இரவு எல்லோருக்குமே மனதில் ஒரு கனத்தை தந்து இருக்க, அடுத்த நாள் அவர்களின் வழக்கமான வேலைகளில் அவரவர் நாட்கள் தொடங்கின. கதிரழகி எழுந்தவள் தன் காலை நேரத்து சமையலை முடித்தவள், எட்டி பார்த்தாள் மணி 6.30 என காட்டியது கடிகாரம். குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் எழுவதற்க்குள் குளியலை முடித்துவிடலாம் என்று தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்கு சென்று கதவடைத்தாள்.
அவள் சென்ற சிறிது நேரத்தில் எழுந்த மதி சமையல் அறையிலும், முன் அறையிலும் அம்மாவை தேடி இல்லாதால், பின் படிகட்டு வழியாக கீழே சென்றுவிட்டாள்.
அப்போது தான் கையில் அன்றைய தினசரியுடன் அமர்ந்து இருந்தான் பரிதி. அந்த காலை வேளையில் வீட்டில் எந்த சத்தமும் இல்லை. நேற்றையை நிகழ்வுகள், அப்படி அந்த விட்டை அமைதியாக மாற்றி இருந்தது. பாக்கியா சமையல் அறையில் ஏதையோ செய்துக்கொண்டு இருந்தார். அந்த அமைதியில் குழந்தையின் கால் கொலூசின் சத்தம் நன்றாக கேட்டது பரிதிக்கு. அதுவரை தினசரியை புரட்டிக்கொண்டு இருந்தவன். அதை மடித்துவைத்துவிட்டு. மதி குட்டி என்றான் விரிந்த புன்னகையுடன். தூக்க கலக்கத்தில் நடந்து வந்த குழந்தை அவன் குரலை கேட்டதும், பரிடீ என்று அவனிடம் தாவி இருந்தாள். அவளை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டவன், மதிகுட்டி என்று அவளை மடிமேல் அமர்த்து அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்துக்கொண்டான். அவன் அமர்ந்ததும் அவன் மேல் சொகுசுபூனையாக அமர்ந்துக்கொண்டு, மடியில் படுத்துக்கொண்டு விட்ட தூக்கத்தை தொடந்தாள். அதை பார்த்து புன்னகை தான் மலர்ந்தது அவன் முகத்தில்.
ஏய் சேட்ட குட்டி இன்னிக்கு உனக்கு ஸ்கூல் இருக்கு தானே இங்க வந்து தூங்கிட்டு இருக்க, உன் அம்மாவுக்கு தெரியுமா………….. அப்புறம் எனக்கும் சேர்த்து திட்டு விழும். என்று அவன் பேசிக்கொண்டு இருக்க, அவளே இன்னும் வாகாக அவன் மடியில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் கொலுசு சத்தம் கேட்டதும் பாக்கியாவும் சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தார். மகனுக்கும் மதிக்கும் இருக்கும் பினைப்பு அவருக்கு மனம் கலங்கியது. மகன் எங்கு தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துவிடுவானோ என்று அவன் குழந்தையை அனைத்து இருந்த விதம் அத்தனை பாந்தமாக இருந்தது. இப்போது யாராவது இவர்களை பார்த்தாள்,தந்தை மகள் என்றே நினைப்பார்கள், அவர் உரையாடல் கூட அப்படி தான் இருந்தது. பாக்கிய மட்டும் அதை பார்த்து இருக்கவில்லை, கதிரழகியும் தான் அவள் குளித்துக்கொண்டு இருந்தாலும், எப்போதும் காதை வெளியில் தான் வைத்து இருப்பாள், மகள் ஏதும் சத்தம் செய்தால், கூப்பிட்டாள் என்று கவனம் எல்லாம் அங்கு தான் இருக்கும். அதே போல் தான் இன்றும், அவளின் நடமாட்டத்தை கண்காணிக்கவே அவள் அதிக முத்துக்கள் கொண்டு கொலுசை மகளுக்கு அனிவித்து இருந்தாள்.
