Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-19
ஆயிற்று.. மது தன் வீட்டில் இருக்க
ஆரம்பித்து முழுதாக ஆறு நாட்கள்
ஆயிற்று.. கிட்டத்தட்ட பித்துப்
பிடித்தவள் போல வலம் வந்து
கொண்டு இருந்தாள்.
குடும்பத்தினரிடம் மட்டும் எதையும்
காட்டாமல் இன்முகத்துடன் இருக்க முயற்சித்தாள். ஆனால் அதிலும்
முடியாமல் தனித்து இருக்க...
சாப்பிடுவதற்கு மட்டுமே கீழே வர
ஆரம்பித்தாள். சித்தப்பாவுடன்
ஹாஸ்பிடல் சென்று வந்து கொண்டு
இருந்தவளுக்கு கொஞ்சம் கூட
கணவனின் நினைப்புக்
குறையவில்லை.
கார்த்திக்கும் மதுவும் போன் போட்டுக்
கூடப் பேசிக் கொள்ளவில்லை.
பார்க்கவும் வரவில்லை "ஏன்மா
மாப்பிள்ளை வரவே இல்லை" என்று
ராதா கேட்க "அவர் ஒரு கவர்ன்மெண்ட்
ப்ராஜெக்ட்டில் பிசியாக இருக்கிறார்
சித்தி... வேலை ரொம்பவே ஜாஸ்தி..
நான் தான் வரவேண்டாம்-ன்னு
சொல்லிட்டேன்.. இப்போது தான்
பேசினேன்" என்று மது சொல்ல,
தாத்தாவின் படத்திற்கு விளக்கு
ஏற்றிக் கொண்டு இருந்தப் பாட்டி
மதுவைத் திரும்பி 'அப்படியா' என்பது
போல முறைப்பும் நக்கலுமாக ஒரு
பார்வைப் பார்க்க அவரைப்
பார்க்காமல் கண்களைச்
சுழலவிட்டாள் மது.
"மது இங்கே பாரேன் பக்கத்து வீட்டு
பத்மா ஆன்ட்டி உனக்கு பிடிக்கும்
என்று அவர்கள் தோட்டத்தில்
விளைந்த பப்பாளி பழம் தந்து
இருக்கிறார்கள்' என்று சொல்லிக்
கொண்டே உமா கையில் ஒரு
பப்பாளியுடன் உள்ளே வந்தார்.
மதுவிற்கு ஒரு நிமிடம் கை கால்
எல்லாம் ஆடிவிட்டது. இதைச்
சாப்பிட்டால்... என்று நினைத்தவளால்
அதற்கு மேல் எதையும் நினைக்க
முடியவில்லை.
"இல்லை அம்மா.. எனக்கு வேண்டாம்..
இதைச் சாப்பிட்டால் எனக்கு வயிறு
சரியில்லாமல் போய்விடுகிறது" என்று
மது அடித்துவிட "என்னது..." என்று
மகளை விசித்தரமாகப் பார்த்தார் உமா.
"ஏன்டி பப்பாளி சாப்பிட்டால்
செரிமானத்திற்கு நல்லது..
ஸ்கின்னிற்கு நல்லது என்று
யாருக்கும் வைக்காமல் சாப்பிடுவாய்..
இப்போது என்னவென்றால்
வேண்டாம் என்கிறாய்" என்று அந்தப்
பப்பாளியை வலது கையை மடக்கி
உள்ளங்கையில் வைத்தவாரு
பேசினார் உமா.
மதுவோ "இப்போது என்ன ஆயிற்று..
இதோ உன் அருமை நெட்டக்கொக்கு
வந்து விட்டது பார்.. அதற்கே தா.."
என்று உள்ளே வந்த வருணை
வம்பிழுத்தபடி பேசி பேச்சையும்
மாற்றிவிட்டாள் மது.
"ஏய் குட்டக் கத்திரிக்காய்.. நீ
குட்டையாக இருந்து கொண்டு
என்னைச் சொல்கிறாயா.. உன்
ரிஷப்சன் அன்று மாமா பக்கத்தில்
ஹை ஹீல்ஸ் அணிந்து நீ நின்றது
எல்லோருக்கும் தெரியும் சரியா"
என்று ஷோபாவின் விளிம்பில்
அமர்ந்தவன் தனது தமக்கைக்
கழுத்தைத் தன் இரு கரத்தால் சுற்றி,
அவளைப் பிடித்து அப்படியே
சுற்றினான். "டேய் எருமை.. தலை
சுத்துகிறது விடுடா" என்று மது
தம்பியின் கையை பிடித்துக் கடிக்கச்
சென்றாள். கையை சட்டென்று எடுத்து
அவள் பற்களிடம் இருந்து
தப்பித்தவன் "ஏய்.. நீ மாமியார்
வீட்டிற்குச் சென்று அமைதியாகி
விட்டாய் என்று பார்த்தால்... நீ
இன்னும் அதைவிட அதிகமாக வம்பு
செய்ய ஆரம்பித்து விட்டாய்" என்று
வருண் மதுவைக் கேலி செய்தான்..
