சூர்யபிரியா இங்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது, சூர்யா பேசினால் அவள் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவாள் அலக்நந்தா, தன்னுடைய எல்லை இதுதான் என்று ஒதுங்கி நின்றாள்.
அனைத்தையும் நேர்த்தியாகச் செய்துமுடிப்பாள் குழந்தையை அவள் கையாளும் விதம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, அனைத்தையும் செய்பவள் எத்தனை முயன்றும் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை பேசுவதில்லை.
ஒரு நாள் காலைக் குழந்தையுடன் கிட்சன் சென்ற சூர்யா “நந்தா சின்ன வயசில இருந்தே நான் யார்கூடவும் அதிகமா பழகினதில்ல என்னால சரியாய் விளையாட முடியாது, மத்த பசங்க கிண்டல் பண்ணுவாங்க அத பாத்து அம்மாக்கு ரொம்ப வருத்தம்”.
“அதால என்ன வெளில அதிகமா விடமாட்டாங்க, நண்பர்கள் அப்படினு பெரிசா யாரும் இல்ல நானும் அப்படியே வளந்துட்டேன், இத விடப் பெரிசா பிரச்சனை இருக்குறவங்க எல்லாம் எவ்ளவோ சாதனை பண்றாங்க நான் முயற்சியும் பண்ணல எனக்கு அதுல விருப்பமும் இல்ல”.
“கடவுள் ஒரு சின்னக் குறைய வெச்சார் ஆனா நல்ல குடும்பம் குடுத்துருக்கார், உயிரா நேசிக்கிற புருஷன குடுத்துருக்கார் தங்கமா ஒரு குழந்தையைக் குடுத்துருக்கார் இப்போ ஏன் இதெல்லாம் சொல்றேன்னு தான யோசிக்கிற?”.
“இந்த வீட்ல இருக்கறதால நான் பெரிய மஹாராணி அப்படிலாம் இல்ல, இந்த வயசுல உன் குடும்பத்துக்கு உன் படிப்புக்கு நீ சுயமா உழைச்சு சம்பாதிக்கிற, ஒரு விதத்துல நீ எனக்குள்ள தன்னம்பிக்கையை வளக்குற நந்தா”.
“உன்ன நான் இந்த வீட்டில வேலைக்காரியா பாக்கல எனக்கு ஒரு நல்ல தோழி கிடைச்ச மாதிரிதான் பாக்குறேன், என்ன அப்படி உன்னால பாக்க முடிஞ்சா என்கூட பேசு” என்று சென்றுவிட்டாள்.
நந்தா எப்பொழுதும் ஒதுங்கியே இருந்து பழகிவிட்டாள், சட்டென்று ஒன்றமுடியவில்லை சூர்யாவை ஒதுக்கவும் முடியவில்லை மெல்ல மெல்ல இருவரும் பேசி நட்பை வளர்த்துக்கொண்டனர்.
இசை, பிடித்த புத்தகம், கதைகள் கல்லூரி என்று அவர்களின் கதைகள் விரிந்து கொண்டே சென்றது, இடையில் ஒரு நாள் சம்பத் அலக்நந்தாவின் மீதான பாரியின் விருப்பத்தைக் கூறி இருந்தான்.
சூர்யா ஒருபோதும் அதைப் பற்றிய குறிப்பை நந்தாவிடும் காட்டியதில்லை, நடந்தால் சந்தோஷம் ஆனால் இடையில் எத்தனை சிக்கல்கள் இருக்கிறது, இது முழுமனதாக நந்தா முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
ஒருவேளை என்றேனும் அவளுக்குப் பாரி அண்ணாவின் மீது விருப்பம் தோன்றுமாயின் நிச்சயம் அவளுக்குத் துணை நிற்ப்பேன் என்று நினைத்துக்கொண்டாள்.
நாட்கள் அமைதியாகக் கடந்து சென்றது அவள் பார்வை வட்டத்திற்குள் அவன் வரவில்லை, அவன் பார்வை வட்டத்தில் அவள் எப்பொழுதும் இருந்தாள்.
முதல் பெண்தானே நீதானே…
எனக்குள் நானே ஏற்பேனே…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
நான்கு முறை பாடி பாடி ஓய்ந்துவிட்டது அவனின் அலைப்பேசி, அழைத்தது அவனின் தமயன் சச்சிதானந்தன்.
இருவருக்கும் பேச்சுக்கள் இல்லை பிசினெஸ் பற்றி மட்டுமே பேச்சுக்கள், வேலைகள் வரிசைக்கட்டி அவனை நிற்க நேரம் இல்லாமல் ஓட வைத்துக் கொண்டிருந்தது,
எதற்கு இத்தனை முறை அழைக்கிறான் என்ற எண்ணத்தில் அடுத்த முறை அழைப்பை எடுத்துவிட்டான், இவனின் வார்த்தைக்குக் காத்திருக்காமல் “பாரி” என்ற சச்சியின் தவிப்பான அழைப்பு அவன் செவியை நிறைத்தது.
“அத்துக்கு ரொம்ப உடம்பு சரியில்லடா ரெண்டு நாலா ஹாஸ்பிடல்ல இருக்கான் மித்ராவால தனியா சமாளிக்க முடியல நீ கொஞ்சம் என்னனு பாருடா ப்ளீஸ்” என்றவனின் குரலில் தவிப்பை உணர முடிந்தது.
“ஹ்ம்ம்” என்று மட்டும் சொல்லியவன் அழைப்பைத் துண்டித்தான்.
வரிசைகட்டி நின்ற வேலைகளை நினைத்துத் தலை சுற்றியது தன்னுடைய பொருட்களை ஒரு பேகில் போட்டுக்கொண்டு வேகமாகச் சார் பார்க்கிங் சென்றான்.
வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேற மிரரில் பின்னே பதட்டத்தோடு அலக்நந்தா ஓடி வருவது தெரிந்தது.
அவன் காரைக் கடந்து அவள் வேக நடையில் செல்ல அவளை நெருங்கிக் காரை நிறுத்தினான் பயத்தில் அவள் இரண்டடி பின்னே சென்றாள் “எங்க போற” என்றவனை புரியாமல் பார்த்தவள்.
“அத நீங்க ஏன் கேக்குறீங்க” என்றாள் வார்த்தையில் சூடேற்றி.
“ம்மச் அலக்” என்றான் பல்லைக் கடித்து, அந்த நொடியும் அவள் மனதில் தோன்றியது “இது என்னை நானே அழைத்துக்கொள்ளும் பெயர் இவருக்கு எப்படி தெரியும்” என்றுதான்.
முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு “எனக்குப் போகணும் வேலை இருக்கு” என்றவள் அவன் அடுத்த வார்த்தை கூறும்முன் அந்தப் பக்கம் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.
அவன் கார் காற்றை கிழித்துக்கொண்டு சென்றது.
மித்ராவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க இவளும் எடுக்காமலே இருந்தாள் மீண்டும் மீண்டும் அடிக்க எடுத்தவள் “என்ன வேணும்” என்று எரிச்சல்பட்டாள்.
“அம்மாடி நந்தா தானமா” என்றது வேறொரு குரல்.
“ஆமா நீங்க யாரு” என்க.
“நான் மித்ராமா வீட்ல வேலை பாக்குறேன் குழந்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்ல ஆசுபத்திரில சேத்துருக்கோம், மித்ராமாக்கும் முடியல யாராவது வர முடியுமா, நான் வீட்டுக்குப் போகணும்” என்றார் அவர்.
என்ன செய்ய என்று ஒன்றும் புரியவில்லை ஒருநொடி தயங்கி நின்றவள் “நான் வந்துர்றேன் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க”என்றுவிட்டு சூர்யாவிடம் விஷயத்தைக் கூறி கீழே ஓடினாள்.
