Advertisement

அச்சு மேல் கோபமாக அவனை தேடிச் சென்றான் அதியன்.

“டேய்! என்னடா அவசரமா போன் பண்ணி வர சொல்லிட்டு, ஹாயா உட்காந்து இருக்கீங்க…?” எனக் கேட்டான் அச்சு நண்பர்களான மாதவன், தீரனிடம்.

அதியன் அவர்களிடம் அச்சுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, அவனிடம் நான் வர சொன்னேனு சொல்லாமவ் வர சொல்லுங்க, நீங்களும் வாங்கவென்று சொல்லி இருந்தான் ஓர் இடத்திற்கு.

“உட்காருடா, என்ன வந்ததும் பறக்குற..? சிட் நண்பா” என்றான் தீரன்.

அச்சு அதியனும் இருக்கிறானா..? என கேட்டுவிட்டு தான் வந்தான், ஸனா அதியன் வீட்டிற்கு போனதில் இருந்து அவனை பார்க்கவில்லை. அதியனிற்கு அவன் செய்தது தெரிய வாய்ப்பில்லை என்று தைரியம் இருந்தாலும் ஒரு பக்கம் பயம் இருந்தது.

மற்ற ப்ரண்ட்ஸ் கிட்டையும் அதியன் பேசவில்லை, ஆதலால் அச்சு மேல் எதுவும் தோன்றவில்லை சந்தேகமாக. அதியனிற்கு ஸனா வந்ததில் இருந்து வீடு தான் பெரிய பிரச்சனையாக இருந்ததே.

இன்று ஸனாவின் வீட்டில் இருந்து வெளியில் வந்து கால் பண்ணி, தீரன், மாதவனை நேரில் பார்ப்பதாக வர சொன்னான் கூடவே அச்சுவை பேக் பண்ணி வரச்சொல்லிருந்தான் சர்ப்ரைஸுடன்..

****

“ம்ம்ம்! உட்காருந்து விருந்து சாப்பிட எல்லாம் டைம் இல்லை, மேட்டரை சொல்லுங்கடா..” என்று அச்சுவும் ஹாயாக அமர்ந்தான் அந்த இடத்தில் அதியன் இல்லை என்ற தைரியத்தில்.

“ஏன்! ஐயாவுக்கு இதை விட முக்கிய வேலை இருக்கோ…?” என்று கேட்டப்படி வந்த அதியன், அவனை நாற்காலியோடு எட்டி உதைத்தான்.

“ஆ!” என்று அலறி விழுந்தவனை, மற்ற ப்ரண்ட்ஸ் பிடித்தனர்.

“டேய்! என்னடா ஆச்சு..?” என்று அவர்கள் பதறியப்படி கேட்டனர்.

“ம்ம்ம்! சார் கிட்ட கேளுங்க சொல்லுவாரு, ப்ரண்ட்னு பழகினா எனக்கே துரோகம் பண்ணிட்டான். என் தாத்தா சொன்னப்பவே உன்னைய கட் பண்ணி இருக்கனும்” என்று அவனை அடிக்கப் பாய்ந்தான் அதியன்.

“ஆமாட! நீ செஞ்சது மட்டும் நியாயமா..?  என் போனில் இருந்து நம்பர் எடுத்து பேசியது..?”

“அதுக்காக நீ செஞ்சது எவ்ளோ பெரிய விஷயம். என் வாழ்க்கைடா..?”

“ஏன், அந்த பொண்ணுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குமுல..?” என்றான் அச்சு.

“நீ எனக்கு ப்ரண்ட், உன்னைய நம்பி தானே வந்து கையெழுத்துப் போட்டேன்..” என்று அடித்தான் அச்சுவை.

“டேய்! நிறுத்துங்கடா, என்ன பேசிட்டு இருக்கீங்க…? எங்களுக்கு புரியல..” என்றான் தீரன்.

“ஆமா! அச்சுக்கு சர்ப்ரைஸ் இருக்குனு வர சொன்ன. இது தான் அதுவா…?” என்று கேட்டான் மாதவன்.

