“பைக் எல்லாம் அட்டகாசமா இறங்கியிருக்கு. எப்போ வாங்குனீங்க? எனக்கு ஒரு ரைட் வேணும்” என்றான் ஆரவாரத்துடன்.
“பைக்கா? நான் எப்போடா வாங்குனேன்?” என்ற குருமூர்த்தி அதிர்ந்து மகளை பார்க்க, அவளும் அதே அதிர்வுடன் தந்தையை பார்த்து கண்ணாடி பக்கம் சென்றாள்.
சில லட்சங்களை விழுங்கிய பைக், பளபளப்புடன் ஜொலித்து கொண்டிருக்க, அதை பாதுகாத்தபடி ஆட்கள் நின்றிருந்தனர்.
“எம்பையர் திறக்கிற அன்னைக்கு நைட் நாம கிளம்புறோம்” என்று சர்வாச்சார்யா சொல்லியிருந்ததை ஒதுக்கி தவறு செய்து விட்டோமா என்ன?
என்ன பண்ணிட்டு இருக்கான் இவன்? சம்யுக்தா தவித்து நின்றாள்.
வசுந்தரா, சிவப்பிரகாசமும் கூட அதே தவிப்பில் தான் மகனிடம் பேசி கொண்டிருந்தனர்.
சர்வாச்சார்யா திறப்பு விழா முடிந்ததும், அவனுக்கான பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் இருந்து அவன் போன் விடாமல் ஒலிக்க ஆரம்பித்தது.
சம்யுக்தா, அவனின் புகைப்படங்கள் சிவப்பிரகாசம் நெருங்கிய வட்டத்தில் பெரிய பரபரப்பை கிளப்பி விட்டிருந்தது.
அப்பாம்மா, அத்தை குடும்பத்தினர், அவனின் தங்கை, அத்தை பிள்ளைகள், அவன் நண்பர்கள் என்று பலர் அழைத்தனர்.
போன் எடுத்து யாருக்கும் பதில் சொல்லவில்லை.
“நான் ஈவினிங் வீட்டுக்கு வரேன். பேசலாம்” என்று சிவப்பிரகாசத்திற்கு மட்டும் செய்தி அனுப்பியிருந்தான்.
அதனை கொண்டு சர்வாச்சார்யாவின் ஒட்டு மொத்த குடும்பமும் வீட்டில் குவிந்திருந்தனர்.
“அண்ணி என் வரலை? அவங்க இங்க இருந்திருக்கணும்?” என்று பெரிய அத்தை அண்ணனிடம் சண்டையிடவே செய்தார்.
“ஏதோ ரொம்ப பெரிய கேஸ் போல. அவளால இப்போதைக்கு எங்கேயும் நகர முடியாதுமா. புரிஞ்சுக்கோ” என்று சிவப்பிரகாசம் சொன்ன சமாதானங்களை எல்லாம் அவர்கள் ஏற்கவில்லை.
சர்வாச்சார்யாவின் செயல் அவர்களை அதிகமாகவே கொதிக்க வைத்திருந்தது.
நிதானத்தை இழந்திருந்த அத்தைகள் சர்வாச்சார்யா வீட்டிற்கு வந்த நேரமே, “என்ன தங்கம் இது?” என்று அந்த புகைப்படத்தை சர்வாச்சார்யா முன் வைத்து கேள்வி கேட்டனர்.
“அத்தை. பசிக்குது. சாப்பிட எதாவது கொடுக்க முடியுமா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.
“அந்த ரௌடி பங்கஷனுக்கு போனதே தப்பு. இதுல அவன் பொண்ணோட இப்படி? என்ன கருமம் இது?” என்று கேட்டார் சின்ன அத்தை.
சர்வாச்சார்யா எப்போதும் போல் அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவன், “வந்ததும் நாம அவுட்டிங் போறோம்” என்றான்.
“போலாம்” என்ற வைஷ்ணவி, அவனுக்கு சிறிதளவு நிம்மதியை கொடுத்தாள்.
“சார். நீங்க தயாராகணும். இதுக்கு மேல லேட் பண்ணாதீங்க” என்று ஆட்கள் குருமூர்த்தியிடம் உடை கொடுத்து, அவரை அவசரப்படுத்தி கொண்டிருக்க,
மனிதர் கடுப்பாகி அந்த உடைகளை தூக்கி எறிந்துவிட்டவர், “அவன் வரட்டும். நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்” என்றுவிட்டார்.
