மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
என்னம்மா மிலாம்மா ஓவரா டுவிஸ்ட்டு வைக்குறீங்களேம்மா
முதலில் பிறை நிலா ஈஸ்வரனின் மனைவி இல்லை
ஆனால் இதை நீங்கள் இன்னமும் சொல்லவில்லை
அடுத்து பவானின்னு ஒரு அம்மாவை ஈஸ்வரனின் மனைவின்னு சொன்னீங்க
அடுத்து சந்திரலேகா எப்படி ஈஸ்வரனின் மனைவின்னு பார்த்தால் இந்த அரண்மனை இளவரசி லூசு அந்த ஈஸ்வரன் பொறுக்கியை நம்பி ஏமாந்து ஒரு குழந்தையும் பிறந்து ஈஸ்வரன் பொண்டாட்டியான பவானிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு அதை ஈஸ்வரன் தூக்கிட்டு போய் அந்த குழந்தைக்கும் கோமா வந்து (ஆமாம் சின்னக் குழந்தைக்கு கோமா எப்படி வந்தது?) குழந்தை இறந்தும் போய் விட்டது
ஸ்ஸ்சப்பா கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்ப்பா
அப்போ இப்போ இருக்கிற இளைய நிலா ஈஸ்வரனின் மகள் இல்லையா?
அப்போ சண்முகவேலு யாரு?
பிறை நிலாவின் கணவரா?
இளைய நிலா, பிறை நிலா சண்முகவேலு தம்பதியின் மகளா?
நிலாவை இப்போதான் லேகா தத்தெடுத்தாளா?
இல்லை முன்னாடியேவா?
அப்போ வாணன் எப்படி நிலாவை ஈஸ்வரனின் மகள்ன்னு நினைத்தான்?
அப்போ எட்டு வயதில் துகிலவாணனை துன்புறுத்திய சுசீலா பைத்தியமாக காரணமான அந்த நிலா யாரு?
ரொம்பவே குழம்புதேப்பா
லேகாவின் மகள்தான் இறந்து விட்டாளே
அப்புறம் பவானியைப் பார்த்து ஏன் எதுக்கு சந்த்ரம்மா பயப்படணும்?
தன் மனைவி நிலா யாருன்னு வாணன் கேட்ட கேள்விக்கு அத்தையின் பதில் என்ன?
ஒருவேளை இப்போ நிலாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்த மாதிரி சந்திரலேகாவுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததா?