Advertisement

லா அவனையே பார்ப்பது தெரியவும், ஜெகனுக்கு அழைத்தவன் சென்னை வருமாறு கூற, ஏற்கனவே  வந்துவிட்டதாக கூறினான் அவன்.  அவனுக்கும் லா இப்படி அவசரமாக கிளம்பியது சந்தேகம்தான். அதை மனதில் கொண்டே விடிந்தும் விடியாமல் விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

                   அதன்படி அடுத்த ஒருமணி நேரத்தில் ஜெகன் இன்பனின் எதிரில் அமர்ந்திருக்க, அவன் பார்வை தனக்கு அருகில் அமர்ந்திருந்த லா வின் மீது தான் இருந்தது… அப்படி முறைத்து கொண்டிருந்தான் அவனை… இன்பன் ஜெகனிடம் பேச நினைப்பதற்கும், அவன் முன்னிருந்த தொலைபேசி இசைப்பதற்கும் சரியாக இருக்க, எடுத்து காதில் வைத்தவன் “அஞ்சு நிமிஷம் கழிச்சு அனுப்புங்க..” என்றான்.

                   அதற்குள் எதிரில் இருந்த இருவரையும், அந்த முறையோடு இணைந்திருந்த மற்றொரு அறையில் அடைத்து விட்டவன் சிபியிடம் அவள் இடத்தில் அமருமாறு கண்ணைக்காட்ட, “என்னடா நடக்குது இங்கே..” என்பது போலத்தான் பார்த்திருந்தாள் அவள்.

                   அவள் பார்வையை உணர்ந்து இன்பன் சிரிக்கும்போதே, வேகமாக உள்ளே நுழைந்தாள் மதுவர்ஷினி. இன்பன் அவளைக் கண்டதும் வரவேற்பாக சிரிக்க, மருந்துக்கும் புன்னகை இல்லை அவள் முகத்தில்.

                  சட்டமாக வந்து அவன் எதிரில் அமர்ந்தவள் “எப்படி இருக்கீங்க இன்பன் சார்…” என்றாள் அதே தோரணையுடன்..

                   “எனக்கு என்ன.. நல்லாவே இருக்கேன்.. நீ எப்படி இருக்க மது..” என்று இன்பன் கேட்கவும்,

                 “நான் என்ன சொல்லணும் மாமா… என்ன எதிர்பார்க்கிறிங்க என்கிட்டே இருந்து..” என்றாள் கோபத்துடன்…

                  அவள் கோபத்தை தட்டிவிட்டவன் “சரி சொல்லு.. என்ன விஷயம்..” என்று அலுவல் மொழியில் வினவ

                  “ஏன் உங்க பிரெண்ட் சொல்லலையா உங்ககிட்ட..”

                “எந்த பிரெண்ட்.. என்ன சொல்லணும்…”

                 “உங்களோட உயிர்நட்பு…எந்நேரமும் உங்க பொண்டாட்டி மாதிரி கூடவே சுத்துவானே.. அவன்தான்.. எதுவும் சொல்லலையா உங்ககிட்ட..”

                   “யாரு ஜெகனை கேட்கறியா… என்ன சொல்லணும் அவன்..” என்று புரியாதவன் போலவே கேட்டான் அப்போதும்..

                   மதுவுக்கு உண்மையிலேயே இன்பனுக்கு தன் காதல் விவரம் தெரியாதோ என்று தோன்றிவிட்டது… அந்தக்கணம் தான் மிகவும் மோசமாக தோற்றுப்போனதை போல ஒரு பிம்பம் அவளுக்குள். கண்களில் கண்ணீர் வடிந்து விடும் போல் இருக்க, எதிரில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரே மடக்கில் குடித்து வைத்தாள்.

                     அதன்பின்பே சற்று தெளிவாக உணர்ந்தவள் “நான் கனடா போறேன் மாமா.. இன்னும் மூணுநாள் தான் இருக்கு… இங்கே உங்க மாமா எனக்கு மாப்பிளை பார்த்து இருக்கார்.. எனக்கு விருப்பம் இல்ல, அதான் போறேன்.. திரும்பி வருவேனா தெரியல, அதான் உங்களையும், உங்க லவ்வரையும் பார்த்துட்டு போகலாம் ன்னு வந்தேன்… அவ்ளோதான்… நான் கிளம்புறேன் மாமா..”என்றவள் எழுந்து கொள்ள

                   “அவ்ளோதானா மது…” என்று அழுத்தமாக வினவினான் இன்பன்.

