முறைத்தபடி நின்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை ஒரு கட்டத்திற்கு மேல் ரசனை பார்வையாக மாற, தன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவளும் அப்போது தான் அவன் முக மாற்றத்தை கவனித்தாள்.
‘இவன் முறைச்சு பார்த்தாலே என்னால இவன் மூஞ்ச விட்டு கண்ணை எடுக்க முடியாது. இதுல துரை ரசிச்சு வேற பார்க்குறார் . இன்னைக்கு மட்டுமாவது கெத்தை மெயின்டெயின் பண்ணுடி தாரா. இவனைப் பார்த்து ஜொள்ளு விடுறன்னு மட்டும் தெரிஞ்சது அப்படியே கோழியை அமுக்குற மாதிரி அமுக்கிடுவான்’ என்று தன் போக்கில் பேசி கொண்டிருக்க, அவனோ அவளுக்கு முன்பாக வந்து வழியை மறைத்து நின்றிருந்தான்.
“பேசுங்க, யார் வேண்டாம்னு சொன்னா? நான் கிளம்புனதுக்கு அப்பறம் தனியா உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுங்க டாக்டர்” என்றாள் நக்கலாய்.
கைகளை கட்டியபடி கதவோடு ஒட்டி நின்றவனை பார்த்தும் பார்க்காதவள் போல் பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு கொண்டான் அகன். அவளின் செய்கை பழைய தாராவை ஒத்திருக்க, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன்,
“யுகா” என்றபடி கைகளை நீட்டினான்.
“ரீல் அந்து போய் நாலு வருஷம் ஆச்சு. அதே ரீல் வச்சு இனி எந்த படமும் ஓட்ட முடியாது” என்றாள் கடுப்பாய்.
“நாலு வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே அகன் தான். அதே பீலிங்க்ஸ் தான். அதே லோன்லினஸ் தான். எதுவுமே மாறலை” என்றவனை அதிர்ந்து பார்த்திருந்தாள்.
“உங்களுக்கு ரப் அன்ட் டப்பா நடந்துக்குற ஹஸ்பன்ட் மெட்டீரியல் தானே பிடிக்குது. ஏன் உனக்கும் கூட அப்படித்தானே? நான் ரப் அன்ட் டப்பா இருந்தப்ப விழுந்து விழுந்து சைட் அடிச்ச. இப்போ குணமாகி கொஞ்சம் குணமானவனா மாறினதுக்கு அப்பறம் பிடிக்காம போய்டுச்சே. இவ்வளவுக்கும் என்னோட மிஸ்டேக்ஸ நான் அக்சப்ட் பண்ணி உன் கால்ல கூட விழுந்துட்டேன். இதுக்கு மேல நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குற யுகா. ஒருவேளை உன்னை நான் அமைதியாவே ஹேண்டில் பண்றதால என்னை எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு நினைச்சுட்டியோ?” என்றவனின் குரலில் இருந்தது எந்த மாதிரியான உணர்வு.
“நான் தான் பேசணும்னு சொல்றேன்ல. ஏன்டி என்னை டார்ச்சர் பண்ற?” என்று கத்தியவன்,
“இப்ப என்ன உனக்குப் போகணும் அதானே..! போ..தாராளமா போ. அப்படியே போய்டு. அகன்னு ஒருத்தன் இருந்தான் இப்போ செத்துட்டான்னு நினைச்சுட்டு போ” என்று அவன் கத்திய கத்தில் அவள் மிரண்டு விழிக்க, கோபமாய் சென்று சோபாவில் தலையைத் தாங்கியபடி அமர்ந்தவனுக்கு முற்றும் முதலாய் எல்லாமே வெறுத்துப் போனது.
“என்கிட்ட இப்படி எல்லாம் பேசாதிங்க அகன்” என்றவளின் குரல் பிசிர் அடித்தது.
