“உன்னுள் ரோஜாவை நான் “

அத்தியாயம் -5

வினோதினி புலம்ப ஆரம்பித்தால் ஐயோ தம்பி நரேன் அப்பவும் சொன்னானே நான் கேட்டேனா புடவை எடுக்கும்போதே  சொன்னானே வேண்டா வெறுப்பாக மாப்பிள்ள உக்காந்து இருக்காரு என்று முதலிலே சுதாரித்து இருக்க வேண்டாமா உங்க அண்ணன் என்னை வேண்டாம் என்றும் முதலிலே சொல்லியிருக்க வேண்டாமா நிஷா அக்காவ விரும்புறத ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இந்த கல்யாணத்தை நிப்பாட்டி இருக்கலாம் இல்ல எனக்கும் இந்த நிலைமை வந்திருக்காது.

  நானும் இப்படி உன் முன்னாடி நின்று இருக்க மாட்டேன் இல்ல

மோகனோ எனக்கு மட்டும் இதெல்லாம் தெரியுமா என்ன எனக்கு தெரிஞ்சு இருந்தா நான் இதை நடக்க விட்டு இருக்க மாட்டேன் என்றான். உன்னை கட்டிக்கணும்னு எனக்கு என்ன ஆசையா என்ன இப்படி உன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியத இருக்கு

எனக்கு தூக்கம் வருது வெளியில போ என்றால் வினோதினி , மோகனோ நான் ஏன் வெளில போகணும் நீ வெளியில போ வென்றான் இது என்னுடைய ரூம் வினோதினியோ அப்ப எனக்கென்று ஒரு ரூம் குடுக்க சொல்லு .

ஆமா இது மாதிரி போய் நின்னா நம்மளுக்கு நல்ல டோஸ் கிடைக்கும் வினோதினி அப்பனா  பெட்டில் படுக்கிறேன் நீ கீழ படு என்றாள். முதல்ல நீ  நீ பேசுவத நிப்பாட்டு அதுக்கப்புறம் இது என்னுடைய பெட்டு நான் தான் இங்க படுப்பேன் என்றான்மோகன் பெட்லயே படுத்து வளர்ந்துட்டேன் என்னால் கீழே இறங்கி படுக்க முடியாது என்றால் வினோதினி சரி சரி நீ இந்த பக்கம் படு நான் அந்த பக்கம் படுக்கிறேன் என்றான் வினோதினியோ நைட்டு முழுக்க தூக்கம் இல்லாமல் பிரண்டு பிரண்டு படுத்துக்கொண்டே இருந்தால் மோகனும் அந்த சைடு பிரண்டு பிரண்டு படுத்து கொண்டிருந்தான் இருவருக்கும் தூக்கம் என்பது சிறிதும் இல்லை வினோதினிக்கு காலையில் நடந்தது அனைத்தும் மனதில் வந்து கொண்டு போயிருந்தது ஒரு வழியாக மனதில் சமாதானப் படுத்திக் கொண்டு காலையில் தான் கண்ணுறங்கினாள்.

 விடியற்காலையில் அப்பொழுதும் மோகன் தூங்கவில்லை வினோதினியோ தான் தனியாகவே படுத்து பழக்கப்பட்டிருந்ததால் கை கால்களை பப்பரப்பா என்று நீட்டி படுத்திருந்தாள்  தலையணை கட்டிப்பிடிப்பது போல் மோகனின் மேல் கை போட்டு இருந்தால் மோகனுக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை அவளின் நறுமணமும்  நேத்து காலையில் தான்   அணிவித்த மாங்கல்யமும் கண்ணில் பட்டு அவனை பேதி இழக்க செய்தது இதற்கு மேல் இருந்தால் நாம் ஒரு வழி ஆகி விடுவோம் என்று நினைத்து டக்கென்று எழுந்து குளிக்க சென்று விட்டான்.

 தன் ரூமில் இருந்து வெளியே வந்தவுடன்  அம்மா ஜெயராணியும் ராஜனும் எங்கப்பா உன் பொண்டாட்டி என்று கேட்டார்கள் இவர்கள் கேட்கும் அதே நேரத்தில் அங்கு நம் கதாநாயகி மெதுவாக பெட்டை விட்டு எழுந்து மீண்டும் கண் திறக்காமல் படுத்து விட்டாள் மோகனின் அம்மா ஜெயராணி அப்பா மறு வீட்டுக்குப் போக நேரம் ஆச்சு அவங்க எல்லாம் கூப்பிட வந்துருவாங்க  போ போய் கூட்டிட்டு வா முதல்ல என்றார்கள் மோகனோ வேறு வழியில்லாமல் கூப்பிட போனான் அங்கு தன் மனைவி கட்டிலில்  கை கால்களை நீட்டி படுத்திருந்தாள் முதலில் எப்படி கூப்பிடுவது என்று மோகனுக்கு தெரியவில்லை பின்பு பக்கத்தில் போய்  ஏய் ஏய் என்று மெதுவாக கூப்பிட்டான்.

