Advertisement

அவரின் அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றான்.. அங்கு டாக்டருடன் இன்னும் இருவர் இருந்தார்கள்.. 

செழியனை அமரச்சொன்ன டாக்டர் லெட்சுமி.. அங்கிருந்த  மற்றவர்களிடம்   ” இவர் மிஸ்டர் செழியன் நீங்க கேள்விப்பட்டு பேட்டி எடுக்க வந்திருக்கிறது இவரோட மனைவி.. அதனாலதான் இவரை வரச்சொன்னேன்.. ” என்று அவர்களிடம் அறிமுகப் படுத்திவிட்டு.. செழியனிடம் திரும்பினார்..

” இவங்க மூன் டீவி நிருபர்கள் எழிலோட பிரசவத்தை பற்றி பேட்டி எடுக்க வந்திருக்கிறாங்க.. உங்களுக்கு சம்மதமா?.. மிஸ்டர் செழியன்..” என்றார் டாக்டர்.. 

 டாக்டர் சொன்னதைக் கேட்ட செழியன் ” நான் சொல்றதுக்கு என்ன  டாக்டர் இருக்கு..  எழிலுக்கு  வந்த இந்த பிரச்சினை மற்ற  பெண்களுக்கும் தெரியணும்… அப்போதான் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்குனு தெரிஞ்சுகிட்டா நாளை அவங்களும் பாதிக்கப்படாமல் இருப்பாங்க எனக்கு சம்மதம் என்றான் செழியன்..”

 அவனுடைய சம்மதம் கிடைத்ததும் டாக்டர் லட்சுமியும் பேட்டி எடுப்பதற்கு சம்மதித்தார்..

 அதனைத் தொடர்ந்து மூன் டிவி நிருபர்கள்  கேள்விக்கணைகளை தொடுத்தார்கள்..

” மேடம் இது எப்படி சாத்தியமானது?.. ” என்றார் ஒருவர்..

டாக்டர் லட்சுமியோ விளக்கங்களை கூறினார்…

” உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கிறது அதில் ஒரு அதிசயம் ஒரு பெண் பத்து மாதம் குழந்தை சுமந்து பெற்று எடுப்பது.. அதிலும் இறைவன் வித்தியாசமான படைப்பை படைத்திருக்கிறான்.. ஒரு பெண்ணிற்கு சாதாரணமாக ஒரு கர்ப்பப்பை இருக்கும்.. ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக சிலருக்கு  இரண்டு கர்ப்பப்பை இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்..

 இதிலும்  வித்தியாசமான அதிசயம் கர்ப்பப்பை இல்லாமலும்  குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்..  அவர்களுக்கு  கர்ப்பப்பை மாற்று சிகிச்சை மூலம் கர்ப்பப்பை பொருத்துவார்கள்..

 இதில் 2  கர்ப்பப்பை கொண்ட அதிசயத்துடன் பிறந்த குழந்தைதான்  எழிலரசி..  

 வெளிநாடுகளில் இது அதிகம் நடந்துள்ளது.. எனது அம்மாவின் சேவைக் காலத்தில் அவரும் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தான் ஒரு சிக்கலான பிரசவத்தை எதிர் கொண்டுள்ளார்..

 எனக்கு அந்த பெண் யார் என்கிற விபரம் எதுவும் தெரியாது.. அந்தப் பெண்ணிற்கும் இரண்டு கருப்பை  இருந்தது அதில் ஒன்றில் ஒரு குழந்தையும் மற்றொன்றில் இரண்டு குழந்தையும் இருந்ததாக கூறினார்.. 

அந்த காலத்தில் இவ்வாறான நவீனமான தொழில்நுட்பங்கள் இல்லாதபடியால் அந்த பிரசவம் மிகவும் சவாலான சிக்கலான ஒன்றாக மாறியது…  இரண்டு குழந்தைகள் உள்ள கர்ப்பப்பை பலவீனப் பட்டு அதில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் போனதாம் அவர்களால்.. மற்றுமொரு  ஒரு குழந்தை உள்ள  கர்ப்பப்பையை மட்டும் பிரசவம் பார்த்து அந்த குழந்தையை காப்பாற்றினார்களாம்.. 

 அந்த பலவீனமான கர்ப்பப்பையை  பின்வரும் நாட்களில் எடுத்து விட்டார்களாம்.. மற்றுமொரு கற்பப்பையில் குழந்தை மீண்டும் கருவுற்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று இனி கவனமாக இருக்கும் படி  கூறி அப்பெண்ணை அனுப்பியதாக எனது அம்மா என்னிடம் கூறினார்..

