அத்தியாயம் – 18

திரும்பி அழகியை பார்த்தவள், பார்வையில் எந்த மாற்றமும் இல்லை, அவள் தொடர்ந்தாள், ஜஸ்டு மிஸ் ஆகிட்டான், இல்லைனா இன்னிக்கு அவனை ஒரு வழி பன்னி இருப்பேன் என்றவள், மேலும் பாக்கியாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். அழகி அவளிடம் சன்டை இட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும், கதிர் மேல் அவளுக்கும் கோவம், ஆற்றாமை இருந்த போதிலும், அவள் யாரோ ஒரு பெண்ணிடம் தன் பொருட்டு திட்டு வாங்குவது அவளுக்கு வருத்ததை அளிக்கவும் தான் அங்கு சென்றாள், அந்த பெண்ணிடம் கதிர் அப்படி பட்டவன் இல்லை என்று கூறிவிட சென்றவள், அதை தொடர்ந்து நடந்தவற்றையும், அவள் தெரியாமல் அப்படி பேசவில்லை, எல்லாம் தெரிந்து தான் பேசி இருக்கிறாள் என்று அறிந்தவுடன் என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. அப்படியே நின்றுவிட்டாள்.

கொஞ்ச நேரம் அமைதியா இரு மணி, எப்ப பாத்தாலும், வம்பு பன்னிகிட்டு, அவ உன்னை மாதிரி இங்க வளந்தவ இல்லை, உன்னைய மாதிரி தைரியமா இருக்க பெண்ணுக்கே எல்லாத்தையும் தாண்டி வரது எவ்வளவு கஷ்டம் உனக்கு தெரியும், அவ இப்பதான் அந்த ஊர தாண்டியே வந்து இருக்க, என்று சொன்னவரை தடுத்து மணிமேகலை, இப்போது கதிரழகி பக்கம் திரும்பி இருந்தாள், இங்க பார் கதிரழகி, இந்த ஊரும் உலகமும் உனக்கு அன்பா, மென்மையா எல்லாத்தையும் சொல்லிகொடுக்காது. பசியும், வலியும் அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும்…………..

உன் பசிக்கு நான் சாப்பிட முடியாது, உன் வலிக்கு நான் மருந்து எடுக்க முடியாது. நீ இப்படி இருக்கறதுனால ஏதும் மாறிடாது, அடுத்து என்ன அப்படினு பாக்கறத விட்டு இப்படி ஒக்காந்தா ஆச்சா…………………… என்னடா இவ, பாட்டுக்கு வந்தா பேசிட்டு இருக்கானு நினைக்காத, உன் வலிக்கு நான் மருந்து எடுக்க முடியாதுனு தான்………….. ஆனா வலி எப்படி இருக்கும்னு தெரியும், இந்த காத்திருப்பு, அமைதி, காலதாமதம் எதையும் மாத்தாது. என்றவள் உனக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட சொல்லு, நான் இருக்கேன் என்றவள் அங்கு இருந்து சென்றுவிட்டாள். 

மழை அடித்து ஒய்ந்தது போல் இருந்து அவளுக்கு, கடந்து போன சம்பவங்களி்ல் ஓருவித மன இருக்கத்தில் இருந்தவள், யாரிடமும் பேசாமல், யார் பேசுவதையும் கேட்க பிடிக்காமல் இருந்தவள், இன்று தான் மணிமேகலையின் பேச்சில் சற்று இறுக்கம் தளர உணர்ந்தாள். உண்மை தானே அவள் பசிக்கும், விலிக்கும் பாடுபடவேண்டும், அடுத்தவர் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் விட்டு வந்தாகிவிட்டது இன்னும் அதை பற்றியே யோசிப்பதால் என் நடந்துவிட போகிறது. அடுத்து என்ன என்று யோசிக்கி வேண்டிய நேரத்தில், கடந்தவைகளை நினைத்து என்ன பயன். என்ற தெளிவு வந்து இருந்தது.

அதுவரை அவளை பார்த்து இருந்த பாக்கியலட்சுமிக்கு, அவள் முக தெளிவு நிம்மதியை கொடுத்து, அவரும் என்ன செயவார்,அவளை அழைத்து வந்த நாள் முதல் அவளை அதட்டி மிரட்டி சாப்பிட வைப்பதை தவிர அவரால் அவளிடம் நெருங்க முடியவில்லை. அவள் அவரை ஆசிரியர் என்ற நிலையில் வைத்து இருக்க, அதற்கு மேல் அவளிடம் தெருங்கி பேச முடிவில்லை. அதனால் தான் அவர் மணிமேகலையிடம் அவளை பற்றி கூறி இருந்தார். அடுத்த என்ன அவள் வாயில் இருந்தோ வரட்டும் என்று அவளை பார்த்து இருந்தார்.

மேம், நான் வீட்டில் இருந்து ஏதும் எடுத்துட்டு வரலை, எனக்கு இங்க ஏதாவது வேலை கிடைக்குமா……………. என்றாள். அவர் அவளிடம் இந்த நிலையில் என்ன வேலைக்கு போவ? என்றார். 

அது……… தெரியலை………. ஆனா நான் எத்தனை நாள் இங்க உங்களுக்கு தொல்லையா இருக்க முடியும். என்றவள் மேலே பேசும் முன், இங்க பார் அழகி என் பிள்ளை இங்க இல்லை, இங்க நானும் என் கனவரும் இருக்கோம், உன் ஒருத்திக்கு சாப்பாடு போடுவது எனக்கு பெரிய சுமைகிடையாது. அதனால இந்த மாதிரி யோசிக்கறத விட்டுட்டு அடுத்து வாழ்க்கையில் என்ன பன்ன போறனு  யோசி, இப்போ நீ இருக்க நிலையில் உன் உடல் நிலை,மனநிலை ரெண்டும் ரெம்ப முக்கியம். நீ தற்காலிகமா தீர்வு தேடாத……. உன் வாழ்க்கையை பத்தி முடிவு, உனக்கும், உன் குழந்தைக்கும் ஏமு நல்லதோ அதை தேர்ந்து எடுக்க வேண்டிய நேரம், சரியா யோசிச்சி முடிவு எடு, முதலில் நல்லா சாப்பிட்டு தூங்கு, அப்புறம் யோசிக்கலாம் என்றவர், அவளை அமர வைத்து சாப்பிட வைத்தார். அப்படியே, அவள் மணிமேகலை பற்றி கேட்க, அவரும் அவளை பற்றி எல்லாம் சொன்னார்.

கேட்டு இருந்தவளுக்கு, அவள் ஏன் அப்படி சொன்னாள் என்று புரிந்து. வலியை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் நிலை புரியும், மணிமேகலை மேல் அவளுக்கு ஒரு நெருக்கம் வந்து இருந்தது. அவள் உதட்டில் ஒரு சிறுநகை அவளை நினைத்து. அதன்னோடு உறங்கி எழுந்தாள். அடுத்த நாள் எழுந்தவள் மனதில் ஒரு தெளிவுடன் கூடிய எதிர்கால முடிவு இருந்தது. 

அன்று விடுமுறை தினம் என்பதால் பாக்கியாவும், அவர் கனவரும் வீட்டில் தான் இருந்தனர். காலைகடன்களை முடித்தவள், அவர்களிடம் வந்து இருந்தாள், மேம் நான் ஆஸ்பிட்டல் போகனும் என்றவள், சற்று தயங்கி அது என்கிட்ட இப்போ பனம் ஏதும் இல்லை, என்று உரைத்தாள்.  பாக்கியா பேசும் முன்…………. ஏன் காசு இல்லைனா உனக்கு சோறு போடமாட்டேன் சொல்லிடாங்களா என்ற குரல் வாசலில் இருந்து  வந்தது…………. அந்த குரல் கேட்டதும் அழகி முகத்தில் புன்னகை தான் அப்படியே அவளை திரும்பி பார்த்தவள், மணி அக்கா என்றாள். அவளின் புன்னகையும், அவள் அழைப்பும் அங்கு இருந்தவர்களுக்கு மகிழ்வாக இருந்தது. 

