மிகவும் அருமையான பதிவு மல்லி
.ஷர்மிக்கு வலி வர்றது போல இருக்கவும் அவளை கூட்டிட்டு வந்து நல்லபடியா பொண்ணும் பிறந்துருச்சு
.ஷர்மியை அழைச்சு வந்தவன் தாய்க்கும்,பாப்பாவுக்கும் போட எதுவும் எடுக்காம வந்துட்டானா
.
தாய்மாமா,கௌசி துணையோட குழந்தை பிறக்கறதுக்கு முன்பே ரெண்டு பேபிங்களுக்கும் தேவையானது பர்ச்சேஸ் செய்து கலக்கிட்டான்
.
தம்பி,தங்கைகளை வளர்த்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்த விசாலிக்கு,அவருக்கு குழந்தை பிறக்காது என்ற காரணத்தால் குழந்தையை அவரிடம் கொடுக்காதது கொடுமையான விஷயம்
.விஷாலியின் மனம் வருந்தும் என யாருக்கும் தோனலையே
.
விசாலி,ரவி எதுவும் சொல்வானோ என குழந்தையை வாங்க தயங்க,அவர் பயத்தை தெரிந்து தனக்கும்,ஷர்மிக்கும் இதை போன்ற எண்ணம் இல்லை என கூறி குழந்தையை வாங்க சொல்வது ஆறுதலை கொடுத்தது என்றால்
,கௌசியின் தனக்கு பிறக்கும் குழந்தையை நீங்கள் தான் வளர்க்க வேண்டும் என்ற அவளின் பேச்சு நெகிழச்செய்தது....
கல்யாணத்துக்கு முன் நீயெல்லாம் ஒரு ஆளான்னு பார்த்தவன்
,மனைவியின் பிரசவத்தை தனியே பார்த்ததும்,மகளை நான் தான் காமிப்பேன் என சொல்வது,ஷர்மியை இறங்க விடாமல் தூக்கி படுக்கவைப்பது
என ஷர்மியிடம் சண்டை போட்ட ரவியா, அவனா இவன்னு நெனைக்க வச்சுட்டான்
.
ஷர்மி மறுபடியும் ஏடாகூடமா எதுவும் யோசிக்கிறதுக்குள் இனிமே உங்க சண்டையெல்லாம் தூக்கி போட்டு என்ன மட்டும் தான் பார்க்கனும்னு அவங்க இளவரசி சத்தம் கொடுக்கறா
.