ஏன் இப்போது சமீபத்தில் கூட இதுபோன்று ஒரு பிரசவத்தைப் பற்றி கேள்வி பட்டிருப்போம்..

 வங்கதேசத்தை சேர்ந்த 20  வயதே ஆன  அரிஃபா சுல்தானா என்ற இஸ்லாமியப் பெண் வயிற்று வலி ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. 

அப்பொழுது அவருக்கு குறைபிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது.. தாயும் சேயும் நலம் என்று தெரிந்ததும் வீட்டிற்கு  சென்றுவிட்டார்களாம்..  அதன்பின்  இருபத்தி ஆறாவது நாளில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.. ஏன் என்ற காரணம் தெரியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. டாக்டர்களும் தீவிரமாக அவரை பரிசோதித்து விட்டு சந்தேகத்தின் பெயரில் ‘அல்ட்ரா சவுண்ட் ‘ பரிசோதனை செய்து பார்த்தார்கள்.. அதில் தான் தெரியவந்தது அந்தப் பெண் மீண்டும்  கர்ப்பமாக இருப்பது..

 அவரது இரண்டாவது கருப்பையில் இரட்டை குழந்தைகள் ஆண் பெண் என இருவர் பிறந்தார்கள்..

 அதிலும் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்லபடியாக  அவர்கள் மருத்துவருக்கு நன்றி கூறிவிட்டு  வீட்டிற்கு சென்றார்கள்…

 அதுபோன்றுதான் நம்  நாட்டிலும் அதுவும் தமிழ்நாட்டில் மீண்டும் இரண்டாவது பெண் எழிலரசி இரண்டு கர்ப்பப்பைகளை கொண்டு ஒவ்வொன்றிலும் 2 குழந்தைகள் படி 4 குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளார்..

 இந்தமுறை நவீன உபகரணங்கள் வசதிகள் என அனைத்தும் இருந்ததால் 3 மகப்பேற்று மருத்துவர்கள் அனுபவம் வாய்ந்த நர்ஸ்கள் என அனைவரும் போராடி நல்லபடியாக தாயையும் சேயையும் காப்பாற்றியுள்ளோம்.. இது எங்களுக்கும் மிகுந்த சவாலான ஒரு பிரசவமாகும் இறைவனின் அருளால் அதை நல்லபடியாக முடித்துள்ளோம்.. 

அதில் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என  4 குழந்தைகள் பிறந்துள்ளது.. ஐவரும் ஆரோக்கியமாக உள்ளார்கள்..” என்றார் மிகுந்த மகிழ்ச்சியோடு டாக்டர் லட்சுமி..

 அதைக் கேட்ட நிருபர்கள் அடுத்த கேள்வியை ஆரம்பித்தார்கள்..

 இப்போது மற்ற நிருபர் ” இதை எப்படி டாக்டர் தெரிந்துக்கொள்வாங்க  மற்றய பெண்கள்.. ” என்றார்..

 டாக்டர் லட்சுமி பதிலளித்தார்..                  ” பெண்கள் சாதாரணமாக இடுப்பு பரிசோதனை செய்வார்கள் அதில் தெரிந்துவிடும்.. பெண்களுக்கு கருப்பை உருவாக வேண்டிய இடத்தில் முல்லேரியன் குழாய்கள் எனப்படும் இரண்டு சிறிய குழாய்கள் தனித்தனியாக பிரியும் போது இரண்டு கர்ப்பப்பை உருவாகிறது.. இதை ‘கருப்பை அல்லது யூட்ரஸ் டைடெல்பிஸ் ‘ என்று அழைக்கப்படும் என சிங்கப்பூர் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்…

 சாதாரணமாக இரண்டு கருப்பை இருப்பது இலகுவில் பெண்களுக்கு  தெரியாது.. 

 இது மரபணு மாற்றங்களால் ஏற்படலாம் என்றும் டாக்டர்கள் கூறி உள்ளார்கள்..

 இரண்டு கருப்பை இருக்கின்றது என பெண்கள் அறிந்து கொண்டபின் அவர்களின் பராமரிப்பாலும் ஆரோக்கியதாலும் குழந்தைகள் நல்லபடியாக பிறப்பார்கள்.. ” என்றார் டாக்டர் லட்சுமி..

அடுத்ததாக மீண்டும் கேள்வி கேட்கப்பட்டது..

” இதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன டாக்டர்?.. ” என்றார் முதலாமவர்..

