Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-20
கார்த்திக்கிற்குப் பொதுவாக இந்த
மாதிரி மிரட்டல்கள் தொழிலில்
இருக்கும் என்று தெரிந்தவன் தான்.
அதுவும் கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட்டில்
ரொம்பவே அதிகம்... ஏனென்றால்
பணம் அதிகம் சுரண்டிவிடலாம்.
ஆனால் கார்த்திக் கரெக்டான
தொகையைப் போட்டு அனுப்பவே..
இந்தப் ப்ராஜெக்ட் அவனுக்கு என்றே
அந்த எம்எல்ஏ முடிவு செய்தார்.
போட்டிக் கம்பெனிகாரர்கள் தங்கள்
கைக்கு இந்தப் ப்ராஜெக்ட்
கிடைக்கவில்லை என்று தான்
கொதித்துக் கொண்டு இருந்தனர்.
அதில் ஒரு முன்னணிக்
கம்பெனியான ஒன்று கார்த்திக்கை
ஒரு பப்ளிக் ப்ளேசிற்கு அழைத்து
ப்ராஜெக்ட்டில் இருந்து விலகிவிடு
என்றது.. கார்த்திக் முடியாது என்று
சொல்ல மிரட்டிக் கூடப் பார்த்தனர்.
ஆனால் கார்த்திக்கோ அசராமல்
"முடிந்ததைப் பார்" என்றுவிட்டான்.
இன்று மதுவை ஆள் வைத்து கடத்தி
மிரட்டுவதும் அவன்தான். அந்தக்
கடத்தல்காரன் போன் செய்கிறேன்
என்று போனை வைத்துவிட்டான்.
ஆனால் அவன் போன் செய்வான்
என்று அவனது போனிற்காகக்
காத்திருந்த ஒரு மணி நேரத்தில் மது
அனுபவித்த வலிகளை விட நூறு
மடங்கு வலிகளை அனுபவித்து
விட்டான் கார்த்திக். ஏனோ தன்
உயிரையே எவனோ எடுத்துச் சென்ற
உணர்வு. மதுவை இப்போதே பார்க்க
வேண்டும்.. அவளைக் கட்டிப்பிடித்து ஆயிரம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அதுவும் தன்னை அப்பா என்ற அடுத்த
ஸ்தானத்திற்கு கொண்டு
சென்றவளை கையில் வைத்துத்
தாங்கத் துடித்தது கார்த்திக்கின்
கரங்கள். அவளின் மனநிலை இப்போ
என்னவோ என்று யோசிக்கும் போதே
அவனுக்கு பயமாக இருந்தது.
அவளின் கோபத்தைப் பற்றியும் நன்கு
அவனுக்கும் தெரியும். எங்கே
பேசாமல் இருந்து விடுவாளோ?
வீட்டிற்கு வரமால் இருந்து
விடுவாளோ என்று அவனுக்கு
இப்போது தோன்றியது.
"எங்கு இருந்து வந்தாய் மது?
காதல் வேண்டாம் என்று
முடிவு செய்து இருந்தேன்.
உன் காதலிலே என்னைக்
கரைய வைத்து
என் முழு வாழ்க்கையையும் அழகாய்
மாற்றிவிட்டாய்.
என் இதயத்திற்குள் புகுந்து
என்றும் உன் நினைவிலேயே
என்னை சுற்ற வைத்து
இப்போது உன்னைப் பார்க்க
ஏங்க வைத்துவிட்டாயேடி"
என்று மதுவிற்காக அவன் மனம்
ஏங்கித் தவித்தது..
அங்கே மதுவிடம் அந்த
ரௌடிகள் பேச்சுக் கொடுத்தனர்.
"என்ன உன் புருஷன் கரெக்டா எழுதி
எடுத்து வந்துவிடுவான் தானே" என்று
கிண்டலாகக் கேட்டான்.. மது எதுவும்
பேசாமல் ஊமக்கொட்டான் போல்
இறுகி உட்கார்ந்திருக்க "என்னடா
இவள் எதுவுமே பேசாமல் திமிராக
உட்கார்ந்திருக்கிறாள்" என்று ஒரு
தடியன் இன்னொரு தடியனிடம்
சொன்னான்.
"பயந்திருப்பாளோ?" என்று ஒருவன்
கேட்க.. வெளியே சென்று வந்ந
ஒருவன் "யாரு இவளா? கத்தியை
வைத்து மிரட்டி வண்டியில் ஏறச்
சொல்லும் போது கூடக் பயந்து
கத்தவில்லை.. இவளாவது பயந்து
இருப்பதாவது.." என்றவன் "புருஷன்
வந்துவிடுவான் என்ற தைரியம் தான்"
என்று சிரிக்க.. அங்கு இருந்த மூன்று
தடியன்களும் கோரசாகச் சிரித்தனர்..
மதுவிற்கு தெரியாத் தனமாக வந்து
இந்த நாய்களிடம் மாட்டி விட்டோமே
என்று இருந்தது.
மதுவிற்கு இன்று தலைவலி
நன்றாகவே இருந்தது. அவளிற்கு
அடுத்து வரும் ட்யூட்டி டாக்டரும்
இரண்டு மணிக்கே சீக்கிரம் வந்துவிட
அவரிடம் ஒப்படைத்து விட்டு
கார்மெண்ட்ஸிற்கு போய்விடலாம்
என்று கீழே வந்தாள்.. அவளை ஒரு
வாரமாகக் கவனித்துக் கொண்டு
இருந்த இந்தக் கும்பலும் அவள் வர
மதுவிடம் ஏதோ கேட்கப் போவது
போல அவள் அருகில் சென்றனர்..
கரெக்டாக மதுவும் அவர்கள் இருக்கும்
திசையிலேயே வந்தாள். அந்த
வெயிலில் அவ்வளவாகக்
கூட்டமும் இல்லை.
மது அவர்களைக் கடந்து செல்லும்
சமயம் "மேடம்" என்று ஒருத்தன்
அவளை அழைத்தபடி அருகில்
சென்றான். யாரோ தன்னை
அழைப்பதை உணர்ந்த மது, திரும்பி
அவனைப் பார்க்க "மேடம்.. நீங்கள்
தானே மதுமிதா?" என்று கேட்டபடி
மதுவின் அருகில் வந்தவன் பட்டென்று
கத்தியை வெளியில் எடுத்துவிட்டான்.
மது ஒரு நிமிடம் உறைந்து நிற்க
"சத்தம் போட்டாய் என்றால்..
அவ்வளவு தான்.. ஒழுங்காய் வந்து
அந்த வண்டியில் ஏறு" என்று முகத்தை
சாதரணமாக வைத்துப் பேசினான்.
பார்ப்பவர்களுக்கு அவர்கள்
சாதரணமாகப் பேசுவது போலத் தான்
தெரியும்.. மதுவால் கத்தக் கூட
முடியவில்லை.. ஏனெனில் கத்தியை
வயிற்றிற்கு நேர் வைத்தபடி
பிடித்திருந்தான். மதுவிற்கு அதைப்
பார்க்கவே ஏதோ தன் குழந்தை
உள்ளிருந்து அவளை பயத்தில்
அணைப்பது போலத் தோன்றியது.
மது எதுவும் பேசாமல் வந்து
வண்டியில் ஏறினாள்.
அவளிடம் போன் எங்கே என்று
ஒருவன் கேட்க பையைக்
காண்பித்தாள் மது.. அதைப் பிடுங்கி
வெளியே ஒருவன் வீச கார் பறந்தது.
மனதில் ஆயிரம் யோசனைகள்.. யார்
இவர்கள்? தன் குடும்பத்தினரைப்
பார்க்க முடியுமா இனி..? கார்த்திக்....
என்று எல்லாவற்றையும் யோசித்தாள்..
ஆனால் அவர்கள் கார்த்திக்கிடம்
பேசியதைக் கேட்டபோது தான்
கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஆனால்
ஏனோ வெறுப்பாகவே உணர்ந்தாள்
மது.. ஏனோ எங்காவது யார்
கண்ணிலும் படாமல் போய் விடலாமா
என்று எல்லாம் எண்ணினாள் மது..
எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு
நிலை வரக்கூடாது என்று கடவுளை
வேண்டியவளுக்குக் கண்களில் குளம்
கட்டியது. ஏனோ தன்னையும் தன்
வயிற்றில் வளரும் குழந்தையையும்
கார்த்திக்கைப் பற்றியுமே யோசித்துக்
கொண்டு இருந்தாள் மது. தன்னைக்
கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை
மறந்து தன் சிந்தனைகளில் உழன்று
கொண்டு இருந்தாள் மதுமிதா.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மதுவை நினைத்தபடியே அந்தக் கார்
பார்க்கிங்கிலேயே உட்கார்ந்து
இருந்தான் கார்த்திக்.. போன் வர ஒரே
ரிங்கில் எடுத்துவிட்டான். "ஹலோ"
என்ற கார்த்திக் "எங்கே வர
வேண்டும் சொல்லு?" என்றான்.
"பரவாயில்லை... நல்ல விவரமாகத்
தான் இருக்க... எந்தப் பேச்சு
வார்த்தையும் நடத்தாமல் நேரே
விஷயத்திற்கு வருகிறாயே.. பேசாமல்
பணத்தையும் கேட்டிருக்கலாம் போல..
பொண்டாட்டி மேல இருக்க பாசத்துல
எவ்வளவு கேட்டாலும் தந்திருப்ப"
என்று அவன் சொல்லி சிரிக்க..
அவனுடன் அவன் கூட்டாலிகளும்
சிரித்தனர்.. கார்த்திக் கண்களை
இறுக மூடி கோபத்தைக் கட்டுப்
படுத்தினான்.
"எங்கே வர வேண்டும்.. அதை
சொல்லு" என்று கார்த்திக் தன் முழுக்
கோபத்தையும் அடக்கியபடிக்
கேட்டான்.
"பாலக்காடு ஹைவேஸ்.. டோல் கேட்
தாண்டி 10 கிலோமீட்டர்ல ஒரு
காலியான பழைய காம்ப்ளக்ஸ்
இருக்கும் அங்கே வந்துவிடு" என்று
போனை வைத்துவிட்டான்.. அவன்
போனை வைக்க அவன் சொன்ன
இடத்தை மதுவின் மொபைலில்
இருந்து அரவிந்திற்கு மெசேஜ்
அனுப்பினான் கார்த்திக்.
உடனே மதுவின் போனிற்கு கால்
பண்ணிய அரவிந்த் "கார்த்திக் நீங்க
மதுவை அந்த டாக்குமென்ட்-அ
குடுத்துட்டு கூட்டிட்டு வந்திருங்க..
எதுவும் அவர்களிடம் பேச வேண்டாம்..
நீங்கள் இப்போது பேசிய நம்பரை
மட்டும் எனக்கு அனுப்புங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று
சொல்ல "அரவிந்த்... ஏதோ கோபத்தில்
அவனை விடக்கூடாது என்று எல்லாம்
சொன்னேன்.. ஆனால் இப்போது
என்னை அறியாமல் ஏதோ பயமாக
இருக்கிறது.. இது ரிஸ்க் என்றால்
வேண்டாம்.. எனக்கு அந்தப் ப்ராஜெக்ட்
கைவிட்டுப் போனாலும்
பரவாயில்லை.. எனக்கு மது
முக்கியம்" என்று கார்த்திக் தன்
வாழ்க்கையில் முதல்முதலாகப்
புலம்பினான்.
"இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை கார்த்திக்.. ரிஸ்க்கும் இல்லை..
அடுத்தவருக்குத் தைரியம் ஊட்டும்
நீயே இப்படிப் பேசலாமா.. நான்
சொன்னதை மட்டும் செய்து நீ
கிளம்பிவிடு.. உன் ப்ராஜெக்ட்டிற்கு
நான் பொறுப்பு.. அதைவிட உன்
மதுவிற்கும் நான் இரண்டு மடங்கு
பொறுப்பு" என்று கார்த்திக்கை
சமாதானம் செய்தான் அரவிந்த்.. "ம்ம
சரி அரவிந்த்" என்று போனை
வைத்துவிட்டான் கார்த்திக்.
ஆபிஸிற்கு சென்று பேப்பரை
வாங்கியவன்... அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்றான். அங்குப்
போய் காரை நிறுத்தி
காத்திருந்தவனால் நிற்க
முடியவில்லை. எப்போது மதுவைப்
பார்ப்போம் என்று இருந்தது.
தூரத்தில் ஒரு கார் வருவது தெரிய,
அவர்களாகத் தான் இருக்க வேண்டும்
என்று அந்தக் காரையே பார்த்தபடி
நின்றிருந்தான்.
