தன்வியிடம் மௌனம். “உன் அப்பா அந்த இடத்தில சரி தன்வி. மகளுக்காக மட்டும் தான் அவர் யோசிப்பார்” என்றார் மாமியார்.
தன்விக்கு என்ன சொல்ல முடியும்?
“தேசிகன் தொழிலை பத்தி யோசிக்கலை. அந்த ஒரு வருஷம் உன்னை பத்தி மட்டும் தான் யோசிச்சான். நீங்களும் சேர்ந்துட்டீங்க, அதுவே எங்களுக்கு சந்தோஷம். உனக்கு தெரியணும்ன்னு சொன்னேன். இதோட இதை விட்டு, ரெஸ்ட் எடு தன்வி” என்று வைத்திருந்தார் சாவித்திரி.
அதன்பின் தன்வி எவ்வாறு ஓய்வெடுக்க முடியும்?
முன்பென்றால் தேசிகன் தவறுக்கான தண்டனை இது, எனக்கென்ன என்று விட்டிருப்பாள். ஆனால் இப்போது அப்படி விட முடியவில்லை.
ஏதோ அவளை அழுத்தும் பாரத்தை உணர்ந்தவளுக்கு, பார்ட்டிக்கு தயாராகும் எண்ணமே இல்லை.
அவளுக்கான விருந்து என்ற கட்டுடன், ஏனோ தானோவென்று கலந்து கொண்டவள், விருந்து முடியவுமே கணவனை காண வந்துவிட்டாள்.
தேசிகன் அந்த வீட்டில் தான் இருப்பான் என்ற நிச்சயம் அவளுக்கு இருந்தது.
தேசிகனும் அவளை வாசலிலே எதிர்கொள்ள, அங்கேயே அவனை கட்டிக்கொள்ளும் வேகம்.
முரளி இருப்பதால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அறைக்கு வந்ததும், கணவனை கட்டியணைத்து கொண்டாள்.
கட்டிலில் தலை சாய்ந்திருந்த இந்த நொடியும், தேசிகனின் நெஞ்சத்தை கேட்டது அவளிதயம்!
“தன்வி” என்று தேசிகன் அழைக்கும் குரல் கேட்டது.
“ஸ்வீட் இருக்கு வா” என்று வெளியே வந்த மனைவிக்கு பிடித்த இனிப்பை கொடுக்க, தன்வி விரும்பியே உண்டாள்.
“உன்னோட வெற்றிக்கு முரளி கொடுத்தது” என்று தேசிகன் சொல்ல,
“அப்புறம் உன் அப்பாவை கடத்தினது யார்ன்னு தெரிஞ்சு போச்சு போல” என்று தேசிகன் கேட்க, முரளியை தான் முறைத்து வைத்தாள் தன்வி.
“அண்ணா எனக்கு வில்லன், அவர் இல்லை. நீங்க தான்” என்றான் முரளி. “ஏதோ இப்போதான் பழசை மறந்து, என்னை பார்த்து சிரிச்சாங்க அண்ணி. அது பொறுக்கலை இல்லை உங்களுக்கு” என்று அவன் கடுப்பாக,
“டேய். உன் அண்ணி எனக்கு தெரியாம எதுவும் செஞ்சு வைக்க கூடாதுன்னு தான் கேட்டேன்” என்றான் தேசிகன்.
“ஏன் இப்போ மட்டும் உங்களுக்கு சொல்லிட்டா செய்வேன்” தன்வி கேள்வி உடனே வர,
“சும்மா தொழில் போட்டிக்கு எல்லாம் நீ தலையிடாத. உன் பெரியப்பா பார்த்துப்பார்” என்றான் தேசிகன்.
“சும்மா தொழில் போட்டியா? நான் சிங்கப்பூர் போன வேலை முடிய கூடாதுன்னு தான் அவரை கடத்தியிருக்காங்க. அதுவும் அப்பாக்கு அப்போ உடம்பு வேற சரியில்லை. கெஸ்ட் அவுஸ்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தவரை போய்” என்று மகள் பொறும,
“என்னை அடிச்சு என்கிட்ட இருந்து கையெழுத்து வாங்க மட்டும், அவருக்கு உடம்பு நல்லா இருந்ததா?” தேசிகன் நக்கலாக கேட்டான்.
“ஆஹ்ன். அது”
“என் மாமா பொண்ணு கல்யாணத்தை மைண்ட்ல வைச்சுக்கிட்டு, எவ்வளவு கிரிமினலா திட்டம் போட்டிருக்கார்”
“ஏங்க. இப்போ பேச்சு அவரை கடத்தினவங்களை என்ன பண்றதுன்னு தான்”
“அவங்க தான் அவரை ஒண்ணுமே பண்ணலையே. அப்புறம் எதுக்கு ரிவென்ஜ்?”
“மேட்டர், இடம்ன்னு பேச தெரியுது இல்லை. அப்போ கடிக்க தான் செய்வேன்”
“அடிப்பாவி அப்போ நீ கவனிச்சுட்டு தான் பதில் சொல்லாம இருந்திருக்க?”
“ஏன் சொல்லணும்? எனக்கு என் வீட்டுக்காரரோட இருக்கணும். அவ்வளவு தான்”
“எனக்கும் தாண்டி என் பொண்டாட்டியோட இருக்கணும். அப்படியே ஒட்டிக்கிட்டு, உரசிகிட்டு, உருண்டுகிட்டு”
“போதும். போதும்”
“என்ன போதும்? இப்படி முத்தம் கொடுத்துக்கிட்டு இருக்கணும்ன்றதும் சொல்லணும்” என்றவன் தன்வி முகத்தை மறைக்கும் முன், கன்னங்களை பற்றி இதழ்களை பிடித்து கொண்டான்.
“இந்த மூணு வாரமும் என்னோட ஜோடியை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றான் மனைவியின் கீழ் உதட்டை வருடி கொண்டே.
தன்விக்கும் அடிக்கடி கணவனின் முத்தம் நினைவிற்கு வந்து, அவளை இம்சித்திருந்தது.
“ஏங்க, ஏங்க தான் ஆசை கூடுது” என்றவன், திரும்ப இதழ்களை எடுத்து கொண்டான். அவனுடையதும் மனைவியிடம் பகிர்ந்து கொண்டான்.
இந்த முறை அவனின் கைகள் கன்னங்களில் இருந்து விடைபெற்று அவளின் இடையை சரணைடைந்திருந்தது.
தன்வி கண்களை பெரிதாக விரித்து கணவனை பார்க்க, அவளின் நெற்றி முட்டிய தேசிகன், “எனக்கு பிடிச்ச இடம். எனக்கே கொடுத்துடு” என்று தன் இரு கைகளுக்குள் அவளின் இடையை அடக்கி கொண்டான்.
பிடிக்குமா? அடக்கேடி!
“உன்னோட இருக்கும் போதெல்லாம் நான் அதை பார்க்காம விட்டதில்லை. அப்படியே பிடிச்சு நெறிச்சுடலாமான்னு கூட சில நேரம் தோணும்” என்றவன், இப்போது அதை செய்ய,