” இதனால் சில பெண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் ஆரோக்கியம் குறைந்த பெண்களுக்கு தான் கரு சிதைவுகள்.. மற்றும் குறை பிரசவங்கள்.. சிறிய  யூட்ரஸ் பெண்களுக்கு காணப்படுதல்..  போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்..” என்றார் டாக்டர்..

 அமைச்சரைப் பற்றி தெரிய வந்தவர்களுக்கு புதிதாக சுடச் சுட நியூஸ் கிடைத்த சந்தோஷத்தில் டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட ஆயத்தமானார்கள்..

 அப்பொழுது அவர்களை தடுத்த செழியன் டாக்டர் மற்றும் அவர்களிடம் திரும்பி ஒரு முக்கியமான விஷயத்தை கூறினான்.. ” மேடம் இதுக்கு முதல் உங்கம்மா சொன்னதா கூறின அந்த பெண் எங்க அக்கா சாந்தி தான்.. அதில் அவருக்கு பிறந்த குழந்தை தான் என்னோட மனைவி எழில்.. ” என்றான் செழியன்..

 அவன் கூறியதை கேட்ட டாக்டர் லட்சுமி மிகுந்த சந்தோஷம் அடைந்து சாந்தியை பார்க்க சென்றார்.. அவருடன் மற்றவர்களும் சென்றார்கள்..

 நேரடியாக சாந்தியை பார்க்க கிடைத்த சந்தோசத்தில் மூன் டீவி நிருபர்கள் இதுகுறித்து டாக்டர் லட்சுமி சொன்னதை சாந்தியிடமும்  கேட்டு மேலும் விளக்கங்களை தெரிந்து கொண்டு..  சாந்தி மற்றும் எழிலரசி குழந்தைகள்..  எழிலுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள்   மற்றும் எழிலின்  குழந்தைகள் என அனைவரையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பின் டாக்டர் லட்சுமி மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் நன்றி கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள் நிருபர்கள்..

 சாந்திக்கு இரண்டு குழந்தைகளும் இறந்து அந்த கர்ப்பப்பை நீக்கப்பட்டதால் இனி அவர் குழந்தை தாங்கும் சக்தியை இழந்துவிட்டதாலும் உயிருக்கு ஆபத்து என டாக்டர் கூறியதாலும் தான் மூர்த்தி சாந்தியிடம் இருந்து விலகியே இருந்தார்..

 சாந்தியும் அவரிடம் எவ்வளவோ சொல்லி அவரை வேறு திருமணம் செய்து கொள்ளவும் கட்டாயப்படுத்தினார்..  அதனால்தான் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணுவதற்கு சாந்தி அனுமதிக்காமல் அவரும் பண்ண கூடாது என சாந்தியின்  மேல் சத்தியம் வாங்கிக் கொண்டார் சாந்தி  மூர்த்தியிடம்..  

மூர்த்திக்கு சாந்தியின் நற்குணங்கள் பிடித்ததும்  வசந்தியின் மேல் கொண்ட காதலை மறந்து  சாந்தியின் மேல் அன்பு கொண்டு  நன்றாகவே ஆரம்பத்தில் சாந்தியை கவனித்து பார்த்துக் கொண்டார்…  குழந்தை பிறந்து டாக்டர் இவ்வாறு சொன்னதும் சத்தியம் பண்ணி கொடுத்து விட்டார்.. 

அதன்பின் சாந்தியின் மேல் கோபம் கொண்டு சண்டை பிடித்து வேறு திருமணம்  பண்ண மாட்டேன். என்றும் அதனை தொடர்ந்து  ஒரு சில வார்த்தைகள் கூட பேசாமல் விட்டுவிட்டார்..   சிறு தொடுகை சீண்டல்கள் என ஒன்றும்  இல்லாமல் போனது.. இவ்வாறே அவர்களது முப்பது  வருட வாழ்க்கையை ஓட்டிவிட்டார்கள்..

எழில்  வயதுக்கு வந்ததும் சாந்தி சந்தேகம் கொண்டு அவர் எழிலை அழைத்துக்கொண்டு சென்று  பரிசோதித்து பார்த்தார்..  பெண்ணுக்கும்  இரண்டு கர்ப்பப்பை இருப்பது தெரிய வந்தது..  அதை அவரது  மாமியாரிடம் சொல்லும்போது மூர்த்தி கேட்டுவிட்டார்.. 

 அதன்பின் தான்  மகள்  மீது அதிக பாசம் கொண்டு எங்கு திருமணமாகி குழந்தைகள் உருவாகி அவளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ..  என்று பயந்து தான் அனைத்துப் பிரச்சினைகளையும் செய்தார்..

