மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ
.அப்பா,மகள் பேசுவது,கொஞ்சுவது கொள்ளை அழகு
.எல்லாரும் பவித்ரான்னு கூப்பிடறாங்க நானும் அப்படித்தான் கூப்பிடுவேன்னு சொன்ன தியா குட்டி
, எல்லாரும் பேத்கேள் சொல்லுவாங்கனு சொன்னதும் அம்மான்னு கூப்பிடறதா சொல்றாளே
,தியாகுட்டி விவரம் தான்
.
ரோஹிணி,ராகவ்,மகனுடன் கோபம்,பிடிவாதம் இல்லாமல் பொறுப்பாக நடந்து கொள்வதை பார்த்து சுந்தரி சந்தோஷத்தில் இருக்கார்
.கோமதியின்,மகள்களுக்கு கல்யாண வேலை நடக்குது, பவியின் மனதை இப்போதாவது புரிந்து கொண்டு நல்லபடியா பேசுறாங்க
.
ஸ்பெஷல் பாயாசம் வேணுமா
.பாயசம் கேட்கறதை இன்னுமா இவன் விடல
.நல்லதை நினைக்கிறவங்களுக்கு நல்லதே நடக்கும்னு சொல்வாங்கன்னு மித்து சொன்னது போல,பவியின் சுயநலமில்லாத அன்பும்,தவறு செய்பவர்களையும் மன்னிக்கும் அவள் குணமும் அவளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுத்திருக்கு
.
அருமையான கதை களம்.மித்ரனின் ஜாதகத்தால் நடக்கும் அவசர கல்யாணம்.ஜோசியர் கூறியதாக ஒரு வருடம் சேரக்கூடாது என மீனா,பவியிடம் சொல்வதும்,திருமணம் முடிந்து வெளிநாட்டுக்கு செல்பவன் மனைவியிடம் பேசாமல் இருப்பதே சந்தேகத்தை கொடுக்குது
.
ரோஹிணியின் மூலம் ஒரு வருட திருமணம் பற்றி பவித்ராவுக்கு தெரியாது என மித்ரனுக்கு தெரிய வர,பொம்மை திருமணம் என்பது பவித்ரா,சுந்தரிக்கு தெரிய அதிர்ச்சியை கொடுக்குது
.
நடந்த தவறுக்காக பவித்ரா மித்ரனை மன்னித்தாளா
,மித்ரன்,பவித்ரா ஒன்று சேர்ந்தனரா
.வீட்டை விட்டு சென்ற ராசிநாதன் திரும்ப வந்தாரா,அவர் செய்த தவறு என்ன என விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் அருமை
.
அருமையான குடும்பகதை.எளிமையான நடை. நிறைவான,இனிமையான முடிவு.
.
கதையை ரீரன் செய்ததற்க்கு நன்றி லதா பைஜூ
.