நீ எனக்காக
நான் உனக்காகவென
வாழும்
நொடிகள்
என் வாழ்வின்
பொக்கிஷங்களடி.....
தங்கள் லக்கேஜில் தன் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிராவை பின்னாலிருந்து அணைத்த ஷாகர் அவள் தோள் வளைவில் முகம் பதித்தபடி தன் தலையால் அவள் செல்லமாக முட்டியவன்
“ஹேய் ஹோட்டி என்ன பண்ணிட்டு இருக்க????”
“ட்ரெஸ் பாக் பண்ணிட்டு இருக்கேன் மினியன்...”
“ஹேய் அப்படி கூப்பிடாதனு உனக்கு எத்தனை தடவை சொல்லுறது??”
“நானும் உங்களை அப்படி கூப்பிடாதீங்கனு சொன்னது நியாபகம் இருக்கா??”
“அது நீ பக்கத்துல இருக்கும் போது எனக்கு அந்த பெயர் தான் நியாபகம் வருது.. நான் என்ன பண்ணட்டும்??”
“எனக்கும் நீங்க பக்கத்துல இருக்கும் போது அப்படி தான் கூப்பிடத்தோனுது... நான் என்ன பண்ணட்டும்??” என்று ஆதிராவும் அவன் போல் கூற அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இடையை தன் கைகளால் வளைத்து
“அந்த பெயரை சொல்லுற வாய்க்கு இப்போ பனிஷ்மண்ட் கொடுத்திடலாம்...” என்றபடி அவள் தடுக்கும் முன் அவள் இதழ்களை கவ்வியவன் அதை ரசித்து புசித்ததோடு நில்லாது அடுத்தகட்டத்துக்கு சென்று தனக்கு வேண்டியதை பெற்ற பின்னே அவளை விட்டான்..
கூடல் முடிந்ததும் குளித்து முடித்து வந்தவளை மீண்டும் ஷாகர் கைபிடித்து இழுக்க அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றவள் அவனை முறைக்கத்தொடங்கினாள்..
“வாட் ஹேப்பட் ஹோட்டி..?? வய் என்கிரி??”
“இன்னும் எத்தனை தடவை நான் குளிக்கிறது??”
“உன்னை யாரு ஹோட்டி அவசரப்பட்டு குளிக்கச்சொன்னா..??”
“ஓ.. அப்போ சாருக்கு ஊருக்கு போற ஐடியாவே இல்லையா??”
“எனக்கு சுத்தமாவே இல்லை... நீ தான் போகனும்னு அடம்பிடிக்கிற... இப்ப நீ ம்னு ஒரு வார்த்தை சொல்லு நான் உடனே டிக்கெட்டை கேன்சல் பண்ணிர்றேன்..”
“ஏது.. டிக்கட்டை கேன்சல் பண்ண போறீங்களா?? நோ வே..ஏற்கனவே இரண்டு வாரம்னு பிளான் பண்ணதை மூன்று வாரமாக்கிட்டீங்க.. இதுக்கு மேல முடியாது.... கட்டாயம் கிளம்பியே ஆகனும்..”
“நீ ரொம்ப மோசம் பேபி.. நான் எவ்வளவு ஆசையாக இருந்தேன் தெரியுமா?? நீ என்னோட பீலிங்சை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற??”
“என்னங்க இது.. சின்னபிள்ளை மாதிரி அடம்பிடிக்கிறீங்க...??”
“ஆமா நான் சின்னபிள்ளை தான்...
பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே...
காதல் சடுகுடு கண்ணே தொடு தொடு...”
“வரவர உங்க லொள்ளுக்கு அளவே இல்லாமல் போச்சு... மொதல்ல ஊருக்கு கிளம்புற வழியை பாருங்க..”
“முடியாது முடியாது முடியாது .” என்று ஷாகர் கூற இடுப்பில் கை வைத்து ஷாகரை முறைத்தபடி ஆதிரா
“ஏன்...”
“ஏன்னா மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்...”
“அதுக்கு...”
“அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை..”
“ஓ மை காட்... என்னதாங்க இப்போ உங்களுக்கு பிரச்சனை...?? இப்போ நீங்க கிளம்ப போறீங்களா இல்லையா??” என்று கேட்ட ஆதிராவை கைபிடித்து இழுத்து தன் மீது போட்டுக்கொண்டவன்
“மறுவார்த்தை பேசாதே... மடி மீது நீ தூங்கிடு... இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு... மயில்தோகை போலே இதழ் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்....”
“ப்பா.. பாட்டெல்லாம் தூள் பறக்குது?? இன்னும் சாருக்கு ரொமேன்ஸ் மூட் மாறலையா??”
“அது எப்படி ஹோட்டி மாறும்... பக்கத்துல இப்படியொரு அழகான ஹோட்டான ஸ்வீட்டான ஒரு பொண்டாட்டியை வச்சிக்கிட்டு ரொமென்ஸ் பண்ணாட்டி தான் தப்பு...”
“ஐயோடா.. மிஸ்டர். ஷாகர்... நமக்கு ப்ளைட்டுக்கு இன்னும் டு ஹவர்ஸ் தான் டைம் இருக்கு... இன்னும் பேக்கிங் முடியலை... ஒழுங்கு மரியாதையா வந்து பேக்கிங்கிற்கு ஹெல்ப் பண்ணுங்க??”
“முடியாது.... முடியாது...நான் சொன்னதை நீ கேட்காததால என்னால ஹெல்ப் பண்ண முடியாது...”
“அப்படியா அப்போ சரி... என்னோட திங்க்ஸ் எல்லாம் நான் பேக் பண்ணிட்டேன்.. நான் ஊருக்கு கிளம்புறேன்.. உங்களுக்கு எப்போ தோனுதோ அப்போ வாங்க.. அதுவரைக்கும் இங்கேயே தனியா இருங்க..” என்று கூறியவள் அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் மீண்டும் பேக்கிங் வேலையில் இறங்கிவிட ஷாகரோ
“உன்னை விட்டா யாரு எனக்கில்லை பாரு... பாரு... என்ன கண்டேன் நானும் உனக்குள்ள”
“அப்படினா போய் குளிச்சிட்டு வந்து பேக்கிங்கில் ஹெல்ப் பண்ணுங்க...” என்று ஆதிரா கூற அவளை முறைத்தபடி டவலை எடுத்துக்கொண்டவன் அதை கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டு
“உன்ன நினைச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா???” என்று பாடியபடி அவன் குளியலறைக்கு செல்ல ஆதிராவோ அவன் செயலில் சிரித்தபடி தன் வேலையை தொடர்ந்தாள்...
ஷாகர் தங்கள் திருமணம் முடிந்ததும் ஆத்வியின் துணையோடு ஆதிராவை யாருக்கும் தெரியாமல் கடத்திக்கொண்டு சுவிஸ்ஸிற்கு பறந்துவிட்டான்.. வீட்டினரை சமாளிக்கும் பொறுப்பை தன் தந்தையிடம் விட்டிருக்க அவனுக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை...
ஆதிராவிற்கோ அவனது செயல் சற்று அதிகபடியாக இருந்தாலும் அவளுக்து இது பிடித்தே இருந்தது...
சுவிஸ் சென்று இறங்கிய பின்பு தான் தாங்கள் இரண்டு வாரங்கள் ஹனிமூன் கொண்டாடப்போவதாக கூறினான் ஷாகர்....
இரண்டு வாரமும் பாதி நேரம் ஊர் சுற்றியும் மீதிநேரம் தங்களுக்கான நேரமென்று கழித்தவர்களுக்கு அந்த இரு வாரங்களும் வாழ்வில் மறக்கமுடியாததொரு சம்பவமாய் மாறிப்போனது..
ஆதிராவும் ஷாகரின் அதீத காதலால் சற்று திக்கு முக்காடித்தான் போனாள்.. தூரமாயிருந்த போதிலேயே அவன் அன்பில் மயங்கியிருந்தவள் இப்போது முழுதாய் அவன் வசமாகிவிட்டாள்...
