சம்யுக்தா தெளிந்த முகத்துடன் பயிற்சிக்கு வர, நம் நாயகனை மட்டும் காணவில்லை.

“கூட்டிட்டு வரட்டாண்ணா” என்று மணி கேட்க,

“டாக்டரை வர சொல்லியிருந்தேன். வந்துட்டாரா பாரு” என்றார் குருமூர்த்தி.

மருத்துவர் வந்துவிட்டார் என்று தகவல் வர, மணி அவருடன் சென்று சர்வாச்சார்யாவை பரிசோதித்து அவன் கைக்கட்டை பிரித்தனர்.

“இவ்வளவு காலையில தான் இதையெல்லாம் செய்வீங்களா?” என்று தூக்கம் கெட்ட கடுப்பில் கேட்டான் சர்வாச்சார்யா.

“பயிற்சிக்கு நேரம் ஆச்சு” என்று மணி சொல்ல,

என்ன நினைத்தானோ உடனே பயிற்சி இடத்துக்கு வந்தவன், “இப்போ சண்டைக்கு வாங்க” என்று மாசிலாமணியிடம் சிலம்பத்தை தூக்கி போட்டான் சண்டைக்காரன்!

“அதுப்பை பாரேன்” என்று மணி திரும்பி குருமூர்த்தியை பார்க்க, விடுடா என்றார் அவர் கண்ணசைவில்.

“என்ன? ம்ம். எடுங்க” என்று சிலம்பத்தை அவர் முகத்துக்கு நேரே சுற்றினான். நேற்று வாங்கிய அடியை கொடுத்துவிட வேண்டும்!

சம்யுக்தா அவன் செயலில் கடுப்பானவள், “ஸ்ஸ்ஸ். என்ன பண்றீங்க? அவர்கிட்ட உங்களால எப்போவும் ஜெயிக்க முடியாது. கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அவனை அடக்கினாள்.

“நீ எப்படி அந்த முடிவுக்கு வரலாம். நான் கண்டிப்பா இவரை ஜெயிப்பேன்” என்று நெஞ்சை நிமிர்த்தினான்.

“மாஸ்டரை நாம ஜெயிக்க நினைக்கிறது சரியா முதல்ல?” என்று சம்யுக்தா அவனுக்கு புரிய வைக்க முயல,

“மாஸ்டர் ஸ்டூடண்ட்டை அடிக்கிறது மட்டும் சரியா?” என்று இவன் கேட்டான்.

“விதண்டாவாதம் பண்ண கூடாது. நாம ஸ்டூடன்ட். அவங்க நமக்கு குரு, அவங்களுக்கு நாம மரியாதை தான் கொடுக்கணுமே தவிர சண்டைக்கு நிக்க கூடாது. அதை முதல்ல ஞாபகம் வைச்சுக்கோங்க” என்று சம்யுக்தா கண்டிக்க,

“அடேங்கப்பா எனக்கு மட்டும் தான் இந்த ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பியா நீ? உன் மணி அங்கிளுக்கு இதெல்லாம் சொல்ல மாட்டியா?” என்று விடாமல் கேட்டான்.

“பாப்பா. நீங்க விடுங்க” என்று மணி சொல்ல,

“பாப்பா நீ பேசு. அதென்ன இவர் விடு சொல்றது?” என்றான்.

“பாப்பா சொல்லாதீங்க” என்று சம்யுக்தா பல்லை கடிக்க,

“அவர் மட்டும் சொல்றார்” என்றான் அவன் கண்களை சுருக்கி.

“அவர் சின்ன பிள்ளையில் இருந்து அப்படித்தான் கூப்பிடுவார்” என்று சம்யுக்தா பயிற்சிக்கு செல்ல,

இவனும் பின்னாலே சென்று அவள் பயிற்சி எடுப்பதையே தானும் எடுத்தபடி, “இப்போவும் நீ சின்ன பொண்ணு தான்” என்றான்.

“நான் காலேஜ் படிக்கிறேன், செகண்ட் இயர் பொண்ணு நான்”

“அப்படியும் என்னை விட நீ சின்னவ தான். எனக்கு என்ன வயசு சொல்லு பார்ப்போம்”

“தெரியாது”

“உன்னை விட மூணு வயசு பெரியவன் நான்”

“பொய். மலைமாடு மாதிரி இருக்க நீ. என்னை விட மூணு வயசு தான் பெரியவனா?”

