குமரன் கார்த்திய கடத்தி கிட்டு போன விஷயம் வேற யார் மூலம் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா மகா அல்லது கதிர் குமரனை கேள்வி கேட்கலாம்... ஆனால் இங்க குமரன் தானே வந்து தான் கடத்துனதை ஒத்துக்கிட்டு கார்த்தி எந்த தப்பும் செய்யல என்று அவங்களுக்கு நிரூபிச்சான் . இப்போ கேள்வி கேட்கணும் என்றாலும் அவனை தான் கேட்கணும் ஆனால் அவனே தப்பை ஒத்துகிட்டு இவங்க வீட்டு முன்னாடி வந்து நிற்குறான் அதனால் அவனை கேள்வி கேட்க முடியல. அதுவும் இல்லாமல் இவங்களும் தானே அவ மேல நம்பிக்கை இல்லாமல் விட்டுட்டு போனாங்க அந்த குற்ற உணர்ச்சி அண்ட் கார்த்தியும் அவனுக்கு சாதகமா பேசினதும் தான் அவங்க எதுவும் கேட்கல .
கார்த்திகா அவனுக்கு சாதகமாக தான் பேசுவா. என்னனா அவனுடன் அவளுக்கு இப்போது வரை இருக்கும் அனுபவம் அவளை அப்படி தான் செய்ய சொல்லும். அது ஹீரோயின் ஹீரோக்கு கொடுக்கும் recognition. அது தான் கதைக்கு climax மாதிரி.
ஒரு தப்பு, தப்பு செஞ்சவன் வாயால ஒத்துக்கொள்ளப்பட்டதால அது தண்டையில் இருந்து விலக்கு பெற்று விட முடியாது. பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை. சில குற்றங்களுக்கு அது கூட பொருந்தாது. இங்க கார்த்திகா அவனை மன்னிச்சாளோ மன்னிக்கலையோ, அவன் கூட தான் இருந்தாக வேண்டும் என்ற சூழலை தான் அவளுக்கு பெத்தவங்களும் குடுத்தாங்க, அவனும் அதை தான் மிரட்டி செய்ய வெச்சான்(though not with bad intentions )அவளை. அவ்வளவு நல்லவன் பிரியா பற்றி தெரிந்தவுடனே போய் confess பண்ண வேண்டியது தானே. ஏன் செய்யலை. தன்னை விட்டு கார்த்திகா போக மாட்டான்னு ஒரு நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் தான் போய் சொன்னான்.
அவ அப்புறம் அவனை ஏன் ஏத்துக்கிட்டா, அவங்களுக்குள்ள என்ன நடக்குது, எதுவுமே அவங்க இருவருக்கும் தான் தெரியும்.
அவனே வந்து confess பண்ணினாலும், அவங்களுக்கு உண்மை தெரியறப்போ கேட்க உரிமை ஏன் இல்லை.
ஒரு natural instinct பெத்தவங்களுக்கு இருக்குமே.
Gender bias இருக்கற பெத்தவங்க, கூடப் பிறந்தவங்க இவங்க எல்லாம் பாசம் இல்லாதவங்கன்னோ, கேள்வி கேட்க உரிமை இல்லாதவாங்கன்னோ சொல்லிட முடியாது.