“போடுவேன். நீங்க தான் என்னை வெட்டி விட்டீங்க நான் இல்லை, எனக்கு உங்க மேல எல்லா உரிமையும் இருக்கு. இப்போ மட்டுமில்லை, எப்போவும், கடைசி வரையிலும்” என்றான் சர்வாச்சார்யா.
அவனுக்கான உரிமையில் தந்தை மட்டுமே. நான் இல்லை! சம்யுக்தாவிற்கு புரியத்தான் செய்தது.
அவள் சட்டை நுனியை இழுத்தும் அவன் சிறிதும் கண்டு கொள்ளாததோடு, அவளிடம் இருந்து தள்ளியும் நின்று கொண்டான்.
முழுதாக விலக்கி வைக்கிறான். போகட்டும்!
பெண் அமைதியாக நிற்க, குருமூர்த்தி தான் அவனிடம் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்.
“உன் அப்பாம்மாக்கு இந்த விஷயம் தெரியுமா?” குருமூர்த்தி வேறு கேட்டார்.
சர்வாச்சார்யா அவரை நொடி நேருக்கு நேர் பார்த்தவன், “என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” என்று பாய்ந்தான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” அவர் அதட்ட,
“தெரியாது” என்றான்.
“ஏண்டா இப்படி இருக்க? அவங்க உனக்காக எத்தனை முறை தான் கஷ்டப்படுறது?”
“சரி என்ன செய்யலாம் சொல்லுங்க. எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்னன்னு என் வேலையை பார்த்துட்டு போயிடணுமா நான்?” என்று கைகட்டி நின்றான்.
“ஆமா அப்படித்தான் போகணும். பணத்துக்காக சண்டை போட்டு, என் வாழ்க்கையை என் கையாலே அழிச்சுகிட்ட இந்த மடையன் குருமூர்த்தி மாதிரி நீ வாழாத”
“சரி. அப்போ கோகுல், அவனுக்கென்ன பதில் சொல்லட்டும் நான்?”
“அவன் உன்கிட்ட பதில் கேட்க மாட்டான். நீயே குற்ற உணர்ச்சியில் பதில் தேடிட்டு அவன் மேல ஏண்டா சொல்ற?”
“ஆமா அப்படியே கூட வைச்சுக்கோங்க. என் குற்ற உணர்ச்சியை நான் ஒழிக்கணும்ன்னா அவனை நான் ஒழிக்கணும்”
“கேட்க மாட்ட இல்லை. எங்க யார் பேச்சையும் நீ கேட்க மாட்ட இல்லை”
“ம்ஹ்ம்” என்று சர்வாச்சார்யாவிடம் ஓர் விரக்தி புன்னகை.
“காயம் வாங்கினவன் கடைசி வரை வலியிலே வாழணும் இல்லை” என்றான்.
“ம்ப்ச். டேய் தம்பி”
“மற்ற எல்லாரையும் விட நீங்க என்னை புரிஞ்சுப்பீங்கன்னு நினைச்சேன். இல்லை. என்னை ஏமாத்திட்டீங்க. செகண்ட் டைம் என்னை ஏமாத்திட்டீங்க நீங்க!”
“நான் சொல்றதை கொஞ்சம் கேளு”
“அதெப்படி நான் நிம்மதியா தூங்கலாம், சந்தோஷமா சிரிக்கலாம். ம்ஹூம். கூடாது. எனக்கு அந்த ரைட்ஸ் இல்லை. முதுகுல குத்து வாங்கிட்டு, நெஞ்சை நிமிர்த்த நினைக்கலாமா நான்?”