மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி.அதியன், சூர்யாவிடம் போட்ட சவாலில் ஜெயித்ததுடன்,பள்ளியை விட்டு பிரிந்தாலும் அவள் மனதில் நீங்காத நினைவுகளாக பள்ளியின் நாட்கள் இருப்பது போல செய்து விட்டான்.
அக்கா காதலித்து திருமணம் செய்ததற்க்காக சூர்யாவை விடுதியில் சேர்த்ததும்,நிலாவை மன்னித்து ஏற்றுக்கொண்டதும் சூர்யாவை வீட்டிற்க்கு அழைத்துக் கொண்டதும் தவறு என அவள் பெற்றோர்களுக்கு தெரியவில்லையா.
இன்று சூர்யா ஆர்ஜே, தாய் மொழி மீது தீராத காதல் தந்தவன்,இவளது சிறுசிறு ஆசைகளுக்கு நீர்வார்த்தவன்,வரலாறு சொல்லித் தந்தவன், அவள் கேட்காமலேயே சந்தோஷ நாட்களை தந்தவனுடன் பேச சூர்யா காத்திருக்க,அதியனின் சொல்லாத காதலை கேட்க காத்திருக்கிறோம்.