அப்பொழுது தான் அவனைப் பார்த்தாள் அவனும் அங்குதான் செல்கிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை தெரிந்தாலும் அவனுடன் போகமாட்டாள்.
அவளின்பதட்டத்தை வைத்தே அவளுக்கும் அழைப்பு வந்திருக்கும் என்று ஊகித்திருந்தான் தான் அழைத்தும் அவள் வராமல் இருந்ததில் மிகவும் கோபம்.
நந்தா மருத்துவமனை சென்று, அவர்கள் அனுமதிக்கப் பட்ட அறையை விசாரித்துச் சென்று சேர பாரிவேந்தன் அங்கு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தான், இவளைத் திரும்பிப் பார்த்தவன் மீண்டும் அவரிடம் பார்வை பதித்தான்.
இவளும் வேகமாக அவர்கள் அருகில் சென்று நின்றுவிட்டாள் “வேற ஒன்னும் பிரச்னை இல்லையே டாக்டர்” என்று அவன் கேட்க.
“செஸ்ட் புல் இன்பெக்க்ஷன் ஆயிருக்கு மூச்சு விடக் கஷ்டப்படுறாங்க செஸ்ட் கிளியர் பண்ணனும் பாக்கலாம் ரெண்டு நாள் இங்க இருக்கணும்” என்றார்.
தன்னிச்சையாகத் திரும்பி அவன் முகத்தை ஆராய்ந்தது அவள் கண்கள், அவளுக்கு மிக அருகில் நெருங்கி வந்தான் அவன்.
அவள் மீண்டும் பின்னோடு நகர ஒரு கையைச் சுவற்றில் பதித்து அவளைத் தடுத்தவன் “இப்போ என் முகத்தை எதுக்கு பார்த்த நான் என்ன நினைக்குறேன்னு தான”, என்றவனை விழி விரித்து அவள் பார்க்க.
“கர்ப்பமா இருக்கறது என் பொண்டாட்டியா இருந்திருந்தா இப்போ தூக்கி சுத்திருப்பேன்” என்று அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
அவள் விழிகளில் அதிர்ச்சியும் பயமும் “மச்” என்று சலித்தவன் அவளிடமிருந்து விலகி நடந்தான்.
“எப்போ பாத்தாலும் பயம் என்ன பாத்தா இவளுக்கு எப்படி தெரியுது, கார்ல ஏறச் சொன்னா மாட்டேன்னு போறா” என்று மனதிற்குள் அவளை வசைபாடினான்.
மித்ரா இரண்டு குடும்பத்திலிருந்து ஒதுங்கி இருந்தாலும் அனைவரையும் புகைப்படத்தில் காண்பித்து மகனுக்கு உறவுகளைச் சொல்லிக்கொடுத்தாள்.
நந்தாவை மகனுடன் கல்லூரியில் சென்று பார்த்து வருவாள் அவள் பேசவில்லை என்றாலும் குழந்தையை ஒதுக்கி வைத்ததில்லை, பாரிவேந்தனிடமும் குழந்தையை அனுப்புவாள் முதலில் வெறுமனே பார்த்து நிற்பவன் குழந்தையின் “தித்தப்பா” என்ற மழலை அழைப்பில் கரைய தொடங்கினான்.
மூச்சுவிடச் சிரமம் இருந்ததால் குழந்தை சிணுங்கி கொண்டே இருந்தான் மித்ராவால் அவனைத் தூக்கவோ பார்த்துக்கொள்ளவோ முடியவில்லை.
நந்தாவிற்கு மண்டை வெடித்தது பகல் வேலை அவள் இங்கே இருக்கலாம் இரவில் என்ன செய்ய இருவரையும் பார்த்துக்கொள்ள வேண்டுமே.
