உயிரின் துளி காயும் முன்பே – 18

பாரி வேந்தனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அலக்நந்தா, இப்பொழுது எந்தச் சிந்தனைகளும் மனதில் ஓடவில்லை, அவனின் பிரத்யேகமான மனம் நாசியை நிறைத்து  உடலில் புது உணவர்வை தர விழிகள் மூடி அதில் லயித்திருந்தாள்.

அவள் உச்சியில் இதழ் பதித்தவன் “வீட்டை நெனச்சு பயப்படுறியா” என்க, “ஹ்ம்ம்” என்ற சிறிய மூலல் மட்டுமே.

அவள் முகத்தை நிமிர்த்தித் தன்னை பார்க்க வைத்தவன் “டிரஸ்ட் மீ… நான் பாத்துக்குறேன், யு ஜஸ்ட் லவ் மீ அழகி, அது போதும்”.

அவள் முகத்தில் சந்தோஷத்தையும் மீறிய  குழப்ப ரேகைகள்.

“ஐ நோ, நீ என்ன யோசிக்குறேன்னு எனக்குப் புரியுது, ஐ டெஸ்பேர்ட்ல்லி நீட் யு இன் மை லைப், உன்ன விட முடியாதுடி” என்றவனை என்ன சொல்ல மனம் சந்தோஷத்தில் தளும்பி நிறைய தானே அவனை அணைத்துக்கொண்டாள்.

பார்த்துக்கொள்ளவான் அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான், போராட வேண்டுமா போராடுவோம் என்று மனம் உறுதிகொண்டது.

அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டான் மிக ஆழ்ந்த அமைதி இருவருக்கும் இடையில், வெகுநேரம் சென்று அவனை விலகி அமர்ந்தவள் முகத்தில் தெளிவு வந்திருந்தது.

காரில் வைத்திருந்த அந்தச் சிறிய பரிசை எடுத்து நீட்டினான் “வருவேன்னு தெரியுமா”  என்று அவள் ஆச்சர்யமாகப் பார்க்க.

“இது நான் வாங்கினது இல்ல என்கிட்டே வந்தது, என்கிட்டே வந்து சேர்ந்த உன்னோட முதல் நினைவு” என்க வேகமாகப் பிரித்துப் பார்த்தாள்.

அவளுடைய கிளி கூண்டு ஜிமிக்கி, முதலில் அவளுக்குத் தோன்றியது அதிர்ச்சியே இதை இத்தனை நாட்களாக வைத்திருக்கிறானா அதுவும் இப்படி என்று அவனை ஏறிட்டு பார்க்க.

“தெரில அப்போ இருந்த கோவத்துக்கு எங்கேயாவது தூக்கி  போட்டிருக்கணும் ஆனா தோணல பத்திரமா வெச்சுக்கணும் தோணுச்சு”  என்றான் ரசனையாக.

“இது என் அப்பாவோட ஞாபகம் அவர் கடைசியா எனக்கு வாங்கி குடுத்த பொக்கிஷம், எவ்ளவோ கஷ்டம் வந்தப்போவும் இத மட்டும் நாங்க விக்கல”.

“தாத்தா இத உங்ககிட்ட குடுத்தது என்னால நம்பவே முடியல” என்றவளை அவன் அமைதியாகப் பார்த்திருந்தான்.

“அக்காக்கு மஞ்சள் நீராட்டு விழா ரொம்ப க்ராண்டா செஞ்சாங்க, எல்லா சொந்தமும் வந்து வீடே ரொம்ப சந்தோஷமா திருவிழா மாதிரி…  நான் பெரியப்பொண்ணு ஆனப்போ எல்லாத்தையும் இழந்துட்டு வாடகை வீட்ல அடுத்து என்னனு தெரியாம வாழ்ந்திட்டு இருந்தோம்”.

“எனக்கு எதுவுமே செய்ய முடியலன்னு அன்னைக்கு ராத்திரி அம்மாகிட்ட சொல்லி அவங்க மடில படுத்து அழுத அப்பாவை  என்னைக்கும்  என்னால மறக்க முடியாது” என்றவள் குரல் இடற அவளை மீண்டும் தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தான்.

“என்ன பண்ணார் எப்படி தெரில, ஆனா ஒரு பத்து நாள் வீட்டுக்குக் கூட வரல, திரும்பி வந்தப்போ இந்த ஜிமிக்கியும் ஒரு பாவாடை தாவணியும்  கொண்டு வந்தார், கையெல்லாம் புண்ணா இருந்துச்சு”.

“அப்பாவால இதுதாண்டா முடிஞ்சுதுனு சொன்னார், என் தலைல கை வெச்சு ஆசிர்வாதம் பண்ணி, சரியா அடுத்த மூணே மாசம் எங்களை விட்டுப் போய்ட்டார்” என்றவள் தேம்பி தேம்பி அழ அவளை எப்படி சமாதானப்படுத்த என்றே அவனுக்குத் தெரியவில்லை.

இதைப் பார்த்தாள் அவள் சந்தோஷப்படுவாள் என்று தான் எடுத்து வைத்திருந்தான், அவளின் காயங்களைக் கீறிவிட்டதாகத் தோன்றியது.

ஆனால் நந்தாவிற்கு அப்படி இல்லை அப்பாவின் நினைவாக வைத்திருந்த பொக்கிஷம் மீண்டும் கைச்சேர்ந்த சந்தோசம், அதும் மனம் நிறைந்தவன் கைகளால் வந்து சேர்ந்திருக்கிறது தந்தையின் ஆசிர்வாதம் உடன் இருப்பதாக அவள் நம்பினாள்.

அன்று நந்தா கல்லூரி செல்லவில்லை, நேரே வீட்டிற்கு சென்றவள் மிகுந்த சோர்வாக இருப்பதாகக் கூறி படுத்து நன்றாக உறங்கினாள், அவளின் ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களும் ஒன்றும் கேட்கவில்லை.

அவளுக்கென்று எதையும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை, அவனின் நேரத்தைப் பொறுத்து அவளுக்காகக் காத்திருப்பான், காலைத் தேநீர் மட்டும் தினமும் தவறாமல் அவன் அழகியின் கைகளால் அவனிடம் சென்று சேர்ந்தது, அவனின் நாளை மனம் வீசச் செய்துவிடும்.

தன்னுடன் அவன் இருக்க வேண்டும் ஊர் சுற்ற வேண்டும் என்ற எந்த எண்ணமும் நந்தாவிற்கும் தோன்றவில்லை, அவனுடைய வேலையைப் பற்றி அவளிடம் ஒரு புரிதல் இருந்தது.

இரண்டு நாட்கள் பார்க்க வராமல் அவள் கண்ணிலே படாமல் இருந்து மூன்றாம் நாள் காலை அவள் முன்னே நின்றாலும், அவளின் அதரங்களோடு விழிகளும் புன்னகைக்கும் அழகை அவனால் காண இயலும்.

ஒட்டிக்கொண்டோ இழைந்துகொண்டோ இருப்பதால் மட்டும் காதல் வளர்ந்துவிடாது புரிதல் இருந்துவிட்டால் ஏழு கடல் கடந்து இருப்பினும் காதல் அவர்களிடையில் வாழும்.

ஒருவாரம் கடந்த நிலையில், அதிகாலை அவளைத் தேடி வந்தது அந்தச் சந்தோஷ செய்தி சங்கமித்ராவிற்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

அறையிலிருந்து வெளியில் வந்து பார்க்கச் சாரதா அந்த வீட்டின் சிறிய கிச்சனில் ஏதோ சமைத்து கொண்டிருந்தார், வெளியில் பார்க்கத் தாத்தா அந்தச் சிறிய நடைவழியில் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்.

மெல்ல தாத்தாவின் அருகில் சென்று அமர்ந்தவள் “தாத்தா உங்க பேத்திக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்க அவளை நிமிர்ந்து பார்த்தவர் திரும்பி மருமகளை பார்த்தார், சாரதாவின் கவனம் இவர்கள்மீது பதிந்தது.

“உன் அம்மா பாக்குறா அவ கிட்ட சொல்லிடு, நானும் இன்னும் எவ்ளோ நாள் வாழப்போறேன், என்னமோ கோவம் அப்படியே இருந்துட்டோம், ரெண்டு பேரும் பெண் பிள்ளைகளா போய்ட்டிங்க வேற வீட்டுக்குப் போய் வாழறவங்க”.

“நானும் போய்ட்டா உன் அம்மா யாரும் இல்லாம தனியா நிப்பா, உன்கூட வெச்சு பாத்துப்பியா” என்றவரை பார்த்தவள் “ஏன் தாத்தா இப்படி பேசுறீங்க உங்க ரெண்டு பேரையும் நான் பாத்துப்பேன், எதுக்கு இப்போ சாவப்பத்தி பேசுறீங்க” என்றாள்.

மெல்ல புன்னகைத்தவர்  “பாத்துப்படா ஆனா கட்டிக்க போறவன் எப்படினு நமக்கு இப்போவே தெரியாதே, அதான் சொல்றேன்” என்க அவள் முகம் கனிந்தது அவனின் நினைவில்.

எதையும் அவரிடம் காண்பித்துக்கொள்ளவில்லை, தாயின் அருகில் சென்றவள் “அம்மா அக்காவுக்குப் பையன் பொறந்திருக்கான்” என்க சாரதா ஒரு நொடி தேங்கி நின்று மீண்டும் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினார்.

அவள் ஆசையாக அம்மாவின் முகத்தைப் பார்த்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தாள், அவளை அழைத்தவர் “உனக்கு வேணுன்னா  நீ போய்ப் பாத்துட்டு வாத்தாத்தாவையும் கூட்டிட்டு போ” என்றார்.

மகிழ்ச்சி தோன்றினாலும் ஒரு பக்கம் மனது வருந்தியது, அம்மாவிற்கும் ஆசை இருக்கிறது ஆனால் உள்ளுக்குள் கணவரின் இறுதி நாட்களின் நினைவுகளும்  மாமியாரின் பிரிவும்  அவரை மித்ராவிடம் நெருங்க விடாமல் தடுக்கிறது.

தாத்தாவும் பேத்தியும் அப்பொழுதே கிளம்பி சென்றனர், முதல் குழந்தைக்குச் செய்ய முடியாமல் போனதால் இந்த முறை ராஜசேகர் தன்னுடைய சம்பாத்தியத்தில் குழந்தைக்குப் பொருட்களை வாங்கி சென்றார்.

மித்ராவிற்கும் பழங்கள் உடை என்று வாங்கி சென்றனர், இருவரையும் பார்த்ததும் மித்ராவிற்கு புது தெம்பு வந்தது, ஓடி வந்த அத்துவை வாரி அணைத்துக்கொண்டாள் அலக்நந்தா.

குழந்தையைக் காண்பித்தவன் “சித்தி பார்த்தியா பாப்பா வந்துட்டான், எவ்ளோ கியூட்டா இருக்கு பாரு” என்றான் முகம் நிறைய புன்னகையுடன்.

அக்காவைத் திரும்பிப் பார்த்தாள் நந்தா அவள் முகத்தில் நிறைந்த நிம்மதி,  “தேங்க்ஸ்” என்றாள் தங்கையிடம்.

குழந்தையைப் பார்த்து  இருவரின் சுகத்தை அறிந்துகொண்டு, சச்சியை  நோக்கி “கங்கிராட்ஸ் மாமா” என்க நிறைவாய் புன்னகைத்தான்.

ராஜசேகர் அவனிடம் “சந்தோசம் நல்லா இருங்க” என்றதோடு முடித்துக்கொண்டார், மித்ராவின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தவர் “எல்லாம் சரி ஆகும் நம்புவோம், உன் அம்மாவுக்குக் கொஞ்சம் நாள் ஆகும் ஏத்துக்க” என்று ஆறுதலாகப் பேசினார்.

நந்தாவிடம் “நீ வரியா இங்க இருக்கியா” என்க.

அவளுக்கு இருக்க வேண்டும் என்று இருந்தது அதைப் புரிந்து கொண்டவர் “சரி சாயந்திரம் சீக்கிரம் வந்துடு” என்று கூறி சென்றார்.

பாரிவேந்தனின் வரவை எதிர் பார்த்து நின்றிருந்தாள் அவள், காலையே அவனுக்கு மெசேஜில் தகவல் சொல்லிவிட்டாள், சச்சி தம்பியிடம் கூறியிருப்பான் என்றாலும் அவள் புறப்படும்போது அவனிடம் கூறிவிட்டே வந்தாள்.

மதியம் மூன்று மணிக்கு வந்து சேர்ந்தான், மித்ராவும் குழந்தையும் நல்லா உறக்கத்தில், உள்ளே நுழைந்தவன் பார்வை தன்னவளின் மீது முதலில் பதிந்து மீண்டது.

அண்ணனுக்கு வாழ்த்து கூறி தொட்டிலின் அருகில் சென்று குழந்தையைப் பார்த்தான், சொந்தங்கள் சூழ்ந்து நின்று கலகலப்பாக இருக்க வேண்டிய அறை.

ஆளுக்கு ஒரு பக்கம் என்று மனதால் அனைவரும் தள்ளி நிற்க ஒரு புது உயிர் இந்தக் குடும்பத்தில் வந்து இணைந்துள்ளது, அம்மாவிடம் பேச வேண்டும் என்று அந்த நொடி முடிவு செய்து கொண்டான்.

