அருமையான பதிவு நீலா மணி
.அக்கா என்கூட ஒரு வார்த்தையும் பேசலைனு சொல்லும் வஞ்சு அவளும் புவனாவிடம் பேசாம ராம் குமார் கையை புடிச்சுட்டு தானே உட்கார்ந்திருந்தா
குழந்தை மனசா இருந்தா தீபக்குடன் பேசி விளையாண்டிருப்பா,குமரி மனதா இருந்தா புவனா முன்னால் ஒழுங்கா இருந்திருப்பா இவ ரெண்டும் கெட்டானா இருக்கா
.
எல்லா விஷயத்துலேயும் தம்பியை எதிர்பார்த்திருந்தா என்னாவது என புவனா அக்காவாக கவலை படறது சரிதான்
.இப்போ இருக்கற மனநிலையில் புவனா வஞ்சுவை பற்றி குறைவாக சொல்ல வாய்ப்பிருப்பதால்,அம்மாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என ஷ்யாம் சொல்லிட்டான்
.
புவனா தம்பியின் வேலையை சொல்லி அம்மாவையும்,ரஞ்சனியை பற்றி சொல்லி ராமையும் ஆறுமாசத்துக்கு கல்யாண பேச்சு எடுக்காம செஞ்சிருக்கா,அதற்குள் என்னவெல்லாம் நடக்குமோ...
ராம்குமார் தன் கையை விட்டுப் போயிடுவானோ என பயத்தில்,எல்லார் முன்பும் உரிமையை காட்ட முயல்வது,அவனை இறுக பிணைக்க நினைக்கிறாளே தவிர புவனாவுக்கு தன்னை பிடிக்காமல் போக காரணம் என்ன என யோசித்து சரி செய்ய நினைக்க மாட்டேங்கறா
.
வஞ்சுவின் நடத்தையால் ராமின் நண்பர்கள் அவனை விட்டு விலகி சென்றதை இப்போதான் அவனால் புரிஞ்சுக்க முடியுது
.நண்பர்கள் விலக வஞ்சு தான் காரணம் என கோபப்படுபவன், அவளை வெறுப்பானா,புரிய வைப்பானா
.
அதிகமான சம்பளம்,சுதந்திரம்,கேட்க ஆளில்லாதது, நண்பர்கள் புகழ்ந்து பேசுவது என வஞ்சு இயல்பான வாழ்க்கையில் இருந்து விலகி பாதை மாறி போவதை ராம் புரிந்து கொண்டு, வஞ்சுவுக்கு சரியான பாதையை காட்டுவானா
.வஞ்சு,ராம் சொல்வதை கேட்பாளா
.