அவள் எழுந்து நடந்து வரும் சத்தம் கேட்டவும், அவரசரமாக தன் குளியலை முடித்துக்கொண்டவள், வெளியே வந்து பார்க்க மகள் கடைசி படியில் கால் வைத்து இருந்தாள். நேற்று தான் அவ்வளவு பிரச்சனை நடந்து இருக்கிறது, இன்று மகள் கீழே சென்றால் பாக்கியம் என்ன சொல்லுவாரோ என்று நினைத்தாலும், கீழே செல்ல தயக்கமாய் இருந்தது. அங்கு இருந்தே மகளை அழைக்க அவள் முற்பட, அதற்குள், பரிதி குழந்தையை தூக்கி இருந்தான். அவளுக்கு தான் நெஞ்சம் படபடத்தது, பாக்கியம் எதுவும் சொல்லிவிட்டால் என்று அவள் நினைத்து அங்கேயே நின்று இருந்தாள். கீழே அவன் குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்தது எல்லாம் நன்றாக கேட்டது.
சற்று இறங்கி வந்து அங்கு இருந்து இருவரையும் பார்த்தாள். காலையில் எழும் மகள் தன் தந்தையுடன் செல்லம் கொஞ்சுவது போல் இருந்தது அவளுக்கு அந்த காட்சியை பார்க்க, அதற்காக தானே அவளும் ஆசைபட்டாள், யாரிடமும் ஒட்டத தன் மகள் பரிதியிடம் மட்டும் இப்படி நடந்துக்கொள்ளவது, அவனும் அவளிடம் குழைவது என்று அவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க அவளுக்கு அத்தனை ஆசையாக இருந்தது. கதிரிடம் கூட மதியழகி ஒரு தூரத்தில் தான் நிற்பாள், அவன் தூக்கினாலோ, ஏதும் வாங்கி கொடுத்தாலும் கூட தாயின் முகத்தை பார்த்து அவள் தலையசைத்தாள் மட்டுமே வாங்கிகொள்ளுவாள். ஆனால் பரிதியிடம் எப்படி ஏற்பட்டு இவருகள் இருவருக்கும் இந்த பந்தம்………………..
என்று எண்ணியவள் கீழே இறங்கி சென்று மகளை எப்படி அழைப்பது என்று தயங்கி நின்று இருந்தாள். பரிதி அமர்ந்து இருந்த இடம் படிகட்டுக்கு நேர இருந்தால் அவன் அவளை பார்த்துவிட்டான் தான், ஆனால் அவள் என் செய்கிறாள் என்று பார்க்க, அப்படியே அமர்ந்து குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
கண்டிப்பாக அவளாக வந்து குழந்தையை வாங்க போவது இல்லைஎன்று தெரிந்தவன், அவளை தூக்கிக்கொண்டு அவள் நின்று இருக்கும் இடத்துக்கு சென்றவன், மதிகுட்டி இப்போ போய் ஸ்கூலுக்கு கிளம்பிவிங்களாம், சாயந்திரம் வந்ததும், நம்ம விளையாடலாம் என்று சென்னவன், அவளிடம் குழந்தையை கொடுக்க, சரி என்று தலையாட்டியவள், அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு அம்மாவிடம் தாவிக்கொண்டாள். அவன் பார்வை அவள் மீது படியவே இல்லை. அவள் அவனை தான் பார்த்து இருந்தாள்………………..
குழந்தையை வாங்கியவுடன் மேலே சென்றுவிட்டாள். இத்தனை நேரம் இங்கு நடந்தவற்றை பார்த்து இருந்த பாக்கியாவிற்க்கு தான் என் சொல்லுவது என்று தெரியவில்லை, எப்படி இப்படி ஒன்று சாத்தியமானது என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்.
……………………
அன்பு அன்று காலையில் எழுந்தவன் மனதில் எடுத்த முடிவுடன், கிளம்பிக்கொண்டு இருந்தான், நந்தினி அவன் முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள், கடந்த இருநாட்களாக அவன் நடவடிக்கைகள் ஏதும் அவளுக்கு சரியாக படவில்லை, அடிக்கடி போன் பேசுவதும், எதாவது காகிதங்களை வைத்து பார்த்துக்கொண்டு இருப்பதும், பின் எதையாவது யோசித்தபடி அமர்ந்து இருப்பதும்,இவளிடம் பேச கூட இல்லை……….. அது எல்லாம் அவள் மனதில் அழுத்திக்கொண்டு இருந்தது. நடப்பதும், நடந்துக்கொண்டு இருப்பதும் அவளுக்கு சரியாக படவில்லை. அன்று கதிரழகியின் திருமனத்தை பற்றி பேசியவர்கள் அதன் பின் அதை பற்றி ஏதும் போசாமால் இருப்பது வேறு அவளுக்கு சரியாகபடவில்லை, எப்படியாவது அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டாள், தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தால் இது என்ன எல்லோரும் கினற்றில் போட்ட கல் போல் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைத்தவள். கனவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள். அலைபேசியில் பேசி படி அறையில் இருந்து வெளிவந்தவன், சாப்பாட்டு மேஜையில் அமர, காலை உணவு எடுத்து வைத்தாள் நந்தினி.