100 மீட்டர் இடைவெளியில் அந்தக்
கார் வந்து நின்றது. அதிலிருந்து
இறங்கிய ஒருவன் கார்த்திக்கின்
அருகில் வந்து "பத்திரம்" என்று கையை நீட்டினான். காரைத் திறந்து
பத்திரத்தை எடுத்தக் கார்த்திக்
"மதுவைக் கண்ணில் காட்டு" என்று
கேட்டான்.
தன் கூட்டாளி ஒருவனுக்குப் போன்
போட அவன் காரை விட்டு இறங்கி
பாக் டோரைத் திறந்து ஏதோ சொல்ல
மது காரில் இருந்து இறங்கினாள்.
மதுவைப் பார்த்த கார்த்திக் தன்
அருகில் நின்றிருந்தவனிடம்
பத்திரத்தைக் கொடுக்க.. அவன்
திரும்பி தன் கூட்டாளிகளிடம் மதுவின்
கைக் கட்டை அவிழ்த்து விடும்படி சைகை செய்தான்.
பின் பத்திரத்தை வாங்கியவன்
திரும்பிச் சென்று மதுவை அனுப்ப..
கார்த்திக்கும் மதுவை நோக்கி
வேகநடையுடன் வந்தான்.. மது ஒரு 50
மீட்டர் வந்தவுடன் அந்தத் தடியன்கள்
காரில் ஏறிப் பறந்தனர். ஒரு நிமிடம்
அவர்களின் கார் செல்வதைப்
பின்னாடி திரும்பிப் பார்த்த மது
அப்படியே நின்றிருந்தாள்.
அவளின் அருகில் வந்தக் கார்த்திக்
அவளைத் தன் தோளோடு சேர்த்தபடி அணைத்து காருக்குக் கூட்டி வந்தான்.
மதுவின் முகம் இறுகி சோர்ந்து
காணப்பட்டது. ஒரு சொட்டு கண்ணீர்
இல்லை மதுவிடம். தண்ணீர்
பாட்டிலை எடுத்து நீட்ட எதுவும்
பேசாமல் வாங்கிய மது அந்தப்
பாட்டிலில் ஒரு சொட்டுத் தண்ணீர்
இல்லாமல் குடித்து முடித்து பாட்டிலை
வைத்தவள் அவன் பக்கம் திரும்பக்
கூட இல்லை.. மதுவின் இளைத்தத்
தோற்றத்திற்கானக் காரணம்
இப்போது கார்த்திக்கிற்குப் புரிந்தது.
அவளிடம் பேசலாம் என்று
நினைத்தவன்.. முதலில் இந்த
இடத்தைக் காலி செய்வோம் என்று
காரை எடுத்தேன்.
கார் பொள்ளாச்சி ஹைவேஸ் திரும்பி
கொஞ்ச தூரம் சென்றது. சிறிது நேரம்
கழித்து காரை ஒரு ஓரமாக
நிறுத்தினான்.. அது அவர்கள்
முதல்முதலாக பேசிய இடம்.. கார்த்திக்
மதுவைத் திருமணத்திற்குச் சம்மதிக்க
வைத்த இடம்.. மதுவும் அதைக்
கவனிக்கத் தவறவில்லை..
"மது.." என்று கார்த்திக் ஆரம்பிக்க
"காரை எடுங்க" என்று நேராக
ரோட்டைப் பார்த்தபடி மது சொன்னாள்.
"நான் உன்னி...." என்று ஆரம்பிக்க,
மது தன் இரு கைகளாலும் காதைப்
பொத்தினாள். "காரை எடுங்க" என்று
அழுத்தமாகச் சொன்னாள்.
"இல்லை மது.. ஒரு நிமிடம்
சொல்வதைக் கேள்.. என்னால் தானே
இந்தப்..." என்று கார்த்திக் சொல்ல
"இப்போ காரை எடுக்கறீங்கலா
இல்லை நான் எங்காவது இறங்கிப்
போகட்டா" என்று மது கார் கதவைத்
திறக்கப் போக.. அவளைத் தடுத்த கார்த்திக் அமைதியாக காரை
எடுத்தான். செல்லும் போதே
சுந்தரமூர்த்திக்குப் போன் பண்ணி
நடந்ததைக் கூறினான்.
விஷயத்தைக் கேட்டுப் பதறிய
சுந்தரமூர்த்தி "அய்யோ மாப்பிள்ளை
என்ன சொல்றீங்க.. இப்போது எங்க
இருக்கீங்க நீங்க.. மது உங்க
கூடத்தானே இருக்கா?" என்று
படபடப்புடன் கேட்டார்.
"இப்போது பயப்பட எதுவும் இல்லை
மாமா.. மது என்னுடன் தான் இருக்கிறாள்.." என்றவன் "நாங்கள்
இப்போது அங்கு நம்ம வீட்டிற்குத் தான்
வந்து கொண்டு இருக்கிறோம்.."
என்று போனை வைத்தான்.
மதுவின் வீட்டிற்குள் கார் நுழையும்
போதே எல்லோரும் வெளியே வந்து
விட்டனர். வேலுமணி ஜானகி கூட
அங்கு தான் இருந்தனர். மது
இறங்கிய பின் எல்லாரும் வந்து
சுற்றி நின்று ஆளுக்கு ஒரு
கேள்வியைக் கேட்டனர். "சரி உள்ளே
சென்று பேசுவோம். மது பார்ப்பதற்கே
மிகவும் சோர்வாக இருப்பது போலத்
தெரிகிறது" என்றார் வேலுமணி.
உள்ளே வந்தவுடன் அவளுக்கு ஒரு
ஜூஸைக் கொடுத்து பருக வைத்தனர்.
"என்னமா மது... என்ன நடந்தது?"
என்று வினவினார் திருமுருகன்.
"ரொம்ப டயர்டா இருக்குன்னு
சீக்கரமே கிளம்பி கீழே வந்தேன்
சித்தப்பா.. யாரோ என்ன
கூப்பிட்டாங்க.. நான் ஏதாவது
ஹாஸ்பிடலிற்குப் புதிதாக
வந்திருப்பவர்.. ஏதாவது உதவி கேட்க
அழைப்பார் என்று நானும்
என்னவென்று கேட்டேன்.. அதுக்கு
அப்புறம் கத்தியை எல்லாம் காட்டி
வைத்து மிரட்டி கூட்டிச் சென்று
விட்டார்கள்" என்று சிறு பயத்துடன்
நடந்ததைச் சொல்லி முடித்தாள்.