சட்டென்று "வரவர உன் சேட்டை
அதிகமாகி விட்டது டி" என்று ஒருநாள்
கார்த்திக்கை வேலை செய்யவிடாமல்
இம்சித்து அவன் அதற்கு
பனிஷ்மென்டாய் தந்த முத்தமும்
மொத்தமுமாக நினைவு வந்தது
மதுவிற்கு. தலையைச் சிலுப்பி
நிகழ்காலத்திற்கு வந்தவள் சாப்பிட
உட்கார்ந்தாள்.
சாப்பிட்டு விட்டுத் தன் அறைக்கு
வந்தவள் தன் அறையில் இருந்த
பழனி முருகன் படம் முன்பு நின்றாள்.
சில நிமிடங்கள் கடவுளை
உணர்ச்சியற்று நோக்கியவள் கந்த
சஷ்டி கவசத்தை உச்சரிக்க
ஆரம்பித்தாள். ஏனோ அதைச்
சொன்னால் ஒரு தைரியம் நம்பிக்கை
வருவது போல இருக்கும் மதுவிற்கு.
லண்டன் சென்ற பிறகு கூட மது
பழசை நினைத்து மற்றும்
கார்த்திக்கின் நினைவுகளில்
வருந்தநேரிடும் போது எல்லாம், கந்த
சஷ்டி கவசத்தை எடுத்து உட்கார்ந்து
விடுவாள்.
கார்த்திக்கைப் பார்க்க வேண்டும்
என்பது போல இருந்தது. பேசாமல்
நாளை அங்கு சென்று விடலாமா
என்று யோசித்தால் மது. ஜானகியும்
மாலை போன் பண்ணிப் பேசியது
நினைவு வந்தது மதுவிற்கு.. எப்போது
வருகிறாய் என்று கேட்காவிட்டாலும்,
அவர் குரலே கேட்காமல் கேட்டது
'வருகிறேன்' என்று சொல்ல மாட்டாயா
என்று.
அவன் கூப்பிடுவான் என்று
எதிர்பாரப்பது முட்டாள்தனம் என்று
நினைத்தாள். "சரி நாளை
கிளம்பலாம்.. ரொம்ப நாள் இங்கே
இருந்தால் நன்றாக இருக்காது.."
என்று நினைத்தவள் "அதுவும்
இல்லாமல் எப்போது போனாலும்
அதே மாதிரி தான் அவன்
இருக்கப்போகிறான்.. நம் மேல்
கொஞ்சம் ஆவது அக்கறை
இருந்திருந்தால் இந்த ஆறு நாட்களில்
ஒரு முறையாவது வந்து
பார்த்திருப்பான்". முதலில் நடந்த
சண்டையில் இருந்து நியாபகம் வந்து
மதுவின் மனம் கோபத்திலும்
விரக்தியிலும் சோர்ந்தது.
ஆ.. ஆனால் குழந்தை விஷயம் என்று
ரொம்ப நேரம் யோசித்த மது "சரி
நாளை இரவு அங்கே சாப்பிட்டு
முடித்து எல்லோரும் ஹாலில் அமரும்
போது பொதுவாக சொல்லிக்
கொள்ளலாம்" என்று மது நினைக்க..
மதுவின் ஆழ்மனம் "குழந்தைப்
பிறக்கப் போவதை ஏதோ புதியாய்
உடை வாங்கிய மாதிரி சொல்லப்
போகிறாயா?" என்று கேட்டது.. "ஆமாம்
என் விதி அப்படி" என்று விரக்தியுடன்
வந்து படுத்தாள்.
அடுத்த நாள் மதியம் கார்த்திக் அந்த
கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் விஷயமாக
ஏதோ தனது பி.ஏ வான மூர்த்தி
சாரிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
கார்த்திக் இந்த ஆறு நாட்கள்
ரொம்பவுமே பிஸியாக இருந்தான்.
வீட்டிற்கே தாமதமாகப் பத்து
பதினொன்று மணிக்குத் தான்
வந்தான் வேலை எல்லாம் முடித்து..
ஆனால் அவன் தாமதமாக வந்ததிற்கு
இன்னொரு காரணமும் இருந்தது.
வீட்டிற்கு வந்தால் மதுவின் நியாபகம்
ஆக்கிரமித்தது கார்த்திக்கிற்கு. ஏதோ
தனிமையாக உணர்ந்தான்..
அறைக்குள் நுழைந்து படுத்தாலும்
அவளது தலையணையில் இருந்து
வந்த அவளின் கூந்தலின் வாசமும்
அவனைத் தூங்க விடாமல் செய்தது.
கோபமும் வந்தது.. "எப்போதுடி
வருவாய்?" என்று அவன் மனம்
கேட்டது. அவளிற்கு போன் செய்யவும்
அவனது ஈகோ தடுத்தது. எதையும்
வெளிக்காட்டாமல் ஆபிஸ் சென்று
வந்து கொண்டு இருந்தான்.
