IT போன்றுபல்வேறுநிறுவனங்கள்ஒரேகட்டிடத்தில்வேலைபார்க்கும்அமைப்பைகொண்டசாம்ராஜ்யம். “எம்பையர்எனும்டெக்பார்க்“
இப்போதைக்குஓர்கட்டிடம்மட்டுமேநடைமுறைக்குவருகிறது. அந்தஒன்றேசிலதளங்களைகொண்டபெரியகட்டிடம்என்பதால்நான்குமுதல்ஆறுபன்னாட்டுநிறுவனங்கள்வரை, அதில் தங்கள்அலுவலகத்தைஅமைத்துகொள்ளலாம்.
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னா போகுது. இங்க வேலை பார்க்கிறவங்களுக்காக நாம முறைப்படி பூஜை பண்ணனும்” என்று லிங்கம் சொல்லிவிட, நேற்றைய தினம் அதற்கான நாளாக அமைந்து போனது.
அடுத்த இரண்டு நாட்களில் திறப்பு விழா.
முதன் மந்திரி உட்பட பல அதிகார மையங்களுக்கு அழைப்பு விடுக்கும் பணி சென்று கொண்டிருந்தது.
சம்யுக்தா இருந்து தந்தைக்கு உதவ முடியா நிலை.
“அடுத்தும் லீவ் கேட்கணும், பெரிய வேலை இருக்காது. நான் பார்த்துகிறேன். நீ கிளம்பு” என்று குருமூர்த்தி பேச்சை ஏற்று விமான நிலையத்தில் அமர்ந்திருக்கிறாள் சம்யுக்தா.
அந்த நேரம் லிங்கம் அவளை போனில் அழைக்க, இவர் ஏன் கூப்பிடுறார்? சம்யுக்தா உடனே போன் எடுத்தாள்.
“கிளம்பிட்டியாமா?” என்று கேட்டவர், “உன் அப்பன்கிட்ட பேசு. அவனோட எனக்கு முடியலை” என்றார்.
“என்னாச்சுங்கய்யா?” சம்யுக்தா புரியாமல் கேட்க,
“சண்முகத்தை திறப்பு விழாக்கு கூப்பிட மாட்டேங்கிறான். அவன் தான் நம்ம தொகுதி அமைச்சர். அவனை கூப்பிடலைன்னா எப்படி?” என்று பொரிந்தார் லிங்கம்.
“நீ எப்படின்னா? மகளுக்காக இவ்வளவு பெரிய வேலை செய்றவன் சண்முகத்தை கூப்பிட மாட்டானா? நீ சொல்லு. அவன் கூப்பிடுவான்” என்றார் லிங்கம்.
“அய்யா” சம்யுக்தா விழித்தாள்.
“சண்முகம் நமக்கு எவ்வளவு உதவி செய்றான். இந்த வேலைக்கு கூட அப்ரூவல் எல்லாம் அவன் தலையிட்டு தான் வேகமா கிடைச்சது. உன் அப்பனுக்கு இதெல்லாம் புரியாது. நான் பணம் கொடுத்தேன்னு நிக்கிறான். பணம் மட்டுமே வேலை செய்யாது. சொல்லி வை” என்று லிங்கம் போனை வைக்க, சம்யுக்தா தலை பிடித்து கொண்டாள்.
ஏற்கனவே சம்யுக்தா திறப்பு விழா அழைப்பை முன்னிட்டு குருமூர்த்தியின் கோவப்பார்வையை சந்தித்திருந்தாள்.
“இவங்க எல்லாரையும் கூப்பிட்டிருக்கோம்” என்று குணா ஓர் லிஸ்ட்டை பெண்ணின் கையில் கொடுத்தான்.
“வசுந்தரா மேடம்?” என்று சம்யுக்தா அவர் பெயர் இல்லாததில் சட்டென கேட்க,
“அவங்களை ஏன் கூப்பிடணும்?” என்ற கேள்வியுடன் குருமூர்த்தி மகளின் முன் நின்றார்.
‘ஏன் கூப்பிடணுமா?’ சம்யுக்தா தந்தையின் கேள்வியில் ஆச்சரியம் கொண்டாள்.
“அவங்க நமக்கு செஞ்சதுக்கு மேலா, நாம அவங்களுக்கு செஞ்சுட்டோம். இனி அவங்களுக்கும், நமக்கும் என்ன இருக்கு?” என்று கேட்டார் குருமூர்த்தி.
மொத்தமா அவரிடம் இருந்து தொடர்பை துண்டித்து கொண்ட தந்தைக்கு என்ன பதில் சொல்வாள் மகள்.
வசுந்தரா இரண்டொரு முறை ஊட்டி வந்த போதும், குருமூர்த்தி அவருக்கான மரியாதையில் குறை வைக்கவில்லை. ஆனால் அப்பட்டமான விலகலை காட்டினார். வசுந்தரா என்ன புரிந்து கொண்டாரோ அதன் பின் அவரும் தொடர்பில் இருந்து விலகி கொண்டார்.
இதற்காகவாவது தந்தை அவரை அழைப்பார் என்று சம்யுக்தா நினைத்திருக்க, குருமூர்த்தி முடிந்தது முடிந்தது தான் என்று செயலில் காட்டுகிறார்.
“உண்மையிலே நமக்காக சந்தோஷ படுறவங்க, அங்க இருந்தே பட்டுக்கட்டும்” என்றார் தந்தை.
வசுந்தராவிற்கே அதுதான் என்றால் சண்முகத்தை மட்டும் எப்படி குருமூர்த்தி அழைப்பார்? சம்யுக்தாவிற்கு புரியவில்லை.