"சரி விடுமா.. எல்லாவற்றையும் ஒரு
கெட்ட கனவா நினைச்சு மறந்திரு"
என்று மகளின் தலையை வருடினார்
சுந்தரமூர்த்தி.
"எல்லாம் திருஷ்டி என்று
நினைக்கிறேன்.." என்ற ஜானகி
"நீங்கள் ஒரு படியில் மிளகாயும்
உப்பும் எடுத்து வாருங்கள்..
சுற்றிப்போட்டு விடலாம் இருவருக்கும்"
என்று உமாவைப் பார்த்துச்
சொன்னார் ஜானகி.. அவர் எடுத்து வர
ஜானகியே மகனிற்கும் மருமகளிற்கும்
சுற்றினார். பிறகு குடும்பத்திற்கும்
சுற்றிப் போட்டு விடலாம் என்று
எல்லோரையும் நிற்க வைத்து
சுற்றிவர் தனக்கும் கடைசியாகச்
சுற்றித் திருஷ்டிக் கழித்தார். மது
கார்த்திக்கின் பக்கம் திரும்பக் கூட
இல்லை.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க வேலுமணியும் ஜானகியும் கிளம்ப,
கார்த்திக் மதுவுடன் இன்று
தங்கிவிடுவதாக சொல்ல, ஜானகி
மெல்லிய புன்னகையை
உதிர்த்தார். அவர்களை அனுப்பி
விட்டு தன் காரைத் திறந்தவன்..
மதுவிற்காக சென்னையில் வாங்கிய
பரிசை டாஷ்போர்ட்டில் இருந்து
எடுத்து தனது பான்ட் பக்கெட்டில்
வைத்தான். பின் உள்ளே வர அரவிந்த்
கார்த்திக்கிற்கு போன் செய்ய
கார்த்திக் போனை எடுத்துப்
பேசினான்.
"அவர்களைப் பிடித்து விட்டோம்
கார்த்திக். அந்த பேப்பர்ஸையும்
வாங்கி விட்டேன். நீங்க காலையில்
வந்து ஆஃபிசியலா ஒரு கம்ப்ளைன்ட்
மட்டும் எழுதி தந்திட்டுப் போங்க"
என்றான் அரவிந்த்.
"ரொம்ப நன்றி அரவிந்த்" எனக்
கார்த்திக் சொல்ல "உங்களை அப்பா
ஆக்குன மதுவிற்கு பர்ஸ்ட் தேங்க்ஸ்
சொல்லுங்க" என்று சிரித்தபடியே
வைத்துவிட்டான் அரவிந்த். கார்த்திக்
உள்ளே வர மது எழுந்து மேலே தன்
அறைக்குச் சென்றாள்.. பிறகு அங்கு உள்ள ஷோபாவில் அமர்ந்தவன்
சிறிது நேரம் எல்லாரிடமும் பேசிக்
கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து மேலே செல்ல எழுந்தவன்
மதுவை எப்படிச் சமாதானம் செய்வது
என்று யோசித்தபடியே படி ஏறினான்.
அப்போது தான் மது குளித்து விட்டு
ஒரு ப்ளூ நைட்டிக்கு மாறி பாத்ரூமில்
இருந்து வெளியே வந்தாள். இவன்
வந்ததைப் கவனித்தவள் அவன்
இன்னும் உடையை மாற்றாமல்
இருப்பதைக் கண்டாள். தாத்தா இறந்த
சமயம் இரண்டு நாட்கள் கார்த்திக்
இங்கு தான் தங்கியிருந்தான்.
அப்போது எடுத்து வந்த உடையில் ஒரு
நைட் செட்டை விட்டுவிட்டுச்
சென்றிருந்தான்.
தன் கப்போர்டைத் திறந்த மது
அவனது ப்ளாக் ட்ராக் பான்டையும்..
நீல நிற டி சர்ட்டையும் எடுத்து பெட்டின்
மேல் வைத்து விட்டு அவனை ஏறிட்டுப்
பார்க்காமல் பால்கனிக்குச் சென்று
நின்றுவிட்டாள். அவனும் அன்று
நேர்ந்த அலைச்சலில் குளியல்
அறைக்குள் புகுந்து சவரைத் திறந்து
சில நொடிகள் நின்றான்.. பின்
குளித்து முடித்து வெளியே வந்தவன்
மது இன்னும் பால்கனியில் நிற்பதைப்
பார்த்து, அவன் கால்கள் அங்கு
சென்றன.
மது கழுத்தைத் தூக்கி வானை
வெறித்துக் கொண்டு நின்று
இருந்தாள்.. அந்தக் காரிருள் நீலவான
மேகத்திற்கு நடுவில் நிலா நீந்தி
அலைந்து கொண்டு இருந்தது.
முகத்தில் எந்த உணர்ச்சியையும்
காட்டாமல் மது நிலாவையே
வெறித்துக் கொண்டு இருந்தாள்.
கார்த்திக்கிற்கு மதுவை எப்படி
சமாதானம் செய்வது என்று
தெரியவில்லை. பேசாமல் மதுவின்
பின் சிறிது நேரம் அவனும் நிலாவைப்
பார்த்தபடி நின்று கொண்டு
இருந்தான்
"மது" என்று நிலாவில் இருந்து
பார்வையை எடுக்காமல் அழைத்தான்.
"....."
"பேசாம இருக்காதே மது. பதில் பேசு"
என்று மதுவின் பின்னால்
நின்றிருந்தபடியே தவிப்புற்ற குரலில்
பேசினான் கார்த்திக்.
"....."
"மது" என்று அவளின் தோளில் கை
வைத்து அழைத்தான் கார்த்திக்.
அவன் கையை வைத்த நொடியே
தட்டிவிட்டாள் மது. அவள் எவ்வளவு
கோபத்தில் இருக்கிறாள் என்று
கார்த்திக்கிற்குப் புரிந்தது.
"நான் அப்பா ஆகப்போறனா மது?"
என்று கார்த்திக் அழுத்தமானக்
குரலில் வினவ விருட்டென் திரும்பிப்
பார்த்தாள் மது. அவனிடம் பேசக்
கூடாது என்று இருந்த மது.. அவன்
கேட்ட கேள்வியில் 'இவனிற்கு எப்படித்
தெரியும்' என்று அதிர்ந்து
திரும்பினாள். கண்கள் வியப்பில்
தெறித்துவிடும் என்பது போல
விரிந்தது.
