Advertisement

     சங்கவியை இழுத்து சென்ற அந்த உருவத்தை கண்டு அவள் அச்சத்தில் விழி விரித்தாள். பார்ட்டிக்கு வந்திருந்த ஆட்களில் ஒருவன் தான் அவன். வந்ததில் இருந்து சங்கவி தனியே அமர்ந்திருந்ததை பார்த்தவன் இப்போது தனியே இழுத்து வந்திருந்தான்.
     “பேபி யூ லுக் கார்ஜியஸ். கம் வித் மி” என்று அவன் குலறலிலே புரிந்தது அவன் நன்றாக குடித்திருப்பது. கத்தி யாரையும் அழைக்க முடியாதவாறு அவள் வாயையும் கை வைத்து மூடி இருந்தான் அந்த கயவன்.
     சங்கவிக்கு பயத்தில் கை கால் எல்லாம் நடுங்கியது. ஹர்ஷா வீட்டின் முன்புற தோட்டத்தில் தான் விழா நடந்துக் கொண்டிருந்தது. சங்கவியை இவன் பின்பக்க தோட்டத்திற்கு இழுத்து வந்திருந்தான்.
     எனவே பயத்தில் கண்களில் இருந்து தண்ணீர் நிற்காமல் வந்தது. ‘பிளீஸ் விட்டிரு’ என கண்களால் இரைஞ்சியும் அது போதையில் இருந்தவனுக்கு புரியவில்லை.
     தப்பிக்க முயல கை காலை வைத்து அவனை தள்ள தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து பார்த்தாள் கவி. ஆனால் அவ்வளவு பெரிதாக இருந்த ஆளை அவளால் தள்ள முடியவில்லை.
     சங்கவியை ஏளன சிரிப்புடன் பார்த்த அந்த ஆள் “என்ன பேபி என்னை அடிக்க உன் கை பரபரன்னு இருக்குமே. ஆனாலும் உன்னால இப்ப எதுவும் செய்ய முடியாது.
     அன்னைக்கு பார்ட்டில வச்சு ஒரே ஒரு கிஸ் தானேடி கேட்டேன். அதுக்கு என் கன்னத்தில அரைஞ்சல. இப்போ நான் உன்னை கிஸ் பண்ண போறேன். என்னடி செய்யப்போற” என வக்கிரமாக கேட்டான்.
     அவன் விக்ரமிற்கு தொழில் முறை தொடர்பு உள்ளவன். ஒரு முறை ஒரு பார்ட்டிக்கு சங்கவியையும் விக்ரம் அழைத்து சென்றிருக்க, இவன் தவறாக நடக்க எண்ணினான்.
     எனவே சங்கவி சிறிதும் யோசிக்காது அனைவரின் முன்னும் அறைந்து விட்டாள். அதற்காக அவள் மீது கோபத்தில் இருந்தவன் இன்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டான்.
     அவன் கோரமாக சிரித்துக் கொண்டு அவளை முத்தமிட நெருங்க ஒரு கரம் அவனை பிடித்து கீழே தள்ளி, சங்கவியை தன்னோடு அணைத்துக் கொண்டது.
     அந்த கரத்தின் பாதுகாப்பு அணைப்பு மற்றும் அந்த நபரின் வாசத்தை வைத்தே உணர்ந்து கொண்டாள் வந்தது அவளின் ஆருயிர் காதலன் விக்ரம் என.
     அவனை உணர்ந்த நொடி “விக்ரம் சார்!” என்ற கதறலுடன் அவனை இறுக அணைத்து கொண்டாள். அவளின் அணைப்பில் அவளின் நடுக்கத்தை அறிந்துக் கொண்டவனின் கோபம் எவரெஸ்டை எட்டியது.
     “ஒன்னும் இல்லடா கவிமா. ஒன்னும் இல்ல. நான் வந்துட்டேன்ல பயப்படாத” என்று சமாதானம் செய்தவன், கோபத்தோடு அந்த ஆளை நெருங்கினான்.
     அவன் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கி “ஏன்டா எங்க வந்து யாரு மேலடா கைய வைக்கிற பொறுக்கி. என் கவியையே தொடுறியா” என்று கேட்டபடியே வாயிலே ஒரு குத்து விட்டான். அவன் விட்ட குத்தில் அந்த ஆள் பத்தடி தள்ளி கீழே சென்று விழுந்தான்.
     கீழே விழுந்தவனை எழுந்திருக்க விடாது தாறுமாறாக அடி பின்னி எடுத்துவிட்டான். கவி இன்னும் பயத்தில் அழுதபடியே இருந்தாள். இவர்கள் சத்தம் கேட்டு வீட்டினர் எல்லோரும் வீட்டின் பின்னர் வந்துவிட்டனர்.
     விக்ரம் யாரோ ஒரு ஆளை வெறித்தனமாக அடிப்பதும், அருகில் அவன் பி.ஏ சங்கவி அழுது கொண்டிருப்பதையும் கண்டவர்கள் என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகித்தனர்.
     அழுதுக் கொண்டிருந்த கவியின் அருகே சென்ற அபி “என்ன சிஸ்டா ஏன் அழற? என்னாச்சு?” என்று கலக்காமாக கேட்டான். சங்கவியும் அழுதுக் கொண்டே நடந்ததை விவரித்தாள்.
     கேட்ட அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது. அதுவும் தங்கள் வீட்டு விழாவிற்கு வந்த பெண்ணிடம் இப்படி ஒருவன் தவறாக நடக்க முயன்றதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
     இன்னும் வெறியோடு அடித்துக் கொண்டிருந்த விக்ரமை கஷ்டப்பட்டு இழுத்த ஹர்ஷா “விக்ரம் போதும் விடு செத்துற போறான். நாம போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிடலாம்‌.
     நீ அடிச்சு அவனுக்கு ஏதாவது ஆகிருச்சுனா உனக்கு தான் பிராப்ளம். சோ கொஞ்சம் உன் கோவத்தை கண்ட்ரோல் பண்ணு” என்று சமாதானம் செய்தான்.
     சொன்னது போல் ஹர்ஷா போலீஸை வரவைத்து அவனை பிடித்து கொடுத்தான். இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் முடிந்து சூழ்நிலை சரியாக இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.
     இப்போது தான் அருணாசலம் குடும்பத்தார் சங்கவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்து அமர்ந்தனர்‌. ஹர்ஷா அவனை அடிக்காமல் விலக்கிய பின் அமைதியாக இருந்த விக்ரம் வீட்டின் உள்ளே வந்தவுடன் என்ன நினைத்தானே வேகமாக சங்கவியின் அருகில் வந்து அவள் கன்னத்தில் பளாரென அறைந்து விட்டான்.
     வீட்டினர் அனைவருக்கும் ஒரு நிமிடம் திக்கென்றது. “ஏய் அறிவில்லையாடி உனக்கு‌. அவன் கைய புடிச்சி இழுத்துட்டு போற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த.
     செவுள்லையே நாளு அறை விட வேண்டியது தானே. அவன் அந்த அளவு மோசமா நடந்துக்க வரான், அழுதுட்டு நிக்கிற. வாய் கிழிய என்கிட்ட வம்படிக்க தெரியுதுல்ல, அந்த வாய் இப்ப எங்க ஊர் சுத்த போச்சா சொல்லுடி” என இருந்த மொத்த கோபத்திலும் சங்கவியை திட்டி தீர்த்தான் விக்ரம்.
     வீட்டினர் அனைவருக்கும் விக்ரம் சங்கவியை அடித்தது அதிர்ச்சி என்றால், அவன் பேசியது பேரதிர்ச்சியாக இருந்தது. விக்ரமின் கோபம் எல்லாம் அலுவலகத்தோடு நின்றுவிடும்.
     வீட்டில் எப்போதும் சிரித்துக் கொண்டு, மற்றவர்களை வம்பிழுத்துக் கொண்டு என சுற்றுவது தான் விக்ரமின் இயல்பு. எனவே அவனின் கோபத்தை அனைவரும் பார்த்து அசந்து தான் விட்டனர்.