                   “நிச்சயமா அவ்ளோதான் மாமா.. எதுவுமே இல்ல.. எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல.. அம்மா,அப்பா தப்பு பண்ணா நாங்களும் தப்பாவே தான் இருக்கணுமா…”

                   “நான் கெஞ்சிகிட்டே பின்னாடி வருவேன் ன்னு நினைச்சுட்டான் போல உங்க பிரென்ட்… ஆனா என்னால முடியாது.. நிச்சயமா நான் பிச்சை கேட்டு வரமாட்டேன்..” என்று சம்பந்தமில்லாமல் பேசியவள் கதவை நோக்கி நடக்க, வேகமாக சென்று அவளை பிடித்து நிறுத்தி இருந்தான் இன்பன்.

                   அவள் கண்களில் வழிந்த கண்ணீர் கன்னங்களை தொட, அவள் கன்னத்தை அழுத்தமாக துடைத்தவன் “பவுடர் டப்பா.. இத்தனை சோகத்துலயும்,அசராம மேக்கப் போட்டு இருக்க போல…” என்று அவளை வம்புக்கு இழுக்க

                    தன் கண்களை துடைத்துக் கொண்டே, “ஏன் லவ் பெயிலியர் ஆனா, மேக்கப் போடக்கூடாதா.. என்னை வேண்டாம்ன்னு சொன்னவனே நல்லா இருக்கான்… சொல்லப்போனா நாசமாப்போனவன் இப்போதான் ரொம்ப ஹாண்ட்ஸமா தெரிஞ்சு தொலைக்கிறான்.. நான் மட்டும் ஏன் அழணும்…” என்றவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

                  இன்பன் அவள் தோளை தொடவும், அப்படியே இன்பனின்  தோளில் சாய்ந்து கொண்டவள் தேம்பியழ, சிபிக்கே பாவமாக போனது அவள்நிலை. ஜெகனை நினைத்து கோபமும் கூட.. இன்பன் மதுவை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தும் வரை நின்ற இடத்திலிருந்தது அசையவே இல்லை சிபி.

                  இன்பன் மதுவின் கண்களை துடைத்து, மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்து குடிக்க செய்தவன், சிபியை அருகில் அழைக்க, மெல்ல தன் கணவனின் அருகில் வந்து நின்றாள் அவள்.

                  மது அப்போதுதான் அவளை பார்த்தவள் ” ஹேய்.. இவ்ளோநேரம் நீ இங்கேயா இருந்த…” என்று அதிர்ச்சியாக, சிபி மெல்ல ஆம் என்று தலையாட்டினாள்..

                    “நான் அழுததை எல்லாம் உன் உடன்பிறப்புகிட்ட சொல்லி வைக்காத சரியா.. அப்புறம் அவன் இன்னும் ஓவரா போவான்… எனக்கு அவன்மேல் எந்த அக்கறையும் இல்ல…” என்று விடாமல் வாயாடியவளை எந்த வகையில் சேர்ப்பது என்றுதான் பார்த்திருந்தாள் சிபி.

                    இன்பன் மதுவின் தலையில் கொட்டியவன் “என்முன்னாடியே என் பொண்டாட்டியை மிரட்டுவியா..” என்று அதட்ட,

                    “ஆமா..ஏன்.. என்ன பண்ணுவீங்க…” என்றவள் சிபியிடம் “ஹேய் இங்கேபாரு.. மொதல்ல எனக்கு மாமா.. அப்புறம்தான் உன் புருஷன்… எனக்குதான் உரிமை அதிகம் புரியுதா..” என்று கண்களை உருட்டி மிரட்ட, அவளை அத்தனை பிடித்தது சிபிக்கு.  அவள் சொல்வதற்கு எல்லாம்  பொம்மை போல் சிபி  தலையாட்ட, அதற்கும் “அழகான பார்பி பொம்மைதான்..” என்று கொஞ்சினாள்..

                     இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்பன் ஜெகனை அழைக்க, அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் அவன். மது ஜெகனை கண்டவள் வேகமாக எழுந்து கொண்டாள்..

                   “நான் கிளம்புறேன் மாமா..” என்றவள் நடக்க தொடங்க, இந்த முறை அவளை தடுக்கவே இல்லை இன்பன். அவள் வெளியேறவும் இன்பன் ஜெகனை கடுமையாக முறைக்க

                  “அப்படி பார்க்காதடா.. ஏதோ கோவம்.. முடியாதுன்னு சொல்லிட்டேன் அப்போ.. நேத்து பார்க்கவும், அந்த நேர அதிர்ச்சில நின்னுட்டேன்… அதுக்குள்ள ஓடிட்டா.. இப்போ அவளை பார்க்கத்தான் அவசரமா கிளம்பி வந்தேன்..” என்று தயங்கி தயங்கி அவன் கூற, இன்பன் அவனை அணைத்து விடுவித்தவன் “ஓடு..” என்று விரட்ட, அவனும் விட்டால் போதும் என்று ஓடியே போனான்.