கார்த்திக்கிற்குப் பொதுவாக இந்த
மாதிரி மிரட்டல்கள் தொழிலில்
இருக்கும் என்று தெரிந்தவன் தான்.
அதுவும் கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட்டில்
ரொம்பவே அதிகம்... ஏனென்றால்
பணம் அதிகம் சுரண்டிவிடலாம்.
ஆனால் கார்த்திக் கரெக்டான
தொகையைப் போட்டு அனுப்பவே..
இந்தப் ப்ராஜெக்ட் அவனுக்கு என்றே
அந்த எம்எல்ஏ முடிவு செய்தார்.
போட்டிக் கம்பெனிகாரர்கள் தங்கள்
கைக்கு இந்தப் ப்ராஜெக்ட்
கிடைக்கவில்லை என்று தான்
கொதித்துக் கொண்டு இருந்தனர்.
அதில் ஒரு முன்னணிக்
கம்பெனியான ஒன்று கார்த்திக்கை
ஒரு பப்ளிக் ப்ளேசிற்கு அழைத்து
ப்ராஜெக்ட்டில் இருந்து விலகிவிடு
என்றது.. கார்த்திக் முடியாது என்று
சொல்ல மிரட்டிக் கூடப் பார்த்தனர்.
ஆனால் கார்த்திக்கோ அசராமல்
"முடிந்ததைப் பார்" என்றுவிட்டான்.
இன்று மதுவை ஆள் வைத்து கடத்தி
மிரட்டுவதும் அவன்தான். அந்தக்
கடத்தல்காரன் போன் செய்கிறேன்
என்று போனை வைத்துவிட்டான்.
ஆனால் அவன் போன் செய்வான்
என்று அவனது போனிற்காகக்
காத்திருந்த ஒரு மணி நேரத்தில் மது
அனுபவித்த வலிகளை விட நூறு
மடங்கு வலிகளை அனுபவித்து
விட்டான் கார்த்திக். ஏனோ தன்
உயிரையே எவனோ எடுத்துச் சென்ற
உணர்வு. மதுவை இப்போதே பார்க்க
வேண்டும்.. அவளைக் கட்டிப்பிடித்து ஆயிரம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அதுவும் தன்னை அப்பா என்ற அடுத்த
ஸ்தானத்திற்கு கொண்டு
சென்றவளை கையில் வைத்துத்
தாங்கத் துடித்தது கார்த்திக்கின்
கரங்கள். அவளின் மனநிலை இப்போ
என்னவோ என்று யோசிக்கும் போதே
அவனுக்கு பயமாக இருந்தது.
அவளின் கோபத்தைப் பற்றியும் நன்கு
அவனுக்கும் தெரியும். எங்கே
பேசாமல் இருந்து விடுவாளோ?
வீட்டிற்கு வரமால் இருந்து
விடுவாளோ என்று அவனுக்கு
இப்போது தோன்றியது.
"எங்கு இருந்து வந்தாய் மது?
காதல் வேண்டாம் என்று
முடிவு செய்து இருந்தேன்.
உன் காதலிலே என்னைக்
கரைய வைத்து
என் முழு வாழ்க்கையையும் அழகாய்
மாற்றிவிட்டாய்.
என் இதயத்திற்குள் புகுந்து
என்றும் உன் நினைவிலேயே
என்னை சுற்ற வைத்து
இப்போது உன்னைப் பார்க்க
ஏங்க வைத்துவிட்டாயேடி"
என்று மதுவிற்காக அவன் மனம்
ஏங்கித் தவித்தது..
அங்கே மதுவிடம் அந்த
ரௌடிகள் பேச்சுக் கொடுத்தனர்.
"என்ன உன் புருஷன் கரெக்டா எழுதி
எடுத்து வந்துவிடுவான் தானே" என்று
கிண்டலாகக் கேட்டான்.. மது எதுவும்
பேசாமல் ஊமக்கொட்டான் போல்
இறுகி உட்கார்ந்திருக்க "என்னடா
இவள் எதுவுமே பேசாமல் திமிராக
உட்கார்ந்திருக்கிறாள்" என்று ஒரு
தடியன் இன்னொரு தடியனிடம்
சொன்னான்.
"பயந்திருப்பாளோ?" என்று ஒருவன்
கேட்க.. வெளியே சென்று வந்ந
ஒருவன் "யாரு இவளா? கத்தியை
வைத்து மிரட்டி வண்டியில் ஏறச்
சொல்லும் போது கூடக் பயந்து
கத்தவில்லை.. இவளாவது பயந்து
இருப்பதாவது.." என்றவன் "புருஷன்
வந்துவிடுவான் என்ற தைரியம் தான்"
என்று சிரிக்க.. அங்கு இருந்த மூன்று
தடியன்களும் கோரசாகச் சிரித்தனர்..
மதுவிற்கு தெரியாத் தனமாக வந்து
இந்த நாய்களிடம் மாட்டி விட்டோமே
என்று இருந்தது.
மதுவிற்கு இன்று தலைவலி
நன்றாகவே இருந்தது. அவளிற்கு
அடுத்து வரும் ட்யூட்டி டாக்டரும்
இரண்டு மணிக்கே சீக்கிரம் வந்துவிட
அவரிடம் ஒப்படைத்து விட்டு
கார்மெண்ட்ஸிற்கு போய்விடலாம்
என்று கீழே வந்தாள்.. அவளை ஒரு
வாரமாகக் கவனித்துக் கொண்டு
இருந்த இந்தக் கும்பலும் அவள் வர
மதுவிடம் ஏதோ கேட்கப் போவது
போல அவள் அருகில் சென்றனர்..
கரெக்டாக மதுவும் அவர்கள் இருக்கும்
திசையிலேயே வந்தாள். அந்த
வெயிலில் அவ்வளவாகக்
கூட்டமும் இல்லை.
மது அவர்களைக் கடந்து செல்லும்
சமயம் "மேடம்" என்று ஒருத்தன்
அவளை அழைத்தபடி அருகில்
சென்றான். யாரோ தன்னை
அழைப்பதை உணர்ந்த மது, திரும்பி
அவனைப் பார்க்க "மேடம்.. நீங்கள்
தானே மதுமிதா?" என்று கேட்டபடி
மதுவின் அருகில் வந்தவன் பட்டென்று
கத்தியை வெளியில் எடுத்துவிட்டான்.
மது ஒரு நிமிடம் உறைந்து நிற்க
"சத்தம் போட்டாய் என்றால்..