     பேசியபடி மறுபடியும் சங்கவியை அடிக்க சென்ற விக்ரமை தடுத்த ஹர்ஷா “போதும் விடுடா. அந்த பொண்ணு என்ன பண்ணும். பாவம்டா ஏற்கனவே பயத்துல இருக்கா. நீ வேற ஏன்டா உன் பங்குக்கு டார்ச்சர் பண்ற” என கடிந்து கொண்டான்.
     இப்போது அதிர்வில் இருந்து மீண்டிருந்த அபி சங்கவியை நோக்கி “ஏன் சிஸ்டா அங்க என்ன தான் நடந்தது. நான் அவ்ளோ நேரம் உன்கிட்ட தானே பேசிட்டு இருந்தேன்.
     அதுக்குள்ள நீ எப்படி அங்க மாட்டின?” என்று கவியிடம் கேட்டான். ஏனெனில் அங்கு வைத்து அவன் தவறாக நடக்க பார்த்தான் என்று மட்டுமே கூறியிருந்தாள் சங்கவி. அதனால் தற்போது அபி என்ன நடந்தது என கூற பணித்தான்.
     “நீங்க போன அப்புறம் சும்மா சுத்தி பார்த்துட்டு இருந்தேன் ண்ணா. அப்போ தான் அவன் என் வாயை பொத்து கையை புடிச்சு இழுத்துட்டு போய்ட்டான்.
     என்னால கத்தவும் முடியலை” என்று ஆரம்பித்து அதன் பின் நடந்தது, அவன் அவ்வாறு நடக்க காரணமான நிகழ்வு எல்லாவற்றையும் கூறினாள் சங்கவி.
     அவள் பேசி முடித்தவுடன் சீறி எழுந்த விக்ரம் “அப்போ அன்னைக்கு ஹோட்டல்ல வச்சே உன்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண பார்த்திருக்கான்ல்ல. என்கிட்ட ஏன்டி அதை மறைச்ச.
     அப்பவே சொல்லிருந்தா அங்கையே அவனை தூக்கி போட்டு நாளு மிதிச்சிருப்பேன்ல. எதெதுக்கு சண்டை போடனுமோ அதையெல்லாம் விட்றது. மத்த நேரம் பாரு ரோடுனு கூட பாக்காம வம்பு பண்றது” என்று மேலும் மேலும் திட்டினான்.
     அவன் திட்ட திட்ட எதுவும் பேசாது தலையை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள் சங்கவி‌. விக்ரம் கூறியதிலும் ஒரு உண்மை உண்டு தானே. தவறு நடந்த பொழுதே அதை அவனிடம் கூறி இருந்தால், இன்று இவ்வளவு தூரம் அவன் அவளிடம் மோசமாக நடந்து கொள்ள விட்டிருப்பானா விக்ரம்.
     அதனாலே கவியும் அமைதி காத்தாள்‌. “சரி ரொம்ப திட்டாத அத்தான். என் சிஸ்டா பாவம். அவ என்ன பண்ணுவா விடுடா. இனிமே நாம பத்திரமா பாத்துக்கலாம்” என்று சமாதானம் செய்தான்.
     அதன்பின்னரே விக்ரம் சற்று தனிந்தான்‌. ஆனால் அவன் செய்கையின் மூலம் அவன் குடும்பத்தினர் அனைவருக்கும் தன் காதலை வெட்ட வெளிச்சமாக்கி விட்டான் விக்ரம்‌.
     சங்கவியும் அவன் பேச்சை கேட்ட விதத்தில் அவளுக்கும் விக்ரமை பிடிக்கும் என அனைவரும் ஊகித்தனர். “ஹப்பாடி உன் அண்ணன் ஒருவழியா கமிட் ஆகிட்டான்டி” என்று அம்மு காதில் மகிழ்வுடன் கிசுகிசுத்தான்.
     அதில் அவனை கோபமாக முறைத்த அம்மு “அத்தான் இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீங்க என்ன பேசுறீங்க?” என்று கடுகடுத்தாள்.
     “யூ சீ அம்முமா. உன் அண்ணன் கல்யாணம் நடந்தா தான் நம்ம ரூட் கிளியர் ஆகும். இப்போ தான் உன் அண்ணனுக்கு பல்ப் எரிஞ்சிருக்கு.
     எப்படியும் அவன் கல்யாணம் அடுத்த வருடம் பண்ணிட்டான்னு வச்சிக்கோ, அடுத்து நாம தான்” என்று கண்ணடித்து கூற அம்மு தலையில் அடித்து கொண்டாள். அவனுக்கு அவன் கவலை.
     “அனு சங்கவிய கெஸ்ட் ரூம்க்கு கூட்டிட்டு போமா. அந்த பொண்ணு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்‌. காலைல அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுக்கலாம்” என்ற ஹர்ஷா வீட்டில் இருந்த மற்ற நபர்களையும் படுக்க அனுப்பி வைத்தான்.
     கடைசியாக விக்ரமிடம் வந்தவன் “என்ன மச்சான் கடைசியா அந்த பொண்ணை லவ் பண்றதை கண்டு பிடிச்சிட்ட போல. ஆனாலும் நீ விட்டத்த பாத்து புலம்பரத பாத்து நீ இப்போ தேற மாட்டேன்னு நினைச்சேன்டா. பரவாயில்லை ஒருவழியா தேறிட்ட” என்று சிரிப்புடன் சொல்ல
     “உன்னால மட்டும் எப்படிடா எங்க மூஞ்சிய பார்த்தே மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியுது” என்று அதிசயப்பட்ட விக்ரம் “உண்மை தான் மச்சான். அவ தான் என் லைப்னு டிசைட் பண்ணிட்டேன்டா” என்றான் புன்னகையுடன்.
     “ஆனா உன் தம்பி இருக்கானே சரியான கேடிடா. நான் கவிய லவ் பண்றத புரிஞ்சிக்க எவ்ளோ வேலை பாத்திருக்கான். அவன் இங்க பார்ட்டில அவ கூட பேசறத கேட்டேன்டா.
     எனக்கு செம ஷாக். என்ன வெறுப்பேத்த ரெண்டும் கூட்டணி போட்டுருக்குங்க. ஆனாலும் உன் தம்பிக்கு என் மேல கொஞ்சம் பாசம் இருக்கும் போலடா” என்று சிரித்த விக்ரம்
     “அப்படி அவளை பார்த்துட்டு இருந்ததால தான் அவ பின் பக்கமா போன மாதிரி இருந்ததுன்னு நானும் போனேன்டா. போனா இப்படி நடக்குது. அந்த நேரம் வந்த கோபத்துக்கு நீ மட்டும் தடுக்கலை அவனை அங்கையே கொண்ணு பொதச்சிருப்பேன்” என்று கோபப்பட்டான் விக்ரம்.
     “சரி விடு மச்சான். அதான் இப்போ எல்லாம் ஓகே ஆகிருச்சே. சங்கவியும் பாவம்டா ரொம்ப கோவப்படாத அந்த பொண்ணு ஏற்கனவே ரொம்ப பயந்திருக்கா சரியா.
     அப்புறம் எப்போ சங்கவிய பொண்ணு கேக்க போலாம் அதையும் சொல்லிடுடா” என்றான் ஹர்ஷா கிண்டலாய்.
     “அட ஏன்டா நீ வேற. அவள லவ் பண்றதையே இன்னைக்கு காலைல தான் கண்டுபிடிச்சேன். இன்னும் கல்யாணம் எல்லாம் ஒரு வருஷமாவது ஆகட்டும். நல்லா பொறுமையா லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கிறோம்” என்று விக்ரம் தான் எண்ணியதை கூறினான்.
     “ம்ம் கலக்கு மச்சான்” என தோளில் தட்டிய ஹர்ஷா அனு வரவும் தங்கள் அறைக்கு சென்று மறைந்தான். இப்போது ஹாலில் விக்ரம் மட்டுமே நின்றிருந்தான்.
     தூங்க போகும் முன் விக்ரம் சங்கவி இருந்த அறையை எட்டி பார்க்க அவள் நன்றாக தூங்குவதை கண்டு ‘அதுக்குள்ள தூங்கிட்டாளா?’ என எண்ணி அவளை சிறிது நேரம் ரசித்துப் பார்த்தவன் புன்னகைத்தபடி தன் அறைக்கு சென்றான்.
-மீண்டும் வருவான்

Advertisement