தோழமைகளே,
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அடுத்த பகுதி..
Ayodhyaakandam 9
இன்று அனுமத் ஜெயந்தி.
ஸ்ரீ ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.
(இன்னும் அனுமனை நாம் பார்க்கவில்லை) அவரைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு
ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்
பொருள்:-
அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்...
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி..
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று..
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு..
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தார்...
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பார்.
நட்புகள் அனைவருக்கும் அரணாய் அனுமன் நின்று காக்கட்டும், இறை அருள் பரிபூரணமாக உலகத்தின் மீது பொழியட்டும்.
ஜெய் ஸ்ரீராம்.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அடுத்த பகுதி..
Ayodhyaakandam 9
இன்று அனுமத் ஜெயந்தி.
ஸ்ரீ ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.
(இன்னும் அனுமனை நாம் பார்க்கவில்லை) அவரைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு
ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்
பொருள்:-
அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்...
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி..
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று..
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு..
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தார்...
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பார்.
நட்புகள் அனைவருக்கும் அரணாய் அனுமன் நின்று காக்கட்டும், இறை அருள் பரிபூரணமாக உலகத்தின் மீது பொழியட்டும்.
ஜெய் ஸ்ரீராம்.
Last edited: