Nice EPஒரே இழுப்பில் அவளை இழுத்து தனதருகில் விழச்செய்தவன் அவள் எழாதவாறு அவளின் மேல் படர்ந்தான்.
உடலின் வழியை விட, முதல் முறையாய் ஒருவனை நம்பி அந்த நம்பிக்கை பொய்த்து போன வலி அதிகமாய் இருக்க , ஹரிஷின் இந்த செயல் அவளை முற்றிலும் பலவீனமாக்கி இருந்தது.
சுத்தி நடப்பதை உணரமுடியாத மயக்கத்தில் அவள் ஆழ , அவனோ அவளின் முகத்தைதான் பார்த்திருந்தான் .
"நாங்க ஒருவார்த்தை சொன்னா அதை செஞ்சி முடிக்க பலபேர் இருந்தும்... உனக்காக தான்டி அந்த வேலைக்கு நானே வந்தேன். ரெண்டுவருஷதுக்கு முன்னாடி தற்செயலாய் உன்னை பார்த்தவன் தான்டி ...அந்த நிமிஷமே உன்கிட்ட விழுந்துட்டேன் . அந்த நிமிஷத்துல இருந்து உன்னைய என் உலகமா தான் பார்த்தேன் .. உன்னை அவ்வளவு நேசிச்சேன்டி...உன்னை என் கைக்குள்ளையே பொத்தி எப்பவும் என் கூடவே வச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன் " என கண்கள் முழுக்க காதல் வழிய சொன்னவன் ...அவளின் கன்னத்தை தட்டி ,
"என்னை பாரு சூர்யா ..! நான் உண்மைய தான் சொல்றேன் நீ வேணும்னா அஸ்வந்த்கிட்ட கேட்டுப்பாரேன்.நான்உன்னை என்னிக்கு பார்த்தேனோ அந்த நிமிஷத்துல இருந்தது வேற எந்த பொண்ணையும் தொட்டதே கிடையாதுடி . உன்னை எனக்கு அந்த அளவுக்கு பிடிச்சுதுடி...ஆனா நீ எங்க கூட்டத்தையே பிடிக்க பார்த்தா நான் எப்படி டி சும்மா இருப்பேன்...எப்படி சும்மா இருப்பேன்??" என வெறிபிடித்தவன் போல் கத்தியவன் ,
"ஏன்டி அப்படி பண்ண ?? ஏன்டி அப்படி பண்ண??" என கேட்டபடி மாத்தி மாத்தி அவளின் இரு கன்னங்களிலும் அறைந்து ,
"இப்பவே...இந்த நிமிஷமே நீ எனக்கு வேணும்டி " என கர்ஜித்தவன் மிருகமாய் மாறி அவளின் ஆடைகளை கிழித்தெறிந்து அவளை சூராடினான் .
அவன் அறைந்ததில் சிறிதாய் மயக்கத்திலிருந்து வெளிவந்தவள் , தனது பெண்மையையாவது காக்கவேண்டுமென முயல, அவளின் முயற்சிகளை சிதறடித்தவன் அவளை ஆள தன்னால் எதுவும் செய்யமுடியாமல் புயலில் சிக்கிய படகாய் ஆனவள் உடல் முழுக்க ரணத்துடன் மீண்டும் மயக்கமானாள்.
தனது வெறி தீரும் வரை அவள் மயங்கிருப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை மீண்டும் மீண்டுமாய் ஆண்டவன் , பலமணி நேரம் கழித்தே அவளிடம் இருந்து விலகி எழுந்தான் .
அவன் பேசும்பொழுதே அங்கிருந்த தனது வண்டியை எடுத்துக்கொண்டு எவரேனும் வருகிறார்களா என சிறிது தூரம் வரை மாறி மாறி வேறுவழியில் சென்றுகொண்டிருந்த அஸ்வந்த் , ஹரிஷ் எழுந்ததை கண்டு வண்டியை அருகில் நிறுத்தி இறங்கினான் .