                         மது பார்க்கிங்கில் இருந்த தன் காரில் அமர,ஜெகன் வேகமாக ஓடி வந்தவன் அவளை ஒரே தள்ளாக உள்ளே தள்ளி, தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துவிட்டான். அவன் தள்ளியதில் எக்குத்தப்பாக விழுந்தவள் சுதாரித்து சரியாக அமர, அடுத்த நொடி சண்டையை தொடங்கிவிட்டாள்..

                    “ஏய்.. வெளியே போ.. எதுக்காக காருக்குள்ள வந்த… வெளியே போடா..” என்று அவன் தோளை பிடித்து தள்ள, அவன்தான் காரை லாக் செய்து இருந்தானே… அவளை பார்த்து பறக்கும் முத்தம் ஒன்றை காற்றில் ஊதியவன் காரை ஸ்டார்ட் செய்ய, “ஜே… எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கல.. மரியாதையா இறங்கிடு…” என்று கத்தினாள் மது.

                   அவள் சத்தத்தை பொருட்படுத்தாமல் காரை நேராக தனது கெஸ்ட் ஹவுஸிற்கு விட்டவன் காரிலிருந்து இறங்க மறுத்தவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்துவிட்டான். அவளின் மெல்லிய உடல்வாகு அவனுக்கு வசதியாக போக, மொத்தமாக உரசிக் கொண்டே தூக்கி வந்தவன் தனது அறையின் கட்டிலில் அவளை இறக்கிவிட, அவனை முறைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் மது..

                      அவள் அணிந்திருந்த மேல்ச்சட்டை சற்றே அங்கும் இங்கும் விலகி இருக்க, ஜெகனின் பார்வை அதில் பதியவும், சட்டையே செய்யவில்லை அவள்.. “போடா..சாமியார்..” என்று திட்டிக் கொண்டே அவள் அமர்ந்திருக்க, ஜெகன் அவள் அருகில் அமர்ந்தவன் அவளை கழுத்தை சுற்றி கையை போட்டு தன்னோடு இழுத்துக் கொள்ள, அதிர்ந்து தான் பார்த்தாள் அவனை.

                     அவள் அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல், இன்னும் அவளுக்கு நெருக்கமானவன் அவள் இதழ்களை நெருங்கும் வேளையில் சுதாரித்து விட்டாள். மயக்கத்தில் இருந்தவனை லேசாக அவள் தள்ளி விட்டதற்கே படுக்கையில் விழுந்து இருந்தான் ஜெகன்.

                   ஆனால், அதைப்பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் அவளையும் தன்னருகே இழுத்துக் கொண்டவன் தனது இடது கையை தலைக்கு வைத்து அவளின் முகம் பார்க்க, “எந்த போதி மரத்துக்கு அடியில உட்கார்ந்த.. இல்ல, இந்த முறையும் ஆசைகாட்டிட்டு மோசம் பண்ண போறியா..” என்றாள் காட்டமாக

                   ஜெகன் அவள் பேசவே இல்லை என்பது போல், ஆடை மறைக்காத அவளின் இடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டே “என்னடி டிரஸ் இது…” என்று கேட்க

                     “எந்த ட்ரெஸ் போட்டாலும், நீ சாமியார் தான்.. அப்புறம் என்ன.. எனக்கு பிடிச்சிருக்கு.. விடு…” என்றுவிட்டாள்…

                     “வாய் வாய்…” என்று அவள் வாயிலேயே அடித்தவன் அடுத்து தன் இதழ்களை அங்கே சேர்க்க, மெல்லியதாக ஒரு இதழ் தீண்டல்…. இப்போதும் மதுவே “போதும் விடு..” என்று அவனை தள்ளிவிட்டிருந்தாள். ஜெகன் அவளை பார்க்கவும், “இன்னும் நீ லவ் பண்றேன் ன்னு கூட சொல்லல.. அதுக்குள்ள பெட்ரூம்க்கு தூக்கிட்டு வந்தாச்சு… இப்போ முத்தம் வேற.. நீ என்ன ஐடியால இருக்க…”

                     “என்னை பார்த்தா எப்படி தெரியுதுடா உனக்கு…” என்று கேட்டவளுக்கு அழுகை வந்துவிடும் போல் இருக்க, “ஐயோ அழுமூஞ்சி பாப்பா…” என்று அப்போதும் கிண்டலடித்தானே தவிர, அவளுக்கு பதில் சொல்லவே இல்லை.

Advertisement