மாலை வீட்டிற்கு செல்லும்போது அத்துவை  உடன் அழைத்துச் செல்வதாக நந்தா கூற கணவன் மனைவி இருவரும் மறுக்கவில்லை,  சச்சி அத்துவின் உடை அனைத்தும் வீட்டில் இருப்பதால்  சென்று எடுத்து வருவதாகக் கூறி சென்றான்.

தாயையும் சேயையும் பார்த்துக்கொள்ள இரண்டு பேரை வைத்திருந்தான் சச்சிதானந்தன், ஆகையால் அவர்களைப் பற்றிய கவலை இல்லை.

அத்து மித்ராவை மருத்துவமனை அழைத்து வந்தபோதே விழித்ததால் இப்பொழுது நல்ல உறக்கத்தில் இருந்தான், அவனைச் சிறிய பெட்டில் படுக்க வைத்தாள் அலக்நந்தா.

அவளையே பார்த்திருந்தவன் தன் வலக்கையை நீட்ட ஆச்சர்யமாக அவனைப் பார்த்தவள் திரும்பித் தமக்கையை ஒரு முறை பார்த்துவிட்டு அவனை நெருங்கி விரல்களைக் கோர்த்துக்கொண்டாள்.

அண்ணன் குடும்பத்தைப் பார்த்தபோது தனக்கென ஒரு குடும்பம் என்ற  ஏக்கம் பெரிதாகக் கிளைப்பரப்பியது அவன் மனதில், அவளைத் தனக்கு முன்னால் மிக அருகில் நிறுத்தியவன் “எனக்கு உன்ன மாதிரி பொண்ணுதான் வேணும்” என்க.

நாணத்தில் சிவந்தது முகம் அவள் விழிகள் நிலம் நோக்கியது, நாடி பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் விழிகளில் தன்னை தொலைத்தான்.

கைகள் அவள் இடையில் அழுத்தமாகப் பதிந்து அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தது இருவர் மனமும் தடுமாறி நிற்கக் குழந்தையின் அழுகுரல் அவர்களை மீட்டது.

சட்டென்று அவள் விலகி நிற்கப் புன்னகையோடு அவளைக் கடந்து வெளியில் சென்றான், சச்சி வந்தபிறகு நந்தா புறப்படுவதாகக் கூற பாரி தானே அவளை ட்ரோப் செய்வதாகக் கூறினான்.

கணவனும் மனைவியும் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர்  பார்த்துக்கொண்டனர், அவன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை “நீ என்னுடன் வருகிறாய்” என்ற பிடிவாதத்தால் நின்றான்.

அவள் சச்சியை பார்க்க “போமா அவனே விட்ருவான்” என்க ஒன்றும் சொல்லாமல் அவன் பின்னே சென்றாள், நாளை வருவதாகக் கூறியவன் அவர்களுடன் சேர்ந்து நடந்தான்.

அத்து இருப்பதால் அழைத்துச் செல்கிறானோ என்று அவர்கள் யோசனை சென்றது.

வண்டியில் இருவரும் எதுவும் பேசவில்லை, ஏனோ அவளை இப்படியே அழைத்துச் சென்று விட மனம் அடம் பிடித்தது.

அத்துவிற்கு அவன் கேட்ட உணவு, விளையாட்டுப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்றான், மெய்ன் ரோடில் இறங்கிக்கொண்டனர்.

“எப்படி வந்தீர்கள்” என்று வீட்டில் கேட்டால் நிச்சயம் உண்மையைக் கூற வேண்டும் அத்து எப்படியும் சித்தப்பாவுடன் வந்தேன் என்று கூறிவிடுவான், அண்ணன் மகனை விடுவதற்காகப் பாரிவேந்தன் வந்ததாகக் கூற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.

அவன் வண்டலூரில் இருக்கும் வீட்டிற்க்கே போவதாக அவள் நினைக்க, அவர்களை இறக்கிவிட்டவன் “வீட்டுக்குப் போறேன் அம்மாவை நாளைக்கு கூட்டிட்டு வரேன் பாப்பாவை பார்க்க” என்றான்.

அதற்க்கு அப்படியே போயிருக்கலாம் இவ்வளவு தூரம் வந்து செல்கிறானே என்று இருந்தது அவளுக்கு.

“அப்புறம் ஏன் இவ்ளோ தூரம் வந்தீங்க தேவை இல்லாத அலைச்சல்” என்றவளை பார்த்தவன்  “உனக்கு நான் செய்ற எதுக்கும் என்கிட்டே கேள்வி கேக்காத அழகி என்கிட்டே பதில் இல்ல” என்றவன்.

“போ” என்று கண்ணசைக்க அவனைக் கடந்து செல்பவளை பார்த்து அங்கேயே நின்றிருந்தான்.

நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி