சுடர் விடும் ஒளி நீயே......
அபிராமி
பதுங்கி வாழும் இளமுகிலன்
பயந்து வாழ
பரத் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்க....
யாரைக் கண்டு பயப்படுகிறான் யாருக்காக பயந்து மறைந்து வாழ்கிறான்
யார் அவனது பயத்திற்கு காரணம்
பயத்திலிருந்து வெளியே வர
யார் காரணம் என்பதே கதை.....
ஒரே நேரத்தில்
ஒரே இடத்தில்
இரு பெண்கள் மனதிலும் பாடல்கள் மூலம் மனதில்
பதியும் இளமுகிலன்
பார்த்தவுடன் காதல்.....
காதலை முந்தி சொல்லி காலத்தால் அழியாத பழியில் கலங்கடிக்கும் ஒருத்தி....
காதலைச் சொல்லாமல் காத்திருந்து
காதலனை காப்பாற்றி
கை பிடிக்கும்
காதலி இவள்.....
இரு பெண்களின் காதல்
இளமுகிலனின் இதயத்தில்
ஒரு பெண்ணின் காதல் வாழ்வு இருட்டையாக்க
ஒரு பெண்ணின் காதல் இருட்டாய் இருக்கும் வாழ்க்கைக்கு
ஒளியாய் வருபவள்......
தந்தைகளின் பாசமும்
தவறே செய்தாலும்
தன் மகள் என
தட்டி கேட்காமல்
தவறுக்கு துணை போகும்
தந்தை சங்கர்.....
தன்மகள்
தவறு செய்யமாட்டார் என
தட்டிக் கொடுத்து
தன்னால் முடிந்த உதவி செய்யும் தந்தை ராகவன்......
பணத்திற்காக தன் மகனின் பாசத்தை விலை பேசும்
பாவிகள் இளமுகிலனின்
பெற்றார்கள்
கடைசிவரை திருந்தாத ஜென்மங்கள்.......
பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் பாசமாகவும் குடும்பத்திற்கு
பக்க பலமாகவும் தைரியமாக
படிப்பைச் சொல்லித் தரும் அகாடமி நடத்த
பல எண்ணங்களில், வேலையில் முதிர்ச்சியாகவும்
பார்த்தவுடன் காதலில் விழுவதும் பக்குவமாய் காத்திருந்து
பழகி உதவி புரியும்
ப்ரணிகா தைரியமான பெண்.....
நட்புக்கு பரத் அருமை.....
நண்பனுக்கு அனைத்து உதவிகளும் புரிந்து
நட்பாய் கூடவே இருக்கும்
நல்ல நண்பன்......
அவசரமாய் எடுத்த முடிவில் அவமானப்பட்டு ஆதங்கப்பட்டு அப்பாவின் முறைப்பிலும் அத்தையின் அரவணைப்பிலும்
அப்புறம் திருந்திக் கொள்ளும் அண்ணனாக அஸ்வத்.....
அத்தை மகளாய் ஹரிதா
ஆனால் நட்பாக பழகும்
ஆருயிர் தோழி..... ப்ரணிகாவின்
அண்ணன் மனைவி....
அப்பா தாத்தா பாட்டி
அத்தை என
அன்பாக கூட்டு குடும்பமாக அமைதியாய் வாழும் குடும்பம்
அற்புதம்.....
தனக்கு தான் நல்ல குடும்பம் இல்லை
தனக்கு கிடைத்த குடும்பத்தை தன் குடும்பம் ஆக்கி
இறுதியில் அனைவருடன் ஒன்றிணைந்து
தன் வாழ்வில் ஒளிமயமாக்கிய தன் மனைவியுடன் சிறப்பாய்
தன் இரு குழந்தைகளுடன்
அன்பாக வாழ
நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.....
எளிமையான கதை
இனிமையாக இருந்தது.....
வாழ்த்துக்கள் சகி