 முதலில் வினோதினி கண் விழிக்காமல் இருந்தவள் இப்பொழுது கண்விழித்துப் பார்த்தால் மோகன் பக்கத்தில் இருந்தான் தன்னை ஏய்என்று அழைத்துக் கொண்டிருப்பது கேட்டது எனக்கு பேர் இல்லையா எதுக்கு ஏய்னு அழைக்கிற என்றாள். மோகனோ என்னை ஒருமையில் கூப்பிடாதே என்று எத்தனை முறை சொல்வது என்றான் இதே பழக்கம் தான் எல்லாரும் முன்னாடியும் வரும் என்றான். வினோதினி சரி அப்படி கூப்பிடல என்றாள். அப்படின்னா மோகன் என்று கூப்பிடவா மோகனோ சரி அப்படியே கூப்பிடு என்றான்.

 சீக்கிரமா அம்மா கூப்பிட்டார்கள் கீழே என்றான் வினோதினியும் சரி என்று குளிக்க ஆயத்தமானால் குளித்துவிட்டு பர்பிள் நிற சுடிதாரை அணிந்து வந்தால் எங்கே கீழே இறங்கினால் அம்மா அவளை கேட்டு விடுவார்கள் என்று நினைத்து தானும் பெட்டிலேயே உட்கார்ந்து இருந்தான் மோகன் வினோதினி வந்தவுடன் சோப்பின் நறுமணமும் அவளுடைய இயற்கையான நறுமணமும் கலந்து வீசியது மோகனுக்கே மூச்சு முட்டுவதைப் போல் இருந்தது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று ஃபோனை பெட்டிலேயே வைத்துவிட்டு இறங்கி விட்டான்.

தனது ஈர கூந்தலை இரண்டு பக்கமும் எடுத்து கிளிப் செய்தால் பிறகு கண்ணாடியை பார்த்து ஒப்பனை செய்தால் பிறகு கீழே இறங்கினாள் ஜெயராணியோ ஏமா ஒரு புடவையை கட்டிட்டு வந்திருக்கக் கூடாது இப்படி சுடிதார் போட்டுட்டு வர போ போய் சேலையை கட்டிட்டு வந்து விளக்கு ஏத்து என்றாள் வினோதினிக்கும் அடக்கடவுளே என்று இருந்தது. சரி என்று மேலே சென்று மெருன் நிற சேலை கட்டினால் அப்பொழுது பார்த்து மோகன் போனை எடுப்பதற்காக ரூமிற்கு வந்தான் வினோதினி கதவை தட்டிட்டு வந்திருக்க வேண்டியதுதானே இப்படித்தான் டக்குனு வருவீங்களா என்றாள்.

மோகன் ஹலோ இது என்னுடைய ரூம் எப்படி வேனா வருவேன் உனக்கு என்ன என்றான் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனக்கு தான் பிரச்சனை என்றால் இப்போது நானும் இருக்கிறேன் அல்லவா அதனால கதவை தட்டிட்டு தொரங்க என்று பல்லை கடித்துக் கொண்டே சொன்னாள். மோகன் அவளை உற்றுப் பார்த்தான் காலையில் பர்பில் கலர் இப்ப அரக்கு இரண்டும் அவளுக்கு ரொம்ப எடுப்பா இருக்கு இல்ல என்று தன் மனதில் நினைத்துக் கொண்டான் அவளுடைய வெளிர் நிறத்திற்கும் இந்த அரக்கு வண்ண சேலைக்கும் தளிர் மேனியால் தந்தம் போன்று மிளிர்ந்தாள்.

மோகன் பார்க்க பார்க்க கண் எடுக்கவில்லை வினோதினி ஏன் என்னை அப்படி பார்க்கிறாய் மோகன் அது ஒன்னும் இல்ல உன்னை அம்மா கூப்பிட்டாங்க சீக்கிரமா வா என்றான் வினோதினியும் கீழே சென்று விளக்கை ஏற்றினாள். வந்து ஏதாவது ஸ்வீட் செய் என்று ஜெயராணி கூற வினோதினியும் கிச்சனுக்குள் சென்று பாயாசம் செய்தாள் எல்லோரும் டைனிங் ஹாலுக்கு சாப்பிட வந்தார்கள். அப்பொழுது பார்த்து வெளியில் ஒரே கூச்சல் என்னவென்று பார்த்தால் முகிலன் உடைய மாமனார் அதாவது நிஷாவுடைய அப்பா வந்து நாலு அஞ்சு பேரோட வந்து சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு.