அவரை ஓர் அளவுக்கு மேல் நெருங்க சர்வாச்சார்யா ஆட்களுக்கு எக்கச்சக்க தயக்கம்.
“எனக்கு என்ன மரியாதையோ அதை நீங்க அவருக்கு கொடுத்தாகணும்” என்ற சர்வாச்சார்யாவின் உத்தரவை அவர்களால் எப்படி மீற முடியும்? தள்ளி இருந்து கொண்டனர்.
தள்ளி நின்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் அங்கு உருவாகி இருந்தது.
ஆம் சட்டென எங்கிருந்து தான் அத்தனை பேர் வந்தார்களோ தெரியவில்லை. எம்பையர் முழுதும் ஆட்கள் தான்.
குருமூர்த்தியின் ஏரியா அது! சிறிது அசப்பு தெரிந்தாலும் மின்னலாக கூடி விடுவர்.
“என்ன’ண்ணே. பங்க்ஷன் தான் முடிஞ்சு போச்சே. அப்புறம் யார் இந்த கோட்டு சூட்டு ஆளுங்க? என்ன கதை அது? ஆமா இதென்ன புது பைக்? நம்ம அண்ணாத்தே எடுத்துகிறாரா? சாவி வாங்கிட்டு வாங்க. ஒரு ரைட் போய்ட்டு வரணும்” என்று மணியை சூழ்ந்து கொண்டிருந்தனர் ஆட்கள்.
அந்த கூட்டத்துக்கு இடையில் பைக் ஒன்று சீறி கொண்டு வந்து நிற்க, “யாருடா அது? எங்க ஏரியால வந்து படம் காட்டுறது?” என்று அந்த பைக்கை சுற்றி கொள்ள,
“நகருங்க. தள்ளி நின்னு பேசுங்க” என்று பாதுகாப்பு ஆட்கள் அவர்களை கட்டுப்படுத்த முயல, ஹெல்மெட்டை கழட்டினான் பைக்காரன்.
சர்வாச்சார்யா முகம் தெரியவும், “அட இது நம்ம தம்பி. டேய் யாருன்னு தெரியலையா? நம்ம அண்ணாத்தே ஆளு. அடிங்க. நம்ம அண்ணாத்தே ஆளா இது? அப்புறம் பாப்பா கோவிச்சுக்கும்” என்றதும், அத்தனை பேரும் பெரிதாக சிரித்து வைத்தனர்.
“அவருக்கு வழியை விடுங்கடா முதல்ல” என்று குருமூர்த்தி சத்தம் கேட்க, சர்வாச்சார்யாவிற்கான பாதை தானே திறந்தது.
ராஜாவாக அத்தனை ஆண்களுக்கு இடையில் நடந்து சென்றவன், “கிளம்பலையா?” என்று முகப்பில் நின்றிருந்த குருமூர்த்தியிடம் கேட்டான்.
“முதல்ல நாம பேசணும்” என்றார் குருமூர்த்தி.
“போற வழியில பேசிக்கலாம். இப்போ கிளம்புங்க”
குருமூர்த்தி அவன் கையை பற்றி எம்பையருக்குள் அழைத்து சென்றார், பின்னால் வந்த அவன் ஆட்களை கையசைத்து தடுத்துவிட்டான் நாயகன்.
“என்ன பண்ண லடாக் போற? சொல்லு?” என்று குருமூர்த்தி கேட்க,
“நான் ரைட் போகணும். இடைப்பட்ட வேலை தீரஜை மீட் பண்றது” என்றான் நல்லவன்.
“நாம இங்கிருந்து கிளம்பும் போதே அவன் அங்க தயாராகிடுவான்”
“நாமும் தயாராத்தான் போக போறோம்”
“உனக்கு என்ன பண்ணனும்ன்னு சொல்லு. நான் பண்ணுறேன். நீ இங்கேயே நில்லு”
“என் மேல நம்பிக்கை இருக்கா?” சர்வாச்சார்யாவிடம் புதுவிதமான அழுத்தம் தென்பட்டது.