லிங்கம் சொல்வதும் நியாயம் தான். ஆனால் குருமூர்த்தி முன் எத்தகைய நியாயங்களும் எடுபடாது என்பதே உண்மை!
“மணி அங்கிள்கிட்ட பேசணும். அவர் பார்த்துக்கட்டும். எனக்கு இந்த தலைவலி வேண்டாம்” சம்யுக்தா ஓர் முடிவெடுத்த பின்னே அவளுக்கு நிம்மதியானது.
அவளின் விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொல்லியிருக்க, சம்யுக்தா போனில் தன் கவனத்தை வைத்தாள்.
“என்னாச்சு? யார் வராங்க?” என்று அக்கம், பக்கம் குரல்கள் கேட்டதில் சம்யுக்தா போனில் இருந்து தலை நிமிர்த்தினாள்.
இவள் இருக்கும் பகுதியில் ஓர் பரபரப்பு! காவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் படபடவென அந்த பகுதி முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டார்கள்.
தலைவர்கள் யாராவது வருவார்கள் என்று போனை பார்க்க போனவள், சட்டென ஏதோ உறுத்த நிமிர்ந்தாள்.
இந்த உடை! பாதுகாப்பு அதிகாரிகள் அணிந்திருக்கும் ஆடை, அதில் இருக்கும் அடையாளம் சம்யுக்தா கண்களை விரிய வைத்தது.
நோ! நோ! அவளின் இதய துடிப்பு வேகம் எடுத்தது.
‘அவங்க குடும்பத்துல இருந்து வேற யாராவது வருவாங்க’ அவளின் மனது வேகமாக சமாதானம் சொன்னது.
அப்படித்தான் இருக்கணும். இத்தனை வருஷம் பார்வையில் படாதவன் இனியா படப்போறான்!
ம்ஹூம். இத்தனை அடுக்கு பாதுகாப்பு அவனுக்கு மட்டும் தான்!
சிவப்பிரகாசத்தின் முடிசூடா ராஜா மகனுக்கான பாதுகாப்பில் எக்கச்சக்க கெடுபிடி.
அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்பு? என்று மீடியா வரைக்கும் இந்த விஷயங்கள் அலசப்பட்டிருக்கிறது.
சென்னைக்கு ஏன் வரான்? அதுவும் இப்போ ஏன்? பெண் வேர்வையில் வழுக்கிய போனை இறுக்கமாக பிடித்தாள்.
சிவபிரகாசத்தின் குரூப் கம்பெனி ஒன்றும் எம்பையரில் தளம் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்கள்.
குருமூர்த்தி நொடி கூட யோசிக்காமல் தன் மறுப்பை உடனே தெரிவித்துவிட்டார்.
குணா சொல்லித்தான் சம்யுக்தாவிற்கு இந்த விஷயம் தெரியும். அதுவும் பெங்களூர் கிளம்புவதற்கு சில நிமிடம் முன்பு.
அதற்கு முன்னே தெரிந்திருந்தால் மட்டும் சம்யுக்தா என்ன செய்திருக்க முடியும்? குணா சொன்னதை கேட்டு கொண்டு வந்துவிட்டாள். ஆனால் இப்போது அதுவே பெண்ணை உறுத்துகிறது.
இல்லை அவனா மட்டும் இருந்திட கூடாது! அவளின் வேண்டுதல்கள் யாவும் பொய்த்து போனது.
சம்யுக்தாவிற்கு நேரெதிராக வந்து கொண்டிருக்கிறான் சர்வாச்சார்யா!
அதிகமே மாறிவிட்டான்!
இத்தனை வருடங்களாக புகைப்படங்களில் கூட அவனை பார்த்ததில்லை.
மீடியாவிற்கும் அவன் முகம் காட்டுவதில்லை எனும் போது எங்கு சென்று பார்க்க?
சம்யுக்தா கலங்கும் கண்களை சிமிட்டி கொண்டவள், முகத்தை திருப்பி கொண்டாள்.
போதும். பார்த்தாச்சு இல்லை. அடங்கு. தன்னை தானே திட்டி கொண்ட பெண்ணை, கடந்து சென்றிருந்தான் நல்லவன்.
அவனுக்கான வழி பாதுகாப்பு அதிகாரிகளால் சூழப்பட்டிருந்தது.
சம்யுக்தாவிற்கு தன்னை சமாளித்து கொள்ள பல நிமிடங்கள் ஆனது!
மின்னலாக தன்னை வெட்டி சென்றவனின் சட்டையை பிடித்து உலுக்கும் கோவமும் பெண்ணுக்கு உண்டு!
ஏன் கோவம்? தெரியாது. நீ வேண்டாம் என்றவளும் இவள் தான். ஆனால் கடந்து சென்றுவிட்டவன் மேல் கோவம் கொள்கிறாள்! விசித்திரம்!
சம்யுக்தா ஓய்வறை சென்று முகத்தை தண்ணீரால் துடைத்து கொண்டு வந்தாள்.
பெண்ணின் விமானத்திற்கான அழைப்பு வந்துவிட்டது.
அப்போது சம்யுக்தா போன் ஒலிக்க, குணா.
“என்ன குணா?” என்று சம்யுக்தா எடுத்து கேட்க,
“பிளைட் ஏறலை தானே நீ?” என்று படபடத்தான் குணா.
“என்னாச்சு?” சம்யுக்தா அதிரும் இதய துடிப்புடன் கேட்டாள்.