தனது இன்டர்காம் அழைக்க
எடுத்தவன் "ஹலோ" என்றான்.
"ஸார் உங்களைப் பார்க்க மிதுனா
என்கின்ற பெண்ணும் அவருடைய
கணவரும் வந்து இருக்கிறார்கள்"
என்றாள் எதிரில் பேசிய அந்தப் பெண்.
ஏற்கனவே ப்ராஜெக்ட் வொர்க் மற்றும்
மதுவின் சிந்தனையில்
இருந்தவனுக்கு மிதுனா என்றதும்
கோபம் தலைக்கு ஏறியது.. "இவளால்
தானே எல்லாம்.. சிவாவின் குடும்பம்
அழுததும்.. மதுவிடன் தனக்கு
பிரச்சினை உண்டானதும்" என்று
நினைத்தவனுக்கு ஆத்திரம் தான்
மிஞ்சியது.
"எனக்கு இப்போது பார்க்க
நேரமில்லை.. கிளம்பச் சொல்லுங்கள்..
ஆனால் மறுபடியும் வர வேண்டாம்
என்று சொல்லிவிடுங்கள்" என்று
பட்டென்று இன்டர்காமில் பதில்
அளித்து வைத்துவிட்டான். ஆனால்
இன்டர்காமில் கார்த்திக்கிடம் பேசியப்
பெண் மிதுனாவின் முகத்தைப்
பார்க்க.. அவளோ பாவமாக
நின்றிருந்தாள்.
"ஸாரி மேம்.. சார் ரொம்ப பிஸி..
அவருக்கு இப்போது நேரிமில்லை.. "
என்று அவள் மிதுனாவிற்கு சொல்லும்
போதே "இல்ல எவ்வளவு நேரம்
ஆனாலும் நாங்கள் வெய்ட் பண்றோம்..
ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் மிதுனா.
மறுபடியும் இன்டர்காம் அழைக்க
எரிச்சலுற்றவன்.. ஆன் செய்து காதில்
வைக்க "ஸார்.." என்று அந்தப் பெண்
இழுத்தாள். "என்ன சொல்லுங்க"
என்றான் அதே எரிச்சலோடு. மிதுனா
சொன்னதை அந்தப் பெண்
கார்த்திக்கிடம் சொல்ல தனது
தாடையைத் தடவியவன் "என்ன
விஷயம்" என்றான் புருவ முடிச்சுடன்.
"ஏதோ பெர்சனல் மேட்டர்
என்கிறார்கள் சார்" என்றாள் அந்த
அறிவிப்புப் பெண் மிதுனாவிடம்
கேட்டு.
"சரி என் தனி அறையில் காத்திருக்கச்
சொல்லுங்க" என்று இன்டர்காமை
அணைத்து விட்டான்.
தன் ப்ராஜெக்ட் பற்றிய விஷயத்தை
ஆலோசித்து விட்டே அவர்கள்
உட்கார்ந்திருந்த அறைக்குச்
சென்றான். கார்த்திக் வருவதைக்
கண்டு இருவரும் எழ, உட்காருங்கள்
என்று விட்டு அவர்களின் எதிரில்
கண்களால் இருவரையும் அளவிட்ட
படியே வந்து அமர்ந்தான்.
மிதுனாவைப் பார்க்கும் போதே
நன்றாகத்தான் இருக்கிறாள் என்று
புரிந்தது.. அந்தப் பையனும்
நல்லவனாகவேத் தெரிந்தான்.
ஆனால் கோபம் குறையாமல் தான்
இருந்தது கார்த்திக்கிற்கு.
"ஏன் மிதுனா இப்படி பண்ணுன?"
என்று நேராக குற்றம் சாட்டும்
பார்வையில் கேட்டான்.
"சாரி அண்ணா" என்றாள் தலையை
குனிந்த படியே.
"சாரி சொன்னால்.. எல்லாம்
சரியாகிவிடுமா மிதுனா? உன்
குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது
தெரியுமா? சிவா... அவனை நான்
இதுநாள் வரை அப்படிச் சோர்ந்து
பார்த்ததே இல்லை மிதுனா.. அப்படி
காதல் என்றால் வீட்டுல
சொல்லலாம்ல.. ஏன்
அவசரப்பட்டீர்கள் இருவரும்?"
என்றான் சற்று கோபமாக.
"இல்லை அண்ணா. அப்பாவிற்கு
தெரிந்துவிட்டது. என்னை தனியாகக்
கூப்பிட்டு எச்சரித்த போது நானும்
எதிர்த்து விட்டேன். அந்த நேரம்
பார்த்து ஒரு பணக்கார வரன் என்று
தரகர் கொடுக்க, அப்பா நாளை
உன்னை பெண் பார்க்க
வருகிறார்கள்.. அவன் தான்
மாப்பிள்ளை என்றுவிட்டார் அண்ணா..
ஜாதி, கவுரவம் பார்த்து என்னை ஒரு
குடிகாரன்.. பொம்பளைப் பொறிக்கித்
தலையில் கட்டி வைக்கப் பார்த்தார்
அந்த மனுஷன்.." என்றவள்
கார்த்திக்கை நேராகப் பார்த்து "நான் அப்போது கூட முடியாது என்று மறுத்த
போது.. இவரை ஏதாவது
பண்ணிவிடுவேன் என்று மிரட்டினார்..
சிவா அண்ணாவிடம் சொல்லலாம்
என்று நினைத்தால்.. அண்ணனை
என் கண்ணில் படதாபடி வேலை அது
இது என்று அலையவிட்டுக் கொண்டு
இருந்தார்.. வீட்டில் இருந்தாலும்
என்னை கண்கானித்துக் கொண்டே
இருந்தார்.. அதான் அவர் வெளியே
சென்ற சமயம் பார்த்து வெளியே
வந்து விட்டேன் அண்ணா" என்று
எல்லாத்தையும் சொல்லி
முடித்தவளின் கண்களில் இருந்து
இரண்டு சொட்டுக் கண்ணீர்
வழிந்தோடியது.
"சார் அதுவும் இல்லாமல் இவள் அப்பா
கவுரவக் கொலை என்றெல்லாம்
இவளை ரொம்பவுமே பயப்படுத்தி
வைத்திருந்தார். அதுதான் கொஞ்ச
நாள் தகவலே சொல்லாமல்.. யார்
கண்ணிலும் படாமல் இருந்தோம்"
என்றவன் "இப்போ கூட மிதுனா அவ
அண்ணனையும் அம்மாவையும்
பார்க்க வேண்டும் என்றாள். அதான்
கூட்டி வந்தேன். நீங்க தான் உங்க
ப்ரண்ட் கிட்ட பேசி ஏற்பாடு
செய்யனும்" என்றான் மிதுனாவின்
கணவன் அவளின் கைகளை
ஆறுதலாகப் பற்றியபடி.
ஒரு நிமிடம் யோசித்த கார்த்திக்
சிவாவிற்கு போன் போட்டான்.
போனை சிவா எடுக்க "சிவா எங்கே
இருக்க?" எனக் கேட்டான்.
சிவா வீட்டிலோ அல்லது அவன்
தந்தையுடன் இருந்தால் சொல்லுவது
ஸேஃப் இல்லை என்று எண்ணினான்
கார்த்திக்.
"நான் ஒரு சின்ன வேலையாக
கோயம்பத்தூர் வந்து கொண்டு
இருக்கிறேன்டா.. ஏன்டா?" என்று
கேட்டான் சிவா.
"அங்கிளுமா?" என்று கார்த்திக் கேட்க
"அவர் வெளியூர் சென்று இருக்கிறார்
டா.. அவர் வேலை ஒன்றைப் பார்க்கத்
தான் நான் கோவை வருவதே..."
என்றவனிடம் "சிவா என் ஆபிஸ் வரை
வர முடியுமா? ஒரு முக்கியமான
விஷயம்" என்று எதிரில் அமர்ந்திருந்த
மிதுனாவையும் மிதுனா கணவரையும்
பார்த்தபடியே நண்பனிடம் கேட்டான்.
"சரிடா பக்கத்தில் வந்து விட்டேன்..
இன்னும் ஒரு இருபது நிமிடங்களில்
வந்து விடுவேன்" என்று போனை
வைத்துவிட்டான் சிவா.
போனை வைத்த கார்த்திக் மூர்த்தி
சாருக்கு போன் செய்து "சார் இரண்டு
ஜூஸை ஆபிஸ் பையனை எடுத்து
வரச்சொல்லுங்க" என்று
சொல்லிவிட்டுப் போனை
வைத்தவனிடம் "ரொம்ப தாங்க்ஸ்
அண்ணா" என்று மிதுனா கரகரத்த
குரலுடன் சொல்ல "எதற்கு
ஜூஸிற்கா" என்று கார்த்திக்
வேண்டுமென்றே கேட்க மிதுனா
சிரித்துவிட்டாள்.
"தேங்க்ஸ் ஸார்... அழுதே இருந்தாள்..
நான் தான் வா, பார்த்து வரலாம்
என்று அழைத்து வந்தேன்" என்று
நன்றி கூறினான் மிதுனாவின்
கணவன். ஜூஸைக் கொண்டு வந்தப்
பையன் உள்ளே வைத்துவிட்டு
சென்றுவிட்டான்.
"ஆமாம் உங்கள் பெயர் என்ன? என்ன
வேலை? என்று கார்த்திக் கேட்க
"என் பெயர் கோகுல்.. நான்
சென்னையில் சாப்ட்வேர்
இன்ஜினியராக இருக்கிறேன்" என்று
சொல்ல... பின் இருவரும் ஏதோ
பேசிக் கொண்டு இருக்க மிதுனா
ஜூஸைக் குடித்தபடியே அவர்களது
பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தாள்.
ஆயிற்று.. மது தன் வீட்டில் இருக்க
ஆரம்பித்து முழுதாக ஆறு நாட்கள்
ஆயிற்று.. கிட்டத்தட்ட பித்துப்
பிடித்தவள் போல வலம் வந்து
கொண்டு இருந்தாள்.
குடும்பத்தினரிடம் மட்டும் எதையும்
காட்டாமல் இன்முகத்துடன் இருக்க முயற்சித்தாள். ஆனால் அதிலும்
முடியாமல் தனித்து இருக்க...
சாப்பிடுவதற்கு மட்டுமே கீழே வர
ஆரம்பித்தாள். சித்தப்பாவுடன்
ஹாஸ்பிடல் சென்று வந்து கொண்டு
இருந்தவளுக்கு கொஞ்சம் கூட
கணவனின் நினைப்புக்
குறையவில்லை.
கார்த்திக்கும் மதுவும் போன் போட்டுக்
கூடப் பேசிக் கொள்ளவில்லை.
பார்க்கவும் வரவில்லை "ஏன்மா
மாப்பிள்ளை வரவே இல்லை" என்று
ராதா கேட்க "அவர் ஒரு கவர்ன்மெண்ட்
ப்ராஜெக்ட்டில் பிசியாக இருக்கிறார்
சித்தி... வேலை ரொம்பவே ஜாஸ்தி..
நான் தான் வரவேண்டாம்-ன்னு
சொல்லிட்டேன்.. இப்போது தான்
பேசினேன்" என்று மது சொல்ல,
தாத்தாவின் படத்திற்கு விளக்கு
ஏற்றிக் கொண்டு இருந்தப் பாட்டி
மதுவைத் திரும்பி 'அப்படியா' என்பது
போல முறைப்பும் நக்கலுமாக ஒரு
பார்வைப் பார்க்க அவரைப்
பார்க்காமல் கண்களைச்
சுழலவிட்டாள் மது.
"மது இங்கே பாரேன் பக்கத்து வீட்டு
பத்மா ஆன்ட்டி உனக்கு பிடிக்கும்
என்று அவர்கள் தோட்டத்தில்
விளைந்த பப்பாளி பழம் தந்து
இருக்கிறார்கள்' என்று சொல்லிக்
கொண்டே உமா கையில் ஒரு
பப்பாளியுடன் உள்ளே வந்தார்.
மதுவிற்கு ஒரு நிமிடம் கை கால்
எல்லாம் ஆடிவிட்டது. இதைச்
சாப்பிட்டால்... என்று நினைத்தவளால்
அதற்கு மேல் எதையும் நினைக்க
முடியவில்லை.
"இல்லை அம்மா.. எனக்கு வேண்டாம்..
இதைச் சாப்பிட்டால் எனக்கு வயிறு
சரியில்லாமல் போய்விடுகிறது" என்று
மது அடித்துவிட "என்னது..." என்று
மகளை விசித்தரமாகப் பார்த்தார் உமா.
"ஏன்டி பப்பாளி சாப்பிட்டால்
செரிமானத்திற்கு நல்லது..
ஸ்கின்னிற்கு நல்லது என்று
யாருக்கும் வைக்காமல் சாப்பிடுவாய்..
இப்போது என்னவென்றால்
வேண்டாம் என்கிறாய்" என்று அந்தப்
பப்பாளியை வலது கையை மடக்கி
உள்ளங்கையில் வைத்தவாரு
பேசினார் உமா.
மதுவோ "இப்போது என்ன ஆயிற்று..
இதோ உன் அருமை நெட்டக்கொக்கு
வந்து விட்டது பார்.. அதற்கே தா.."
என்று உள்ளே வந்த வருணை
வம்பிழுத்தபடி பேசி பேச்சையும்
மாற்றிவிட்டாள் மது.
"ஏய் குட்டக் கத்திரிக்காய்.. நீ
குட்டையாக இருந்து கொண்டு
என்னைச் சொல்கிறாயா.. உன்
ரிஷப்சன் அன்று மாமா பக்கத்தில்
ஹை ஹீல்ஸ் அணிந்து நீ நின்றது
எல்லோருக்கும் தெரியும் சரியா"
என்று ஷோபாவின் விளிம்பில்
அமர்ந்தவன் தனது தமக்கைக்
கழுத்தைத் தன் இரு கரத்தால் சுற்றி,
அவளைப் பிடித்து அப்படியே
சுற்றினான். "டேய் எருமை.. தலை
சுத்துகிறது விடுடா" என்று மது
தம்பியின் கையை பிடித்துக் கடிக்கச்
சென்றாள். கையை சட்டென்று எடுத்து
அவள் பற்களிடம் இருந்து
தப்பித்தவன் "ஏய்.. நீ மாமியார்
வீட்டிற்குச் சென்று அமைதியாகி
விட்டாய் என்று பார்த்தால்... நீ
இன்னும் அதைவிட அதிகமாக வம்பு
செய்ய ஆரம்பித்து விட்டாய்" என்று
வருண் மதுவைக் கேலி செய்தான்..