அதான் சொல்லிட்டியே மணி அக்கானு கூப்பிட்ட அப்புறம் என்ன கிளம்பு போலாம் என்றாள் மணிமேகலை. அவள் பாக்கியாவை பார்க்க,அவரும் தலை அசைத்தார். இருவரும் வெளியில் வந்தனர், மணிமேகலை தன் இருசக்கரவாகனத்தில் அவளை ஏற்றிக்கொண்டு அருகில் இருக்கம் மகப்பேறு மருத்தவமனைக்கு வந்து இருந்தாள். அவள் வந்த இடம் பார்த்து அழகிக்கு ஆச்சிரியம் தான், அவள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று தான் சொன்னாள். ஆனால் மணிமேகலை அவளை இங்கு அழைத்து வந்து இருந்தது, அவளுக்கு ஆச்சிரியம் தான். தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத இவர்கள் தன் மனதரிந்து நடப்பது என்பது எனக்கு கிடைத்த வரம் தான் என்று நினைத்தாள். அங்கு வந்தவர்கள் டோக்கன் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்து இருக்க, இவர்களை தெடர்ந்து வந்து இருந்தான் கதிர், அவனை அழகி கண்டும் காணாமல் இருக்க. மணிமேகலையோ முறைத்துக்கொண்டு இருந்தாள். 

இவளுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும் என்னைய பார்த்தா முறைக்கறது, இல்லை சன்டைபோடுறது என்று அவனும். இவனுக்கு வேற வேலையே இல்லையா………. எப்ப பார்த்தாலும் குட்டி போட்ட பூனை மாதிரி இவளை சுத்துறது என்று இருவரும் மனதினுள் மற்றவரை வரையறை இல்லாமல் வறுத்துக்கொண்டு இருந்தனர். 

இவர்கள் முறை வந்ததும் மருத்தவரை சந்திக்க சென்றவர்கள், மருத்துவர் கூறியவற்றை கவனமாக கேட்டுக்கொண்டு, அவர் சொன்ன பரிசோதனைகளுக்கு இரத்த மாதிரி கொடுத்துவிட்டு, அடுத்து வருவது கூறித்து கேட்டுவிட்டு, வீடு வந்து சேர மதியம் ஆகி இருந்தது. அதுவரை இவர்கள் பின்னால் தான் சுற்றிக்கொண்டு இருந்தான் கிதிர். வந்தவள் உண்டுவிட்டு களைப்பில் தூங்கிவிட, மாலை எழுந்தவள், சற்று நேரம் பாக்கியாவிற்க்கு உதவினாள், அடுத்து உண்டுவிட்டு உறங்கிவிட, அடுத்த நாள் மறுபடியும் மணியுடன் மருத்தவமனை சென்றாள். எல்லா பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரை பார்த்தவள். அவர் சொன்னவற்றையும் கவனமாக கேட்டுக்கொண்டாள்.

அப்போது அவளுக்கு 3ஆம் மாம் தொடங்கி இருக்க, இன்னும் இரு மாதங்கள் அவள் முழு ஒய்வில் இருக்க வேண்டும் என்று மருத்தவர் கூறி இருந்தார். வீட்டுக்கு வந்நள் அனைத்தயும் கூறியவள் அடுத்த இரண்டு மாதங்கள் அவளை அவர்கள் தாங்கி கொண்டனர். மெல்ல மெல்ல தன் மனகாயங்கள் ஆறி தேறி வந்தாள் அவள். ஆறு மாதம் முடிந்து இருக்க, தனக்கு ஏதாவது வேலை வாங்கி தரும்படி அவள் பாக்கியாவிடம் கேட்க, மணிமேகலை அவளை அங்கு பக்கத்தில் இருக்கும் கம்பியூடர் சென்டரில் வேக்கு சேர்த்துவிட்டாள். நகல் எடுப்பது,தட்டச்சு செய்வது என்று அவள் அமர்ந்து  செய்யும் படியான வேலைகள் அவளுக்கு ஆனாலும், தன் சம்பாத்தியம் என்ற நிறைவு இருந்தது. 