 ராஜன்ட ஒழுங்க மரியாதையா உன் பையன் அட்ரஸ் சொல்லிரு என் பொண்ண நான் திருப்பி கூட்டிட்டு வரணும் என்றார் ராஜனும் அவன் என் பையனே இல்ல நேத்தே அவனை  தலைமுழுக்கிட்டேன் என்று சொல்லி அவனுடைய அட்ரஸை கொடுத்தார்கள்.

மோகனோ தன் அண்ணனுக்கு கால் செய்து கால் செய்து  பார்க்க போன்சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. பக்கத்தில் இருந்தால் மனையாளை கவனிக்கவில்லை அவன் போன் செய்து கொண்டிருக்கும் போது ப்ரோ என்ற எண்ணிற்கு திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டே இருந்தான்.

வினோதினி இப்ப எதுக்கு உங்க அண்ணனுக்கு கூப்பிடுற என்றாள். உங்க அண்ணன் பேரு கேட்டாலே எனக்கு பத்திகிட்டு வருது உங்க அண்ணனால தான் நான் இப்படி நிக்கிறேன் என்றாள் மோகனோ இதை எத்தனை வாட்டி சொல்லுவ என்றான். பின்ன உன்னுடன் மனுஷன் வாழ முடியுமா என்றாள் ஏன் நான் மனுஷன் இல்லாம மிருகமா என்றான் ஜெயராணி இவர்கள் இரண்டு பேரும் மெதுவாக சண்டை போட்டுக் கொண்டிருந்ததை பார்த்தாள். நேரமாச்சு வந்து சாப்பிடுங்கள் உங்கள் வீட்டுக்கு போக வேணாமா என்று கேட்டாள்.

சொல்லிக் கொண்டிருக்கும்போதே வினோதினியின் சித்தப்பா சித்தி இரு வரும் அவர்களை மறு வீட்டுக்கு கூப்பிட வந்தார்கள் எல்லோரும் ஒன்றாகஉட்கார்ந்து சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். வினோதினி வீட்டிற்கு சென்றதும் தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்தாள் லட்சுமி என்ன ஆச்சும்மா ஏன் இப்படி அழுகிற ஏண்டா ஏண்டா என்று கேட்க ஆரம்பித்தால் மோகனுக்கு ஒன்னும் சொல்வதாக இல்லை கடும் கோபத்தில் இருந்தான்.

 இவளைஎன்ன நம்ம டார்ச்சலா பண்ணனும் நைட்டு இப்படி வந்து அழுதுகிட்டு இருக்கா என்றுமனதில் நினைத்துக் கொண்டான் எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்னை,  இவளை இவன்தான் என்ன டார்ச்சர் பண்றா அடுத்ததாக லட்சுமி என்னம்மா நேத்து தான் கல்யாணம் ஆச்சு தலையில ஒரு பூக்கூட வைக்கலையே மாப்பிள்ளை வாங்கித் தரவில்லையா என்று கேட்டாள் அதற்கு வினோதினி எந்த பதிலும் சொல்லவில்லை மோகனைப் பார்த்தால் மோகனும் அவளை எரிப்பது போன்று பார்த்துக் கொண்டிருந்தான்.

           இது ஒன்னு தான் குறைச்சல்  என்றாள். லட்சுமி வேற என்னடா உனக்கு குறைச்சல் எல்லாமே நல்லதுக்குனு எடுத்துக்க மோகனும் நல்ல பையன் தானே ஒரு வாரத்துக்கு இங்கே மாப்பிள்ளையும் நீனும் இருக்கீங்களா நான் அப்பா கிட்ட சொல்லி பேச சொல்றேன் உங்க வீட்ல சரிமா என்றால் வினோதினி மோகனிடம் சொன்னதற்கு எனக்கு இரண்டு நாள் தான் லீவு அதுக்கு அப்புறம் போகணும் அதெல்லாம் கம்பெனில நான் பேசுகிறேன் நீ இரு அப்படின்னு சொல்லி ராஜன்சொன்னாரு மோகன் மனதில் என்ன இவங்க வீட்டுல ஒரு வாரமா

இல்லப்பா அது சரிப்பட்டு வராது ஒரு வாரம் என்னால இருக்க முடியாது அட்லீஸ்ட் ரெண்டு நாள் சொல்லுங்க இருக்கேன்னு, சரி ரெண்டு நாளைக்கு இருந்துட்டு வா என்றார் ராஜன் போனில் வீரபாண்டி வீட்டில் தடபுடலாக விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது .

லட்சுமியும் அம்மா வினோதினி மாப்பிள்ளையை கூட்டிட்டு வாம்மா சாப்பிட என்றார்கள்.