மித்ராவிற்கு உணவைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்து பார்க்கப் பாரிவேந்தன் போனோடும் லேப்டாப்போடும் மல்லுகட்டிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு வேலை செய்யும் இடம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் இங்கே ஆட்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை.
அவன் அருகில் செல்லவே அவளுக்கு விருப்பம் இல்லை ஏதேனும் சொல்லுவான், வேறு வழி இல்லை பேசிப்பார்ப்போம் என்று எண்ணியவள் அவன் அருகில் நெருங்கி வந்தாள்.
“இங்க நான் பார்த்துக்கிறேன் நீங்க உங்க வேலைய பாருங்க” என்க,
அவளை நிமிர்ந்து பார்க்காமலே அமர்ந்திருந்தான் பேசுவது வீண் என்று அவள் திரும்பி நடக்க “அழகி” என்றவன் அழைப்பில் அவள் நடை தடைப்பட்டது.
“இங்க மெடிசின், டெஸ்ட் எதுக்கும் பே பண்ண வேண்டாம் நம்ம பேமலில எல்லார்க்கும் இங்க தான் காமிப்போம், சோ பில் டெரெக்ட்டா ஆபிஸ் போய்டும்” என்றவன்.
“உன் போன் குடு” என்று வாங்கி அவன் எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுத்தான், அவனிடம் அவளின் எண் இருந்தது அதைக் கூறினால் அதற்கும் முறைப்பாள் என்பதால் போன் வாங்கி மிஸ்ட்க்கால் கொடுக்க அவன் அலைப்பேசி அழகாய் மிளிர்ந்தது அவள் புகைப்படத்துடன் “என் அழகி” என்று.
அவனுடைய எண்ணை அவளின் அலைப்பேசியில் பதிவு செய்து அவளிடம் கொடுத்தவன் “நான் இங்க கேன்டீன்ல இருப்பேன் எதுனாலும் எனக்குக் கூப்பிடு” என்று தன் பொருட்களுடன் கேன்டீன் நோக்கி நடந்தான்.
அவனுக்கு இந்தச் சூழலே புதிது யாருக்காகவும் இப்படி சென்று நின்றதில்லை செய்ததில்லை, அனைத்திற்கும் ஆட்கள் வரிசைக்கட்டி நிற்பர்.
பகலில் அலக்நந்தா இங்கு நின்றாலும் இரவில் என்ன செய்ய? அத்து யாரிடமும் நெருங்க மறுக்கிறான், நந்தாவிடம் நெருங்க அவனுக்குத் தயக்கம் இல்லை அதோடு மித்ரா எழுந்து நடக்கவே தடுமாறுகிறாள் இரவில் அவளுக்கு அவசர தேவை வந்தாள் தன்னால் எப்படி அவளைப் பார்த்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனை மட்டுமே இப்பொழுது.
அறைக்குள் நுழைந்தவள் வெகுநேரம் யோசித்து வந்தது வரட்டும் என்று ராஜசேகருக்கு அழைத்து அனைத்தையும் கூறிவிட்டாள், தான் இங்கு இருக்க வேண்டிய அவசியத்தையும்.
“நா என்ன பண்ணனும்னு நினைக்கிற நந்தா” என்றார் அந்த மனிதர்.
“நம்மளோட கோபம் ஆதங்கம் வெறுப்பு இழப்போட வலி எல்லாமே அப்படியே தான் இருக்கு, இன்னும் எத்தனை வருஷம் போனாலும் இது எல்லாம் அப்படியே இருக்கப்போவுது, ஆனா இப்போ மூச்சுக்கு தவிக்கிற குழந்தையை அத பாதுக்கமுடியாத தாயை இப்படியே விட்டுட்டு வர முடியல தாத்தா” என்றபோது அவராலும் மறுக்க முடியவில்லை.