கதிரும் இப்போது சென்னையில் தான் இருந்தான். சிறிது நாட்களில் அழகியை இங்கு இருந்து அழைத்து போக முடியாது என்று அவனுக்கு புரிந்து போனது. அதனால் தன் வேலைகள் அனைத்தையும் அங்கு இருக்கும் அவன் நன்பர்கள் வசம் ஒப்படைத்தவன், வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை சென்று அவற்றை மேற்பார்வை ஈட்டுக்கொண்டான். இங்கு அருகில் ஒரு கம்பனியில் வேலையில் சேர்ந்துக்கொண்டவன், அங்கேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். அந்தபகுதி மக்களுடன் எளிதில் கல்ந்துவிட்டவன். அங்கு நன்பர்களையும் ஏற்படுத்துக்கொண்டான். எப்போதும் அழகியை கவணித்துக்கொண்டான். வேலையில் இல்லாத போது அருகில் இருக்கும் அவன் நன்பர்கள் மூலம் தகவல் அறிந்துக்கொள்வான். மொத்தில் தூர இருந்தோ அவளை காக்கும் அரண் ஆனான் அவன். இதில் அடிக்கடி மணிக்கும் அவனுக்கும் முட்டிக்கொள்ளும், இருக்கும் அழகியை தொடர்வதை மட்டும் அவன் விட்டவில்லை, அந்த எண்ணமும் அவனுக்கு இல்லை.

எட்டாம் மாதம் தொடங்கிவிட, மணிமேகலை மற்றும் பாக்கியாவின் உதவியுடன் ஒரு வழக்கறிஞர் மூலம் அன்புக்கு விவாகரத்து நேட்டீஸ் அனுப்பி இருந்தாள்.

அதை பார்த்து எல்லோரும் அதிர்ந்து போயினர். அதுவரை மகள் ஏதோ புரியாமல் செய்துக்கொண்டு இருக்கிறாள் என்று நினைத்தவர், அவள் இப்படி முடி எடுப்பாள் என்று நினைக்கவில்லை. சென்னையில் பாக்கியாவில் வீட்டில் இருப்பது அவருக்கு தெரியும், கதிரின் நன்பர்கள் மூலம் அறிந்து இருந்தார். பாக்கியாவும் கூட அவள் இங்கு இருக்கும் தகவலை அவருக்கு சொல்லி இருந்தார். மகள் பாதுகாப்பாக இருக்கிறாள், என்று அறிந்தவர், சரி அவளே புரிந்துக்கொண்டு வருவாள் என்று நினைத்து இருக்க. இது என்ன என்று இருந்தது அவருக்கு. அதற்கு மேல் அன்பு எல்லாம் அவன் நினைத்தற்க்கு மாறாக நடந்துக்கொண்டு இருந்தது. வீட்டில் சொந்தங்கள் இருக்கும் போது பேசினால் நிலைமை தனக்கு சாதகமாக இருக்கும் என்று அவன் நினைக்க, எல்லாம் எதிராக முடிந்து இருந்தது. நந்தினி வேறு எப்போது நம் திருமணம் என்று நச்சரிக்க தொடங்கி இருந்தாள். அவனுக்கு அவளை பிடித்து இருந்தாலும், அவள் மேல் காதல் இருந்தாலும்!!! கதிரழகி அவனை எதிர்த்து இப்படி போவாள் என்று அவன் நினைக்கவில்லை. அதுவே அவனுக்கு பெருத்த அவமானமாக இருந்தது……………………….. அவளை எப்படி தனக்கு கீழ் கொண்டு வர என்று அவன் மனதில் உழன்றுக்கொண்டு இருக்க……………………… ரத்தினம் வேறு இப்போது எல்லாம் அவனிடம் சன்டையிட தொடங்கி இருந்தார். அவருக்கு எல்லா பிரச்சனைக்கும் தான் தான் மூலகாரணம் என்ற குற்ற உணர்வு இருந்தது.