“ஆமாட! இது தான், இவன் செஞ்சதை கேளுங்க” என்று  அதியன் ரெஜிஸ்டர் மேரேஜ் பற்றி கூறினான்.

“அடப்பாவி! ஏன்டா இப்பிடி பண்ணின.?” என்று கேட்டான் தீரன் அச்சுவிடம்.

“அதுக்கு முன்னாடி அவன் என்ன பண்ணானு கேளுடா” என்று அச்சு போனில் இருந்து ஸனா போன் நம்பர் எடுத்ததில் இருந்து நேற்று வரை கூறினான்.

அதியனை முறைத்தனர் நண்பர்கள் இருவரும்.

“டேய்! ஒத்துக்குறேன் நான் செஞ்சது தப்பு தான், அதுக்காக இவன் மேலும் என்னை பிரச்சனையில் மாட்டி விட்டுருக்கான்” என்று அடிக்க பாய. அச்சுவும் திரும்பி அடிக்க வந்தான்.

“என்ன பிரச்சனை..? நீ ஆரம்பிச்ச வச்சது தானே. அப்புறம் பிரச்சனை வராமல் என்ன செய்யும்…?” என்று கேட்டவாறு.

இருவரும் ஒருவர் ஒருவரை திட்டி சண்டைப் போட்டனர்.

“ப்ளீஸ் அமைதியா இருங்கடா. அதியா உனக்கு யாரு சொன்னா அச்சு தான் இப்பிடி பண்ணானு…” என்று கேட்டான் தீரன்.

“ம்ம்ம்! அவன் பொண்டாட்டி தான்..”

“அஜியா..?” என்று அதிர்ச்சி ஆனான் அச்சு.

மாதவனும், தீரனும் சிரித்தனர்.

“அடேய்! உன்னைய போட்டுக் கொடுத்தது உன் பொண்டாட்டி அது தெரியாம நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி இவன் கிட்ட கையெழுத்து வாங்கி இருக்க…” என்று மாதவன் மேலும் சிரிக்க,

அதியனும் நார்மல் ஆகி சென்றமர்ந்தான்.

“ஆமாட! அதியன் கிட்ட சொல்ல மாட்டேனு சொன்னாட. பாரு இப்படி போட்டுக்  கொடுத்துட்டா..” என்று அவனும் அதியன் எதிரில் அமர்ந்தான்.

“ஆக மொத்தம் உங்க ரெண்டுப் பேரையும் பிரிக்க பிளான் போட்டாங்க போல அஜி…” என சிரித்தான் தீரன்.

“இருக்குமுடா, இவன் தாத்தா என் கூட இவனை பேச வேண்டாமுனு சொல்லியும் இவன் தெரியாம பேசுறானு அவளுக்கு கடுப்பு. அது மட்டும் இல்லை ஸனா விஷயத்தில் இவன் மேல் பயங்கர கோபம் அஜிக்கு அதையும் சேர்த்து தான் என்னைய வச்சு பிளான் போட்டா போல..” என்று நொந்தான் அச்சு.

“உனக்கு எங்க போச்சு புத்தி….?” என்று கேட்டான் அதியன்.

“புத்தி எல்லாம் இருந்துச்சு, ஆனா என் கிட்ட செய்ய சொல்லி கேட்டது ஸனா தான்… அதான்..” என்று இழுத்தான்.

“அவ கேட்டா உடனே செஞ்சிடுவீயா…? அப்ப நான் யாருடா…?”

“டேய்! அந்த நேரத்தில் நீ செஞ்சது தப்புனு மட்டும் தான் நினைக்க தோன்றியது, ஸனாவை பார்க்க பாவமா இருந்தது. இவ்வளவு பேசுற நீ.. ஏன்டா சும்மா இருந்த பொண்ணுக்கு மெசேஜ் பண்ணி மனதளவில் நெருக்கடியை கொடுத்த, தாலி, புடவைனு..”

அதியன் அமைதியாக..

“பேசுடா… நான் அந்த நேரத்தில் அஜி, ஸனா  சொல்ல அதை கேட்க வேண்டிய சூழ்நிலை ஆச்சு, சரிடா! நீ தான் ஸனாவை லவ் பண்றீல பேசாம சேர்ந்து வாழு..” என்றான் அச்சு.

“டேய்! நடப்பதை பேசு, என் தாத்தாவை மீறி ஒன்னும் செய்ய முடியாது..”

“அப்புறம் என்ன டைம் பாஸ் பண்ணியா. உன் தாத்தா பத்தி முன்னாடியே தெரியாத உனக்கு.” என்று முறைத்தான் அச்சு.

“டேய் அதியா! ஸனாவை நீ காதலிச்சீயா உண்மையாய்..?” என்று கேட்டான் தீரன்.

“ஆமா!”

“என்னடா சொல்ற..?” என்று கேட்டான் மாதவன்.

“முதலில் விளையாட்டா ஆரம்பிச்சு போக போக அவளை பிடிக்க ஆரம்பிச்சுடா.. அதனால் அவ கிட்ட போய் நேரா சொல்லிட்டு விலகினேன். ஆனா அவ அதை அப்படியே தொடர்ந்து இப்ப நான் தாலி கட்டிடேனு வந்து நிக்குறா.. என்னைய பழிவாங்கப் போறேனு பத்தாததுக்கு வீட்டில் உள்ளவர்களிடம், தாத்தாவிடம் மரியாதை இல்லாம பேசுறா…” என்று நடந்ததை கூறினான்.

வீட்டிற்கு வந்ததில் இருந்து, இன்று காலை அவ வீட்டிற்கு போய் அவ அம்மாவை பார்த்தவரை அனைத்தையும்.

மற்ற மூவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

“உன் தாத்தாவை சமாளிக்க ஒருத்தி இருக்கா போல” என்றான் தீரன்.

அவனை முறைத்தான் அதியன்.

“ஏன்டா முறைக்குற…? எங்களுக்கும் ஸனா செய்வதில் என்ன தப்புனு தோணுது, தேவை இல்லாம உன் தாத்தா பத்தி தெரிந்தும் உனக்கு ஒரு பொண்ணு பார்த்தபிறகும் நீ அவங்க கிட்ட போய் லவ், தாலி கிப்ட்னு அவங்களை இரிரேட் பண்றேனு கடைசியில் நீ இரிடேட் ஆகி நிக்குற..?”

என்றான் மாதவன்.

“சரிடா! இப்ப என்ன தான் செய்வது நான்.. அது முடிஞ்சு போச்சுடா..”

“ஸனாவை நீ லவ் பண்றது உண்மைனா அவங்க கூடவே வாழுடா…” என்றான் அச்சு.

“அச்சு! ஸனா என் வீட்டுக்கு வந்தது என்னைய பழிவாங்க, அடுத்து தாத்தா மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். ஆறு மாசம் மட்டும் தானு ஸனாவை தாத்தா வீட்டிற்குள் விட்டு இருக்கார்.” என்றான் பொறுமையா.

“அப்ப ஆறு மாசம் தானே பொறுமையா போ, எதுக்கு ஃபீல் பண்ணுற..?” என்று கேட்டான் தீரன்.

“ம்ம்ம்! ஆனா அவ பண்றது தான் முடியல, எதுக்கு எடுத்தாலும் பிளாக் மெயில் பண்றா. அவ வீட்டிற்கு வர முடியாதுனு சொன்னா அதுக்கு கூட..”

“ஏன் அச்சு, ஸனா மனசு பாதிக்கப்பட்டது உண்மை தான். அவங்க தான் இவனை லவ் பண்ணலையே அப்புறம் எதுக்குடா விலகிப் போகாம இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து மீடியா, சமூகம் முன்னாடி அவங்களையும் டேமெஜ் பண்ணிக்குறாங்க.. பாரு, எத எடுத்தாலும் அவங்க நியூஸ் தான்..” என்றான் தீரன்.

“ம்ம்ம்! அவங்களுக்கு, தான் ஒரு நடிகைனு தானே ஏமாத்த நினைச்சார், அதே நடிப்போடு அவரை பழிவாங்குறேனு சொன்னாங்க..” என்றான் அச்சு.