“சம்யுக்தா” குருமூர்த்தியிடம் இருந்து கண்டிப்பு குரல்.

மணியும், அப்பாவும் அங்கிருப்பதை உணர்ந்து சம்யுக்தா நுனி நாக்கை கடித்து கொண்டவள், “ஸாரி” என்றாள்.

“நல்லா இருக்கே இது” என்று மிதப்பாக புருவம் தூக்கியவன், “இன்னொரு முறை ஸாரி சொல்லு கேட்போம்” என்றான்.

சம்யுக்தா முகத்தை திருப்பி கொள்ள, சர்வாச்சார்யா மெலிதாக புன்னகைத்தான்.

அந்த நேரம் குருமூர்த்தியின் போன் ஒலித்தது. லிங்கம் தான் அழைத்திருக்க பேசி வைத்த குருமூர்த்தி, “சீக்கிரமே நீங்க வீட்டுக்கு போயிடலாம். உங்க பிரச்சனை முடிய போகுது” என்று சர்வாச்சார்யாவிடம் சொன்னார் குருமூர்த்தி.

“இன்னைக்கு என்ன கிழமை?” என்று சட்டென கேட்டான் சர்வாச்சார்யா.

அப்பா என்ன சொல்றார், இவர் என்ன கேட்கிறார் பாரேன்! சம்யுக்தா அவனை அடிக்கண்ணால் முறைக்க,

“கேட்கிறதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் முறை” என்றான் அவன்.

சம்யுக்தா சட்டென தன் முறைப்பை மாற்றி, அன்றய கிழமையை சொன்னாள்.

“ஓஹ்” அவன் எண்ணங்கள் வேறெங்கோ சென்றுவிட்டது.

“அப்படியென்ன யோசனை?” அவன் சுருங்கிய நெற்றியை பார்த்தபடி சம்யுக்தா கல்லூரி கிளம்ப சென்றாள்.

குருமூர்த்திக்கும் ஒரு வேலை சொல்லியிருந்தார் லிங்கம். “மணி நாம கிளம்பணும்” என்றார் குருமூர்த்தி.

சர்வாச்சார்யா அமைதியாக அவன் அறைக்கு திரும்ப, “இவருக்கு என்னாச்சு? சந்தோஷமே படலை” என்று கேட்டார் மணி.

“நாம அப்பறமா அதை பத்தி கேட்போம்” என்று குருமூர்த்தி உடனே லிங்கம் ஒப்படைத்த வேலையில் இறங்கினார்.

அன்றய இரவில் சம்யுக்தா ரகசிய அறைக்கதவை தட்டினான் சர்வாச்சார்யா. கட்டை கழட்டியாச்சே, அப்புறம் என்ன? சம்யுக்தா தானே சென்று கதவை திறந்தவள், “என்ன புதுசா? தடுக்குன்னு தானே திறந்துட்டு வருவீங்க” என்று கேட்க,

“பதில் சொன்னா டென்க்ஷன் ஆகிடுவ. வேண்டாம்” என்றான் நல்ல பிள்ளையாக.

“நான் டென்ஷன் ஆகணும்ன்னே வேலை பார்க்கிற ஆள் நீங்க? இப்போ மட்டும் என்ன?”

“இனி தட்ட மாட்டேன் போதுமா?”

“இப்போ ஏன் தட்டுனீங்க?”

“நேத்து நைட் தான் நீ வயசு பொண்ணுன்னு எனக்கு புரிஞ்சது. அதான்”

சம்யுக்தா கோவமாகி கதவை அடைக்க போக, “ஹேய், ஹேய். பொறுடி” என்று சர்வாச்சார்யா மூட விடாமல் அவளின் அறைக்குள் நுழைந்தான்.

“குருமூர்த்தி மக ஒரு பொண்ணுன்னு எனக்கு புரிய வைக்காதது உன் தப்பு. என்னை எகிறி, எகிறி அடிச்சவ தானே நீ? அப்புறம் என்ன?” என்று உதட்டை சுளித்தான்.

