சென்னை ஹைவேஸ் அருகே மரங்கள் நிறைந்து, காடு போலா காட்சி அளிக்கப்பட்டது அந்த பகுதி, அது ஒரு கை விட பட்ட ஃபேட்டரி அங்கு பைக்கில் உள்ளே செல்ல செல்ல கொடிகள் மரத்தில் சுற்றி அந்த விடியல் வேளையிலும் இருளாகவே இருந்தது. இவற்றை எல்லாம் பார்த்த வாரு உள்ளே வந்து இறங்கினான் ரஞ்சன், அவனை பார்த்ததும் துரை அவனை நோக்கி ஓடி வந்து, சல்யூட் வைத்தான்.
அதற்கு பதில் தலை அசைத்து விட்டு “ ஸ்டேட்டஸ் என்ன என கேட்க அதற்க்கு துரை “ பொண்ணு நேம் தெரியல ஏஜ் 30 குல்ல இருக்கலாம் ப்ளீடிங் எதுவும் இல்ல அன உடம்பு முழுக்க மார்க்கிங்ஸ் இருக்கு அத அளிக்கவும் முயற்சி பண்ணிருக்காங்க ட்ரஸ் எதுவும் இல்ல “ என அனைத்தையும் கூறி முடிக்கவும் அங்கு தீபா வரவும் சரியாக இருந்தது.
ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கி வருபவளை பார்த்த ரஞ்சன் துரை இடம் கண் காட்டி யார் என்று விசாரிக்க சொன்னான். துரை தீபா வண்டி அருகே சென்று “யாருமா இங்கலாம் வர கூடாது போங்க “ என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தீபா துரையை பார்த்தவாறு தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து தன் ஃபாரன்சிக் ஆபீசர் என காட்டும் அடையாள அட்டையை அணிந்து கொண்டே ஒன்றும் பேசாமல் அவரை பார்க்க , அந்த அடையாள அட்டையை பார்த்த துரை “ ஓ சாரி ஃபாரன்சிக் டீம்மா என பேச தொடங்கும் முன்
“தீபா மேம் வந்துட்டீங்களா ,சாரி மேம் எங்க பாக்ஸ் “ என்று அவள் ஸ்கூட்டியில் இருந்த பாக்சை எடுத்தவாறு “ஸ்பாட் அங்க தான் மேம் “ என வேக வேகமாக தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய கார்திக் பின் தலையை இரு பக்கமும் அசைத்த வாரு செல்ல , இதை பார்த்த துரை “ ஏன் நா கேட்கும் போதே வாயால சொன்ன என்னவாம் கண்ணுலயே முறச்சிட்டு போறாங்க “ என புலம்பிய படி போக , இதை பார்த்து இருந்த ரஞ்சன் க்ரைம் ஸ்பாட் நோக்கி நடந்த வாரு “ஃபாரன்சிக் டீமே இவ்ளோ லேட்டா வந்த, அருமை கேஸ் முடிஞ்ச மாதிரி தான், சிங்கம் எதுக்கும் எவிடன்ஸ்லா கரைட்டா கலேட் பண்றாங்களனு ஒரு கண் வைச்சிக்கோ “ என பேசி கொண்டு இருந்தவன் பின்னால் இருந்து அவனை கடந்து முறைத்து சென்றால் தீபா.
இதை பார்த்த துரை” நீங்க பேசுனத கேட்டுடாங்க போல சார் முறச்சிட்டே போறாங்க “ என சோல்ல அவனை பார்த்து “நம்ம பாக்க வந்த வேலையை பாக்கிறிங்களா சிங்கம்” என அழுத்தி கூறா மண்டையை உருட்டிய படி சென்றான்.
இங்கோ, தீபா ரஞ்சனை மனதில் திட்டியவாறு வந்து பாலாவை பார்த்து “சீனியர் தன நீங்க எல்லாம் கரைட்-ஆ இருக்கானு கிளம்பும் முன்னாடி செக் பண்ண மாட்டிங்கள “ என கத்தி விட்டு பாதுகாப்பு கிளவுஸ் ஆணிந்து கொண்டே லேட் ஆன காரணத்தை யோசித்தவாரு சென்றாள்.
இவள் கிளம்பி க்ரைம் ஸ்பாட்-க்கு வரும் வழியில் கார்த்திக் காள் செய்து “தீபா மேம் எக்கியுப்மண்ட் பாக்ஸ் ஒன்னு ஆஃபிஸ்-ல விட்டு வந்துட்டன் ,கொஞ்சம் வர வழில எடுத்து வாங்க என பயந்து கூற “ இதை கேட்டு தீபா நன்றாக திட்டி விட்டு, அனைத்தயும் எடுத்து வர லேட் ஆகி விட்டது, இதில் அந்த போலீஸ் வேர தன் வேலையை தரை குறைவாக பேச கோபத்தில் பாலாவை நன்றாக திட்டி விட்டால் . இதை என்னிய வாரு வேலையை பார்க்க ஆரம்பித்தாள், அப்போது அங்கு துரையுடன் பேசி கொண்டு இருந்த ரஞ்சனை பார்த்து “என் வேலையை பத்தி தப்பா பேசுனல உன்னை இரு என , அருகில் இருந்த கார்த்திக் அருகே சென்று ரஞ்சன் மற்றும் துரை காதில் விழும்படி
“கார்த்தி உனக்கு இந்த ராமாபுரம் கேஸ் நியாபகம் இருக்கா” என எவிடென்ஸ் தேடிய வாரு கேட்க , கார்த்திக்கும் அருகில் இருக்கும் ரஞ்சன், துரை இருவரையும் பார்க்காமலே
“ஆ அந்த திருட்டு கேஸ் தானே மேம் “
“ஆமா கார்த்திக், அந்த கேஸ்சே தான் அந்த பேலீஸ் கூட திருடன் ஓட கூட்டு சேர்ந்து எவிடன்ஸ் மறைக்க பாத்து நம்ம காம்ப்லயேன்ட் பண்ணி அவர வேலை விட்டு சஸ்பென்ஸ் பண்ண வச்சிடாங்களே, நியாபகம் இருக்க ” என தரையில் புட் மார்க்கை அளந்த படி கேட்க ,
இவர்கள் பேசுவதை முதலில் கவனிக்காத ரஞ்சன் , போலீஸ் என்ற சொல் அடி பட்டதும் என்ன வென்று கவனிக்க ஆரம்பித்தான்
“அமா மேம் அவன்லா என்ன போலீஸ்னு தெரியல மனசாட்சி இல்லாதவன், அந்த கேஸ்ல இருந்தே போலீஸ்ஸ நம்ப முடியல மேம்” பின் தீபா அருகே நகர்ந்து பெருமையாக இந்த கேஸ் பாக்குற போலீஸ், அதுவும் முக்கியம அந்த சிங்கம்னு ஒருத்தர் இருக்காரே அவர் முழியே சரி இல்லை, எதுக்கும் அவர நல்லா வாச் பண்ணணும் “ என்று தீபா மேம் இவனிடம் நன்றாக பேசிய மகிழ்ச்சியில் எல்லாம் ஒலரினான், இதை கேட்டு கொண்டு இருந்த துரை அவனை அனல் தெறிக்க பார்த்தான், ரஞ்சனோ ஒரு ஆர்வத்துடன் பார்த்தான்.
தீபா, கார்த்திக் பேசியதை கேட்டு சிறு சிரிப்புடன் “ அந்த போலீஸ் பேரு சிங்கமா என்ன, நல்ல இருக்கே” என கண்கள் சுருக்கி சிரித்த வாரு கேட்டால்
“ஆமா மேம் பெரிய சூரியா துரை சிங்கம்னு நினைப்பு, கழுதைக்கு பேரு முத்து மாலையாம் “ என சொல்லிக்கொண்டே எழுந்து திரும்ப அங்கு கோபத்துடன் நின்ற துரையை பார்த்து சாக் ஆகி “ அது அது முத்து முத்து , ஆ முத்து மணி மாலை எண்ணை தொட்டு தொட்டு தாலாட்ட “ என பாடி விட்டு ஓடியே சென்று விட்டான் , இதை பார்த்து சிரித்த வாரு தீபாவும் சென்று விட்டால்.
இதை பார்த்த ரஞ்சனும் சிரித்து விட்டு “ கழுதை .. “ என அழைத்து பின் “ சாரி சிங்கம் வாங்க போலம்” என சிரித்து கொண்டே சென்றான்.
பின்பு அங்கு இருக்கும் வரை துரை கார்த்திக்கை முறைத்துகொண்டே இருந்தான் . அங்கு ரஞ்சன் விழிகளோ அடிகடி தீபாவை தொட்டு சென்றது “ ஏன் இவ மட்டும் மாஸ்க்கை கலட்டவே மாட்டிக்கிற , எப்படி இருப்பா “ என மனதில் அவ்வப்போது நினைத்துகொண்டான்.