அவ்வளவு தான்.. ஒழுங்காய் வந்து
அந்த வண்டியில் ஏறு" என்று முகத்தை
சாதரணமாக வைத்துப் பேசினான்.
பார்ப்பவர்களுக்கு அவர்கள்
சாதரணமாகப் பேசுவது போலத் தான்
தெரியும்.. மதுவால் கத்தக் கூட
முடியவில்லை.. ஏனெனில் கத்தியை
வயிற்றிற்கு நேர் வைத்தபடி
பிடித்திருந்தான். மதுவிற்கு அதைப்
பார்க்கவே ஏதோ தன் குழந்தை
உள்ளிருந்து அவளை பயத்தில்
அணைப்பது போலத் தோன்றியது.
மது எதுவும் பேசாமல் வந்து
வண்டியில் ஏறினாள்.
அவளிடம் போன் எங்கே என்று
ஒருவன் கேட்க பையைக்
காண்பித்தாள் மது.. அதைப் பிடுங்கி
வெளியே ஒருவன் வீச கார் பறந்தது.
மனதில் ஆயிரம் யோசனைகள்.. யார்
இவர்கள்? தன் குடும்பத்தினரைப்
பார்க்க முடியுமா இனி..? கார்த்திக்....
என்று எல்லாவற்றையும் யோசித்தாள்..
ஆனால் அவர்கள் கார்த்திக்கிடம்
பேசியதைக் கேட்டபோது தான்
கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஆனால்
ஏனோ வெறுப்பாகவே உணர்ந்தாள்
மது.. ஏனோ எங்காவது யார்
கண்ணிலும் படாமல் போய் விடலாமா
என்று எல்லாம் எண்ணினாள் மது..
எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு
நிலை வரக்கூடாது என்று கடவுளை
வேண்டியவளுக்குக் கண்களில் குளம்
கட்டியது. ஏனோ தன்னையும் தன்
வயிற்றில் வளரும் குழந்தையையும்
கார்த்திக்கைப் பற்றியுமே யோசித்துக்
கொண்டு இருந்தாள் மது. தன்னைக்
கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை
மறந்து தன் சிந்தனைகளில் உழன்று
கொண்டு இருந்தாள் மதுமிதா.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மதுவை நினைத்தபடியே அந்தக் கார்
பார்க்கிங்கிலேயே உட்கார்ந்து
இருந்தான் கார்த்திக்.. போன் வர ஒரே
ரிங்கில் எடுத்துவிட்டான். "ஹலோ"
என்ற கார்த்திக் "எங்கே வர
வேண்டும் சொல்லு?" என்றான்.
"பரவாயில்லை... நல்ல விவரமாகத்
தான் இருக்க... எந்தப் பேச்சு
வார்த்தையும் நடத்தாமல் நேரே
விஷயத்திற்கு வருகிறாயே.. பேசாமல்
பணத்தையும் கேட்டிருக்கலாம் போல..
பொண்டாட்டி மேல இருக்க பாசத்துல
எவ்வளவு கேட்டாலும் தந்திருப்ப"
என்று அவன் சொல்லி சிரிக்க..
அவனுடன் அவன் கூட்டாலிகளும்
சிரித்தனர்.. கார்த்திக் கண்களை
இறுக மூடி கோபத்தைக் கட்டுப்
படுத்தினான்.
"எங்கே வர வேண்டும்.. அதை
சொல்லு" என்று கார்த்திக் தன் முழுக்
கோபத்தையும் அடக்கியபடிக்
கேட்டான்.
"பாலக்காடு ஹைவேஸ்.. டோல் கேட்
தாண்டி 10 கிலோமீட்டர்ல ஒரு
காலியான பழைய காம்ப்ளக்ஸ்
இருக்கும் அங்கே வந்துவிடு" என்று
போனை வைத்துவிட்டான்.. அவன்
போனை வைக்க அவன் சொன்ன
இடத்தை மதுவின் மொபைலில்
இருந்து அரவிந்திற்கு மெசேஜ்
அனுப்பினான் கார்த்திக்.
உடனே மதுவின் போனிற்கு கால்
பண்ணிய அரவிந்த் "கார்த்திக் நீங்க
மதுவை அந்த டாக்குமென்ட்-அ
குடுத்துட்டு கூட்டிட்டு வந்திருங்க..
எதுவும் அவர்களிடம் பேச வேண்டாம்..
நீங்கள் இப்போது பேசிய நம்பரை
மட்டும் எனக்கு அனுப்புங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று
சொல்ல "அரவிந்த்... ஏதோ கோபத்தில்
அவனை விடக்கூடாது என்று எல்லாம்
சொன்னேன்.. ஆனால் இப்போது
என்னை அறியாமல் ஏதோ பயமாக
இருக்கிறது.. இது ரிஸ்க் என்றால்
வேண்டாம்.. எனக்கு அந்தப் ப்ராஜெக்ட்
கைவிட்டுப் போனாலும்
பரவாயில்லை.. எனக்கு மது
முக்கியம்" என்று கார்த்திக் தன்
வாழ்க்கையில் முதல்முதலாகப்
புலம்பினான்.
"இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை கார்த்திக்.. ரிஸ்க்கும் இல்லை..
அடுத்தவருக்குத் தைரியம் ஊட்டும்
நீயே இப்படிப் பேசலாமா.. நான்
சொன்னதை மட்டும் செய்து நீ
கிளம்பிவிடு.. உன் ப்ராஜெக்ட்டிற்கு
நான் பொறுப்பு.. அதைவிட உன்
மதுவிற்கும் நான் இரண்டு மடங்கு
பொறுப்பு" என்று கார்த்திக்கை
சமாதானம் செய்தான் அரவிந்த்.. "ம்ம
சரி அரவிந்த்" என்று போனை
வைத்துவிட்டான் கார்த்திக்.
ஆபிஸிற்கு சென்று பேப்பரை
வாங்கியவன்... அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்றான். அங்குப்
போய் காரை நிறுத்தி
காத்திருந்தவனால் நிற்க
முடியவில்லை. எப்போது மதுவைப்
பார்ப்போம் என்று இருந்தது.
தூரத்தில் ஒரு கார் வருவது தெரிய,
அவர்களாகத் தான் இருக்க வேண்டும்
என்று அந்தக் காரையே பார்த்தபடி
நின்றிருந்தான்.