“சரி நான் உன் அம்மாவை எப்படியாவது சமாளிக்கிறேன்” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
அவளுக்கான உணவுடன் வந்தவன் அவள் கூறிய அனைத்தையும் கேட்டான், சிறிது நேரம் வெளியில் நின்றவன் பிறகு உள்ளே சென்று அவளிடம் உணவைக் கொடுக்க “இல்ல வேண்டாம் நா…” என்று மருத்துக்கூற வர.
“ஸீ ஐ ஆம் டையர்ட், எனக்கு ஆர்கிவ் பண்ண முடியல சாப்பிடு” என்றவன் மீண்டும் கேன்டீன் சென்றான்.
சாரதாவை எப்படியோ சமாளித்த ராஜசேகர் மாலை நந்தாவின் உடைகளோடு மருத்துவமனைக்கு வந்தார், மித்ராவையும் அத்துவையும் சென்று பார்த்தவர் அலக்நந்தாவிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டார்.
“ஏன்” என்றவனிடம் “பகல்ல என்னால இங்க இருக்க முடியும் காலேஜ் லீவு போடலாம், ஆனா ராத்திரி இருக்க முடியாது, இப்படி விட்டுட்டுப்போக மனசுவரல தாத்தாகிட்ட சொன்னா அவர் நிச்சயமா வேண்டாம்னு சொல்லமாட்டார், அதோட அம்மாவையும் சமாளிப்பார்” என்றாள்.
உள்ளே ஏதோ செய்தது அவனுக்கு வெளியில் வந்து சேரில் கண்மூடி அமர்ந்தவன் “தனக்கு ஏன் இது தோன்றவில்லை தன் அண்ணனின் தவறால் அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள் சொத்து சுகம் உறவு அனைத்தையும் இழந்து மற்றவரிடம் கைக்கட்டி வேலை செய்கிறார்கள்”.
“ஆனால் தங்களுக்கு ஒன்றும் நஷ்ட்டமாகவில்லையே வானதியின் நிலை தவிர தங்களை சுற்றி எதுவும் மாறவில்லை, தன் வீட்டில் உள்ளவர்களை ஏன் தன்னால் வரவைக்க இயலவில்லை அவர்களிடம் இதைப் பற்றித் தான் பேசக்கூட இல்லையே”.
அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைப் பார்த்திருந்தாள் அலக்நந்தா என்ன யோசிக்கிறான் என்று தெரியவில்லை ஆனால் உள்ளுக்குள் மருகுகிறான் என்று புரிந்தது.
வேலை விஷயமாகச் சிங்கப்பூரில் மாட்டிக்கொண்ட சச்சிதானந்தன் உடனே வந்தால் தேவலாம் என்றிருந்தது அவளுக்கு, எங்களை விட்டுவிடுங்கள் என்று உரக்க கத்தவேண்டும்போல் இருந்தது.
இருவருக்கும் உறக்கம் இல்லை இரவில், அந்தச் சூழல் உறங்கவிடவில்லை, இப்பொழுது சில மாதங்களாக மதுவை அதிகம் நாடுகிறான்.
வெகுநேரமாக நடந்துகொண்டே இருந்தவன் சட்டென்று அறைக்குள் நுழைந்தான், அவள் பதறி எழ “இப்யு டோன்ட் மைண்ட் அழகி” என்றவன் அவள் கையைப் பற்றித் தன் இதயத்தில் வைத்து அழுத்தி விழிமூடி நின்றான் சிலநொடிகள்.
அவனின் விழியோரத்தில் நீர் திரள வேகமாக வெளியேறினான், மனதில் எதை வைத்து மருகுகிறான் எது அவன் நிம்மதியை குலைக்கிறது தெரியவில்லை அலக்நந்தா உறைந்து நின்றாள் வெளியே, உடைந்து கொண்டிருந்தாள் உள்ளே.
வாள் இன்றி போர் இன்றி…
வலிக்கின்ற யுத்தம் இன்றி…
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…
இதயம் முழுதும் இருக்கும்…
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…