வினோதினியோ நரேன் போய் சாப்பிட கூட்டிட்டு வாடா என்றாள் நரேன் மோகன் மாமா வாங்க சாப்பிட என்றான் எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் நரேனும் மோகனும் பேசிக்கொண்டிருந்தார்கள் நரேந்திரன் மிகவும் சட்டென மோகனுடன் ஒட்டிக்கொண்டான் தனக்கு பிடித்தது தனக்கு பிடிக்காதது இருவருக்கும் மணி ஆனதே தெரியவில்லை  அக்காவிடம் பிடித்தது பிடிக்காதது என்று ஒவ்வொன்றாக சொல்லதொடங்கினன் அப்பொழுது தான் இங்கு வந்த வினோதினி நரேன் வாடா சாய்பாபா கோவிலுக்கு போயிட்டு வரலாம் நேத்தே போக வேண்டியது என்னோட ஸ்டாப் எல்லாம் சேர்ந்து கோயில்ல எனக்காண்டி பாலபிஷேகம் பண்ணி அர்ச்சனை பண்ணாங்க என்னை நேத்தே போ சொன்னாங்க ஆனா என்னால தான் போக முடியல நேத்து நடந்த பிரச்சனைல இன்னைக்காவது போய் சாமி கும்பிட்டு வருவோம் வா என்று கூறினாள்.

 ஆனால் லட்சுமியோ இது எல்லாம் கேட்டிருந்து மாப்பிள்ளையும் நீனும் போய்ட்டு வாமா என்றார்கள் வினோதினியோ மனதில் நிம்மதியை தேடி கோயிலுக்கு போறேன் அங்கேயும் நிம்மதி இல்லாம இருக்கணுமா என்று நினைத்துக் கொண்டாள் நரேன் போ மாமாக்கு புது டிரஸ் வாங்கி வச்சிருக்கோம்ல அதை எடுத்துக் கொடு என்றார் லட்சுமி நரேனும் எடுத்துக் கொண்டு வந்தான் மோகனிடம் கொடுத்தான் லைட் ஆரஞ்சு நிற சட்டையும்  வெளிர் நிற பேண்டும் அணிந்து வந்தான் வினோதினியோ  ஆரஞ்சில் தங்க சரிகை இட்டபுடவை கட்டி இருந்தால் லட்சுமி தன் மகளுக்கு தலை நிறைய பூ வைத்து மகிழ்ந்தாள். மேலும் மாப்பிள்ளை காதில் விழும்படி நீ தாம்மா சொல்லணும் மாப்பிள்ளை கிட்ட எனக்கு பூ வாங்கி தாங்க அப்படின்னு நீ சொல்லலைன்னா ஆம்பளைங்களுக்கு எதுவுமே தெரியாது நம்ம கேட்டா தான் அவுகளுக்கு தெரியுமே என்றார்கள்.

இருவரும் சாய்பாபா கோயிலுக்கு சென்றன.         வினோதினியை மோகன் இறக்கி தான் விட்டான் இறக்கிவிட்டு பைக் பார்க் பண்றதுக்குள்ள அவளை காணோம் எங்கன்னு பார்த்தா கூட்டத்தோட கூட்டமாக போய் நின்னுகிட்டு இருக்கா சாமி கும்பிட இவனோ பின்னாடி வரிசையில நிக்கலாமா இல்ல இங்கிட்டு போலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தான் இவ வரிசையில் தானும்  நின்று தான் சாமி கும்பிட வேண்டும் என்பதை தெரிந்து பிறகு வரிசையில் ஒரு முப்பது பேருக்கு பின்னாடி தள்ளி நின்றான் இவன் வரிசையில் வருவதற்கு முன்பே வினோதினி சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து அமைதியாக மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தாள் .

கண்ணில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வந்தது சாய் நான் என்ன பண்ணுவேன் எப்படி இவங்களோட வாழ்வது அதே நேரத்தில் மோகனும் சாமி கும்பிட்டு விட்டு வந்து அமர்ந்தான் இவள் மண்டியிட்டு தாரை தரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது இவள் ஏன் இப்படி அழுகிறார் ஒருவேளை முகிலன விரும்பி இருப்பாளோ என்று நினைத்தான் அவனே நினைத்துக் கொண்டான். ஆமா அப்படியே தான் இருக்கும் என ஸ்கூல் படிக்கும்போதே இவளை பார்க்கிறதுக்காண்டி தான் டீக்கடையில் நிற்பான் நாமளே தப்பா நினைச்சோம். அப்படி இருக்கும்போது இவளும் அப்படி தப்பாதான் நெனச்சி இருக்க வாய்ப்பு இருக்கு கடைசியாக வினோதினி கடவுள் விட்ட வழி என்று கூறி கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

 மோகனும் இவ முகிலனை விரும்பி இருக்கா அதனால தான் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக் கொண்டான் இருவரும் அவரவர் எண்ணத்தில் பயணிக்க ஆரம்பித்தனர்.

இனி….