அதுவும் அவன் சந்தரப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் மனம் கவரும் விதத்தில் லவ் யூ பேபி என்று கூறும் போது அவளுள் இனம்புரியாதவொரு மகிழ்ச்சி...
அவள் இழந்த மொத்த மகிழ்ச்சியையும் இந்த இரண்டு வாரத்திலேயே அவன் மீட்டுக்கொடுத்திருந்தான்.. அந்த இரு வாரங்களும் அவர்களின் காதலும் கூடலும் மட்டுமே அரங்கேறியது...
இரண்டு வாரம் முடிந்ததும் புறப்படத்தயாரானவளை தாஜா பண்ணி மேலும் ஒரு வாரத்தை நீடித்தான்...
இப்போது மீண்டும் ஷாகர் அடம்பிடிக்கவும் தான் அவனை கிளப்பிக்கொண்டிருந்தாள் ஆதிரா..
குளித்து முடித்து வந்தவன்
“ஏன் பேபி.. இப்போ ஊருக்கு போக என்ன அவசரம்?? இன்னும் வன்வீக் நம்ம ஹனிமூன் ட்ரிப்பை எக்ஸ்டென்ட் பண்ணலாமே..”
“அங்க போட்டது போட்டபடி வா ஓடிப்போகலாம்னு சுவிஸ்ஸிற்கு இழுத்துட்டு வந்தது சாருக்கா நியாபகம் இருக்கு?? மாமாவும் ஆத்வியும் எத்தனை நாளைக்கு தான் சமாளிப்பாங்க... இப்படி பொறுப்பே இல்லாமல் பேசுறீங்க..?? நாளைக்கு நம்ம பசங்களுக்கும் இப்படி தான் சொல்லிக்கொடுப்பீங்களா??”
“மேடம் பசங்க வந்தா தான் சொல்லிக்கொடுக்க முடியும்... முதல்ல அவங்க வர்றதுக்கு வழி பண்ணுவோம்.. பிறகு அவங்களுக்கு சொல்லிக்கொடுக்குறதை பத்தி யோசிக்கலாம்.. என்ன சொல்லுறீங்க மேடம்..?? பாப்பா ரெடி பண்ணிரலாமா??” என்று கேட்டபடி ஷாகர் அருகே வர ஆதிராவோ மறுபுறம் திரும்பி நின்று கலங்கிய கண்களை துடைக்க ஷாகருக்கு அவள் மனநிலை புரிந்தது.. அவளை தன்புறம் திருப்பியவன்
“ஆதுமா.. ப்ளீஸ்.. நடந்து முடிந்த விஷயத்தை பத்தி யோசிச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத.. அது ஒரு ஆக்சிடண்ட்.. அதனால நீ அதையே நினைச்சி வருத்தப்படாத...அந்த பாப்பாவுக்கு நம்ம கூட இருக்க இஷ்டமில்லை போல..அதான் நம்மை விட்டு போயிடுச்சு.. “
“அந்த பாப்பா நம்மை விட்டு போக நான் தானே காரணம்??”
“ஹேய் லூசு மாதிரி பேசாத..அது ஒரு ஆக்சிடன்ட்.. உன்னை அறியாமல் நடந்த விஷயத்துக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும்?? இப்படி நீ பீல் பண்ணுவனு தான் உனக்கு தெரியக்கூடாதுனு மறைச்சேன்....ஆனா மேடம் எனக்கே தெரியாமல் ரிப்போர்ட்டை வேறொரு டாக்டர்ட்ட காட்டி தெரிஞ்சிக்கிட்டீங்க..ஆனா என்னை பொறுத்தவரைக்கும் ஏதோவொரு நல்லதுக்கு தான் நம்ம பாப்பா நம்மை விட்டு போயிருக்கு.. அதனால நீ தேவையில்லாமல் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காத... சரி வா.. பேக்கிங்கை முடிக்கலாம்..” என்றவன் அவளோடு பேசியபடி பேக்கிங்கை முடித்துவிட்டு தயாராகி ஏர்போர்ட்டுற்கு கிளம்பினார்கள்...