 காலப்போக்கில் சாந்தியின் விருப்பம் மகளுக்கு செழியனை கட்டிக் கொடுப்பது என்று அறிந்ததும்..  எங்கு இரத்த சம்பந்தம் கொண்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அதனால்  மகளுக்கு மேலும் பிரச்சனைகள் வரும் என்று பயந்து தான் செழியன் குடும்பத்தோடு சண்டை பிடித்து கொண்டார்..

 மூர்த்தியையும் தாண்டி சாந்தி திருமணம் செய்து வைத்ததும் மகள் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததும் பயத்தில் தான் செழியனை அவ்வாறு அவதூறாக பேசி அடித்து என அவர் அவரது ஆதங்கத்தையும் கோபத்தையும் அவனிடம் தீர்த்துக்கொண்டார்..

சாந்தி செழியனின் சொந்த அக்கா இல்லை பூமணியின் வளர்ப்பு மகள் என தெரிந்தும்.. மூர்த்தி சற்று கடுமையாக தான் செழியனிடம் நடந்து கொண்டார்..

சாந்திக்கு இவ்வாறு இரண்டு கருப்பை இருந்தது யாருக்கும் தெரியாமல் போனது.. கிராமபுறத்து ஏழை பெண்மணியான பூமணிக்கு கணவன் இறந்ததும் மூன்று குழந்தைகளையும் வளர்க்கவே மிகவும் சிரமமாக இருந்தது.. அதனால் சாந்தி சற்று போசாக்கு குறைந்தவராக இருந்தபடியால் தான் சாந்திக்கு இவ்வாறு நேர்ந்தது.. ஆனால் எழிலுக்கு கண்டுபிடித்து விட்டதால் சாந்தி அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டார்.. எழில் உண்ணும் உணவு வகைகள் அனைத்திலும் சத்து நிறைந்ததாக இருக்கும்…  மகளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து கவனித்தார் சாந்தி.. அதனால் எழில் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கிறாள் குழந்தை பெற்றதும்.. 

இதுதான் காரணம் நவீன மருத்துவ வசதிகளால் தற்காலத்தில் எதற்கும் அதிக பயம் கொள்ளத்தேவை இல்லை என சிறு பிள்ளைக்கு சொல்வது போன்று மூர்த்திக்கு சாந்தி எடுத்துச் சொன்னார்.. அதன்பின்   தான் மூர்த்தி   கதவிற்கு வெளியே நின்று அவரது சொந்த கண்ணால் மகளும் குழந்தைகளும் பூரணமாக நலத்தோடு இருக்கிறார்கள் என்று பார்த்து தெரிந்து கொண்டதும் மிகவும் அகம் மகிழ்ந்து போனார் சுந்தரமூர்த்தி… 

 இதோ இப்பொழுது மகளுக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டு  மாலை போட்டுக்கொண்டார்.. மகள் நல்லபடியாக குழந்தை பெற்று ஆரோக்கியமாக இருக்கிறாள்..  என்று தெரிந்ததும் அவரது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அங்கிருந்து நேரடியாக கோவிலுக்கு சென்றார் சுந்தரமூர்த்தி..

 சாந்தியும் மூர்த்தியின் அம்மா முத்தரசியும் மட்டுமே அவரை புரிந்து கொண்டார்கள்.

மாலை நேரம்  மூன் டீவியில் பிரேக்கிங் நியூஸ் கூடியது     ” அதிர்ச்சியாகும் தகவல்..  ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழிலரசி என்னும்  22 வயது பெண் ஒருவர்

இரண்டு கருப்பையில் நான்கு குழந்தைகளை சுமந்து பெற்றுள்ளார்..” என்ற இந்த தகவலை பரபரப்பான நியூஸ் ஆக மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களது டிஆர்பியை அதிகப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள்..

அடுத்த நாள் மாறனின் குழந்தைகள் கடத்தல்  கேஸ் கோர்ட்டிற்கு வந்தது..  நீதிபதி நிர்மலாவின் பெற்றோரை வன்மையாக கண்டித்தார்.. ஆரம்பத்தில் குழந்தைகளை அவர்களிடம்  ஒப்படைக்கும் படியும் நிர்மலாவின் மரணம் திட்டமிட்ட கொலை என சந்தேகப்படுவதாக கூறி அவர்கள் மாறனின் மீது போட் கேஸ் பொய்யானது என விசாரணையில் தெரியவந்ததும் நீதிபதி அபராதம் கட்டும்படி கூறி கண்டித்து அனுப்பினார்.. 

மீண்டும்  பணத்திற்காக சொந்த பேரக்குழந்தைகளையே கடத்தியதும்.. மிகுந்த கோபம் கொண்டு சிறை தண்டனை வழங்கினார்..

