Kavya Narasimman
New Member
அழகிய பூஞ்சோலை கிராமம்...
ஏத்தா, மல்லி இந்த கசாயத்தை கொஞ்சோம் குடித்தா. போதும் மா. என்னால முடியல. கொமட்டிகிட்டே இருக்கு. இந்த நேரத்துல இதெல்லாம் நடக்கும்த்தா. கொஞ்சமா குடி அப்பதான் வழி கொஞ்சோம் குறையும்.
போ மா இந்த கசப்புக்கு இந்த கால் கொடச்சலே தேவல. என் சாமி, கொஞ்சோ குடி கண்ணு. வெல்லம் சேத்துருக்கேன், கசக்காது. மா இதை சொல்லியே என்ன ஏமாத்தி குடிக்க வெச்சுரு.
கொஞ்சோ கஷ்ட பட்டு குடி சாமி. கையில கசாயத்தை வாங்கும் போது, நியூஸ்ல சொன்ன விஷத்தை கேட்டு அதிர்ச்சியில அந்த டம்பளரை கீழ போட்டுட்டா.
யார் இந்த மல்லிகா, அப்படி என்ன நியூஸ்ல கேட்டா.... வாங்க பாக்கலாம்.
இது தேவ், நம்ம ஹீரோ, சிட்டில வளர்ந்த பையன் ஆனா வில்லேஜ் வாழ்க்கைனா கொள்ள பிரியம். கல்யாணம் கூட அப்படி ஒரு கிராமத்து பொண்ண தான் கட்டிக்கணும்னு ஆச.
காரணம், அவன் பொறந்ததுல இருந்து பணத்துக்கு கொறச்சல் இல்லை, ஆனா பாசத்துக்கு.... தேவ் ஓட அம்மா கிளப், அது இதுனு தான் நேரத்தை செலவழிப்பாங்க. அப்பா ஒரு பிசினஸ் மேன். அவர் எப்ப எந்த நாட்டுல இருப்பாருண்ணே தெரியாது.
ஆனா தேவ்வ பாத்துக்க ஒரு கேர் டேக்கர் இருந்தாங்க. தேவ் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் அவனை பாத்துக்கறாங்க.
அவனோட அம்மாவை கூட மாம்னு தான் கூப்பிடுவான். அம்மானு கூப்டா அவங்களுக்கு புடிக்காது. ஆனா அவன் அந்த கேர் டேக்கர் ஜெயாவை ஜெயாம்மானு தான் கூப்பிடுவான். ரொம்ப கஷ்டத்துல இருக்கும் போது அம்மானு கூட கூப்பிடுவான்.
என்னதான் காசு நெறையா இருந்தாலும், தேவ் க்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, அதுக்கு காரணம் ஜெயா.
அவனுக்கு சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு விசயத்தையும் சொல்லி குடுத்துருக்காங்க. ஒரு தடவ தேவ் அப்பா ஓட பிசினஸ் நண்பர் ஒருத்தர், அவரோட கிராமத்துல ஒரு தொழில் தொடங்கணும்னு சொல்லிருந்தாரு. அப்போ அவங்க ஊருல கோவில் விழா ரொம்ப விமர்சயா இருக்கும் அதனால குடும்பத்தோட வர சொன்னாங்க.
தேவ்க்கும் அப்ப விடுமுறை அதனால குடும்பத்தோட எல்லாரும் போனாங்க. தேவ் அடம் புடுச்சு ஜெயாவையும் கூட கூட்டிட்டு போனான்.
அந்த ஊரோட அழகுல அவன் அவ்ளோ இம்ப்ரெஸ் ஆகிட்டான். அதுலயும் அவங்க கவனிப்பு இன்னும் அதிகமா அவனுக்கு புடுச்சுது.
அவங்க கூட்டு குடும்பமா வாழ்ந்துட்டு இருக்கறது, சாப்பிடும் போது எல்லாரும் , ஒன்னா உக்காந்து சாப்பிட்றது இதெல்லாம் பாக்கும் போது அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு அவனுக்கு....
