PAPPU PAPPU
Well-Known Member
தனது வீட்டிற்குள் நுழைந்த பூஜா முன்னே அமர்ந்திருந்த தனது அப்பத்தாவை கண்டுகொள்ளாமல் தன் அறையை நோக்கி செல்ல முனைய அவரோ பேத்தி தன்னை கண்டு கொள்ளாமல் செல்லும் கடுப்பில் திட்ட ஆரம்பித்தார் “அடியே இதுதான் நீ ஸ்கூல் விட்டு வர நேரமா” என்று கேட்க அவளோ “இங்க பாரு கிழவி ஏதோ எங்க அப்பாவைப் பெற்ற ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன நா சும்மா விடறேன் இல்லை அவ்ளோதான் சொல்லிட்டேன்.என்கிட்ட சும்மா வம்பு இழுத்துக் கொண்டு இருக்காத” என்று அவரிடம் கோபமாக கத்தினாள் என்றாள் அவளை ஒரு பொருட்டாக கூட மதியாத அப்பத்தவோ அலட்டி கொள்ளாமல் “ உன் அப்பனை நான்தான் பெற்றேன் என்று தெரியுது இல்ல அதுக்கான மரியாதையை என்னைக்காவது நீ கொடுத்து இருக்கியா” என்று திரும்ப கேட்டார். அதற்கு அவளோ “நீ மரியாதை கொடுக்கிற மாதிரி என்னைக்காவது நடந்து இருக்கியா” என்று அவரையே திரும்பக் கேட்டாள்.
பேத்தியின் பேச்சை கேட்டு முகவாயை தோள்பட்டையில் இடித்து நொடித்து கொண்டவர் "அம்மணி மரியாதை தரணும்னா நான் எப்படி நடந்துக்கணும்னு சொன்னீங்கன்னா பெரிய மனுஷி சொல்றத கேட்டு நானும் அப்படியே நடந்துப்பேன்” என்று அவர் நக்கலாக கூறினார்.
பேத்தியின் பேச்சை கேட்டு முகவாயை தோள்பட்டையில் இடித்து நொடித்து கொண்டவர் "அம்மணி மரியாதை தரணும்னா நான் எப்படி நடந்துக்கணும்னு சொன்னீங்கன்னா பெரிய மனுஷி சொல்றத கேட்டு நானும் அப்படியே நடந்துப்பேன்” என்று அவர் நக்கலாக கூறினார்.