சட்டென்று "வரவர உன் சேட்டை
அதிகமாகி விட்டது டி" என்று ஒருநாள்
கார்த்திக்கை வேலை செய்யவிடாமல்
இம்சித்து அவன் அதற்கு
பனிஷ்மென்டாய் தந்த முத்தமும்
மொத்தமுமாக நினைவு வந்தது
மதுவிற்கு. தலையைச் சிலுப்பி
நிகழ்காலத்திற்கு வந்தவள் சாப்பிட
உட்கார்ந்தாள்.
சாப்பிட்டு விட்டுத் தன் அறைக்கு
வந்தவள் தன் அறையில் இருந்த
பழனி முருகன் படம் முன்பு நின்றாள்.
சில நிமிடங்கள் கடவுளை
உணர்ச்சியற்று நோக்கியவள் கந்த
சஷ்டி கவசத்தை உச்சரிக்க
ஆரம்பித்தாள். ஏனோ அதைச்
சொன்னால் ஒரு தைரியம் நம்பிக்கை
வருவது போல இருக்கும் மதுவிற்கு.
லண்டன் சென்ற பிறகு கூட மது
பழசை நினைத்து மற்றும்
கார்த்திக்கின் நினைவுகளில்
வருந்தநேரிடும் போது எல்லாம், கந்த
சஷ்டி கவசத்தை எடுத்து உட்கார்ந்து
விடுவாள்.
கார்த்திக்கைப் பார்க்க வேண்டும்
என்பது போல இருந்தது. பேசாமல்
நாளை அங்கு சென்று விடலாமா
என்று யோசித்தால் மது. ஜானகியும்
மாலை போன் பண்ணிப் பேசியது
நினைவு வந்தது மதுவிற்கு.. எப்போது
வருகிறாய் என்று கேட்காவிட்டாலும்,
அவர் குரலே கேட்காமல் கேட்டது
'வருகிறேன்' என்று சொல்ல மாட்டாயா
என்று.
அவன் கூப்பிடுவான் என்று
எதிர்பாரப்பது முட்டாள்தனம் என்று
நினைத்தாள். "சரி நாளை
கிளம்பலாம்.. ரொம்ப நாள் இங்கே
இருந்தால் நன்றாக இருக்காது.."
என்று நினைத்தவள் "அதுவும்
இல்லாமல் எப்போது போனாலும்
அதே மாதிரி தான் அவன்
இருக்கப்போகிறான்.. நம் மேல்
கொஞ்சம் ஆவது அக்கறை
இருந்திருந்தால் இந்த ஆறு நாட்களில்
ஒரு முறையாவது வந்து
பார்த்திருப்பான்". முதலில் நடந்த
சண்டையில் இருந்து நியாபகம் வந்து
மதுவின் மனம் கோபத்திலும்
விரக்தியிலும் சோர்ந்தது.
ஆ.. ஆனால் குழந்தை விஷயம் என்று
ரொம்ப நேரம் யோசித்த மது "சரி
நாளை இரவு அங்கே சாப்பிட்டு
முடித்து எல்லோரும் ஹாலில் அமரும்
போது பொதுவாக சொல்லிக்
கொள்ளலாம்" என்று மது நினைக்க..
மதுவின் ஆழ்மனம் "குழந்தைப்
பிறக்கப் போவதை ஏதோ புதியாய்
உடை வாங்கிய மாதிரி சொல்லப்
போகிறாயா?" என்று கேட்டது.. "ஆமாம்
என் விதி அப்படி" என்று விரக்தியுடன்
வந்து படுத்தாள்.
அடுத்த நாள் மதியம் கார்த்திக் அந்த
கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் விஷயமாக
ஏதோ தனது பி.ஏ வான மூர்த்தி
சாரிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
கார்த்திக் இந்த ஆறு நாட்கள்
ரொம்பவுமே பிஸியாக இருந்தான்.
வீட்டிற்கே தாமதமாகப் பத்து
பதினொன்று மணிக்குத் தான்
வந்தான் வேலை எல்லாம் முடித்து..
ஆனால் அவன் தாமதமாக வந்ததிற்கு
இன்னொரு காரணமும் இருந்தது.
வீட்டிற்கு வந்தால் மதுவின் நியாபகம்
ஆக்கிரமித்தது கார்த்திக்கிற்கு. ஏதோ
தனிமையாக உணர்ந்தான்..
அறைக்குள் நுழைந்து படுத்தாலும்
அவளது தலையணையில் இருந்து
வந்த அவளின் கூந்தலின் வாசமும்
அவனைத் தூங்க விடாமல் செய்தது.
கோபமும் வந்தது.. "எப்போதுடி
வருவாய்?" என்று அவன் மனம்
கேட்டது. அவளிற்கு போன் செய்யவும்
அவனது ஈகோ தடுத்தது. எதையும்
வெளிக்காட்டாமல் ஆபிஸ் சென்று
வந்து கொண்டு இருந்தான்.
