9 ஆயிற்று அன்றோடு பாவனாவை வைத்தியசாலையில் சேர்த்து நான்காவது நாள்..பாவனாவின் தற்கொலை முயற்சி நடந்த மறுநாளே கவின் குடும்பத்தினரிடம் கருண் பாவனாவின் விடயத்தை பற்றி பேசி அனுமதி வாங்கிவிட்டான்.அன்றிலிருந்து லக்ஷ்மி சுமதி என்று அனைவரும் வைத்தியசாலையிலேயே பெரும்பகுதியை செலவளித்தனர்.
கருணோ ஒருபடி மேலே போய் பாவனாவின் பக்கத்திலேயே தவம் கிடந்தான்.கவினும் கூட அடிக்கடி வந்து பாவனாவின் நலம் விசாரித்து சென்றான்..இவ்வளவு நடந்தும் பாவனாவின் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பு இருக்கவில்லை.அதற்கு முழுக்க முழுக்க காரணம் ஆதிராவின் ஒதுக்கம் தான்..அன்று கதறி அழுதபின்னர் ஆதிராவிடம் இயல்பாக இருக்aகும் கடினத்தன்மை அதிகரித்து தோன்றியது.
ஸ்ரீயை தவிர அவளது உலகத்திற்குள் யாரும் நெருங்க முடியவில்லை.பாவனாக்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்தாலும் ஒரு தாதியின் கடமையாக இயந்திர தனமாகவே அனைத்தும் இருக்கும்..
பாவனா பேச முயலும் போதெல்லாம் ஒரு அக்கினிப்பார்வையுடன் ஒதுங்கி கொள்வாள்.அவளின் இந்த ஒதுக்கம் பாவனாவை தவிர கவனத்தில் கொள்ளப்பட்டது கவினால்.
அங்கு வரும் போதெல்லாம் சிரிப்பை மறந்த முகத்துடன் விறைப்பாக திரிபவளை பார்க்கும் போதெல்லாம்
“சும்மாவே இவளுக்கு சிரிக்க இலேசுல வராது..இதுல இப்போ ரோபோ போல சுத்தி திரியுறா..சகிக்கல” என்று மனதுக்குள்ளாகவே கமண்ட் அடித்து தான் அடித்த கமண்டுக்கு தனக்கு தானே சிரித்து கொள்வான்.
கவின் இதெல்லாம் தன் கண்ணில் தான் பட்டிருக்கிறது என்று பார்த்தால் குடும்பமே அழைத்து அன்று காலையில் பேசவும் தான் அவர்களையும் கருணின் நடவடிக்கை பாதித்திருப்பதை அறிந்து கொண்டான்.