“வேதாம்மா..! கங்க்ராட்ஸ்டா” என்ற சரண் அருகில் வந்து தங்கையை அணைத்துக் கொள்ள,
“தேங்க்ஸ்ண்ணா!” என்றாள் அமைதியாக.
“என்னாச்சு வேதா? ஏன் டல்லா இருக்க? ஏதாவது சாப்பிட்டியா?” என்றான் சரண்.
“டீ குடிச்சேன்” என்றாள். கவனம் என்னமோ எழுதுவதில் தான் இருந்தது.
“நாம வீட்டுக்கு போவமா?” என்றான் கீர்த்தனாவிடம்.
“என்னால சமைக்க முடியாது. இன்னைக்கு இங்க தான். அம்மா சமைச்சுடுவாங்க. சாப்பிட்டு போகலாம்” என்றாள் கீர்த்தனா.
“இல்லைன்னா மட்டும் மேடம் வகை வகையா செய்ற மாதிரி” என்று சரண் சிரிக்க, முறைத்தாள் அவள்.
“அண்ணா”
“வேதாம்மா”
“எனக்கு காலேஜ் மேனேஜ்மென்ட்ல ஒரு ஆளைப் பத்தி கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணனும். அது யார்கிட்ட பண்ணனும்?” என்றாள் முக்கியமாய்.
“என்னாச்சுடா? யாரு?” என்றான் புரியாமல்.
“எப்ப பார்த்தாலும் பக்கத்துல யார் பேசுனாலும் என்னையவே வெளிய அனுப்பிடுறார் அந்த ஆளு. இன்னைக்கு முக்கியமான யூனிட் லெசன். கவனிக்க முடியாம போய்டுச்சு. என்னையே ஏதோ வன்மம் வச்சு பழி வாங்குற மாதிரி இருக்கு. இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாது. அந்த ஆளா இல்லை நானான்னு பார்க்குறேன்” என்றாள்.
“யாரு அது?” என்றான் சரண்.
“நீ எனக்கு அண்ணன் தான? நாளைக்கு காலேஜ்ல வந்து எனக்காக கேட்கணும்.” என்றாள்.
“சரிடா கேட்குறேன். அந்த ஸ்டாப் யாருன்னு சொல்லு?” என்றான் சரண்.
“அந்த ஒருத்தருக்கு மனசு வலிச்சதா இல்லையான்னு பார்ப்போமா?” என்றவன் அவளைப் பிடித்து இழுக்க, அவன் மேல் மோதி நின்றவள்,
“ஹெலோ சார்? இங்க மட்டும் என்ன வாழுதாம். எப்ப பார்த்தாலும் கிளாஸ்க்கு மைனர் மாப்பிள்ளை மாதிரி வர வேண்டியது. இவரைப் பார்த்து எல்லாரும் ஜொல்லு ஊத்த வேண்டியது. இது தானே நடக்குது. நீங்க என்னை சொல்றிங்க?” என்றாள் உதட்டை சுழித்தபடி.