தனது இன்டர்காம் அழைக்க
எடுத்தவன் "ஹலோ" என்றான்.
"ஸார் உங்களைப் பார்க்க மிதுனா
என்கின்ற பெண்ணும் அவருடைய
கணவரும் வந்து இருக்கிறார்கள்"
என்றாள் எதிரில் பேசிய அந்தப் பெண்.
ஏற்கனவே ப்ராஜெக்ட் வொர்க் மற்றும்
மதுவின் சிந்தனையில்
இருந்தவனுக்கு மிதுனா என்றதும்
கோபம் தலைக்கு ஏறியது.. "இவளால்
தானே எல்லாம்.. சிவாவின் குடும்பம்
அழுததும்.. மதுவிடன் தனக்கு
பிரச்சினை உண்டானதும்" என்று
நினைத்தவனுக்கு ஆத்திரம் தான்
மிஞ்சியது.
"எனக்கு இப்போது பார்க்க
நேரமில்லை.. கிளம்பச் சொல்லுங்கள்..
ஆனால் மறுபடியும் வர வேண்டாம்
என்று சொல்லிவிடுங்கள்" என்று
பட்டென்று இன்டர்காமில் பதில்
அளித்து வைத்துவிட்டான். ஆனால்
இன்டர்காமில் கார்த்திக்கிடம் பேசியப்
பெண் மிதுனாவின் முகத்தைப்
பார்க்க.. அவளோ பாவமாக
நின்றிருந்தாள்.
"ஸாரி மேம்.. சார் ரொம்ப பிஸி..
அவருக்கு இப்போது நேரிமில்லை.. "
என்று அவள் மிதுனாவிற்கு சொல்லும்
போதே "இல்ல எவ்வளவு நேரம்
ஆனாலும் நாங்கள் வெய்ட் பண்றோம்..
ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் மிதுனா.
மறுபடியும் இன்டர்காம் அழைக்க
எரிச்சலுற்றவன்.. ஆன் செய்து காதில்
வைக்க "ஸார்.." என்று அந்தப் பெண்
இழுத்தாள். "என்ன சொல்லுங்க"
என்றான் அதே எரிச்சலோடு. மிதுனா
சொன்னதை அந்தப் பெண்
கார்த்திக்கிடம் சொல்ல தனது
தாடையைத் தடவியவன் "என்ன
விஷயம்" என்றான் புருவ முடிச்சுடன்.
"ஏதோ பெர்சனல் மேட்டர்
என்கிறார்கள் சார்" என்றாள் அந்த
அறிவிப்புப் பெண் மிதுனாவிடம்
கேட்டு.
"சரி என் தனி அறையில் காத்திருக்கச்
சொல்லுங்க" என்று இன்டர்காமை
அணைத்து விட்டான்.
தன் ப்ராஜெக்ட் பற்றிய விஷயத்தை
ஆலோசித்து விட்டே அவர்கள்
உட்கார்ந்திருந்த அறைக்குச்
சென்றான். கார்த்திக் வருவதைக்
கண்டு இருவரும் எழ, உட்காருங்கள்
என்று விட்டு அவர்களின் எதிரில்
கண்களால் இருவரையும் அளவிட்ட
படியே வந்து அமர்ந்தான்.
மிதுனாவைப் பார்க்கும் போதே
நன்றாகத்தான் இருக்கிறாள் என்று
புரிந்தது.. அந்தப் பையனும்
நல்லவனாகவேத் தெரிந்தான்.
ஆனால் கோபம் குறையாமல் தான்
இருந்தது கார்த்திக்கிற்கு.
"ஏன் மிதுனா இப்படி பண்ணுன?"
என்று நேராக குற்றம் சாட்டும்
பார்வையில் கேட்டான்.
"சாரி அண்ணா" என்றாள் தலையை
குனிந்த படியே.
"சாரி சொன்னால்.. எல்லாம்
சரியாகிவிடுமா மிதுனா? உன்
குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது
தெரியுமா? சிவா... அவனை நான்
இதுநாள் வரை அப்படிச் சோர்ந்து
பார்த்ததே இல்லை மிதுனா.. அப்படி
காதல் என்றால் வீட்டுல
சொல்லலாம்ல.. ஏன்
அவசரப்பட்டீர்கள் இருவரும்?"
என்றான் சற்று கோபமாக.
"இல்லை அண்ணா. அப்பாவிற்கு
தெரிந்துவிட்டது. என்னை தனியாகக்
கூப்பிட்டு எச்சரித்த போது நானும்
எதிர்த்து விட்டேன். அந்த நேரம்
பார்த்து ஒரு பணக்கார வரன் என்று
தரகர் கொடுக்க, அப்பா நாளை
உன்னை பெண் பார்க்க
வருகிறார்கள்.. அவன் தான்
மாப்பிள்ளை என்றுவிட்டார் அண்ணா..
