அருமையான பதிவு சவீதா
.அர்ஜூன்,அருள் ஓடிப்போனது போல செட் பண்ணிருக்கேன் என சொன்னதை கேட்டு பதட்டத்தில் இருந்தவ,ருத்ரன் வரவும் கோபமா பேசுனதை ஏத்துக்கலாம்,, அதுக்காக அர்ஜூன் வர்றதுக்குள்ள கிளம்பாம,லூசு போல சண்டை போட்டுட்டு நிக்கிறா
.
இண்டர்நேஷனல் ப்ராஜெக்ட் செய்ய எத்தனையோ பேர் கலந்துக்குவாங்க அத்தனை பேரையுமா கடத்துவான்
.பேர் பிரச்சனை, அருளை கல்யாணம் செய்தது அதனால தான் அருளை கடத்துனான்னு நெனச்சா,ஜாதி வெறி பிடிச்சதால இப்படியெல்லாம் நடந்துக்கறானா
.
நம்ம ஊரை விட்டு டெல்லியில் படிக்க அனுப்புனாலும்,மகன் மனசுல ஜாதிய பதிய வச்சிருக்கானே அர்ஜூன் அப்பா மனுஷனா அவன்
.ஒருத்தன் ஊரை விட்டு வந்து கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறுனா அதை பொறுக்க முடியாம குறுக்கு வழியில போறானே என்ன ஜென்மமோ
.
உனக்கு வேண்டியது இந்த ப்ராஜெக்ட்னா ஒதுங்கிக்கறேன்,ஆனா ஒவ்வொரு முறையும் அப்படி இருக்க முடியாது என ருத்ரா சரியா சொன்னான்
.ருத்ரா ஒதுங்கிக்கறதா சொன்னாலும்,இவன் விட்டு கொடுத்தாதை ஏத்துக்கனுமான்னு அதுக்கும் வீம்பு புடிக்கறான் முட்டாள்
.
நல்லவேளை அன்னபூரணி எப்பனாலும் குழந்தை பிறக்கலாம்னு சொன்னதை கேட்டு அருளை கூப்பிட வந்தான்.பனிக்குடம் உடஞ்ச நிலையில் ஹாஸ்பிடல் போற வரைக்கும் வலியை தாங்குவாளா,குழந்தை நல்லபடியாக பிறந்ததா
.அருளின் வேதனையை காணும் அர்ஜூன் மனம் திருந்துவானா
.