இருவரும் தாயகம் திரும்பியதும் அவர்களை அழைத்து செல்ல வந்திருந்தனர் ஆதியும் ஆத்வியும்..
வீட்டிற்கு வந்த இருவரையும் வாசலிலேயே நிறுத்தி வைத்த வசுமதி இருவருக்கும் ஆலம் சுற்றியபின் உள்ளே வரச்சொல்ல ஷாகரோ
“ஹனிமூன் போய்ட்டு வந்தவங்களை ஆலம் சுற்றி வீட்டிற்கு வரவேற்கும் பழக்கம் எப்போ இருந்து ஆரம்பிச்சிது??” என்று அவன் கேலி செய்ய வசுமதியோ போலியாய் முறைத்தபடி
“கல்யாணம் முடிந்ததும் வீட்டுக்கு சொல்லாமல் ஹனிமூன் போனவங்களுக்காக இந்த வழக்கம் ஆரம்பிச்சாங்கடா..” என்று வசுமதி கூற அவரது பதிலில் அசடு வழிந்தபடி ஷாகர் ஆதிராவை பார்க்க அவளும் தன் பங்குக்கு முறைத்தாள்..
இருவரையும் உள்ளே சென்று ஓய்வெடுக்குமாறு கூற ஷாகரும் ஆதிராவை அழைத்துக்கொண்டு தங்களறைக்கு சென்றான்...
அறைக்கதவை திறந்து லைட்டை ஆன் செய்தவள் வாயடைத்து நிற்க ஷாகரோ அவள் தோள்களை கட்டியணைத்து அவள் காதருகே குனிந்து
“என்ன பேபி இதுக்கே இப்படி ஷாக் ஆகிட்டா..... வா.. இன்னும் நிறைய சப்ரைஸ் இருக்கு...” என்றவன் அவளை உள்ளே அழைத்து சென்றான்...
நான் உனக்காகவென
வாழும்
நொடிகள்
என் வாழ்வின்
பொக்கிஷங்களடி.....
தங்கள் லக்கேஜில் தன் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிராவை பின்னாலிருந்து அணைத்த ஷாகர் அவள் தோள் வளைவில் முகம் பதித்தபடி தன் தலையால் அவள் செல்லமாக முட்டியவன்
“ஹேய் ஹோட்டி என்ன பண்ணிட்டு இருக்க????”
“ட்ரெஸ் பாக் பண்ணிட்டு இருக்கேன் மினியன்...”
“ஹேய் அப்படி கூப்பிடாதனு உனக்கு எத்தனை தடவை சொல்லுறது??”
“நானும் உங்களை அப்படி கூப்பிடாதீங்கனு சொன்னது நியாபகம் இருக்கா??”
“அது நீ பக்கத்துல இருக்கும் போது எனக்கு அந்த பெயர் தான் நியாபகம் வருது.. நான் என்ன பண்ணட்டும்??”
“எனக்கும் நீங்க பக்கத்துல இருக்கும் போது அப்படி தான் கூப்பிடத்தோனுது... நான் என்ன பண்ணட்டும்??” என்று ஆதிராவும் அவன் போல் கூற அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இடையை தன் கைகளால் வளைத்து
“அந்த பெயரை சொல்லுற வாய்க்கு இப்போ பனிஷ்மண்ட் கொடுத்திடலாம்...” என்றபடி அவள் தடுக்கும் முன் அவள் இதழ்களை கவ்வியவன் அதை ரசித்து புசித்ததோடு நில்லாது அடுத்தகட்டத்துக்கு சென்று தனக்கு வேண்டியதை பெற்ற பின்னே அவளை விட்டான்..
கூடல் முடிந்ததும் குளித்து முடித்து வந்தவளை மீண்டும் ஷாகர் கைபிடித்து இழுக்க அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றவள் அவனை முறைக்கத்தொடங்கினாள்..