“ஸனா நல்ல பொண்ணு தான்டா, என்னைய பழிவாங்குறேனு அவ வாழ்க்கையும் சேர்த்து குழியில் தள்ளுறா..”

“ஏன் அதியா, ஒரு வேளை அவங்களும் உன்னைய லவ் பண்ணி இருப்பாங்களோ அதான் அவங்களால் உன்னோட ஏமாற்று வேலையை ஏத்துக்கு முடியலையோ…?” என்றான் மாதவன்.

“டேய்! அவ லவ் பண்ண மாதிரி தெரியலடா, நான் தான் எல்லாம் செய்தேன்.”

“ஆனா அதியா! நீ மீட் பண்ணி அவங்களை விட்டு விலகுறேனு சொன்னப்ப அஜி கிட்ட பயங்கரமா அழுது இருக்காங்கடா.. எதுக்குனே புரியலனு அஜி சொன்னா.. ஒரு வேளை மாது சொல்ற மாதிரி ஸனா மனதில் நீ இருக்கியோ…” என்று கேட்டான் அச்சு.

“எனக்கு இதில் நம்பிக்கை இல்லைடா, அவளுக்கு ஏற்கனவே இரண்டு தோல்வி இருக்கு, நானும் இப்படி செஞ்சு ஏமாத்த நினைச்சேனு கோபம் தான் தெரியுது என் கண்ணுக்கு, அது நியாயமான கோபம் தான். ஆனா நான் தப்புனு ஃபீல் பண்றேன் அதுக்கு ஸனா என் குடும்பத்தில் வந்து மாட்டி இருக்கானு தான் சொல்வேன் நான் தாலிக் கட்டாம.”

“நீ தாலிக் கட்டலை ஆனா ரெஜிஸ்டர் ஆகிட்டு முறைப்படி அவங்க உன் பொண்டாட்டி தான். ஒரு வேளை உனக்கு மஞ்சரி கூட கல்யாணம் ஆனாலும் மஞ்சரி செகண்ட் வைய்ப் தான்..” என்றான் மாதவன்.

அதியனுக்குமே அது அப்ப தான் உணர்ந்தது.

“எனக்கு ஒன்னுமே புரியலைடா..”

“பேசாம இந்த ஆறு மாதத்தில் நீ ஏன் தாத்தாவையும், ஸனாவையும் காம்பர்மைஸ் ஆக்கக் கூடாது.. அப்படி ஆக்கிட்டா உன் காதலும் ஜெயிக்கும். ஸனா வாழ்க்கையும் பாதிப்பு ஆகாதுல..” என்றான் தீரன்.

“இது எல்லாம் நடக்குற காரியமா..? என் தாத்தா ஆறு மாதத்தில் அவளை அனுப்பிட்டு மஞ்சரியை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்குறார். ஸனா என்னைய பழிவாங்குவேனு திரியுறா.. இதில் காம்பர்மைஸா…? போடா இவனே..” என்றான் கடுப்பாக.

“சரி! உன் தாத்தா ஒத்துக்கிட்டு ஸனாவும் உன்னைய விரும்பினா…” என்றான் அச்சு.

“அச்சு! உனக்கு நான் அடித்ததில் மூளை கலங்கிட்டா… கனவுல கூட யோசிக்க  முடியலை…”

“உன் தாத்தாவும் தானே ஓவரா பண்றார் பாரு ஃப்ரீடம் இல்லாத வாழ்க்கை உனக்கு. விரும்பிய பொண்ணு பக்கத்தில் இருந்தும் வெறுக்குற சூழ்நிலை. அவரை நீ எதிர்த்தா தான் என்ன…?” என்று கேட்டான் அச்சு.

“அது முடியவே முடியாது, என் தாத்தாக்கு நான் தான் ஸ்பெஷல். எனக்கும் அவர் தான் ஸ்பெஷல். ஏன் நான் தான் தப்பு செஞ்சேனு தெரிந்தும் தாத்தா என்னைய நம்புறார் இன்னும். அது என் மேல அவரு வச்சு இருக்க பாசம். அதை நான் மீற மாட்டேன்.”