ஜாதி, கவுரவம் பார்த்து என்னை ஒரு
குடிகாரன்.. பொம்பளைப் பொறிக்கித்
தலையில் கட்டி வைக்கப் பார்த்தார்
அந்த மனுஷன்.." என்றவள்
கார்த்திக்கை நேராகப் பார்த்து "நான் அப்போது கூட முடியாது என்று மறுத்த
போது.. இவரை ஏதாவது
பண்ணிவிடுவேன் என்று மிரட்டினார்..
சிவா அண்ணாவிடம் சொல்லலாம்
என்று நினைத்தால்.. அண்ணனை
என் கண்ணில் படதாபடி வேலை அது
இது என்று அலையவிட்டுக் கொண்டு
இருந்தார்.. வீட்டில் இருந்தாலும்
என்னை கண்கானித்துக் கொண்டே
இருந்தார்.. அதான் அவர் வெளியே
சென்ற சமயம் பார்த்து வெளியே
வந்து விட்டேன் அண்ணா" என்று
எல்லாத்தையும் சொல்லி
முடித்தவளின் கண்களில் இருந்து
இரண்டு சொட்டுக் கண்ணீர்
வழிந்தோடியது.
"சார் அதுவும் இல்லாமல் இவள் அப்பா
கவுரவக் கொலை என்றெல்லாம்
இவளை ரொம்பவுமே பயப்படுத்தி
வைத்திருந்தார். அதுதான் கொஞ்ச
நாள் தகவலே சொல்லாமல்.. யார்
கண்ணிலும் படாமல் இருந்தோம்"
என்றவன் "இப்போ கூட மிதுனா அவ
அண்ணனையும் அம்மாவையும்
பார்க்க வேண்டும் என்றாள். அதான்
கூட்டி வந்தேன். நீங்க தான் உங்க
ப்ரண்ட் கிட்ட பேசி ஏற்பாடு
செய்யனும்" என்றான் மிதுனாவின்
கணவன் அவளின் கைகளை
ஆறுதலாகப் பற்றியபடி.
ஒரு நிமிடம் யோசித்த கார்த்திக்
சிவாவிற்கு போன் போட்டான்.
போனை சிவா எடுக்க "சிவா எங்கே
இருக்க?" எனக் கேட்டான்.
சிவா வீட்டிலோ அல்லது அவன்
தந்தையுடன் இருந்தால் சொல்லுவது
ஸேஃப் இல்லை என்று எண்ணினான்
கார்த்திக்.
"நான் ஒரு சின்ன வேலையாக
கோயம்பத்தூர் வந்து கொண்டு
இருக்கிறேன்டா.. ஏன்டா?" என்று
கேட்டான் சிவா.
"அங்கிளுமா?" என்று கார்த்திக் கேட்க
"அவர் வெளியூர் சென்று இருக்கிறார்
டா.. அவர் வேலை ஒன்றைப் பார்க்கத்
தான் நான் கோவை வருவதே..."
என்றவனிடம் "சிவா என் ஆபிஸ் வரை
வர முடியுமா? ஒரு முக்கியமான
விஷயம்" என்று எதிரில் அமர்ந்திருந்த
மிதுனாவையும் மிதுனா கணவரையும்
பார்த்தபடியே நண்பனிடம் கேட்டான்.
"சரிடா பக்கத்தில் வந்து விட்டேன்..
இன்னும் ஒரு இருபது நிமிடங்களில்
வந்து விடுவேன்" என்று போனை
வைத்துவிட்டான் சிவா.
போனை வைத்த கார்த்திக் மூர்த்தி
சாருக்கு போன் செய்து "சார் இரண்டு
ஜூஸை ஆபிஸ் பையனை எடுத்து
வரச்சொல்லுங்க" என்று
சொல்லிவிட்டுப் போனை
வைத்தவனிடம் "ரொம்ப தாங்க்ஸ்
அண்ணா" என்று மிதுனா கரகரத்த
குரலுடன் சொல்ல "எதற்கு
ஜூஸிற்கா" என்று கார்த்திக்
வேண்டுமென்றே கேட்க மிதுனா
சிரித்துவிட்டாள்.
"தேங்க்ஸ் ஸார்... அழுதே இருந்தாள்..
நான் தான் வா, பார்த்து வரலாம்
என்று அழைத்து வந்தேன்" என்று
நன்றி கூறினான் மிதுனாவின்
கணவன். ஜூஸைக் கொண்டு வந்தப்
பையன் உள்ளே வைத்துவிட்டு
சென்றுவிட்டான்.
"ஆமாம் உங்கள் பெயர் என்ன? என்ன
வேலை? என்று கார்த்திக் கேட்க
"என் பெயர் கோகுல்.. நான்
சென்னையில் சாப்ட்வேர்
இன்ஜினியராக இருக்கிறேன்" என்று
சொல்ல... பின் இருவரும் ஏதோ
பேசிக் கொண்டு இருக்க மிதுனா
ஜூஸைக் குடித்தபடியே அவர்களது
பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தாள்.