கோரும் அவனிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்டிருந்தால் அவள் மணவாழ்க்கையில் வெற்றி பெற்ற பாரதி கண்ட புதுமை பெண் ஆகியிருப்பாளோ உங்கள் கூற்றுப்படி.
எங்கே கூறியிருக்கிறான் அந்த முண்டாசு கவி இப்படியோர் பொருள் வரும் கவிதையை.
புதிய சமுதாயம் படைக்க புறபட்டிருக்கும் உங்கள் தாரக மந்திரம் என்ன? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதா? உன்னை பிடிக்கவில்லை என்பவனுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அவள் மல்லியின் கதாநாயகியாய் இருந்திருக்க முடியாது. நீ எனக்கு வேண்டாம் என்றவனிடம் நீ எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வெற்றி நடைபோடும்.
மல்லியின் சுந்தரியின் பின்னே புதிய சமுதாயம் நோக்கி போரடவே நான் விரும்புகிறேன்.
அவள் கண்ணனுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அவள் பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.
இப்படியொருத்தியை மனைவியாகவும் மருமகளாகவும் அடைந்தும் தக்கவைத்துக் கொள்ளாமல் தவறவிட்டவர்களே வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்.என்பதே எனது தாழ்மையான கருத்து பாத்திமா அவர்களே.
I dunno wat to say..
Juz remove your yellow goggles and read it again..
I juz mentioning those who lost life in marriage relationship and come back alone is not puthumai pen as bharathi dreamt..
All women goal should not be good family alone..
We need to create a good society as well..
.hope u read it again and understand...