“வேற எப்படித்தான் பேசச் சொல்ற தாரா. நான் அமைதியா பேசுனாலும் பிடிக்கலை,பொறுமையா பேசுனாலும் பிடிக்கலை, கோபமா பேசுனாலும் பிடிக்கலை. மொத்தத்துல நான் பேசுறதே உனக்குப் பிடிக்கலை. இன்னும் எத்தனை நாளைக்கு அந்த நாலு வருஷத்தையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க போற? நான் ஆஸ்திரேலியா போகாமையே இருந்திருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்திருக்க முடியாதுன்னு உனக்குப் புரியுதா இல்லையா? மெடிசன் படிக்கிறது என்ன அவ்வளவு ஈசியா தெரியுதா உனக்கு? அதுவும் எம்டி பண்றது? உனக்கு எந்த வகையிலும் டிஸ்ட்ராக்ஷன்ஸ் இருக்கக் கூடாதுன்னு நினச்சது தப்பா? அப்படி முழு மூச்சா படிச்சதால தான் நீ இன்னைக்கு யுகந்தாரா அனஸ்தீசியாலஜிஸ்ட் கோல்ட் மெடல். அது புரியுதா இல்லையா உனக்கு?” என்றவன்,
“சரி, தப்பு என் மேல தான்னு சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டேன். இனி நான் என்ன தான் பண்ண? ஐ கான்ட் தாரா ஐ கான்ட். இருபத்தி அஞ்சு வருஷமா நான் தனியாத்தான் இருக்கேன். பதினோரு வயசுல ஹாஸ்ட்டல் போனேன். இதோ இப்போ வரைக்கும் ஹாஸ்ட்டல் லைப் மாதிரி தான். தனியா இருந்தப்பக் கூட நான் லோன்லியா பீல் பண்ணதில்லை. ஆனா இப்போ பீல் பண்றேன். நான் பேசாம இருந்தப்போ கூட இவ்வளவு பிரச்சனையை பேஸ் பண்ணலை” என்று மூச்சு விட்டவன்,
“நீ நம்பலைன்னாலும் அது தான் நிஜம். பல வருஷம் பேசாம இருந்ததாலையோ என்னவோ நான் என்ன நினைக்கிறேன்னு எனக்கு கோர்வையா சொல்ல வரலை. உன்னை மாதிரி எனக்கு பேசவும் வரலை. உடனே ஒரு டாக்டர் இப்படியான்னு தூக்கிட்டு வராதா? யாரா இருந்தா என்ன? நானும் சாதாரண மனுஷன் தானே. இந்த இடத்துக்கு அவ்வளவு ஈசியா நான் வந்துடலை. எல்லாரும் வெளி உலகத்தோட மட்டும் தான் போராடுறாங்க. ஆனா, நான் என்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துறதுக்கும் சேர்த்து போராடியிருக்கேன். இதுக்கு மேல என்னால முடியும்னு தோணலை. ஐ கான்ட்” மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான். பார்வையோ ஒரே இடத்தை வெறிக்க, அவனைப் பார்த்திருந்த தாராவிற்கு தான் மனதிற்குள் பயம் வந்திருந்தது.
அரை மணி நேரம் அப்படியே செல்ல, நின்று கொண்டிருந்தவளுக்கு கால் வலி வந்தது தான் மிச்சம்.
“எனக்கு கால் வலிக்குது. அதோட பசிக்கவும் செய்யுது” என்றாள் பாவமாய்.
“நீ பண்ண சாதமும் ரசமும் ஓகே வா. இல்லை வேற ஏதாவது பண்ணித் தரட்டுமா?” என்றான் இயந்திரக் குரலில்.
“நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து இன்னும் குளிக்கவே இல்லை” என்றாள்.
“இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும்? உன்னைக் குளிக்க வைக்கணுமா?” என்றான் சட்டென்று.
“ங்கான்” என்று அவள் பார்த்திருக்க,
“குளிக்கணும்னா போய் குளிச்சு வர வேண்டியது தானே?”என்றான்.
“இங்க பாருங்க அகன், இவ்வளவு கடுப்பால்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் எங்க வீட்டுக்கே போறேன்” என்றாள்.
“அம்மா தாயே? இது தான் உன் வீடு. சொந்த வீட்டுக்கே கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்த ஒரே ஆளு நீயாத்தான் இருப்ப” என்றான்.
“இது என் வீடுன்னு நான் நினைச்சா பத்தாது. அந்த பீலிங்க நீங்க தான் எனக்கு குடுத்துருக்கணும்” என்றாள்.