“வாட் ஹேப்பட் ஹோட்டி..?? வய் என்கிரி??”
“இன்னும் எத்தனை தடவை நான் குளிக்கிறது??”
“உன்னை யாரு ஹோட்டி அவசரப்பட்டு குளிக்கச்சொன்னா..??”
“ஓ.. அப்போ சாருக்கு ஊருக்கு போற ஐடியாவே இல்லையா??”
“எனக்கு சுத்தமாவே இல்லை... நீ தான் போகனும்னு அடம்பிடிக்கிற... இப்ப நீ ம்னு ஒரு வார்த்தை சொல்லு நான் உடனே டிக்கெட்டை கேன்சல் பண்ணிர்றேன்..”
“ஏது.. டிக்கட்டை கேன்சல் பண்ண போறீங்களா?? நோ வே..ஏற்கனவே இரண்டு வாரம்னு பிளான் பண்ணதை மூன்று வாரமாக்கிட்டீங்க.. இதுக்கு மேல முடியாது.... கட்டாயம் கிளம்பியே ஆகனும்..”
“நீ ரொம்ப மோசம் பேபி.. நான் எவ்வளவு ஆசையாக இருந்தேன் தெரியுமா?? நீ என்னோட பீலிங்சை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற??”
“என்னங்க இது.. சின்னபிள்ளை மாதிரி அடம்பிடிக்கிறீங்க...??”
“ஆமா நான் சின்னபிள்ளை தான்...
பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே...
காதல் சடுகுடு கண்ணே தொடு தொடு...”
“வரவர உங்க லொள்ளுக்கு அளவே இல்லாமல் போச்சு... மொதல்ல ஊருக்கு கிளம்புற வழியை பாருங்க..”
“முடியாது முடியாது முடியாது .” என்று ஷாகர் கூற இடுப்பில் கை வைத்து ஷாகரை முறைத்தபடி ஆதிரா
“ஏன்...”
“ஏன்னா மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்...”
“அதுக்கு...”
“அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை..”
“ஓ மை காட்... என்னதாங்க இப்போ உங்களுக்கு பிரச்சனை...?? இப்போ நீங்க கிளம்ப போறீங்களா இல்லையா??” என்று கேட்ட ஆதிராவை கைபிடித்து இழுத்து தன் மீது போட்டுக்கொண்டவன்
“மறுவார்த்தை பேசாதே... மடி மீது நீ தூங்கிடு... இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு... மயில்தோகை போலே இதழ் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்....”
“ப்பா.. பாட்டெல்லாம் தூள் பறக்குது?? இன்னும் சாருக்கு ரொமேன்ஸ் மூட் மாறலையா??”
“அது எப்படி ஹோட்டி மாறும்... பக்கத்துல இப்படியொரு அழகான ஹோட்டான ஸ்வீட்டான ஒரு பொண்டாட்டியை வச்சிக்கிட்டு ரொமென்ஸ் பண்ணாட்டி தான் தப்பு...”
“ஐயோடா.. மிஸ்டர். ஷாகர்... நமக்கு ப்ளைட்டுக்கு இன்னும் டு ஹவர்ஸ் தான் டைம் இருக்கு... இன்னும் பேக்கிங் முடியலை... ஒழுங்கு மரியாதையா வந்து பேக்கிங்கிற்கு ஹெல்ப் பண்ணுங்க??”
“முடியாது.... முடியாது...நான் சொன்னதை நீ கேட்காததால என்னால ஹெல்ப் பண்ண முடியாது...”