“அப்ப என்ன தான் முடிவு..” என்றான் மாதவன்.

“ஆறு மாசம் ஸனா என்ன செய்தாலும் பொறுத்துட்டு விலகிட வேண்டியது தான்..”

“ஏன்டா! நான் கேக்குறேனு தப்பா நினைக்காத, ஒரு வேளை ஒரே ரூமில் இருக்கீங்க ஏதாவது ஆகிட்டா மீன் உன் கற்பு போயிட்டா…?” என்றான் அச்சு முக்கிய கேள்வியாக.

“ம்ம்ம்! அப்படி எல்லாம் ஆகாது. நான் தரையில் அவ பெட்டில் படுத்து இருக்கா” என்றான் நக்கலாக.

“ஓ!” என்றனர் கோரஸாக மூவரும்.

“டேய்! அடங்குங்கடா..”

“ஆமா! உன் மாமியார் என்ன சொன்னாங்க…?” என்று கேட்டான் அச்சு.

“அவங்க பாவம் ஒன்னும் தெரியாது போலடா.. நானும் அவளும் உண்மையா விரும்பி கல்யாணம் பண்ணி இருக்கோம். என் வீட்டில் தான் எதிர்ப்புனு நினைச்சுட்டு இருக்காங்க..”

“ஆமாட! அவங்க பையனும் மருமகளும் ஸனா செய்ததில் ஒரே சண்டையாம்

ஸனா நடிப்பு பாதிப்பு ஆகும் வருமானம் போயிடுமுனு. சண்டைப் போட்டு தான்  இங்க வந்துட்டாங்க பாவம் ஒரு அம்மாவ யோசிக்குறாங்க போல..” என்றான் அச்சு.

“ஓ! அவங்களை பாத்தா இன்னோசென்டா இருக்காங்கடா.”

“நீ நினைக்குற மாறி இல்லடா ஸனா வாழ்க்கை, அவங்களுக்குனு லைஃப் இல்லை அவங்களுக்குனு யோசிக்க அம்மா இருந்தாலும் எத்தனை நாளைக்கு. கணவன் குழந்தைனு வந்தா தானே நிறையும்.. அதியா நீயும் நல்லவன் தான், இல்லனா ஸனா கிட்ட நேரில் போய் ஏன் நான் தானு அடையாளம் காட்டிட்டு போகனும் தெரியாம போய் இருந்தா ஸனா யாரை பழிவாங்குவாங்க..? அதே மாதிரி ஸனாவும் நல்லவங்க தான். நான் இந்த ரெஜிஸ்டர் மேரெஜை உன் கிட்ட ஏமாத்த காரணம் நீ உண்மையா லவ் பண்ணனு சொன்னதால்.. ஏன் நீங்க சேரக் கூடாதுனு தான். வாய்ப்பை பயன்படுத்தினேன். இல்லனா உன் தாத்தா மீறி வர மாட்ட. எனக்கும் இவங்க சொல்ற மாதிரி ஸனாக்கு உன் மேல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கனும்.. இல்லனா இந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டாங்க.. இனி உன் முடிவு தான். ஆறு மாசம் இருக்கு நீ நினைச்சா ஏதாவது முடியுமுடா..” என்றான் அச்சு.

“ஏன்டா! என்னைய குழப்புற..? நான் என்ன செய்ய முடியும். அதும் தாத்தா மீறி. வாய்ப்பே இல்லடா…”

“அச்சு சொல்றதும் சரி தான்டா, உன்னோட வாழ்க்கை யாரு கூட வாழ்ந்தா நல்லா இருக்குமுனு முடிவுப் பண்ணு, ஸனா…? மஞ்சரி…? ஸனா வைய்ப்.. மஞ்சரி இன்னும் நிச்சயம் கூட செய்யலை. தாத்தாக்கு மரியாதைக் கொடு வேணானு சொல்லலை, அதே நேரம் நீ ஒத்துக்கலைனாலும் ஸனா உன் மனைவி, அவங்களுக்காக ஏன் நீ ஏதாவது செய்யக் கூடாது…?” எனக்கேட்டான் தீரன்.

“நானும் ஸனாவும் பிரியப் போற உறவுடா, அதை என்னமோ காலங்காலத்துக்கு வாழப் போற மாதிரி பேசுறீங்க…?”

“லூசாட நீ, கொஞ்சமாச்சும் சுய சிந்தனை இருக்கா..? ஒரு பிஸ்னஸ் செய்றவன் இப்படி அடிமையா இருக்க வீட்டில். ஸனா நீ விரும்பும் பெண். உன் மனைவி அவங்களை ஏன் நீ பிரியனும்.” என்றான் அச்சு.

“உன்னைய மாதிரி எல்லாம் நான் வீட்டை எதிர்த்துட்டு எல்லாம் போக முடியாது, அதோட அஜி உன்னைய லவ் பண்ணா.. ஆனா ஸனா எனக்கு வில்லியா வந்திருக்கா..”

“ஆமா! இதையே சொல்லு, முதலில் நீ ஸனா மனசில் உண்மையா என்ன இருக்குனு பாருடா. உன் மேல காதல் இருக்கானு கண்டுப்பிடி…” என்றான் தீரன்.

“கண்டுப்பிடிச்சு..?”

“கண்டுப்பிடிச்சு கம்பளைன்ட் பண்ணு.. உன் தாத்தா கிட்ட” என்றான் மாதவன் நக்கலாக.

“அடேய்! என்னங்கடா, இப்படி ஒன்னு சேர்ந்து ஸனாக்கு கொடிப் புடிக்குறீங்க. என் தாத்தாவை வில்லன் ஆக்குறீங்க..?”

“ஓ! உன் தாத்தா வில்லனு உனக்கு இப்ப தான் தெரியுமா…?” என்றான் அச்சு.

அவனை முறைத்த அதியன்”உனக்கு கொடுத்த அடி பத்தலை போலடா..”

“ஆமா! என்னைய அடிக்குறது இருக்கட்டும் இப்ப கூட உனக்கு வாய்ப்பு இருக்கு, ஸனா மனசில் என்ன இருக்குனு பாத்து அதுக்கு  ஏத்த மாதிரி முடிவு பண்ணு, இல்லனாலும் உனக்கு ஸனாவை ரொம்ப புடிச்சு இருக்குனா லவ் பண்ண வச்சு ஹேப்பியா இருடா, தாத்தா எல்லாம் போறப் போக்கில் சமாளிக்கலாம்..” என்றான் அச்சு.

“இதுக்கு மேல இங்கிருந்தா பிரைன் வாஷ் பண்ணிடுவீங்க நான் கிளம்புறேன். எதுவோ நடக்கட்டும் ஒன்னும் என் கையில் இல்லை…” என்று எழுந்தான் அதியன்.

“சாரிடா!” என்று  அச்சு அதியனை கட்டிப் பிடித்தான்.

“விடுடா, நான் செய்த செயல் எனக்கு ஆப்போஸிட்டா வந்திருக்கு. என்ன இருந்தாலும் நீ என் ப்ரண்ட்ல..” என்று அவனும் அணைத்தான்.

***

“ஏன்டி! அச்சுவை போட்டுக்கொடுத்த பாவம் அச்சு…”

“ஏன்! என்ன ஆச்சு இப்ப..? அவரு தாத்தாக்கு புடிக்காதுனு என்னமோ லவ்வரை மீட் பண்ற மாதிரி ப்ரண்டை மீட்  பண்றார் அது எதுக்கு…? அதான் ஒரேதா ரெண்டு ப்ரண்ட்ஷிப்பையும் கட் பண்ணி விட தான் போட்டுக்  கொடுத்தேன்..”

“அடிப்பாவி!”

“சரி நீ வா, ஷூட்டிங் போகலாம்” என்று இருவரும் பீவியிடம் சொல்லிட்டு கிளம்பினர்.

அதியன் பற்றி கேட்டவரிடம், அவசர வேலையாக போயிட்டாரென்று சொல்லி சமாளித்தாள் ஸனா.

அதியனவள் அடுத்து..

Advertisement