மாணிக்கத்திற்கும் தண்டனை வழங்கப்பட்டது..

 மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து விட்டு குழந்தைகள் மற்றும் தாய்க்கு எவ்வித குறைபாடுகளோ  பாதிப்புகளோ எதுவும் இல்லை என்று உறுதி படுத்தி டாக்டர் லட்சுமி எழிலை  வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..

எழிலையும் குழந்தைகளையும் அன்பு தான் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துசென்றாள்..

 

மூர்த்தியும் வேண்டுதலை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்..

 வீட்டிற்கு  வந்ததும் சாந்தியின் கட்டாயத்தால் மாறன் மற்றும் செழியனிடம் மூர்த்தியை மன்னிப்பு கேட்க சொன்னார்..

 இதைக் கேட்ட செழியன் சாந்தியை கோவமாக தட்டிவிட்டான்..

” அவர் எனக்கு அப்பா மாதிரி நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்..  அவர்  எப்படி என்கிட்ட  மன்னிப்பு கேட்கலாம்..  என்கிட்ட கேட்க தேவையில்லை என்றால் என் மாப்பிள்ளை மாறனிடமும்   மன்னிப்பு கேட்க  தேவை இல்லை..” என்று சாந்தியிடம் கூறிவிட்டு மூர்த்தியை பாசமாக மாறன் மற்றும் செழியன் இருவரும் அணைத்துக் கொண்டார்கள்..

 ஒரு மாதங்கள் கடந்ததும் செழியனின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா மிகவும் சிறப்பாக மூர்த்தி முன்நின்று நடத்தினார்.. அதில் அனைவரும் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி பரிசில்கள் கொடுத்து

அவ்விழாவை  சிறப்பித்தார்கள்..

அவனது இரண்டு மருமகன்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தான் செழியன்…

 அதன்பின் அன்புக்கொடிக்கு ஏழாவது மாதத்தில் மிகவும் சிறப்பாக வளைகாப்பு செய்தார்கள்.. ஒரு வாரம் மட்டும் சம்பிரதாயத்திற்காக மாறன்  கொடி மற்றும்  குழந்தைகளையும் ராசாத்தியம்மாளுடன் அவர்களின் வீட்டிற்கு அனுப்பிவைத்தான்.. 

கொடி அங்கு சென்றதும் மாறன் தினமும் சென்று பார்த்துவிட்டு வருவான்..  மீண்டும் அகிலத்திடம்  கூறி நல்ல நாள் பார்த்து மனைவி மற்றும் குழந்தைகளை  பெரிய வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்..

 குழந்தை பிறப்பதற்கு முன் அவனிற்கு இருக்கும் அடுத்து பெரிய ஒரு கடமையான  தயாளனிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு தீவிரமாக பெண் தேடினான் மாறன்..

 அவனின் தேடலின் பலனாக அத்தை அழகம்மை மதுரையில் திருமணம் செய்திருக்கும் குடும்பத்திலுள்ள சொந்தக்கார பெண்ணை அகிலத்திடம் கூறி தயாளனிற்கு பெண் கேட்டான்..

 அடுத்த ஒரு மாதத்திலேயே கொடிக்கு குழந்தை பிறப்பதற்கு முன் அந்தப் பெண்ணோடு தயாளனிற்க்கு அவனே முன் நின்று  திருமணம் செய்து வைத்தான் மணிமாறன்..

 இந்த செயலால் ஊர் மக்கள் மத்தியிலும் குடும்பத்தின் மத்தியிலும் நன்மதிப்பு பெற்று உயர்ந்து நின்றான் மணிமாறன்..

 செழியன் அவனது  சூப்பியோடும் குழந்தைகளோடும் வாழ்க்கையை அனுபவித்து சந்தோசமாக வாழ்கின்றான்..

 மணிமாறன் அவனது சுண்டெலி யுடனும் குழந்தைகளுடனும் சேர்ந்து பெரிய வீட்டில் மகிழ்ச்சியாக அகிலம்  பாட்டியின்  கலாட்டாவோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்கின்றான்..

 பாட்டியர் சங்கம் தினமும் மாலை நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டில் என தீர்மானித்து கூடி பேசி அவர்களின் பொழுதை இனிமையாக கழிக்கின்றார்கள்..

இவ்வாறே  அவர்கள்  அனைவரின் வாழ்க்கையும் பல தடைகளைத் தாண்டி மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது..

இனி  நாமும் அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்..

 முற்றும்..

Advertisement