100 மீட்டர் இடைவெளியில் அந்தக்
கார் வந்து நின்றது. அதிலிருந்து
இறங்கிய ஒருவன் கார்த்திக்கின்
அருகில் வந்து "பத்திரம்" என்று கையை நீட்டினான். காரைத் திறந்து
பத்திரத்தை எடுத்தக் கார்த்திக்
"மதுவைக் கண்ணில் காட்டு" என்று
கேட்டான்.
தன் கூட்டாளி ஒருவனுக்குப் போன்
போட அவன் காரை விட்டு இறங்கி
பாக் டோரைத் திறந்து ஏதோ சொல்ல
மது காரில் இருந்து இறங்கினாள்.
மதுவைப் பார்த்த கார்த்திக் தன்
அருகில் நின்றிருந்தவனிடம்
பத்திரத்தைக் கொடுக்க.. அவன்
திரும்பி தன் கூட்டாளிகளிடம் மதுவின்
கைக் கட்டை அவிழ்த்து விடும்படி சைகை செய்தான்.
பின் பத்திரத்தை வாங்கியவன்
திரும்பிச் சென்று மதுவை அனுப்ப..
கார்த்திக்கும் மதுவை நோக்கி
வேகநடையுடன் வந்தான்.. மது ஒரு 50
மீட்டர் வந்தவுடன் அந்தத் தடியன்கள்
காரில் ஏறிப் பறந்தனர். ஒரு நிமிடம்
அவர்களின் கார் செல்வதைப்
பின்னாடி திரும்பிப் பார்த்த மது
அப்படியே நின்றிருந்தாள்.
அவளின் அருகில் வந்தக் கார்த்திக்
அவளைத் தன் தோளோடு சேர்த்தபடி அணைத்து காருக்குக் கூட்டி வந்தான்.
மதுவின் முகம் இறுகி சோர்ந்து
காணப்பட்டது. ஒரு சொட்டு கண்ணீர்
இல்லை மதுவிடம். தண்ணீர்
பாட்டிலை எடுத்து நீட்ட எதுவும்
பேசாமல் வாங்கிய மது அந்தப்
பாட்டிலில் ஒரு சொட்டுத் தண்ணீர்
இல்லாமல் குடித்து முடித்து பாட்டிலை
வைத்தவள் அவன் பக்கம் திரும்பக்
கூட இல்லை.. மதுவின் இளைத்தத்
தோற்றத்திற்கானக் காரணம்
இப்போது கார்த்திக்கிற்குப் புரிந்தது.
அவளிடம் பேசலாம் என்று
நினைத்தவன்.. முதலில் இந்த
இடத்தைக் காலி செய்வோம் என்று
காரை எடுத்தேன்.
கார் பொள்ளாச்சி ஹைவேஸ் திரும்பி
கொஞ்ச தூரம் சென்றது. சிறிது நேரம்
கழித்து காரை ஒரு ஓரமாக
நிறுத்தினான்.. அது அவர்கள்
முதல்முதலாக பேசிய இடம்.. கார்த்திக்
மதுவைத் திருமணத்திற்குச் சம்மதிக்க
வைத்த இடம்.. மதுவும் அதைக்
கவனிக்கத் தவறவில்லை..
"மது.." என்று கார்த்திக் ஆரம்பிக்க
"காரை எடுங்க" என்று நேராக
ரோட்டைப் பார்த்தபடி மது சொன்னாள்.
"நான் உன்னி...." என்று ஆரம்பிக்க,
மது தன் இரு கைகளாலும் காதைப்
பொத்தினாள். "காரை எடுங்க" என்று
அழுத்தமாகச் சொன்னாள்.
"இல்லை மது.. ஒரு நிமிடம்
சொல்வதைக் கேள்.. என்னால் தானே
இந்தப்..." என்று கார்த்திக் சொல்ல
"இப்போ காரை எடுக்கறீங்கலா
இல்லை நான் எங்காவது இறங்கிப்
போகட்டா" என்று மது கார் கதவைத்
திறக்கப் போக.. அவளைத் தடுத்த கார்த்திக் அமைதியாக காரை
எடுத்தான். செல்லும் போதே
சுந்தரமூர்த்திக்குப் போன் பண்ணி
நடந்ததைக் கூறினான்.
விஷயத்தைக் கேட்டுப் பதறிய
சுந்தரமூர்த்தி "அய்யோ மாப்பிள்ளை
என்ன சொல்றீங்க.. இப்போது எங்க
இருக்கீங்க நீங்க.. மது உங்க
கூடத்தானே இருக்கா?" என்று
படபடப்புடன் கேட்டார்.
"இப்போது பயப்பட எதுவும் இல்லை
மாமா.. மது என்னுடன் தான் இருக்கிறாள்.." என்றவன் "நாங்கள்
இப்போது அங்கு நம்ம வீட்டிற்குத் தான்
வந்து கொண்டு இருக்கிறோம்.."
என்று போனை வைத்தான்.
மதுவின் வீட்டிற்குள் கார் நுழையும்
போதே எல்லோரும் வெளியே வந்து
விட்டனர். வேலுமணி ஜானகி கூட
அங்கு தான் இருந்தனர். மது
இறங்கிய பின் எல்லாரும் வந்து
சுற்றி நின்று ஆளுக்கு ஒரு
கேள்வியைக் கேட்டனர். "சரி உள்ளே
சென்று பேசுவோம். மது பார்ப்பதற்கே
மிகவும் சோர்வாக இருப்பது போலத்
தெரிகிறது" என்றார் வேலுமணி.
உள்ளே வந்தவுடன் அவளுக்கு ஒரு
ஜூஸைக் கொடுத்து பருக வைத்தனர்.
"என்னமா மது... என்ன நடந்தது?"
என்று வினவினார் திருமுருகன்.
"ரொம்ப டயர்டா இருக்குன்னு
சீக்கரமே கிளம்பி கீழே வந்தேன்
சித்தப்பா.. யாரோ என்ன
கூப்பிட்டாங்க.. நான் ஏதாவது
ஹாஸ்பிடலிற்குப் புதிதாக
வந்திருப்பவர்.. ஏதாவது உதவி கேட்க
அழைப்பார் என்று நானும்
என்னவென்று கேட்டேன்.. அதுக்கு
அப்புறம் கத்தியை எல்லாம் காட்டி
வைத்து மிரட்டி கூட்டிச் சென்று
விட்டார்கள்" என்று சிறு பயத்துடன்
நடந்ததைச் சொல்லி முடித்தாள்.