“எங்கடி குடுக்க விட்ட நீ?” என்றவனுக்கு சோர்வாய் இருந்தது. அவன் முகம் பார்த்தவள் வாயை மூடிக் கொண்டாள்.
“எனக்கு டிரஸ் இல்லை” என்றாள்.
“அதெல்லாம் இருக்கு” என்றான்.
அவனை முறைத்தபடி அறைக்குள் சென்றவள்,
‘பம்பரக்கட்டை மண்டையனுக்கு வீட்டை செட் பண்ண தெரிஞ்ச அளவுக்கு பொண்டாட்டியை செட் பண்ண தெரியலை’ என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க,
“கட்டிகிட்டதுக்கே இங்க கண்ணா முழி பிதுங்குது. இதுல செட் பண்ற வேலையெல்லாம் நமக்கு செட்டாகாது” என்றபடி வந்து நின்றவன்,
“இதுல இருக்கு உனக்கு தேவையான டிரஸ்” என்றான்.
“இதெல்லாம் எப்போ வாங்குனிங்க?” என்றாள்.
“ம்ம்..! அன்னைக்கு ஷாப்பிங் மால் போனியே அன்னைக்கு உன் பின்னாடியே வந்து, நீ வாங்குன சைஸ்லயே வாங்கிட்டு வந்தேன். இந்த சந்தேகம் வேறயா உனக்கு?” என்றான் முறைப்பாய்.
“இந்த ஒரு விஷயத்துல மட்டும் உங்களை நான் எப்பவுமே சந்தேகப்படவே மாட்டேன் அகன்” என்றவளை அவன் புரியாமல் பார்க்க,
“கட்டுன பொண்டாட்டியவே கரெக்ட் பண்ணத் தெரியலை. இதுல எங்க இருந்து இன்னொரு பிகரெல்லாம்?” என்று நக்கலாய் சொல்லி விட்டு செல்ல,
“இவளை” என்றவனுக்கு கோபம் குறைந்து சிரிப்பு வந்திருந்தது.
‘என்னை டேமேஜ் பண்றதுக்கு இவ ஒருத்தியே போதும். அரைக்காப்படி உலக்கு சைஸ்ல இருந்துகிட்டு இவ போடுற போடு இருக்கே சாமி” என்று எண்ணியவனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் அவன் குரல் மட்டும் இல்லாமல் அவள் குரலும் சேர்ந்து ஒலித்தது மனதிற்கு கொஞ்சம் இதமாக இருந்தது. உடல் சோர்வையும் மீறி சிறு உற்சாகம்.
“எனக்குத் தான் பீவர். உனக்கு இல்லை யுகா. அது மட்டுமில்லாம பூமி அங்கிள் வெண்ணெயும் நெய்யுமா சேர்த்து குடுத்து வளர்த்திருக்காரு. அப்போ நானும் அப்படி பார்த்துக்கணும்ல” என்றான்.
“இது என்னை கிண்டல் பண்ற மாதிரியே இருக்கு” என்றாள்.
“மாதிரி என்ன? கிண்டலே தான்” என்றவன் சிக்கனை வைத்து எதையோ செய்து கொண்டிருந்தான்.
“என்ன பண்றிங்க? பார்க்கவே நல்லா இருக்கு” என்றாள்.
“சிக்கன் பார்மிகியானா” என்றான்.
“என்ன இவ்வளோ சீஸ் போடுறிங்க?” என்றாள்.
“ஏன் மேடம் இதுக்கு முன்னாடி இவ்வளவு சீஸ் சாப்பிட்டதே இல்லையா?” என்று அவன் கேட்க,
“அப்படி ஒன்னு இருக்கோ” என்றவள்,
“அது எப்படி அகன் இந்த யு டூப் சேனல்ல சமைக்கிற மாதிரி இவ்வளவு கிளீனா சமைக்கிறிங்க? நீங்க எப்பவுமே இப்படித்தானா?” என்றாள் ஆச்சர்யத்துடன்.
அவளுக்கு சிறு புன்னகையை மட்டும் பதிலாய் கொடுத்தவன் அனைத்தையும் தயார் செய்து ஓவனில் வைத்திருந்தான்.