“ம்ப்ச். உங்களுக்கு ஏன் புரிய வைக்கணும்? புதுசா ஏதும் பேச கூடாது”

சர்வாச்சார்யா அவளை ஆழ்ந்து பார்த்தவன், “இனி நீயும் என் முன்னாடி அழுதிடாத” என்றான்.

“மாட்டேன்” என்று சம்யுக்தா வேறெங்கோ பார்த்தாள்.

நேற்றிரவு ஏன் அப்படி என்று இருவருக்கும் புரியவில்லை. ஆனால் இருவருக்கும் இடையில் ஒரு மின்னல் வெட்டி சென்றது மட்டும் உண்மை.

“சாப்பிட கொடு” என்று அமர,

“உங்க வீட்டுக்கு போக போறீங்க. அதனால் ஸ்பெஷல் ஸ்வீட்” என்று சம்யுக்தா வாங்கி வந்ததை எடுத்து கொடுத்தாள்.

“இது ஒன்னு தான் குறை” சர்வாச்சார்யா சலித்து கொண்டான்.

“ஏன் உங்களுக்கு சந்தோசம் இல்லையா?”

“இல்லை”

சம்யுக்தா ஏன் என்று கேட்கவே பயந்தாள். நிச்சயம் ஏதாவது ஏடாகூடமாக தான் காரணம் வரும்.

அமைதியாக இனிப்பை உண்டவன், அவளுக்கும் நீட்டினான்.

“எனக்கு வேணாம்” என்று அவன் நீட்டிய கைகளில் அவள் உடனே மறுத்தாள்.

“நீ ஊட்டினதை நான் வாங்கினேன்” என்று நேற்றிரவை நினைவு படுத்த,

“அது. அது உங்களை சமாதானம் செய்ய” என்றாள் சம்யுக்தா.

“இது எனக்காக வாங்கு” என்றவன் அவள் உதட்டில் திணித்தான்.

சம்யுக்தா அவன் திணித்ததை முறைத்து கொண்டே உதட்டுக்குள் உள்ளிழுக்க, சர்வாச்சார்யா பார்வை தடுமாறி போனது.

“இனிமேல் இப்படி பண்ணாதீங்க?” என்று சம்யுக்தா எச்சரிக்க,

“நீயும் இனிமே  இப்படி பண்ணாத” என்றான் இவளுக்கு மேல்.

“நான் என்ன  பண்ணேன்?”

“நான் டைவர்ட் ஆகிறேன். எனக்கு பிடிக்கலை”

“பிடிக்காம இங்க எதுக்கு இருக்கீங்க? உங்க ரூமுக்கு போங்க”

“அங்கேயும் பிடிக்கலை” என்றான் சோர்ந்து போனவனாக.

நினைத்த எதையும் செய்ய இயலவில்லை!

“வீட்டுக்கு போனா கண்டிப்பா என்னை இங்க வைக்க மாட்டாங்க. படிப்பை காரணம் காட்டி எதாவது வெளிநாட்டுல தள்ளிடுவாங்க. என்ன செய்ய நான்” முனகினான்.

சம்யுக்தாவிற்கு தெளிவாக கேட்கவில்லை. ஆனால் அவன் முகம் காட்டிய பாவனை அவளை அசைக்க ஆரம்பித்தது.

“என்னாச்சு?” என்று கேட்டாள்.

எதுவும் ஆகலையே? சர்வாச்சார்யா அவளின் முகம் பார்க்காமல் அறைக்குள் விழிகளை ஓட்டினான்.

“உன் சாம்ராஜ்யத்துக்குள் முதன் முதலா வந்த ராஜா நான்தானே?” என்று கேட்டான்.

“ஆஹ்” சம்யுக்தா விழிகள் விரிந்தது.

“ராஜா தானே நான்?” என்று அவன் திரும்பி கேட்க,

“இல்லை” என்றாள் சம்யுக்தா தெளிந்து.

“உன் வயசு என்ன சொன்ன?”

“உங்களுக்கு எதுக்கு?”

“தெரியலை. தெரிஞ்சுக்க தோணுச்சு” என்று தோள்களை குலுக்கி கொண்டான்.

“சாப்பிட்டீங்கன்னா கிளம்புங்க. எனக்கு படிக்கணும்”

“நீ படி. நான் இங்கேயே கொஞ்ச நேரம் இருக்கேன்”

“இல்லை எனக்கு டிஸ்டர்ப் ஆகும்”

“கொஞ்ச நேரம் ப்ளீஸ். தனியா இருந்து யோசிச்சு, யோசிச்சு பைத்தியம் பிடிக்குது”

“அப்படியென்ன யோசனை? ஏன் உங்களால அமைதியா இருக்க முடியாதா?”

“கண்ணுக்குள்ள நிக்கிறான்? எப்படி அமைதியா இருக்க?”

“யாரு. உங்க ப்ரெண்டா?” சம்யுக்தா தயக்கத்துடன் கேட்க,

“ம்ம்” என்றவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் தோள் மேல் சாய்ந்து கொண்டான்.

ஆறுதல் தேடி தான் வந்திருக்கிறானா?

“சத்தியத்தை காப்பாத்த முடியாம போனா என்ன ஆகும்?” என்று சாய்ந்தபடியே கேட்டான்.

சம்யுக்தாவிற்கு எதிலோ சிக்கி கொள்ளும் உணர்வு! ம்ம். கூடாது. உள்ளுணர்வு அவளை எச்சரித்தது.

“நான் எதாவது செய்யணுமா?” வார்த்தைகள் அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல் வெளிவந்துவிட்டது.

சர்வாச்சார்யா எதுவும் கேட்டு விடுவானா என்று சம்யுக்தா இதயம் அடித்து கொண்டது.

அவன் கேட்கவில்லை. எதையும் கேட்கவில்லை.  ஆனால் அவள் கையை தன் உள்ளங்கை பிணைக்க கோர்த்து கொண்டான்.

நிமிடம் அப்படியே சென்றது. சம்யுக்தா கழுத்தோரம் வேர்க்க, “ஸ்ஸ்” என்று ஊதினான்.

“என். என்ன செய்ற?” என்று அவன் தலையை தள்ளி விட்டாள்.

சர்வாச்சார்யா கண்களை இறுக்கமாக மூடி திறந்தான்.

என்ன பண்ணிட்டிருக்கேன் நான்?

கேளுடா? அவகிட்ட பேசு, எப்படியாவது அவளை சம்மதிக்க வை! அவனுள்ளம் கூப்பாடு போடுகிறது.

ஆனால் ஒற்றை வார்த்தை வெளிவரவில்லை. எது என்னை தடுக்கிறது?

இவள்? இவள்தான் என்னை தடுக்கிறாள்!

தரையில் கையை ஓங்கி அடித்தான்.

“ஏய் என்ன பண்ற?” சம்யுக்தா பதறி தடுப்பதற்குள் சில முறை அடித்துவிட்டான்.

முதன்முதலாக இங்கு வந்த போது தரையில் அவன் அடித்த அடிகள் சம்யுக்தாவின் நினைவிற்குள் வந்தது.

அதே ஆக்ரோஷம், கோவம், வேகம்!

அப்படி என்ன தாண்டா வேணும் உனக்கு? சம்யுக்தா அவன் கைகளை தனக்குள் அடக்கி  கொண்டாள்.

“நான் ஓகே” என்றான்.

சம்யுக்தாவின் பார்வை அவனை தொந்தரவு செய்ய, “பார்க்காதடி” என்றான்.

“நான், எனக்கு ஒரு வேலை செய்யணும். ஆனா முடியாது போல. அதான் டென்சன். நீ ரிலாக்ஸா இரு” என்று தானே அவள் பார்வைக்கு பதில் கொடுத்தான்

அவன் கசங்கிய முகம், இவளை தடுமாற வைத்தது.

“உன் பிறந்த நாளுக்கு ஷாப்பிங் பண்ண கோயம்பத்தூர் போகணும். ரெடியா இரு” என்றார் குருமூர்த்தி.

கோயம்பத்தூர் என்றதும் சர்வாச்சார்யா அவளுக்குள் தடதடவென ஓடினான்.

சம்யுக்தா அவன் கொடுக்கும் அதிர்வை சமாளிக்க முடியாமல் திணறினாள்,