ஆமா…. எல்லாம் தயாரா இருக்கா? இன்னிக்கே பைல் பன்னிடுங்க…… அது தான் ஹாஸ்பிட்டல் இருந்து எல்லாம் பேப்பரும் வாங்கி கொடுத்துட்டேன்னே………………… அப்புறம் என்ன? இந்த வாரத்தில் அவளுக்கு வக்கீல் நேட்டீஸ் போய்டுமா? என்று அவன் கேட்டுகொண்டே சாப்பிட, அருகில் இருந்த நந்தினியும், சற்று தள்ளி அமர்ந்து இருந்த ரத்தினம் மற்றும் கனேசனும் அதிர்ந்தனர். யாருக்கு வக்கீல் நேட்டீஸ், என்ன செய்கிறான் இவன், என்ன செய் காத்து இருக்கிறான் என்று எல்லோரும் அவனை பார்த்து இருக்க. அவன் யாரையும் கண்டு கொள்ளவில்லை.
எல்லோருக்கும் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தவே அவன் அங்கு அப்படி எல்லோர் முன்னாலும் பேசியதும் கூட……………………. ரத்தினம் தான் மனது தாங்காமல் கேட்டுவிட்டார். என்னடா பன்னிட்டு இருக்க………. யாருக்கு வக்கீல் நேட்டீஸ் அனுப்ப போற என்று அவனை பார்த்து கேட்க………………………..
அவன் ஏதும் பேசாமல் அமைதியாக உண்டு கொண்டு இருந்தான். டேய் உன்னை தான் கேட்கிறேன்……………….. என்று அவர் அவன் முன்னால் வந்து நின்று இருந்தார்…………………..
அவரை நிமர்ந்து பார்த்தவன், வேற யாருக்கு, எல்லாம் என் முன்னாள் மனைவிக்கு தான்…………… என்றான் அலட்சியமாக…… அதில் எல்லோரும் அதிர்ந்து பார்க்க……………….
ஒன்னும் பெருசா இல்ல, அவ தான் அவளுக்குனு ஒரு வாழ்க்கையை பார்க்க போறாளே? அந்த கதிரை கல்யாணம் பன்னிக்க போறவ ஏதுக்கு என் குழந்தையை வைச்சி இருக்கனும். அவளுக்கும் எனக்கும் ஏதும் சம்பந்தம் இல்லைனு ஆயிடுச்சி………… அப்புறம் என் மிச்ச சொச்சம் எல்லாம் மட்டும் எதுக்கு அவகிட்ட, அதான் என் குழந்தையை என்கிட்டயே ஒப்படைக்க சொல்லி கோட்ல கேஸ் போட்டு இருக்கேன் என்றான்……………. அலட்சியமாய்……………
அது எப்படி முடியும், நீ தான் அந்த குழந்தை உனது இல்லைனு பிரச்சனை பன்னி அவளை தள்ளி வைச்சே, இப்ப வந்து அது என் குழந்தைனு சொல்லுற உனக்கு வெக்கமா இல்லையா, ஏற்கனவே அவளை படுத்தினது போதாதா உனக்கு, படிச்சுட்டு இருந்த பெண்ணை உனக்கு கட்டி வைச்சி அவ வாழ்க்கையை கொடுத்துடேன்………………… உன்னால அவ பட்டது எல்லாம் போதாதா இப்ப தான் அவ கொஞ்சம் நிம்மதியா இருக்க, அவளை பத்தி யோசிக்க ஆரம்பித்து இருக்க, அது பெருக்கல உனக்கு………… அதுவும் இல்லாம அவ ஒன்னும் கதிர என்று ஆரம்பித்தவரை இடைமறித்தார் கனேசன்…….. கொஞ்சம் அமைதியா இரு ரத்தினம்….. இனி ஏதும் பேசாதே என்றார்.
