“ம்ம்… பிரகாஷ் சீட்டு விளையாட பணத்துக்கு வேண்டி சொத்தெல்லாம் இழந்து தற்கொலை வரைக்கும் போனவன்… அப்புறம் ஏதேதோ பண்ணி மெதுவா பிக்கப் பண்ணிருக்கார்…”
“எஸ் சார்…”
“லாயர் சந்தோஷை அவர் மனைவியும், ஜூனியரும் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டிருக்காங்க… அதுக்குள்ள அந்த அநாமிகா முந்திகிட்டா… அங்க எதுவும் ப்ரூவ் கிடைக்கலையா…?”
“இங்க போலீஸ் இருக்காம்… அப்படியே நம்மள கிளம்ப சொல்லறாங்க…” என்றதும் இருவரும் சுற்றிலும் பார்த்துவிட்டு எழுந்து நடக்க, அவர்களை அஜயும் சச்சியும் ஆளுக்கொருவராய் கோழியாய் அமுக்கினர்.
“அந்த கஜவேலோட பல பிசினஸ்க்கு இவர்தான் லீகல் அட்வைசர், ஆனா செய்யறது எல்லாம் இல்லீகல் பிசினஸ் தான்… எனக்கு என் கணவர் செய்யறது பிடிக்கல… சுந்தர் எனக்கு காலேஜ்ல சீனியர்… அப்ப நட்பா இருந்த பழக்கம் என் கணவரைப் பத்தி அவர்கிட்ட புலம்பி, அவர் ஆறுதல் சொல்லி காதலா மாறிடுச்சு…”
“கள்ளக் காதலா மாறிடுச்சுன்னு சொல்லுங்க…”
“நல்ல காதல் இருந்தாத் தானே சார், அதான் இல்லையே… சந்தோஷ்க்கு தெரிஞ்சதெல்லாம் பணம், பணம் மட்டும் தான்… எத்தனை பேரோட வாழ்க்கையை இல்லாமப் பண்ணி அவங்க வயித்துல அடிச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சு வச்சிருக்கார்… எல்லாம் அந்த அரசியல்வாதி சப்போர்ட் இருக்கிற தைரியம்… பிடிக்காத வாழ்க்கையை நானும் எவ்ளோ நாள் தான் பொறுத்துக்கறது… அவரைப் பத்தி தெரிஞ்சதால எதிர்க்கவும் தைரியம் இல்லை…”
“பிடிக்கலேன்னா ரெண்டு பேரும் முறைப்படி டைவர்ஸ் வாங்கி இருக்கலாமே…?”
“அதுக்கு சந்தோஷ் சம்மதிக்க மாட்டார்… அவருக்கு ஒரு பழக்கம் இருக்கு… தனக்குப் பிடிக்கலேன்னா அதை யாருக்கும் கொடுக்க மாட்டார், அழிச்சிருவார்…” என்ற ஜமுனாவின் முகம் சிவந்து கிடந்தது.
“அதுக்காக நீங்களே அவரைக் கொல்ல முடிவு பண்ணுவீங்களா…?”
“அது ஒரு வேகத்துல எடுத்த முடிவு சார்… சுந்தர் வேண்டாம்னு தான் சொன்னார், ஒருவேளை சந்தோஷ் இறக்கறதுக்கு முன்னாடி போயிருந்தாலும் இவரால கொன்னிருக்க முடியுமான்னு தெரியல…” என்றாள் ஜமுனா.
“சந்தோஷ் ஏன் சுந்தரைப் போட்டுத் தள்ள நினைக்காம, உங்களை முதல்ல கொல்ல நினைச்சார்…?”
“என்னைக் கொல்ல நினைச்சதுக்கு எங்க தொடர்பு தெரிஞ்சது மட்டும் காரணமில்ல சார்…”
“பின்ன என்ன காரணம்…?”
“அவர் பண்ணின நிறைய தப்புகள் எனக்குத் தெரியும், எங்க நான் அதை போலீஸ்ல சொல்லிடுவனோங்கற பயம் தான்…”
“ஹோ… எந்த மாதிரி தப்புகள்னு சொல்ல முடியுமா…?” கிருஷ்ணா கேட்க சொல்லத் தொடங்கினாள் ஜமுனா.
“இத்தனை கேப்பமாரித்தனம் பண்ணி இருக்கானா அந்த சந்தோஷ்…?” மனதுக்குள் நினைத்துக் கொண்டவர், “சரி… நீங்க சொன்னதை எல்லாம் ரைட்டர் ஸ்டேட்மெண்டா எழுதித் தருவார், ரெண்டு பேரும் சைன் பண்ணிடுங்க… இப்ப ஜாமீன்ல உங்களை விடறோம்… எப்ப விசாரிக்க கூப்பிட்டாலும் வரணும்…” சொன்ன கிருஷ்ணா தனது இருக்கைக்கு சென்றார்.
“கோகுல்… அந்த கஜவேல் ஏதோ ட்ரீட்மென்ட்டுக்கு வெளிநாடு போனதா பேப்பர்ல படிச்ச நியாபகம்…?”
“ஓகே… அந்த பென் டிரைவ் பாஸ்வர்டு ரிமூவ் பண்ண யாரையோ வர சொன்னிங்களே, வந்துட்டாரா…?”
“இப்ப தான் கால் பண்ணேன்… ஆன் தி வே ல இருக்கார்…”
“மிஸ்டர் அஜய் கால் பண்ணார்… கேசுல முக்கியமான ரெண்டு பேர் மாட்டிருக்காங்க, இப்ப ஸ்டேஷனுக்கு தான் கொண்டு வந்திட்டு இருக்காங்க…” சொல்லும்போதே ஜீப் உள்ளே வந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து வந்தனர். பின்னிலேயே அஜயும் புல்லட்டில் வந்தான்.