ஏத்தா, மல்லி இந்த கசாயத்தை கொஞ்சோம் குடித்தா. போதும் மா. என்னால முடியல. கொமட்டிகிட்டே இருக்கு. இந்த நேரத்துல இதெல்லாம் நடக்கும்த்தா. கொஞ்சமா குடி அப்பதான் வழி கொஞ்சோம் குறையும்.
போ மா இந்த கசப்புக்கு இந்த கால் கொடச்சலே தேவல. என் சாமி, கொஞ்சோ குடி கண்ணு. வெல்லம் சேத்துருக்கேன், கசக்காது. மா இதை சொல்லியே என்ன ஏமாத்தி குடிக்க வெச்சுரு.
கொஞ்சோ கஷ்ட பட்டு குடி சாமி. கையில கசாயத்தை வாங்கும் போது, நியூஸ்ல சொன்ன விஷத்தை கேட்டு அதிர்ச்சியில அந்த டம்பளரை கீழ போட்டுட்டா.
யார் இந்த மல்லிகா, அப்படி என்ன நியூஸ்ல கேட்டா.... வாங்க பாக்கலாம்.
இது தேவ், நம்ம ஹீரோ, சிட்டில வளர்ந்த பையன் ஆனா வில்லேஜ் வாழ்க்கைனா கொள்ள பிரியம். கல்யாணம் கூட அப்படி ஒரு கிராமத்து பொண்ண தான் கட்டிக்கணும்னு ஆச.
காரணம், அவன் பொறந்ததுல இருந்து பணத்துக்கு கொறச்சல் இல்லை, ஆனா பாசத்துக்கு.... தேவ் ஓட அம்மா கிளப், அது இதுனு தான் நேரத்தை செலவழிப்பாங்க. அப்பா ஒரு பிசினஸ் மேன். அவர் எப்ப எந்த நாட்டுல இருப்பாருண்ணே தெரியாது.
ஆனா தேவ்வ பாத்துக்க ஒரு கேர் டேக்கர் இருந்தாங்க. தேவ் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் அவனை பாத்துக்கறாங்க.
அவனோட அம்மாவை கூட மாம்னு தான் கூப்பிடுவான். அம்மானு கூப்டா அவங்களுக்கு புடிக்காது. ஆனா அவன் அந்த கேர் டேக்கர் ஜெயாவை ஜெயாம்மானு தான் கூப்பிடுவான். ரொம்ப கஷ்டத்துல இருக்கும் போது அம்மானு கூட கூப்பிடுவான்.
என்னதான் காசு நெறையா இருந்தாலும், தேவ் க்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, அதுக்கு காரணம் ஜெயா.
அவனுக்கு சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு விசயத்தையும் சொல்லி குடுத்துருக்காங்க. ஒரு தடவ தேவ் அப்பா ஓட பிசினஸ் நண்பர் ஒருத்தர், அவரோட கிராமத்துல ஒரு தொழில் தொடங்கணும்னு சொல்லிருந்தாரு. அப்போ அவங்க ஊருல கோவில் விழா ரொம்ப விமர்சயா இருக்கும் அதனால குடும்பத்தோட வர சொன்னாங்க.
தேவ்க்கும் அப்ப விடுமுறை அதனால குடும்பத்தோட எல்லாரும் போனாங்க. தேவ் அடம் புடுச்சு ஜெயாவையும் கூட கூட்டிட்டு போனான்.
அந்த ஊரோட அழகுல அவன் அவ்ளோ இம்ப்ரெஸ் ஆகிட்டான். அதுலயும் அவங்க கவனிப்பு இன்னும் அதிகமா அவனுக்கு புடுச்சுது.
அவங்க கூட்டு குடும்பமா வாழ்ந்துட்டு இருக்கறது, சாப்பிடும் போது எல்லாரும் , ஒன்னா உக்காந்து சாப்பிட்றது இதெல்லாம் பாக்கும் போது அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு அவனுக்கு....