சில பதிவுகள் போடும் போது இன்னைக்கு பானுமதி அக்காகிட்ட செம திட்டு இருக்கும்னு ஒரு ஆர்வத்தோட தான் வருவேன். பொத்தம் பொதுவா நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போக மாட்டாங்க. கதையை நல்லா வாசிச்சு... அவ்வளவு நுணுக்கமா கமெண்ட்ஸ் போடுவாங்க. அதுவும் ஒருத்தர் ரெண்டு பேருக்கு இல்லை. இங்க எழுதிற எல்லோருக்கும்.
இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இன்னைக்கு எழுதும் போது கூட.... பானு அக்கா எப்படி கமெண்ட்ஸ் போட்டிருப்பாங்கன்னு தான் மனசு யோசிச்சது.
Such a good soul. Really missing u Banu akka.
உங்களின் நல்ல மனதிற்கு கடவுளின் பாதத்தில் உங்களுக்கு இடம் இருக்கும்.