“அப்படியா அப்போ சரி... என்னோட திங்க்ஸ் எல்லாம் நான் பேக் பண்ணிட்டேன்.. நான் ஊருக்கு கிளம்புறேன்.. உங்களுக்கு எப்போ தோனுதோ அப்போ வாங்க.. அதுவரைக்கும் இங்கேயே தனியா இருங்க..” என்று கூறியவள் அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் மீண்டும் பேக்கிங் வேலையில் இறங்கிவிட ஷாகரோ
“உன்னை விட்டா யாரு எனக்கில்லை பாரு... பாரு... என்ன கண்டேன் நானும் உனக்குள்ள”
“அப்படினா போய் குளிச்சிட்டு வந்து பேக்கிங்கில் ஹெல்ப் பண்ணுங்க...” என்று ஆதிரா கூற அவளை முறைத்தபடி டவலை எடுத்துக்கொண்டவன் அதை கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டு
“உன்ன நினைச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா???” என்று பாடியபடி அவன் குளியலறைக்கு செல்ல ஆதிராவோ அவன் செயலில் சிரித்தபடி தன் வேலையை தொடர்ந்தாள்...
ஷாகர் தங்கள் திருமணம் முடிந்ததும் ஆத்வியின் துணையோடு ஆதிராவை யாருக்கும் தெரியாமல் கடத்திக்கொண்டு சுவிஸ்ஸிற்கு பறந்துவிட்டான்.. வீட்டினரை சமாளிக்கும் பொறுப்பை தன் தந்தையிடம் விட்டிருக்க அவனுக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை...
ஆதிராவிற்கோ அவனது செயல் சற்று அதிகபடியாக இருந்தாலும் அவளுக்து இது பிடித்தே இருந்தது...
சுவிஸ் சென்று இறங்கிய பின்பு தான் தாங்கள் இரண்டு வாரங்கள் ஹனிமூன் கொண்டாடப்போவதாக கூறினான் ஷாகர்....
இரண்டு வாரமும் பாதி நேரம் ஊர் சுற்றியும் மீதிநேரம் தங்களுக்கான நேரமென்று கழித்தவர்களுக்கு அந்த இரு வாரங்களும் வாழ்வில் மறக்கமுடியாததொரு சம்பவமாய் மாறிப்போனது..
ஆதிராவும் ஷாகரின் அதீத காதலால் சற்று திக்கு முக்காடித்தான் போனாள்.. தூரமாயிருந்த போதிலேயே அவன் அன்பில் மயங்கியிருந்தவள் இப்போது முழுதாய் அவன் வசமாகிவிட்டாள்...
அதுவும் அவன் சந்தரப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் மனம் கவரும் விதத்தில் லவ் யூ பேபி என்று கூறும் போது அவளுள் இனம்புரியாதவொரு மகிழ்ச்சி...
அவள் இழந்த மொத்த மகிழ்ச்சியையும் இந்த இரண்டு வாரத்திலேயே அவன் மீட்டுக்கொடுத்திருந்தான்.. அந்த இரு வாரங்களும் அவர்களின் காதலும் கூடலும் மட்டுமே அரங்கேறியது...
இரண்டு வாரம் முடிந்ததும் புறப்படத்தயாரானவளை தாஜா பண்ணி மேலும் ஒரு வாரத்தை நீடித்தான்...
இப்போது மீண்டும் ஷாகர் அடம்பிடிக்கவும் தான் அவனை கிளப்பிக்கொண்டிருந்தாள் ஆதிரா..
குளித்து முடித்து வந்தவன்
“ஏன் பேபி.. இப்போ ஊருக்கு போக என்ன அவசரம்?? இன்னும் வன்வீக் நம்ம ஹனிமூன் ட்ரிப்பை எக்ஸ்டென்ட் பண்ணலாமே..”
“அங்க போட்டது போட்டபடி வா ஓடிப்போகலாம்னு சுவிஸ்ஸிற்கு இழுத்துட்டு வந்தது சாருக்கா நியாபகம் இருக்கு?? மாமாவும் ஆத்வியும் எத்தனை நாளைக்கு தான் சமாளிப்பாங்க... இப்படி பொறுப்பே இல்லாமல் பேசுறீங்க..?? நாளைக்கு நம்ம பசங்களுக்கும் இப்படி தான் சொல்லிக்கொடுப்பீங்களா??”