பின் அனைத்து வேலையையும் முடிக்க மதியம் 1 ஆகி விட்டது யாரும் தண்ணீரை தவிர வேறு எதுவும் குடிக்க வில்லை , தீபா அது கூட குடுக்காமல் வேலையை மட்டுமே செய்து கொண்டு இருந்தால். [ எல்லாருக்கும் கதைல ஒரு டிஸ்கலைமர் என்னடா ஒரு பொண்ண கொன்னுருக்காங்க இவங்க பார்த்த சிரிச்சி போசுராங்கனு தப்பா நினைக்க வேண்டாம் , இவங்களும் மனுஷங்க தான் கோபம் சோகம் எல்லாம் இருக்கும் ஆன இந்த வேலைல இப்படி எமோஷனா அட்டச் ஆனா கண்ணுக்கு முன்னாடி இருக்க விசியம் கூட தெரியாது , அன்ட் இந்த மாதிரி கேஸ் என்ன இதை விட கொடுறாமான கேஸ் கூட பாத்துருப்பாங்க இதை எல்லாம் எமோசனா பார்த்தா நிம்மதியா இருக்க முடியாது ஸோ இது அவுங்களுக்கு நார்மல் வர்க் போல தான், அதுக்குன்னு ஃபீலிங்ஸ் இல்லம இல்லை எல்லா ஃபீலிங்கயும் அந்த தப்ப பண்றவன கண்டு பிடிக்குறதுல காமிப்பாங்க இப்போ கதையுள்ள போலாமா]
பின்பு ரஞ்சன் ப்ரோசிஜர் முடித்து சடலத்தை போஸ்மாட்டத்திற்கு அனுப்பி விட்டு ஸ்டேசன் நோக்கி பெண்கள் மிஸ்ஸிங் கம்ப்லேயின்ட் செக் செய்ய கிளம்பினான் , கிளம்பும் வழியில் ,ஒரு 5 முறை ஆவது தீபாவை பற்றி நினைத்திருப்பான் “தைரியமான பொண்ணு , எல்லாத்தையும் உடனுக்குடன் திருப்பி தந்துருவா போல , அவ எப்படி இருப்பா முகத்தையே காட்டல “ என பலவாறு யோசித்த படி ஸ்டேசன் வந்து சேர்ந்தான்.
அவன் வந்து சிறிது நேரம் கழித்து தீபா மற்றும் பாக்கியா வந்து அங்கு இருந்த போலீஸ் இடம் கம்ப்லேயின்ட் கொடுத்து கொண்டு இருந்தன .
அதை பார்த்த ரஞ்சன் துரையை அழைத்து அவர்களை அவன் இடம் வர வைத்தான். பின் தீபாவை பார்த்து “ என்ன விசயமா வந்துருக்கிங்க “ என கேட்க , அதற்க்கு பாக்கிய முந்தி கொண்டு அனைத்தையும் விளா வாரியாக கூற , அதற்க்கு மீண்டும் தீபாவயே பார்த்து “ எவ்வளவு நாளா இப்படி தொந்தறவு பண்ற “ மீண்டும் பாக்கிய எதோ சொல்ல வர , ரஞ்சன் உடனே “ ஏன் உங்க பொண்ணு பேச மாட்டாங்கள “ என கடுப்பாகி சொல்ல அதற்கு பாக்கிய பதில் பேசும் முன்
“ ஒரு வருசமா “ என பதில் சொன்னால் தீபா
“ ஏன் இவ்வளவு சீக்கரமா வந்து கம்பலயிண்ட் தரிங்க பொருமையா எல்லம் முடிஞ்சி வர வேண்டியது தான “ என்று நக்கலாக கேட்க
“ இந்த விசியம் எனக்கு நேத்து தான் தெரியும் “ என்று சொல்லி விட்டு அவன் கண்களையே பார்க்க
“சிங்கம்… கம்லையிண்ட் எழுதி வாங்கியாச்ச “ என்று அவளை பார்த்து கொண்டே கேட்க , அதை கேட்ட பாக்கிய துரையை ஏற இறங்க பார்த்து வாய் குல்லயே சிரிக்க , துரை இதை கவனிக்காமல் “ வாங்கியாச்சு சார் “ என்று சொன்னதும் “ ஓகே நீங்க போகலாம்“ என சொல்லி விட்டு மீண்டும் தீபாவை நோக்கி
“இப்போ எங்க மேல நம்பிக்கை வந்துருச்சி போல “ இதை கேட்டு திரும்பிய தீபா “ இப்பவும் இல்லை , கம்லயிண்ட் கொடுத்தும் அவனுங்க அக்கா கிட்ட, பின்னாடி பிரச்சன பண்ண செல்ப் டிஃபன்ஸ்னு முடிச்சிட்டு இத காட்டி தப்பிச்சிற வேண்டியது தான் “ என கைகளில் இருந்த கம்பலேயிண்ட் காப்பியை காமித்து விட்டு அருகில் வாயை பிளந்து பார்த்த பாக்கிய அக்காவின் கைகளை பிடித்த வாரு சென்று விட்டால் .
இதை கேட்டு ஒரு நிமிடம் துரை , ரஞ்சன் அதிர்ந்து பின் துரை “ இவங்க ஆபிசரா இல்ல கிரிம்மினாளா “ என கண்கள் விரிய கேட்க , அதற்கு ரஞ்சன் அவன் தலையில் தட்டி தீபா கேஸ்-அ சீக்கரம் முடிச்சிரு “ அதற்கு துரை முதலி்ல் ம்ம்ம் என்று சொல்லி பின்பு “ சார் நான “
“ ஆமா நீ தான் “
“அப்போ மர்டர் கேஸ்”
“ அதை நான் பாத்துக்கறேன் “ என சொன்னவாறு “ அப்போ தீபா இந்த ஏறிய தானா ஓகே ஓகே அந்த கம்பலயிண்ட் காப்பி எங்க” என சென்றவனை பாத்து “ சார்க்கு என்னமோ ஆச்சி “ என்று சொல்லி சென்றான்.