உங்கள் எழுத்தில் படிக்கும் முதல் கதை இது...ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமா இருந்தது... குடும்பக்கதை போலனு படிச்சிட்டே வரும் போது அருள் கடத்தப்பட்டதிலிருந்து சஸ்பென்ஸ் த்ரில்லுனு விறுவிறுப்பா போச்சு..எங்கேயும் தொய்வில்லை...அன்னபூரணி கதாபாத்திரம் அருமை...கதைகள்ல மட்டும் வர அருமையான மாமியார்...மாமியார் மருமகள் பாண்டிங் பார்த்து ருத்ரன் பொறாமைப்படுறது சூப்பர்...இதுல அருளோட வேலை எனக்கு பயங்கர ஆச்சர்யம்...நம்மள ஒதுக்கி வச்சவங்க முன்னால வாழ்ந்து காட்ட படிக்கிறான்...இந்த வேலை பார்த்தால் ஏளனம் தான் செய்வாங்கனு தெரியும்....பொண்ணும் கொடுக்க மாட்டாங்க...எல்லாம் தெரிஞ்சும் செய்றான்... நல்ல மனசு அவனுக்கு...
அர்ஜுன் ...என்னை பொருத்தவரை அவன் ஒரு ஆன்டிஹீரோ...அவன் கதைய தனியாவே நீங்க எழுதலாம்...பாதிக்கு மேல வந்தாலும் அழுத்தமா மனசுல பதிஞ்சான்...கடைசி இவனை மன்னிக்க ருத்ரன் சொன்ன காரணம் அருமை...
அருமையான கதை....வாழ்த்துக்கள் சிஸ்