“அண்ணனுக்கு சொல்லியாச்சு., அவன் தானே மிதி வாங்கப் போறான்., வேற யாருக்கும் தெரியாது”., என்று சொல்லிவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டு சென்றாள்.
இவள் உள்ளே செல்லும் போது நந்தன் உள்ளே இல்லை என்ற தைரியத்தில் போனை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு தன்னுடைய உடைகளை அடங்கிய பையை பார்த்தாள்.,
நைட் டிரஸ் இருக்குமான்னு தெரியலையே என்று பார்த்தவள்., இருந்ததை எடுத்து மாற்றிக் கொண்டு படுத்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் போதே நந்தன் வந்துவிட அமைதியாக ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.
உள்ளே வந்தவன் கதவை தாழிட்டு அவன் சுற்றுமுற்றும் பார்க்க இவளோ அவனை திருதிரு என்று பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்து..,
அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு., நேற்று ஷியாம் சொன்னது தான் ஞாபகம் வந்தது.., ‘இதுக்கு பேரு தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறது தான்’., என்று இருந்தாலும் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்.., “ஓகே தொந்தரவு பண்ணல” என்று சொல்லவும்.
“அப்புறம் உங்க வீட்ல என்ன சொல்லி அனுப்பினாங்க., மேலே கொண்டு வந்து விடும் போது என்ன சொன்னாங்க” என்றான்.
“எனக்கு தெரியல.., ஆனா மே பி வாய்ப்பு இருக்கு”., என்று சொல்லவும்.
சற்றுநேரம் இருவருக்கிடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமலிருந்தது..,
அதன்பிறகு அவள் தான் மெதுவாக “ஒன்னே ஒன்னு கேட்கணும்”., என்று சொல்லவும்.,
“என்ன சொல்லு”., என்றான்.
“இல்ல எனக்கு இந்த மாதிரி புடவையோட தூங்கி எல்லாம் பழக்கம் கிடையாது.., நான் நைட் டிரஸ் மாத்திக்கணும்”., என்று சொல்லும் போது
“மாத்திக்கோ., இதெல்லாமா கேட்பாங்க”., என்றான்.
“நைட் பேண்ட்ஸ் தான்”.., என்று சொல்ல.,
“போட்டுக்கோ., இங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க”., இதுல யாரு சொல்றதுக்கு என்ன இருக்கு.., எங்க ஸ்வேதா அப்படித்தான் போடுவா.., இப்பதான் பேபி வந்ததுக்கு அப்புறம் தான் மாறியிருக்கா., உனக்கு எது பிடிக்குமோ போட்டுக்கோ., யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க…,
யாரும் எதுவும் கண்டுக்க மாட்டோம்., அதனால உன் இஷ்டம் தான்.., என்று சொல்லி அவளை உடை மாற்றி கொள்ள சொன்னான்.,
அவள் குளியலறைக்கு உடையோடு சென்று மாற்றிக் கொண்டு வந்த பிறகு அவனுக்கு நேற்று பார்த்த குட்டி பிள்ளை போல் தான் தெரிந்தது.., “இப்ப தான் பூனைக்குட்டி மாதிரி இருக்க” என்று சொல்லவும்.,
இவள் அவனை முறைக்க அவனும் “அட்லீஸ்ட் சாரி கட்டும் போது., கொஞ்சம் போது பெரிய பொண்ணு மாதிரி தெரியுற., இந்த மாதிரி ட்ரெஸ்லாம் போட்டா., ரொம்ப குட்டி பிள்ளையா தெரியுது.., என்றான்.
அவனிடம் “நீங்க கீழே படுத்துக்கோங்க., நான் கட்டிலில் படுத்துக்கிறேன்”., என்று சொன்னாள்.
“ஓய்.. நான் ஏன் கீழே படுக்கனும்”., என்று கேட்டான்.
ஆமா நான் தான் உங்ககிட்ட சொன்னேன் இல்ல.., ஸ்டடிஸ் முடியுற வரை தள்ளி இருங்க ன்னு”., என்றாள்
“அதுக்கு நான் ஏன் கீழே படுக்கனும்.., நான் கட்டில்ல படுப்பேன்., என்று சொல்ல.,
“அது எப்படி நான் தான் ரூமுக்கு பர்ஸ்ட் வந்தேன்., அதனால கட்டில் எனக்கு தான்”., என்றாள்.
“இவ்வளவு நாள் அது என்னோட கட்டில்., அதுனால எனக்கு தான்” என்றான்.
காலையில் எழுந்தவனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.., இரவெல்லாம் காலை தொடாதே கையைத் தொடாதே என்றவள்..,
இப்பொழுது எழும்பும்போது அவன் தோளில் தலை வைத்து., அவன் மேல் கையை போட்ட படி தூங்கிக்கொண்டிருந்தாள்.,
அவனுக்குத்தான் சிரிப்பு வந்தது., அம்மணி பெரிய ஆளு மாதிரி ‘ஐயோ என் கால பிடிக்காத., என் கையைத் தொடாதே., என்று சொல்லிட்டு இப்ப படுத்திருக்குறத பாரு’ ., என்று நினைத்தபடி மெதுவாக அவள் தூக்கம் கலையாத வாரு., அவளை நகர்த்தி படுக்க வைத்து விட்டு படுத்துக் கொண்டான்.
காலை விடியலில் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.., கூடல் மட்டும் வாழ்க்கை இல்லை., மனம் நிறைந்த வாழ்க்கை துணை அருகில் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டான்.,