“நீ என்னை நம்புற தானே?” குருமூர்த்தி கேட்க,
“நீங்க உங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திட்டீங்க, இது எனக்கான நேரம். என்கூட நீங்க இருக்கணும்னு நான் நினைக்கிறேன்” சர்வாச்சார்யா தெள்ள தெளிவாக பேசி கொண்டிருந்தான்.
பல நாட்களாக இதற்கான திட்டம் போட்டிருக்கிறான்.
குருமூர்த்தி திரும்பி மகளை பார்க்க, “அவரோட போய்ட்டு வாங்கப்பா” என்றாள் மகள்.
உலகத்திலே அவளின் நம்பிக்கை நட்சத்திரம் இவர்கள் இருவர் மட்டுமே! அவளின் வாழ்வும் இவர்கள் இருவருடன் மட்டுமே!
இருவரும் ஒன்றாக பயணம் மேற்கொள்ள போகின்றார்கள். அதுவும் ஆபத்தை நோக்கி. தெரிந்தும் சம்யுக்தா சம்மதம் சொல்கிறாள்!
என் பொண்ணுடா இவ! குருமூர்த்தி பூரித்துபோனவர், மகளை அணைத்து அவளின் உச்சியில் முத்தம் பதித்தார்.
இரு கரங்களால் இருவரையும் தன்னுடன் பிணைத்து கொண்டவர் குருமூர்த்தி.
அதில் ஒருவன் அவரிடம் எதையோ காட்ட நினைக்கிறான். போய் பார்த்துட்டு தான் வரலாமே!
என்னை மீறி எவன், இந்த அடங்காதவன்கிட்ட வந்துட போறான்?
குருமூர்த்தி தயாராக செல்ல, சர்வாச்சார்யா முன் உணவு நீண்டது.
மாசிலாமணி தான் கொடுத்தார். மறுக்காமல் உண்டான்.
குருமூர்த்தி வரவும் அவருக்கான உணவை மகள் கொடுத்தாள்.
அமைதியான நிமிடங்களுக்கு பிறகு, கனமான நிமிடங்கள்!
“நான் வந்துடுவேன். அதுவரைக்கும் பத்திரம்” என்று மகளுக்கு சொன்னார் குருமூர்த்தி.
பின் மாசிலாமணி, குணாவிடம் பேசினார். தன் ஏரியா ஆட்களிடமும் ஏதோ சென்று பேசினார்.
ரைடிங் உடையில் விறைப்பாக நின்ற சர்வாச்சார்யாவை தொடர்ந்தது பெண்ணின் கண்கள்.
குருமூர்த்தி விடைபெற்று கிளம்ப, தந்தையை பின் தொடர்ந்த சம்யுக்தாவின் கால்கள் சட்டென நின்றது.
பின்னிருந்து அவளை சுற்றி வளைத்திருந்தது சர்வாச்சார்யாவின் கரங்கள்!
கண்களை மூடி கொண்ட சம்யுக்தாவின் விழியோரம் கண்ணீர் துளி.
நாயகனின் மூச்சு காற்று அவளின் கழுத்தில் சுட, அவனின் கைகள் இறுக்கத்தை கூட்டியது.
அவன் வாசம், அவன் அணைப்பு, அவன் நெருக்கம்! பெண்ணின் நெஞ்சத்தை விம்ம வைத்தது.
அவ்வளவு எல்லாம் அவன் என்னைவிட்டு விலகி விடவில்லை!
அவன் கரங்களின் மேல் தன் கரங்களை வைத்தாள் பெண்.
சர்வாச்சார்யாவின் மூச்சு காற்றின் வேகம் கூட, அவன் உதடுகள் அவளின் கழுத்தில் பதிந்தது.
சில நொடிகளே நீண்ட அவன் முத்தம், இறுதியில் அவளுக்கு ஒரு மென்கடியையும் பரிசாக கொடுத்தது.
“ஸ்ஸ்” என்ற சம்யுக்தாவின் கழுத்தோர முடிகள் சிலிர்த்து கொண்டது.
சிவந்த தடத்தில், திரும்ப ஓர் அழுத்தமான முத்தத்தை பதித்தவன், அவள் முகம் பார்க்காமலே அவளை விலக்கி, வேகநடையுடன் சென்று மறைந்தான்.