"சரி விடுமா.. எல்லாவற்றையும் ஒரு
கெட்ட கனவா நினைச்சு மறந்திரு"
என்று மகளின் தலையை வருடினார்
சுந்தரமூர்த்தி.
"எல்லாம் திருஷ்டி என்று
நினைக்கிறேன்.." என்ற ஜானகி
"நீங்கள் ஒரு படியில் மிளகாயும்
உப்பும் எடுத்து வாருங்கள்..
சுற்றிப்போட்டு விடலாம் இருவருக்கும்"
என்று உமாவைப் பார்த்துச்
சொன்னார் ஜானகி.. அவர் எடுத்து வர
ஜானகியே மகனிற்கும் மருமகளிற்கும்
சுற்றினார். பிறகு குடும்பத்திற்கும்
சுற்றிப் போட்டு விடலாம் என்று
எல்லோரையும் நிற்க வைத்து
சுற்றிவர் தனக்கும் கடைசியாகச்
சுற்றித் திருஷ்டிக் கழித்தார். மது
கார்த்திக்கின் பக்கம் திரும்பக் கூட
இல்லை.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க வேலுமணியும் ஜானகியும் கிளம்ப,
கார்த்திக் மதுவுடன் இன்று
தங்கிவிடுவதாக சொல்ல, ஜானகி
மெல்லிய புன்னகையை
உதிர்த்தார். அவர்களை அனுப்பி
விட்டு தன் காரைத் திறந்தவன்..
மதுவிற்காக சென்னையில் வாங்கிய
பரிசை டாஷ்போர்ட்டில் இருந்து
எடுத்து தனது பான்ட் பக்கெட்டில்
வைத்தான். பின் உள்ளே வர அரவிந்த்
கார்த்திக்கிற்கு போன் செய்ய
கார்த்திக் போனை எடுத்துப்
பேசினான்.
"அவர்களைப் பிடித்து விட்டோம்
கார்த்திக். அந்த பேப்பர்ஸையும்
வாங்கி விட்டேன். நீங்க காலையில்
வந்து ஆஃபிசியலா ஒரு கம்ப்ளைன்ட்
மட்டும் எழுதி தந்திட்டுப் போங்க"
என்றான் அரவிந்த்.
"ரொம்ப நன்றி அரவிந்த்" எனக்
கார்த்திக் சொல்ல "உங்களை அப்பா
ஆக்குன மதுவிற்கு பர்ஸ்ட் தேங்க்ஸ்
சொல்லுங்க" என்று சிரித்தபடியே
வைத்துவிட்டான் அரவிந்த். கார்த்திக்
உள்ளே வர மது எழுந்து மேலே தன்
அறைக்குச் சென்றாள்.. பிறகு அங்கு உள்ள ஷோபாவில் அமர்ந்தவன்
சிறிது நேரம் எல்லாரிடமும் பேசிக்
கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து மேலே செல்ல எழுந்தவன்
மதுவை எப்படிச் சமாதானம் செய்வது
என்று யோசித்தபடியே படி ஏறினான்.
அப்போது தான் மது குளித்து விட்டு
ஒரு ப்ளூ நைட்டிக்கு மாறி பாத்ரூமில்
இருந்து வெளியே வந்தாள். இவன்
வந்ததைப் கவனித்தவள் அவன்
இன்னும் உடையை மாற்றாமல்
இருப்பதைக் கண்டாள். தாத்தா இறந்த
சமயம் இரண்டு நாட்கள் கார்த்திக்
இங்கு தான் தங்கியிருந்தான்.
அப்போது எடுத்து வந்த உடையில் ஒரு
நைட் செட்டை விட்டுவிட்டுச்
சென்றிருந்தான்.
தன் கப்போர்டைத் திறந்த மது
அவனது ப்ளாக் ட்ராக் பான்டையும்..
நீல நிற டி சர்ட்டையும் எடுத்து பெட்டின்
மேல் வைத்து விட்டு அவனை ஏறிட்டுப்
பார்க்காமல் பால்கனிக்குச் சென்று
நின்றுவிட்டாள். அவனும் அன்று
நேர்ந்த அலைச்சலில் குளியல்
அறைக்குள் புகுந்து சவரைத் திறந்து
சில நொடிகள் நின்றான்.. பின்
குளித்து முடித்து வெளியே வந்தவன்
மது இன்னும் பால்கனியில் நிற்பதைப்
பார்த்து, அவன் கால்கள் அங்கு
சென்றன.
மது கழுத்தைத் தூக்கி வானை
வெறித்துக் கொண்டு நின்று
இருந்தாள்.. அந்தக் காரிருள் நீலவான
மேகத்திற்கு நடுவில் நிலா நீந்தி
அலைந்து கொண்டு இருந்தது.
முகத்தில் எந்த உணர்ச்சியையும்
காட்டாமல் மது நிலாவையே
வெறித்துக் கொண்டு இருந்தாள்.
கார்த்திக்கிற்கு மதுவை எப்படி
சமாதானம் செய்வது என்று
தெரியவில்லை. பேசாமல் மதுவின்
பின் சிறிது நேரம் அவனும் நிலாவைப்
பார்த்தபடி நின்று கொண்டு
இருந்தான்
"மது" என்று நிலாவில் இருந்து
பார்வையை எடுக்காமல் அழைத்தான்.
"....."
"பேசாம இருக்காதே மது. பதில் பேசு"
என்று மதுவின் பின்னால்
நின்றிருந்தபடியே தவிப்புற்ற குரலில்
பேசினான் கார்த்திக்.
"....."
"மது" என்று அவளின் தோளில் கை
வைத்து அழைத்தான் கார்த்திக்.
அவன் கையை வைத்த நொடியே
தட்டிவிட்டாள் மது. அவள் எவ்வளவு
கோபத்தில் இருக்கிறாள் என்று
கார்த்திக்கிற்குப் புரிந்தது.
"நான் அப்பா ஆகப்போறனா மது?"
என்று கார்த்திக் அழுத்தமானக்
குரலில் வினவ விருட்டென் திரும்பிப்
பார்த்தாள் மது. அவனிடம் பேசக்
கூடாது என்று இருந்த மது.. அவன்
கேட்ட கேள்வியில் 'இவனிற்கு எப்படித்
தெரியும்' என்று அதிர்ந்து
திரும்பினாள். கண்கள் வியப்பில்
தெறித்துவிடும் என்பது போல
விரிந்தது.