திரும்பி மயக்கத்தில் கலைந்த ஆடையுடன் இருந்தவளை கண்டவனுக்கு எச்சில் ஊற , கண்களில் காமத்துடன் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தவனை தடுத்தது ஹரிஷின் கரம்.
இடவலமாய் தலையசைத்தவன், "உனக்கு தேவையானது கிடைச்சிடிச்சி அஸ்வந்த்...! அவளை தொடணும்னு நினைச்சி கூட பார்க்காத ... அவ எனக்கனவ . உனக்கு தெரியுமா அவ இதுவரைக்கும் யாரையும் நம்புனது இல்லை ..என்னை...என்னை மட்டும் தான் நம்புனா ...என் காதல் அந்தளவுக்கு புனிதமானது அஸ்வந்த் " என கேவலமாய் கர்வம் கொண்டவனை மிருகத்துடன் கூட ஒப்பிடமுடியாது .
பெற்ற தந்தையை கூடபெண்கள் நம்ப வாழ முடியாத இக்காலத்தில் ...ஒருவனை நம்புகிறாள் எனில் அதைவிட அவள் அவனுக்காய் என்ன செய்துவிட முடியும் . பெண்களின் நம்பிக்கையே அவர்களை களவாடும் ஆயுதமாய் பயன்படுத்தும் ஆண்கள் இவ்வுலகத்தில் வாழவே தகுதியற்ற உயிரினங்கள். அவனின் இறப்பு நிச்சயம் கொடூரமானதாகவே அமையும்.
பேசிய படி ஹரிஷ் முன் செல்ல ,அவனின் பேச்சை சட்டை செய்யாத அஸ்வந்த் அவளின் அருகில் செல்ல , திரும்பி பார்த்த ஹரிஷ் ,அஸ்வந்த் நிறுத்திவைத்திருந்த வண்டியின் சைலன்சரை பிடுங்கியவன் வேகமாய் அஷவந்தை தள்ள அவன் சிறிது தள்ளி சென்று விழுந்தான்.
"இவ அழகு தான உன்னைய தூண்டுது " என கேட்டபடியே அந்த சைலன்சரை அவளின் முகத்தில் விளாசினான்.
அதன் சூட்டில் ஒருபக்க முகம் வெந்து சுருங்க , அலறியபடியே மறுபக்கம் உடலை சுருட்ட , மீண்டுமாய் அந்த சைலன்சரை தன் முன் தெரிந்த அவளின் முதுகில் வீசினான்.
மித்ரன் அனைத்தையும் சொல்லி முடிக்க கண்கள் சிவந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட கேவி கேவி அழுதபடி இருந்தாள் யஷி.
"இதுல பாதி விஷயம் சூர்யாவோட மேலாளர் சொன்னது ...மீதி அவளை அந்த ஹோச்பிடல்ல டீரீட்மென்ட் குடுத்த டாக்டர்ஸ் சொன்னது....யாரோ அவளை அங்க கொண்டு போய் சேர்த்திருக்காங்க... யஷிமா! அவ அங்க இருக்கிறதே கொஞ்ச மாசத்துக்கு முன்னாடிதான் அந்த மேலாளருக்கு தெரிஞ்சிருக்கு . அவர் சூர்யாவை தன்னோட பொண்ணுமாதிரி தான் பாத்துட்டு இருந்திருக்கார் ..அவ அங்க இருக்குது வேற யாருக்கும் தெரியாது டா "
-என தொடர்ந்து அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாலும் கலங்கிய அவனின் கண்கள் வண்டியை ஓட்டமுடியாமல் தடை செய்தது.
கண்களை துடைத்துக் கொண்டவன் , கேவிக் கொண்டிருந்த யஷியை தன் தோளோடு அணைத்துக்கொண்டுவண்டியின் வேகத்தை அதிகப்படுத்திருந்தான்.
-காதலாகும் ...
ThanksNice EP