ரத்தினத்திற்கோ அவன் கதிர் மீது இருக்கும் கோவத்தில் தான், அவனை திருமணம் செய்ய உள்ளாள் என்ற எண்ணத்தில் தான் இவன் இப்படி நடந்துக்கொள்கிறான், அப்படி இல்லை என்றால் இவன் அவள் வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவான் என்று நினைத்து அவள் கதிரை திருமணம் செய்ய போவது இல்லை என்று கூற வந்தார். ஆனால் இவன் பேச்சை ஆரம்பத்தில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த கனேசன், அவன் நோக்கம் அது அல்ல என்று அறிந்துக்கொண்டார். இன்னும் இவன் மனதில் வேறு ஏதுவோ உள்ளது அது அவன் வாய் விழியாகவே வரட்டும் என்று நினைத்து மனைவியை அமைதியாக இருக்கும் படி செய்தார்.
சொல்லு உனக்கு என்ன பிரச்சனை என்றார் கனேசன் அவனை பார்த்து, அதில் அவன் முகம் திடுக்கிட்டாலும், சட்டென்று தன்னை சுதாகரித்துக்கொண்டவன், ஏன் நான்……….. என் மகள் மேல்…………… எனக்கு பாசம் இல்லாமல் போகுமா? என்ன?
அன்னிக்கு ஏதோ முட்டாள் மாதிரி கோவத்தில் நடந்துகிட்டேன், அதுக்கு உங்க பெண்ணு தாலியை கழட்டி கொடுத்துட்டு போயிட்டா, அதோட விட்டாளா…………..விவாகரத்து கேட்டு என்னைய எவ்வளவு கேவலபடுத்தினா……….. அவளுக்கே அந்த அளவு இருக்கும் போது எனக்கு இருக்காதா நானும் அன்னிக்கு அவ மேல இருந்த கோவத்தில் விவாகரத்திக்கு சம்மதித்தேன். ஆன எப்போ என் மகளை பார்த்தேனோ அப்பவே என் மனசு தவிக்க ஆரம்பிச்சிடுச்சி எனக்கு என் பெண்ணு வேணும் என்றான் அவரிடம்…………….
மேலும் அவளை பார்க்கும் போதே தெரியலையா அவ என் பெண்ணு தானு………. இதுக்கு அப்புறம் என் மகளை என்னால் பிரிந்து இருக்க முடியாது. அவ தான் அந்த கதிரை கல்யாண பன்னிக்க போறாளே…………………… பழைய பகையை மனதில் வைத்து அவன் என் மகளை ஏதாவது பன்னிட்டா……………………………. எனக்கு என் பெண்ணு வேணும் என்றான்…..
என்னடா பேசுற நீ அவ எப்படி குழந்தைய பிரிந்து இருப்பா…… அதுவும் 4 வயசு கூட ஆகாத குழந்தை அவ அம்மாவிட்டு எப்படி இருக்கும்……………………… என்ற ரத்தினத்தின் கேள்விக்கு………. அப்படினா அவளையும் கூட வந்து இருக்க சொல்லுங்க என்றானே பார்க்கலாம்………… எல்லோரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்…… ஆக இவன் அவளுக்கு திருமணம் ஆவதை விரும்பவில்லை, அதனால் குழந்தையைகேட்டு பிரச்சனை செய்தால் அவள்,திருமணத்தை நிறுத்தி விடுவாள் என்று நினைக்கிறான் என்று புரிந்துக்கொண்டனர்.
இதில் இவனுக்கு இன்னும் கதிரழகி பரிதியை விரும்புகிறேன் என்று சொன்னது தெரியாது, அது தெரிந்தால் இப்போதே இவ்வளவு செய்பவன், இன்னும் என்ன வேண்டும்மானலும் செய்வான். கதிருக்காவது நடந்த எல்லாம் தெரியும்……….. ஆனால் பரிதியிடம் இவன் இல்லாது பொல்லாத்து எல்லாம் சொல்லி வைத்தால் தன் மகளின் நிலை என் ஆகும் என்று மனம் பதறியது அவருக்கு. அதனால் அதை பற்றி ஏதும் பேசவில்லை அவர்.