“மேடம் பசங்க வந்தா தான் சொல்லிக்கொடுக்க முடியும்... முதல்ல அவங்க வர்றதுக்கு வழி பண்ணுவோம்.. பிறகு அவங்களுக்கு சொல்லிக்கொடுக்குறதை பத்தி யோசிக்கலாம்.. என்ன சொல்லுறீங்க மேடம்..?? பாப்பா ரெடி பண்ணிரலாமா??” என்று கேட்டபடி ஷாகர் அருகே வர ஆதிராவோ மறுபுறம் திரும்பி நின்று கலங்கிய கண்களை துடைக்க ஷாகருக்கு அவள் மனநிலை புரிந்தது.. அவளை தன்புறம் திருப்பியவன்
“ஆதுமா.. ப்ளீஸ்.. நடந்து முடிந்த விஷயத்தை பத்தி யோசிச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத.. அது ஒரு ஆக்சிடண்ட்.. அதனால நீ அதையே நினைச்சி வருத்தப்படாத...அந்த பாப்பாவுக்கு நம்ம கூட இருக்க இஷ்டமில்லை போல..அதான் நம்மை விட்டு போயிடுச்சு.. “
“அந்த பாப்பா நம்மை விட்டு போக நான் தானே காரணம்??”
“ஹேய் லூசு மாதிரி பேசாத..அது ஒரு ஆக்சிடன்ட்.. உன்னை அறியாமல் நடந்த விஷயத்துக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும்?? இப்படி நீ பீல் பண்ணுவனு தான் உனக்கு தெரியக்கூடாதுனு மறைச்சேன்....ஆனா மேடம் எனக்கே தெரியாமல் ரிப்போர்ட்டை வேறொரு டாக்டர்ட்ட காட்டி தெரிஞ்சிக்கிட்டீங்க..ஆனா என்னை பொறுத்தவரைக்கும் ஏதோவொரு நல்லதுக்கு தான் நம்ம பாப்பா நம்மை விட்டு போயிருக்கு.. அதனால நீ தேவையில்லாமல் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காத... சரி வா.. பேக்கிங்கை முடிக்கலாம்..” என்றவன் அவளோடு பேசியபடி பேக்கிங்கை முடித்துவிட்டு தயாராகி ஏர்போர்ட்டுற்கு கிளம்பினார்கள்...
இருவரும் தாயகம் திரும்பியதும் அவர்களை அழைத்து செல்ல வந்திருந்தனர் ஆதியும் ஆத்வியும்..
வீட்டிற்கு வந்த இருவரையும் வாசலிலேயே நிறுத்தி வைத்த வசுமதி இருவருக்கும் ஆலம் சுற்றியபின் உள்ளே வரச்சொல்ல ஷாகரோ
“ஹனிமூன் போய்ட்டு வந்தவங்களை ஆலம் சுற்றி வீட்டிற்கு வரவேற்கும் பழக்கம் எப்போ இருந்து ஆரம்பிச்சிது??” என்று அவன் கேலி செய்ய வசுமதியோ போலியாய் முறைத்தபடி
“கல்யாணம் முடிந்ததும் வீட்டுக்கு சொல்லாமல் ஹனிமூன் போனவங்களுக்காக இந்த வழக்கம் ஆரம்பிச்சாங்கடா..” என்று வசுமதி கூற அவரது பதிலில் அசடு வழிந்தபடி ஷாகர் ஆதிராவை பார்க்க அவளும் தன் பங்குக்கு முறைத்தாள்..
இருவரையும் உள்ளே சென்று ஓய்வெடுக்குமாறு கூற ஷாகரும் ஆதிராவை அழைத்துக்கொண்டு தங்களறைக்கு சென்றான்...
அறைக்கதவை திறந்து லைட்டை ஆன் செய்தவள் வாயடைத்து நிற்க ஷாகரோ அவள் தோள்களை கட்டியணைத்து அவள் காதருகே குனிந்து
“என்ன பேபி இதுக்கே இப்படி ஷாக் ஆகிட்டா..... வா.. இன்னும் நிறைய சப்ரைஸ் இருக்கு...” என்றவன் அவளை உள்ளே அழைத்து சென்றான்...
Last edited: